Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மோடியின் பேச்சு முஸ்லிம்களுக்கு விடப்பட்ட சவால் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

திருச்சி மாநகர் நத்தர் ஷா தர்கா பகுதி 12 வது வட்ட இ.யூ.முஸ்லிம் லீக் செயலாளர் ஜே.கே.வஜீர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது ,

இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா, தமிழகத்தில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் எழுச்சி பெற்ற இயக்கமாக வளர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞர்கள், தொழிலாளி கள், மகளிர், மாணவர் என்று எல்லா தரப்பினர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகி றார்கள். வரும் அக்டோபர் 5-ம் தேதி சென்னை பெரியார் திடலில் காலையில் மாநில முஸ்லிம் லீகின் பொதுக்குழு கூட்டமும், மாலை 3 மணி முதல் 8 மணி வரை எம்.எஸ். எஃப். - முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு - குற்றாலத்தில் நடந்த மாநாட் டுக்குப் பிறகு -நடக்கிற மாநாடாக ஏற்பாடாகியிருக்கிறது.

தமிழகம் முழுவதிலுமி ருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். திருச்சி மாவட் டத்திலிருந்து பன்னூற்றுக் கணக்கில் பங்கேற்க உள்ளார் கள் என அறியும் போது மிகுந்த மகிழ்ச் சியை தருகி றது.

இந்திய முஸ்லிம்களாகிய நாம் நமது உண்மையான அடையாளங்களை பாதுகாப்ப தற்கே, இத்தகைய நிகழ்ச்சிகள் - மாநாடுகளையெல்லாம் நடத் துகிறோம்.

சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் தங்களின் கலாசார தனித்தன்மையை பாதுகாக்கும் முயற்சியாகவே முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வலுப்படுத்த வேண்டும் - பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் லீகை பலப்படுத்துவதோடு தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் முக்கியத்துவம் பெற்று செயல் பட்டுக் கொண்டிருக்கிற பிற முஸ்லிம் இயக்கங்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்ப டையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கருத்து இப்போது பிறந்திருக்கிறது. இத்தகையதொரு ஐக்கி யத்தை உருவாக்கிக் கொண்டு, தேசிய அளவில் உள்ள ஜன நாயக, சமயசார்பற்ற, சமூக நீதிக் கொள்கைகளை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திக ளுடன் இணைந்து பாடு படுதல் வருங்கால இந்தியா விற்கு வலிமையும், வளமும் சேர்ப்பதாகும் என்னும் எண்ணம் சமுதாய மக்களிடம் பரவலாகி வருகிறது.

வகுப்புக் கலவரங்களை தூண்டும் பா.ஜ.க.
இத்தகைய சிந்தனை ஏற் படுவதற்கு 26-9-2013 அன்று இதே திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி அவர்களின் பேசிய கூட்டம் மட்டுமல்ல, தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. கூட்டங்களும் அதில் பேசப்படும் கருத்துக்களும் முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இந்திய நாடு அதன் அரசியல் சாசனப்படி ஜன நாயக நாடு - சமயசார் பற்ற நாடு - சமூக நீதியை நிலை நிறுத்தும் மக்கள் ஆட்சியில் உள்ள நாடு. இந்த நாட்டை பாரதீய ஜனதா கட்சி இந்து ராஷ்ட்ரம் என்னும் இந்துக்கள் நாடாக்க முயற்சிக்கிறது. இந்தியாவில் வாழும் முஸ்லிம் கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்று அழைக்கப்பட வேண் டும் என்றால் முஸ்லிம்கள் எல் லோரும் தங்களுடைய மூதாதைகள் இந்துக்கள் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் கள்.

முஸ்லிம்களின் அடையாள மாக உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் - பொது சிவில் சட்டம் ஒன்று தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

கஷ்மீருக்குள்ள தனி அந்தஸ்து ஒழிக்கப்பட வேண் டும் என்று பிரச்சாரம் செய்கிறார் கள். இவற்றிற்கெல்லாம் மேலாக குஜராத்தில் வகுப்பு கலவ ரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல் லப்பட்டதிலும், அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லிம்களை அகதி முகாம்களில் தங்க வைத்து வேடிக்கை பார்ப்பதிலும், இப் போது உ.பி.மாநிலம் முசாபர் நகர் கலவரத்தில் பல்லா யிரக்கணக்கான முஸ்லிம் களை ஊரை விட்டும் வெளி யேற்றி கொடுமைப் படுத்தி வருவதிலும் பி.ஜே.பி. யை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிய டைந்து கொண்டிருக்கிறார் கள்.

முஸ்லிம்களை அடையா ளங்களே இல்லாமல் ஆக்க நினைப்பதோடு அவர்களை அழிக்கவும் முடிவு செய்திருப் பதைப் போல தொடர்ச்சியாக கலவரங்கள் தூண்டப்பட்டு வருகின்றன. கலவரத்தில் மாண்டு போன முஸ்லிம்கள், அவர்களின் பார்வையில் நாய்க் குட்டிகளாக தெரிகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடந்துள்ளன என பத்திரிகைகள் செய்தி தருகின்றன. சென்ற வாரம் டெல்லியில் நடந்த ஒருமைப் பாட்டு கவுன்சில் கூட்டத்தில் 2013 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் நடந்து வகுப்புக் கலவரங்களின் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதில் பாதிக்கப் பட்டவர்களில் முஸ்லிம்கள் அதிகம் என்னும் தகவலும் தரப்பட்டிருக்கிறது.

இதேபோலத்தான் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்களி லும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் - சொத்து இழந்த வர்கள் முஸ்லிம்கள் - எல்லா விதமான சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளான வர்கள் முஸ்லிம்கள். ஆனால், இவ்வளவு காலமும் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் அமைதி யாகவே இருந்து அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறது.

இன்னல்லாஹ் ம அஸ் ஸாபிரீன் - நிச்சயமாக பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் - என்பதில் நம் பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள்.

தங்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடு மைகளை பற்றி உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பிய தில்லை. ஐ.நா. சபையின் மனித உரிமை கமிஷனுக்கு பெட்டிஷன் போட்ட தில்லை.

ஆனால், சுதந்திர இந்தியா வில் 1984-ல் திருமதி இந்திரா காந்தி அம்மையாரை ஒரு சீக்கியர் கொன்றார் என்பதற் காக 2 ஆயிரத்திற் கும் மேற் பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட் டனர். அந்த ஒரே ஒரு கலவரத் திற்காக நிவாரணங்கள் தரப்பட்டன. சீக்கியரான மன் மோகன்சிங் இருமுறை நாட்டின் பிரதமராக ஆக்கப்பட்டிருக் கிறார். பலரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டிருக்கி றார்கள். இவை மூலம் சீக்கிய சமுதாயம் இன்னமும் திருப் தியடையவில்லை. சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்கிறார்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக் கிறார்கள்.

திருமதி சோனியாகாந்தி மருத்துவம் செய்ய அமெ ரிக்கா சென்ற போது அவரிடம் கோர்ட் சம்மன் தரப்படுகிறது. இப்போது ஐ.நா. சபை கூட்டத் தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக் கும் கோர்ட் சம்மன் காத்தி ருக்கிறது.

சீக்கியருக்கு எதிராக நடந்த ஒரே ஒரு கலவரத்திற்கு நியாயம் கோரி சர்வதேச அளவில் சீக்கிய சமுதாயம் வழக்கு தொடுக்கிறது. ஆனால், 13 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வகுப்பு கலவ ரங்களால் பாதிக்கப்பட்டும், இந்திய முஸ்லிம் சமுதாயம் அமைதி வழியில் - அறவழி யில் - அரசியல் ரீதியில் - நாட்டுக்கு உள்ளேயே நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

இதைப்பற்றி நாட்டிலுள்ள நல்லவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற வேண்டு கோளைத்தான்நாம் முன் வைக்கிறோம்.

நாட்டுப் பிரிவினையின் போது காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் அவர் கள் கராச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாப் லியாகத் அலிகான் அவர்களிடம் விடை பெற்றார். அப்போது லியாகத் அலிகான் சொன்னார்:

இந்தியாவில் முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துக்கள் செயல்பட்டால் எங்களின் உதவிகளை நீங்கள் உடனே பெற்றுக் கொள்ளலாம். என்றார்.

அதற்கு காயிதெ மில்லத் சொன்ன பதில் இதுதான்:


`நவாப் அவர்களே! பாகிஸ் தானில் உள்ள சிறுபான்மை மக்களாகிய இந்துக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் கடமையாகும். இந்தியா எங்கள் நாடு. அதில் முஸ்லிம் களுக்கு எதிராக யார் எதை செய்தாலும் தடுக்கவும், எங்க ளைக் காப்பாற்றி கொள்ளவும் எங்களுக்கு அல்லாஹ் உதவி புரிவான். அதைப் பற்றிய கவலை உங்களுக்குத் தேவை யில்லை’’ என்றார்கள்.

அதனால்தான் காயிதெமில்லத் அவர்களை ஜிந்தா வலியுல்லாஹ் என்று சமுதாயம் போற்றியது.

அல்லாஹ்வின் பேரருள் கொண்டு இந்திய முஸ்லிம்க ளாகிய நாம் நமது அடையாளங் களை பாதுகாப்போம் - நமது கலாசார தனித்தன்மையை நிலை நிறுத்துவோம்.

இதற்கு உகந்த ஒரே ஒரு வழி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் இந்த பேரியக்கத்தை கட்டிக் காப்பதுதான். இந்தியா வின் பெருமையை உலக அரங் கில் உயர்த்தவும், இந்திய முஸ்லிம்களின் தனித்தன் மையை பாதுகாக்கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்லும் பாதைதான் என்றும் வெல்லும் பாதை. -இதை வரலாறு நிச்சய மாக சொல்லும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.


தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள்!

தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்படுவது சாதாரண நிலை ,அதே போல் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருவதாக கட்சிகளின் மேலிடத்தகவல்கள் கூறுகின்றன .

அதிமுக தலைமையில் வாசன் காங்கிரஸ் அதோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,இடதுசாரி கட்சிகள் ,விடுதலை சிறுத்தைகள் என்று ஒரு அணி உருவாகி வருகிறது .

திமுக தலைமையில் பாஜக ,தேமுதிக , பாமக ,மதிமுக என்று மற்றொரு அணி உருவாகி வருகிறது .

அதிமுக கதவை தட்டும் சில கட்சிகளை அதிமுக நீங்கள் துரோகம் செய்தவர்கள் உங்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று கதவை சாத்தி விட்டது .அப்படி கதவு சாத்தப்பட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு காங்கிரஸ் களம் காண நேரிடும் நிலை உருவாகிவருகிறது .

மேற்கண்ட  விசயங்களுக்கான சத்திய கூறுகள் அதிகம் என்றும் , அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதி பட கூறுகிறார்கள் .

புதன், 25 செப்டம்பர், 2013

உலக பல்கலைக்கழகங்களுக்கு நிகராக இந்திய பல்கலைக்கழகங்கள் தரம் உயரவில்லை: ஜனாதிபதி பிரணாப் வேதனை

புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசியதாவது:–

மாணவர்கள் பட்டங்களை பெற்று தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கி உள்ளீர்கள். இனிமேல் மாணவர்கள் தங்களுடைய கல்வியை வாழ்க்கையில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாணவர்கள் அர்ப்பணிப்பையும், முயற்சியையும் வாழ்க்கை பயணத்துக்கு துணையாக கொண்டால் சரியான பாதைக்கு செல்ல முடியும்.

மாணவர்கள் தங்கள் பெற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தற்போது அமுல்படுத்தி உள்ளோம். கட்டாய கல்வி தரமான கல்வியாக இருக்க வேண்டும். நான் பொதுச்சேவைக்கு வருவதற்கு முன்பு ஆசிரியராக பணிபுரிந்து உள்ளேன். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும்போது மனதில் சந்தேகமும், திருப்தியும் ஏற்படும். அதனை நானும் பெற்றுள்ளேன்.

மாணவர்கள் இங்கு கல்வி கற்றதோடு நின்று விடாமல் ஒவ்வொரு நாளும் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும். 6–ம் நூற்றாண்டில் இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது பிற உலக நாடுகளுடன் நாம் கல்வியில் போட்டியிட்டோம். ஆனால் இன்று நாம் பல வசதிகளை பெற்றிருந்தும் உலக அளவில் தரமான 200 பல்கலைக்கழகங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற முடியவில்லை. இது எனக்கு வேதனையை அளிக்கிறது. புதிராகவும் உள்ளது.

12–வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்விக்கென்று அதிக நிதியை ஒதுக்கி உள்ளோம். சமூகத்தில் அறிவியல், தொழில் நுட்பமே ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே ஆராய்ச்சி தரத்தை உயர்த்த வேண்டும். புதிய கண்டு பிடிப்புகளை தினசரி வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி சாலைகளை கிராமப்புறங்களிலும் அமைக்க வேண்டும்.

மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வியை கடமையை உணர்த்து நாட்டின் மேம்பாட்டுக்காக உதவ வேண்டும்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசினார்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

இந்திய முஸ்லிம்களே! நமது தனித்தன்மையை காக்க தயாராகுங்கள் ! ------- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனாபா பத்ரு சயீது அவர்கள் ஒரு பொது நல வழக்குத் தொடுத்திருக்கிறார் என்பதும், அதில் அவர் காஜிகளுக்கு மார்க்க ரீதியாக சான்றிதழ் வழங்குவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும், தலாக் என்னும் விவாகரத்து செய்வது, கோர்ட் மூலம் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பதும் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயமாகும்.

ஜனபா பத்ரு சயீது அவர்களைப் பின்பற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜனாபா சுல்தானா ரிஸ்வானா பானு (வயது 29) ஒரு பொது நல வழக்கை தொடுத்திருக்கிறார்.

தலாக் என்னும் மணமுறிவு ஏற்பட்டுள்ளதற்கு காஜிகள் சான்றிதழ் தருவதற்குத் தடை விதிக்கக்கோரியும் மனுவில் கூறியி ருக்கிறார்.

இந்திய முஸ்லிம் பெண்களின் கணவர்கள் தன்னிச்சையாக தலாக் சொல்லி விடுகிறார்கள். மனைவிகளுக்கு தெரியாமலேயே தலாக் கொடுக்கிறார்கள். இத்தகைய பாதகமான ஆண்களின் போக்குகளை காஜிகள் தலாக் சான்றிதழ் அளித்து ஊக்கு விக்கிறார்கள்.

காஜிகளுக்குஇவ்வாறு தலாக் பற்றிய சான்றிதழ் கொடுப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் அந்த மாது, தனது வழக்கில் கூறியிருக்கிறார். இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள்  செய்தி பிரசுரித்துள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு தொடரப் பட்டுள்ளதால், மதுரை கிளை, இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய (24.9.13) தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஷரீயத் கோர்ட்டுகளை எதிர்த்து போடப்பட்டுள்ள பொது நல வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறது என்னும் செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் பிரசுரமாகியுள்ள செய்தியின் விவரமாவது:

நான்கு மாதங்களுக்கு முன்பு (ஓய்வு பெற்ற) உச்சநீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான பெஞ்சின் முன்பு ஷரீயத் கோர்ட்டுகள் பத்வாகள் அளித்து வருவதன் மூலம் தேசத்தில் உள்ள நீதித்துறைக்கு பகரமானதொரு நீதித்துறையாக ஷரீஅத் கோர்ட்டுகள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த வழக்கைத் தொடுத்திருந்த வக்கீல் விஸ்வலோசன் மதன், நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான பெஞ்சின் முன்பு, செப்,11 ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு மே மாதம் 10 ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தனது தாயார் உடல்நலமில்லாமல் ஆகிவிட்டபடியால் தான் ஆஜராக முடியவில்லை என்று கூறி தனது வழக்கை ஏற்கும்படி கோரினார்.

அட்வகேட் மதன், தனது வாதத்தின் போது ஷரீஅத் கோர்ட் டுகள், தேசத்தில் உள்ள கோர்ட்டுகளுக்கு சமமான பகரமான கோர்ட்டுகள் போல் செயல்படுகின்றன. முஸ்லிம்களின் சமூக, மத விவகாரங்கள் பற்றி தீர்ப்புகள் கூறுகின்றன. இது, இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும் என்று கூறினார்.

மத்திய அரகின் சார்பில், அட்வகேட் மதன் கூறிய வாதங்க ளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஷரீஅத் கோர்ட்டுகள் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறைகளை வெளிப்படுத்தும் படி இந்த வழக்கின் மூலம் கட்டாயப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று மத்திய அரசின் சார் பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுள்ள நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்சு, வழக்கை மீண்டும் விசார ணைக்கு ஏற்று, வரும் நவ.11 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தி ருக்கிறது.

இந்தச் செய்திதான் ஆங்கில நாளிதழில் இன்றைக்கு வெளிவந்திருக்கிறது.

சமுதாய மக்களுக்கு ஓர் எச்சரிக்கை! 

 இந்திய முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதற்கு உரிய ஆதாரமும் அத்தாட்சியும் அவர்கள் பின்பற்றி வரும் ஷரீஅத் சட்டத்தின் குடும்பச் சட்டப் பகுதி மட்டும் தான்.

அந்த குடும்பச் சட்டத்தில் கூட ஷரீஅத் படி நடக்கும் வழி அடைக் கப்படுமானால், முஸ்லிம்கள் என்று பெயர் மட்டும் இருக்கும் ஆனால் உண்மையில் முஸ்லிம்களாக இருக்க முடியாது.

தேசம் முழுவதிலும் ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான அரசியல் ரீதியாகவும், நீதிமன்றத்தின் மூலமும், சட்டமன்றத்தின் மூலமும், பாராளுமன்றத்தின் மூலமும் வருவதற்கான சூழ்நிலைகள் இப்பொ ழுது பெருகி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், இந்திய முஸ்லிம் சமுதாயம் தன்னை ஒருமுகப்படுத்தி, தனது மார்க்கத் தனித் தன்மையை நிலைநிறுத்தியாக வேண்டும். இதற்கு எந்தத்தியாகமும் ஒரு பொருட்டாகாது.

திங்கள், 23 செப்டம்பர், 2013

நரேந்திர மோடி திருச்சி வருகையையொட்டி முஸ்லிம்களை கொடுமை படுத்தப்படுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் : தமிழக காவல்துறைக்கு பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் எச்சரிக்கை

சேலத்தில் செப்டம்பர் 22 மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கூறியதாவது ,

இலங்கை வடக்கு மாகாண முதல்வருக்கு வாழ்த்து
இலங்கையில் தேர்தல் நடைபெற்று வடக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடை பெற்று அங்கு ஒரு மக்களாட்சி அமைக்கப் பட்டுள்ளதை போல் இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் ஜனநாயக ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த் தனா ஒப்பந்தத்தின் அடிப்படை யில் உறுதியாக இருந்து இத்தேர்தல் நடத்தப்பட்டுள் ளது. ஒன்று மட்டும் நிச்சயம் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பதுதான் இலங்கைக்கு நல்லது. 13ஏ திருத்த சட்டத்தின்படி நடந்தால்தான் இலங்கைக்கு விடிவு காலம் இதை அதிபர் ராஜபக்சே உணர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மோடி வருகை: முஸ்லிம்கள் மீது அடக்குமுறை
நரேந்திர மோடி வரும் 26ம் தேதி திருச்சி வருகிறார். அவரது வருகையையொட்டி பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தைச்சுற்றியுள்ள வட்டாரங்களிலுள்ள முஸ்லிம் களை போலீசார் அச்சுறுத்தி கொடுமைப்படுத்தி வருகிறார் கள்.

தமிழ்நாட்டில் காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் களை தனிமைப்படுத்தி அச் சுறுத்துவது என்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை தமிழக முதல்வரின் கவனத் திற்கு கொண்டு வருகிறோம்.

திருச்சியில் முஸ்லிம் வீடுகளில் சோதனை யிடுவதும், விவரங்களை சேகரிப்பதும் ஜனநாயக நாட்டில் கேள்வி படாத விஷயங்கள்.

ஏழைகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ள முஸ்லிம்களை ஒரு பொது கூட்டத்தின் பெயரால் வரம்பு மீறி காவல்துறை நசுக்குகிறது என்றால் அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்வோம்.

ஐதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கூட நிரபராதிகளான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு 7,8 ஆண்டுகள் சிறையில் அடைக் கப்பட்டு உண்மை யான குற்றவாளிகள் கைது செய்யப் பட்டதற்குப்பின் முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டனர். அவர் களுக்கு ஆந்திர அரசு நஷ்ட ஈடு அறிவித்தது.

இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றார்கள். இப்படி நஷ்ட ஈடு வழங்கியது செல்லாது என அறிவித்த நீதிமன்றம் அந்த தீர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது எந்த தமிழ் பத்திரிகை யிலும் வரவில்லை. தி ஹிந்து ஆங்கில நாளேடு மட்டுமே இது பற்றி தலையங்கம் எழுதியது. அதை மணிச் சுடரில் நாங்கள் வெளியிட்டி ருந்தோம்.

தமிழ்நாட்டில் இப்படி நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. அது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முஸ்லிம்களின் தியாகம்
இந்த நாட்டிற்காக முஸ்லிம் கள் எவ்வளவோ தியாகங்கள் செய்திருக்கிறார்கள். தேச எல்லையை காப்பாற்ற லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார் கள். சுதந்திரத்திற்காக உடல், பொருள் தியாகம் செய்த முஸ்லிம்கள் கணக்கில் அடங்காது.

ஆனாலும் எங்களை ஏன் பகைமை உணர்வோடு பார்க்கிறார்கள். குஜராத்தில் கலவரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்தார்கள். ஆனால் இறந்த முஸ்லிம் களை காரில் அடிப்பட்ட நாய் குட்டியோடுதான் ஒப்பிட்டார் நரேந்திர மோடி.

அப்படிப்பட்ட ஒருவர் நாட்டில் பிரதரானால் நாடு என்ன ஆவது. ஒரு கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பொது கூட்டம் ஒன்றில் பேச வரும்போதே முஸ்லிம்களுக்கு இவ்வளவு பெரிய சோதனை கள் என்றால் தப்பித் தவறி இவர் பிரதமராகி விட்டால் எவ்வளவு பெரிய கொடுமை கள் நடக்கும் என்பதை நாட்டு மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

65 ஆண்டுகளில் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்கள்
நாடு விடுதலையடைந்த இந்த 65 ஆண்டு காலத்தில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடை பெற்றுள்ளன. பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். அவர் களின் பலநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் சூரையாடப் பட்டுள்ளன.

இதை எந்த ஒரு முஸ்லிமும் ஐ.நா. சபைக்கு எடுத்து செல்லவில்லை. உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கு உதவுங்கள் என்று நாங்கள் கோரிக்கை மனு தூக்கி அலையவில்லை.

இந்தியாவில் சீக்கியர் களுக்கு எதிராக இந்திரா காந்தி கொல்லப்பட்ட சமயத் தில் ஒரே ஒரு கலவரம்தான் நடந்தது. அதை சர்வதேச நீதிமன்றத்திற்கு சீக்கியர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

திருமதி சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது அவரிடத்தில் இதற்கான சம்மனை கொடுப் பதற்கு முயற்சித்திருக் கிறார்கள்.

சீக்கிய சமூகத்தை சேர்ந்த மன்மோகன்சிங் 2 முறை பிரதமராக்கப்பட்டு சீக்கியர் களுக்கு எதிரான கலவரத் திற்கு மன்னிப்பு கேட்டதற்கு பின்பும் சீக்கியர்கள் விடுவ தாக இல்லை.

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கு எடுத்து சென்றார்கள். இந்திய முஸ்லிம்கள் இப்படியெல்லாம் எதாவது செய்தார்களா? அப்படி இருந்தும் ஏன் முஸ்லிம்கள் மீது மட்டும் துவேஷம் கொள்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தானே நாங்கள் வலியுறுத்துகிறோம். இதைத் தவிர இந்திய முஸ்லிம்கள் என்ன பாவத்தை செய்து விட்டார்கள்?

இவ்வாறு தலைவர் பேராசிரியர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் அரசாணைப்படி 1அ படிவம் அடிப்படையில் இஸ்லாமிய திருமணங்களை பதிய மறுக்கும் சார்பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை : பேராசிரியர் கே.எம்.கே. எச்சரிக்கை

தமிழக அரசின் அர சாணைப்படி 1A படிவம் அடிப்படையில் இஸ்லாமிய திருமணங்களை பதிய மறுக்கும் சார்பதிவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும் என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்ததாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் நோக்கம் ஷரீஅத் சட்டத்தை முஸ்லிம்களும் விளங்கி மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும் என்பதுதான். அஇஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. திருமதி பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள பொது நல வழக்கால் எங்களுக்கு இந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

திருமணங்கள் செய்து வைப்பதற்கும், குடும்ப விவ காரங்களை பேசி தீர்ப்பதற் கும், மணமுறிவு சான்றிதழை வழங்குவதற்கும், காஜி களுக்கு உரிமை இல்லை என்று பதர் சயீத் தமது வழக்கில் குறிப்பிட்டுள் ளார்.

பள்ளிவாசலை மையமாக கொண்டு மஹல்லா ஜமாஅத் இயங்குகிறது. அந்த பகுதியில் வாழக்கூடிய முஸ்லிம்கள் அனைவரும் இந்த மஹல்லா ஜமாஅத்திற்கு கட்டுப்பட்ட வர்கள்.

இந்த ஜமாஅத்துக்குட்பட்ட பள்ளிவாசலின் இமாம் அந்த மஹல்லாவின் காஜி ஆவார். 1880ம் ஆண்டு காஜி சட்டப்படி இவரது பதவி நாயிப் காஜி என்று அழைக்கப்படும்.

இஸ்லாமிய திருமணங்கள் பரம்பரை பரம்பரையாக பள்ளி வாசல் இமாம்களை கொண்டு நடத்தப்பட்டு பள்ளிவாசல் திருமண பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன.

இஸ்லாமிய திருமண சட்டம் என்பது உலகம் முழுவதும் ஒரே சட்டம்தான். இந்தத் திருமண சட்டம் செல்லாது என்று சொல்லு வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

கஸ்டமரிலா என்று சொல்லக்கூடிய வழக்கப்படி யான நடைமுறை சட்டங்களை நீதிமன்றங்களை தவறு என்று சொல்லுவதில்லை. குடும்ப விவகாரங்களை நீதிமன்றத்தில்தான் தீர்க்க முடியும் என்றால் அது இந்த ஜென்மத்தில் முடியாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே இன்றுள்ள வழக்குகளை தீர்ப்பதற்கு 400 வருடங்கள் ஆகும் என்று சொல்லியுள் ளார்.

காஜிகள் அவசரப்பட்டோ, ஒரு தலை பட்சமாகவோ குடும்ப விவகாரங்களில் ஒரு போதும் தீர்ப்பு அளிக்க மாட்டார்கள்.

சில முஸ்லிம் ஆண்கள் தவறு செய்கிறார்கள் என்பதற் காக இஸ்லாமிய சட்டத்தையே குறை சொல்ல முடியாது.

அது 1500 ஆண்டு கால மாக நடைமுறையில் உள்ள சட்டம் இறைவன் புறத்திலி ருந்து வந்த அந்த சட்டத்தை மனிதர்களால் மாற்ற முடியாது. இதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு.

திருமண கட்டாய பதிவு சட்டம்
உச்சநீதிமன்ற வழி காட்டுதலின் அடிப்படையில் திருமண கட்டாய பதிவு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

நாங்கள் அன்றுள்ள திமுக அரசோடு நேரில் தொடர்பு கொண்டு உரிய விளக்கங் களை அளித்ததன் பலனாக முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்வதற்கு 1-ஏ என்ற தனிப் படிவம் உருவாக்கப் பட்டது.

இந்த 1-ஏ படிவத்தின் அடிப் படையில் அமைந்துள்ள பள்ளிவாசல் திருமண பதி வேட்டின் நகலை அப்படியே ஏற்றுக்கொண்டு சார்பதி வாளர்கள் முஸ்லிம் திரு மணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய ஆட்சியில் பல சார்பதி வாளர்கள் இப்படி திருமணங் களை பதிவு செய்யமால் மணமக்கள், சாட்சிகள், திருமணம் நடத்தி வைத்தவர் வரவேண்டும் என்று நிர்பந் திருப்பது அரசு ஆணைக்கு விரோதமானது.

இன்னும் பல இடங்களில் முஸ்லிம் திருமணங்களை சிறப்பு விவாக சட்டப்படி (ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்)த் தான் பதிவு செய்ய முடியும் என்று சொல்கிறார்களாம்.

இந்த சட்டப்படி திருமணம் செய்வதற்கு கணவன் மனைவி இருவருக்கும் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

முஸ்லிம்களை பொருத்த வரையில் தந்தை, தாயுடன் உடன் பிறந்தவர்களின் மக்களை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் விஷேச விவாக சட்டத்தில் அப்படி செய்ய இயலாது.

திருமணங்களை சார்பதி வாளர் அலுவங்களில்தான் நடத்த வேண்டும் என்பது இஸ்லாத்திற்கு உடன்பாடாக இருக்காது ஏனெனில் எங்களை பொருத்தவரை அக்கா மகளை திருமணம் செய்ய முடியாது.

சார்பதிவாளர் அலுவலங் களில் அப்படி திருமணம் நடந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பது.

எனவேதான் இஸ்லாமிய திருமண விவகாரங்களில் நாங்கள் இவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

அக். 5 பொதுக்குழுவில் நடவடிக்கை
வரும் அக்டோபர் 05ம் தேதி காலை சென்னை பெரியார் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்குழுவில் நாங்கள் கலந்து பேசி 1-ஏ படிவத்தின் அடிப்படையில் திருமணங்களை பதிவு செய்ய மறுக்கின்ற சார்பதிவாளர்கள் யார்? யார்? அவர்கள் மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறிவிக்க உள் ளோம்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

மயானமாக்கப்பட்ட உ.பி. மாநிலம் முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் துடைப்போம் ! ---- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் கடைசி மற்றும் செப்டம்பர் முதல் வாரங்களில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந் துள்ளதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

முசாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் உள்ள 94 கிராமங்களிலிருந்து 42 ஆயிரம் பேர் சொத்து சுகங்களையெல்லாம் விட்டு விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக அம் மாநில அரசே உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள் பல மடங்கு அதிகம் என்பதே உண்மை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான மாண்புமிகு இ.அஹமது சாஹிப் தலைமையிலான குழுவினர் இம் மாதம் 16, 17 தேதிகளில் கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு தாவ்லி, காண்ட்லா, ஷாம்லி, மத்ரஸா, ரஷிதியா உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்து தைரியமூட்டியதோடு அம் மாவட்டங்களின் மாஜிஸ்திரேட்டுகளையும் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். செப்டம்பர் 18ம் தேதி உ.பி. மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து முஸ்லிம்களின் பாதிப்பு குறித்து முறையிட்டு உரிய நிவாரணம் வழங்கவும், சொந்த இடங்கள் திரும்பவும், பாதுகாப்பு அளிக்கவும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், கலவரம் குறித்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழுவினர் மனு அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தலைநகர் லக்னோவில் செய்தியாளர் களிடம் பேசிய இ.அஹமது சாஹிப், """"50 முகாம்களில் 55 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முசாபர்நகர் மாவட்டம் மயான பூமியாக மாறிவிட்டது. கலவரத்தில் உறவு களையும், உடமைகளையும் இழந்தவர்கள் நிர்க்கதியாக தவிக் கின்றனர். அவர்களுக்கு அரசு அறிவித்த எந்த உதவியும் இது வரை போய் சேரவில்லை"" என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி நிம்மதியுடன் வாழ மத்திய -மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகிறோம்.

அதேசமயம் இப்போதைய நம்முடைய கடமை வகுப்புவாதிகளின் கோரத் தாண்டவத்திற்கு இரையான முசாபர் நகர் மாவட்ட முஸ்லிம்களின் துயர் துடைக்க உடனடி முயற்சிகள் மேற்கொள்வதுதான்.

கடந்த ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மிகப் பெரும் பாதிப்புகளுக்கு ஆளான போது, லட்சக்கணக்கில் தங்கியிருந்த அகதி முகாம்களுக்கு நேரில் சென்று அடிப்படை வசதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் செய்து கொடுத்ததோடு, அஸ்ஸாம் முஸ்லிம்கள் பின்தங்கி இருப்பதற்கு கல்வி அறிவு பெற இயலாமல் போனதே காரணம் என அறிந்து தாருல் ஹுதா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிரந்தர கல்விக்கு பெரும் பங்களிப்பை செய்துதது.

அதே போன்று உத்திரபிரதேச கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் களம் இறங்கியுள்ளது. இப்பணிக்கு தாராளமாக வாரி வழங்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.

இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் முற்கூட்டியே அறிவிப்பு செய்து பள்ளிவாசல், மஹல்லா ஜமாஅத்துகள், மற்றும் வீடு வீடாக சென்று சிறுகச் சிறுக நிதி திரட்டி கீழ்காணும் முகவரிக்கு உடனடியாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

இந்நிதியை, IUML RELIEF FUND State Bank of India Current Account No: 32476975149 Thousand Lights Branch Code No:3207 Chennai என்ற வங்கி கணக்கிலோ,

காயிதே மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பைத் தெரு, சென்னை -600 001 என்ற முகவரிக்கும் காசோலை/வரைவோலை/பணவிடையாகவோ அனுப்பி தர வேண்டுகிறோம்.

கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் கண்ணீர் துடைக்க முன் வருவோம்; காவலன் அல்லாஹ்வின் பெரும் கருணை பெறுவோம்.

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்டத்தில் பணிகள்

 பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு, "கல்வி தகவல் மேலாண்மை" முறையில், மாணவர்களின் விபரம் பதிவு செய்யப்பட்டது. "ஆன் லைன்" மூலம் பெயர், முகவரி உள்ளிட்ட 14 தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன்படி, 1 ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு, நிரந்தர அடையாள எண் வழங்கப்படும். வேறு பள்ளிக்கு மாறினாலும், அடையாள எண்ணை காட்டி, தகவல்களை உறுதி செய்யலாம். இதற்காக, பதிவு செய்யப்பட்ட விபரங்களை, மீண்டும் சரி பார்த்து இறுதி செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இப்பணிகள் நடக்கின்றன.

டி.டி., மருத்துவ கல்லூரி மாணவர்களை அரசுக் கல்லூரியில் சேர்க்க முடியாது

"டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் பெறவில்லை" என, மருத்துவத் துறை கூறியுள்ளது.

இதுகுறித்து, மருத்துவத் துறை துணை இயக்குனர், முடிசூட பெருமாள் கூறியதாவது: சர்ச்சைக்குரிய டி.டி., மருத்துவக் கல்லூரியில், 2010 - 11ல் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் போதிய மதிப்பெண் பெறவில்லை. மருத்துவக் கல்வியில் சேர 60 சதவீத மதிப்பெண் தேவை.

ஆனால், 2010 - 11ல் டி.டி., மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 150 பேரில் 72 பேர் 50 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர். 48, 49, 49.5 என்ற சதவீதத்தில் தான் இவர்களது மதிப்பெண் உள்ளது. மீதமுள்ள 78 பேரின் மதிப்பெண், அரசு மருத்துவக் கல்லூரி ரேங்க் பட்டியிலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், இவர்களை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள முடியாது. இவர்களை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தால், இவர்களுக்கு மேல் மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்களுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

எனவே, டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வேறு படிப்புகளை தேர்வு கொள்வதே, அவர்களது எதிர்காலத்துக்கு நல்லது. இவ்வாறு, முடிசூட பெருமாள் கூறினார்.

கோவை வேளாண் பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ருவாண்டா நாட்டில் அறிமுகம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை கண்டுபிடிப்பான தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை அகற்றும் உபகரணங்கள் ருவாண்டா நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தானிய சேமிப்பின்போது ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், குழாய் மற்றும் கூம்பு வடிவ பொறி, பயறு வண்டுகளை பிடிக்கும் பொறி, கிண்ணவடிவ பொறி, பூச்சிகளை தானாகவே அகற்றும் கருவி, பூச்சிகளின் முட்டைகளை அகற்றும் பொறி என பலவகை கருவிகள் உள்ளன.

சமீபத்தில் ருவாண்டா நாட்டிலிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பூச்சியியல் துறை பட்டமேற்படிப்பு முடித்த மாணவர் அதனேஸ் தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை, உபகரணங்கள் மற்றும் பொறிகளை கொண்டு கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். படித்து முடித்து சொந்த நாட்டுக்கு செல்லும்போது தமிழ்நாடு வேளாண் பல்கலை தானிய சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை கண்டறிய உதவும் உபகரண பெட்டிகளை விலைக்கு வாங்கிச் சென்றார்.

ருவாண்டா நாட்டு அரசின் வேளாண் துறையில் பணிபுரியும் இவர், 25 விவசாயிகளுக்கு இக்கருவிகள் குறித்து பயிற்சியளித்தார்; அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். பல்கலை கண்டுபிடிப்புகள் தொடர்பான விவரங்களை அவர்களுக்கு அளித்து பூச்சிகளை பாதுகாக்க அதனேஸ் பயிற்சியளித்து வருகிறார்.

சனி, 14 செப்டம்பர், 2013

தியாக சீலர், பன்னூல் ஆசிரியர் A .K .ரிபாயி (ரஹ்) - வரலாற்று சுருக்கம்

தென்காசி மேடை முதலாளி என்று தென் தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப் பட்டு வந்த குடும்பத்தின் பேரப்பிள்ளை அஹமது  கபீர் ரிபாய்.

மு.ந.அப்துல் ரஹ்மான் சாஹிப் , காயிதே மில்லத் இருவரும் சகலபாடிகள்.

 ஆடுதுறைப் பெருவணிகர் ஜமால் முஹம்மது சாஹிப். சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரி, இன்னுமுள்ள ஜமாலியா அறக்கட்டளைகளின் நிறுவனர். திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரி இவர் பெயரிலேயே இயங்கி வருகிறது. இந்த ஜமால் முஹமது சாஹிபின் தம்பி ஜமால் அப்துல்லாஹ் சாஹிபின் மூத்த மகளார் ஜமால் பாத்திமாவை மு.ந. அப்துல் ரஹ்மான் சாஹிப் திருமணம் செய்திருந்தார். இரண்டாவது மகள் ஜமால் மரியமை, மு.ந.அ  அவர்களின் தம்பி மு.ந. முஹம்மது சாஹிப் நிக்காஹ் புரிந்து இருந்தார். அடுத்த மகள் ஜமால் ஹமீதாவை காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் மணம் செய்திருந்தார். இந்த மூவரும் தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் குறிக்கத்தக்கப் பெருமைக்குரியவர்கள். அல்ஹம்து லில்லாஹ்.

மு.ந.அ  - தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனத் தலைவர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில துணைத் தலைவர்.

காயிதே மில்லத் மறைந்த உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தற்காலிகத் தலைவராக சில மாதங்கள் இருந்தார். அதன் பின் கேரளத்து பாபக்கி தங்கள் அப்பொறுப்பை ஏற்றார்.

 காயிதே மில்லத் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர்.

மு.ந.மு - திருநெல்வேலி முஸ்லிம் அனாதை நிலைய நிறுவனத் தலைவர்.

                     அண்ணலாரின் வாழ்க்கை வரலாற்றைத்  தமிழ் உரை நடையில் முதன்முதல் திருநபி சரித்திரம் என்ற பெயரில் எழுதி நூலாக  வெளியிட்டவர்.

மு.ந.அ வின் மூத்த மகனார் A.K. ரிபாய் சாஹிப். இரண்டாவது மகனார் தமிழகச்  சட்டமன்ற கடையநல்லூர் தொகுதி  முன்னாள் உறுப்பினர். ஷாகுல் ஹமீது சாஹிப் .

அடுத்து மகளார் காதர் ஹைருன்னிஷா பேகம்.

 மு.ந.அ  1952 இல் தமிழக சட்டமன்ற திருநெல்வேலி தொகுதி முஸ்லிம் லீக் உறுப்பினர்.

மு.ந.முஹம்மது சாஹிப் 1939 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் மேலவை உறுப்பினர்.

A.K.ரிபாய் சாஹிபின் சிறிய தந்தை மு.ந.மு. அவர்களின் மூத்த மகனார் ஜமால் முஹம்மது சாஹிப் - இவர், இவரின்  தந்தையார் மறைவிற்கு பின் முஸ்லிம் அனாதை நிலையத்தின் தலைவராக வாழ்நாள் முழுதும் இருந்து வந்தார்.

ஜமால் முஹம்மது சாஹிபின் துணைவியார் காதர்  ஹைருன்னிஷா பேகம். இவர் நெல்லை முஸ்லிம் சிறுமியர் கல்வி நிலையத்தின் நிறுவனத் தலைவியர். இவர் A.K.ரிபாய் சாஹிபின் தங்கை.

தி.மு.க. வின் கூட்டணியோடு முஸ்லிம் லீக் 1962 இல் தேர்தலை விடுதலைக்குப் பின் முதன்முதல் சந்தித்தது. இதில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் காயிதே மில்லத்தின் தம்பி K.T.M.அஹமது இப்ராஹிம் சாஹிப் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தென்காசி தொகுதிக்கு முஸ்லிம் லீக் வேட்பாளராக  A.K.ரிபாய் சாஹிப் போட்டியிட்டார். வட சென்னை மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளராக A.K.A.அப்துல் ஸமது சாஹிப்   போட்டியிட்டார். நாகப்பட்டணம் சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் போட்டியிட்டார். இன்னும் மூவரும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் அனைவருமே வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.

1966 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் மாநிலத்தின் மாநில செயலாளராக முஸ்லிம் லீகின் தொடக்கக் காலத்திலிருந்து பதவி வகித்து வந்த K.T.M. அஹமது  இப்ராகிம் சாஹிப் மறைந்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழ் மாநில முஸ்லிம் லீகின் மாநில செயலாளராக 1979 வரை A.K. ரிபாய் சாஹிப் பதவி வகித்து வந்தார்.

1972 தமிழ் நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர்களால் டெல்லி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர்களில் முஸ்லிம்  லீக் சார்பில் A.K.ரிபாய் சாஹிப்  தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த நேரத்தில் உடன் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களில் அதிகமாக வாக்குகளைப்  பெற்று வெற்றிப் பெற்றவர் A.K.ரிபாய் சாஹிப்.

1979 க்கு பின்னர் தந்தையார் நிறுவனத் தலைவராக இருந்து வந்த தென் இந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் தலைவராகவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில முதல் துணைத் தலைவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் பொறுப்பு வகித்து வந்தார்.

1998-ம் ஆண்டு  தன் மூத்த மகனார் A. நத்ஹர் பாவா ஜலால் மற்றும் அவர் தம் துணைவியார் Dr. ஹிப்பத் பாத்திமா உடன் ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றார் A.K.ரிபாய் சாஹிப். மதினத்தில் கடமைகளை நிறைவேற்றி விட்டு மக்கத்தில் இருந்த காலத்தில் மார்ச் 21-ல் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றி வந்து அமர்ந்த நிலையில் அவரே தன் கபன் துணியை மேலே போர்த்திக் கொண்ட நிலையில் இறை நாட்டப்படி இறைவனளவில் சேர்ந்தார்.        

அவரின் ஜனாஸா கஅபாவில் பஜ்ர் தொழுகை முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜனாஸா தொழுகையில் பங்கு பெற மக்கா- "ஜன்னத்துல் மாலா " மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

A.K.ரிபாய் சாஹிபின் துணைவியார் ஆமினா அம்மையார்.

இவர்களின் வாரிசுகள் :

1. A. நத்ஹர் பாவா ஜலால். M .Sc . (Agri )
(தமிழகத் தோட்டக் கலைத்துறை முன்னாள் இணை இயக்குனர்.)
2. A. அப்துல் ரஹ்மான் பாரூக். B.Sc
3. A. முஹம்மது சாஹிப் பிலால்
4. அ. ஹிலால் முஸ்தபா
5. A. முஹம்மது இஸ்மாயில் ரபீக் (Auditor)

வியாழன், 12 செப்டம்பர், 2013

35 சதவீதம் இளைஞர்கள் புகையிலைக்கு அடிமை

புகையிலை பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பான, சர்வதேச கருத்தரங்கம், டில்லியில் நேற்று நடைபெற்றது. உலக சுகாதார மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் பேசியதாவது: நம் நாட்டில், 27.6 கோடி பேர், புகையிலை பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். நம் இளைஞர்களில், 35 சதவீதம் பேர், புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட, குட்கா, ஜர்தா போன்ற புகையிலை பழக்கம் தான், அதிக அளவில் உள்ளது.
சிகரெட் பிடிக்கும் பழக்கம், 9 சதவீதம் பேரிடம் உள்ளது என்றால், குட்கா, ஜர்தா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோரின் சதவீதம், 35 வரை உள்ளது. மத்திய அரசு, குட்கா, ஜர்தா போன்றவற்றை, தடை செய்துள்ளது. இவ்வாறு, அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசினார்.

மத்திய சுகாதாரத் துறை செயலர், டெய்சி ராஜு பேசும்போது, ""புகையிலையை, அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. புகையிலையை அதிக அளவில், உற்பத்தி செய்யும் நாடுகள் வரிசையிலும், மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது,'' என்றார்.

பொது இடத்தில் புகை பிடிப்பதற்கும், புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்களுக்கும், உள்ள தடையால், புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிகை குறைந்து உள்ளது. புகையிலை இல்லா சமுதாயம்அமைப்பதில், நாம் தீவிரமாக உள்ளோம். புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பார்லிமென்ட்டில்ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிவில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு

துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிறுவனம் இயற்கையாகவே மிக முக்கிய துறைமுகமான விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் (டிரெய்னி) பிரிவில் 13 சிவில் இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்
டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் இன்ஜினியரிங் அல்லது சர்வே இன்ஜினியரிங்கில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற 2 கட்ட நிலைகளிலான தேர்ச்சி முறையை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

இதர விபரங்கள்
டிரெட்ஜிங் கார்ப்பரேஷனின் சிவில் இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/- க்கான டி.டி.,யை "DREDGING CORPORATION OF INDIA LTD" என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு 16.09.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.

முகவரி
Dy. Manager(HR)(CM/IR), DCI Limited, Dredge House, Port Area, Visakhapatnam - 530 001

இணையதள முகவரி: http://dredge-india.nic.in

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

வேலை கிடைத்தும் இடம் கிடைக்கவில்லை: தவிப்பில் 150 இளநிலை ஆய்வாளர்கள்

கூட்டுறவு துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, நியமன ஆணை பெற்றும், ஆறு மாதமாக பணியில் சேர முடியாமல், 150 பேர், அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகக் கூட்டுறவுத் துறையில், இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, 2012 ஆக., 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., மூலம், போட்டித் தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் உள்ள, 150 பணியிடங்களை நிரப்ப நடந்த தேர்வில், 6 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மார்ச் மாதம், 11ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களில், தேர்ச்சி பெற்ற, 150 பேருக்கு, அப்போதே பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

அப்போது, பணியிடம் குறித்த தகவல், கூட்டுறவுத் துறை மூலம் தெரிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை நம்பி, அப்பாயின்ட்மென்ட் ஆர்டருடன், 150 பேரும், ஊருக்கு திரும்பினர். சில மாதங்கள் கடந்தும், அவர்கள், எந்த இடத்தில் பணியில் சேருவது என்பதற்கான உத்தரவு வரவில்லை என்பதால், அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை செயலர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளோ, "தேர்வு நடத்தி, தகுதி உள்ளவர்களுக்குப் பணி நியமன உத்தரவு வழங்குவது மட்டுமே, எங்கள் பணி; அதை நாங்கள் செய்து விட்டோம்; உங்களுக்கு எந்த பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை, கூட்டுறவுத் துறை தான் தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

காத்திருங்கள்: கூட்டுறவுத் துறை அதிகாரிகளோ, "விரைவில் பணியிடம் ஒதுக்கப்படும். அதுவரை, காத்திருங்கள்" என கூறி வருகின்றனர். கூட்டுறவுத் துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டும், ஆறு மாதமாக, பணியில் சேர முடியாமல், 150 பேர் தவித்து வருகின்றனர்.

போதை ஆசா­மி­களால் பெண்கள் அவதி

சென்னை மயி­லாப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பகு­திகள் தற்­போது
பார்­க­ளாக மாறி வரு­கின்­றன.சென்னை மயி­லாப்பூர் ரயில் நிலையம் அருகே, ‘டாஸ்மாக்’ கடைகள் உள்­ளன. அவற்றில், ‘பார்’ வச­திகள் இருந்­தாலும், பெரும்­பா­லான ‘குடி­ம­கன்’கள், சாலை­யோ­ரத்­தையே ‘பார்’­க­ளாக மாற்றி விடுகின்­றனர்.


மது­பாட்­டில்­களை வாங்கி வந்து,சாலை­யி­லேயே நின்று, ‘கட்டிங்’
பிரிப்­பதும், அங்­கேயே வைத்து குடிக்கும் செயல்­களும் அன்­றாட நிகழ்­வு­க­ளா­கி­விட்டன. ரயில் நிலையம் செல்வோர்,குறிப்­பாக பெண்கள், இதனால்
பாதிக்­கப்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.


இது­த­விர, காலி­யான மது பாட்­டில்­களை போதையில் கண்­ட­படி வீசி உடைப்­பதாலும், சாலை­யோரம் செல்வோர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். போதை­யே­றிய சில ‘குடி­ம­கன்’கள், பெண்­களை கேலி, கிண்டல் செய்யும் செயல்­களும் நடக்­கின்­றன. போலீ­சாரும் இதை கண்டும், காணாமல் இருந்து வரு­கின்­றனர்.


பொது­மக்­க­ளுக்கு தொல்லை தரும் வகையில், தொடரும் அவர்கள்
அட்­ட­கா­சத்தை போலீசார் வேடிக்கை பார்க்­காமல், கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என, பகு­தி­வா­சிகள்
வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

சமுதாயத்திற்கு இடர்ப்பாடு ஏற்பட்டபோதெல்லாம் அரும் பாடுபட்ட இ. யூ. முஸ்லிம் லீகிற்கு உலமாக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் :ஜமாத்துல் உலமா சபை கௌரவத்தலைவர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் பாஜீல் பாகவி வேண்டுகோள்

திருமணம் , குடும்பப் பிரச்சினைகள், மணவிலக்கு விவகாரங்களில் தலையிடவோ, சான்று வழங்கவோ காஜிகள் ஙாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள் கத்தீப்களுக்கு அதிகாரமில்லை என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. திருமதி பதர் சயீத் வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர் மனு தாரராக மனு தாக்கல் செய்து வழக்காடி வருகிறது. 

ஷரீஅத் சட்டத்திற்கு விரோதமாகவும், பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் நோக்கிலும் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் விபரீதத்தை சமுதாயத்திற்கு உணர்த்தும் வகையிலும், இஸ்லாமிய திருமண, விவாகரத்து சட்டங் களை முஸ்லிம் அல்லாதவர் களும் புரிந்துகொள்ளச்செய்யும் நோக்கோடு மாநிலம் தழுவிய அளவில் இஸ்லாமிய சட்ட விளக்க கருத்தரங்குகளை ஊர்கள் தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தி வருகிறது.

நாகை வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நீடூரில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க கருத் தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நாகை தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் எம்.எம்.சம்சுத்தீன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் அமீர் என்.ஏ.எம்.நூருல்லாஹ் வரவேற்று பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப்,சர்வதேச காயிதே மில்லத் பேரவை ஒருங் கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில பொதுச்செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி முதல் வரும்,மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கௌரவத் தலைவருமான மார்க்க மாமேதை மௌலானா முப்தி எ .முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாக்கவி ஹஜரத் கலந்து கொண்டு பேசியதாவது: ஷரியத் என்பது ஒரு பெரிய கடல். குர்ஆன், ஹதீஸ், அடிப்படையில் அமைந்த அதனை சங்கைக்குரிய இமாம்கள் ஆய்வு செய்து தெளிவான சட்டத்தை நமக்கு தொகுத்து அளித்துள்ளார் கள். அதனை யுக முடிவு காலம் வரை யாரும் அசைக்க முடியாது. இந்த சட்டங்களை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தான் ஷரீஅத் விஷயத்தில் இன்று வரை பல குழப்பங்களை செய்து வருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம் லீக் பேரியக்கம் நாட்டின் விடுதலைக்கு முன்பும் சரி விடு தலைக்கு பின்பும் சரி இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து வருகிறது.

இந்த நாட்டில் ஷரியத் திற்கும்,முஸ்லிம்களின் வாழ்வாதார விஷயங்களுக்கும் எப்பொழுதெல்லாம் இடர்பாடு வந்ததோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம் லீக் பெரும்பாடுபட்டு ஷரியத்தையும், சமுகத்தையும் காப்பாற்றி வந்துள்ளது. வரலாறு இதுவாக இருந்தாலும் இன்றும் கூட சில விஷமிகள் சமுதாயத்திற்கு எதிராக செய்து வரும் சூழ்ச்சி களை முறியடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் களம் கண்டு வருகிறார்கள். இந்த உலகிற்காக மட்டு மில்லாமல் மறுமை நன்மையை கருத்தில் கொண்டு உளத்தூய்மையோடு பணியாற்றி வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சங்கைக்குரிய உலமா பெருமக்கள் உறுதுணை யாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மௌலானா முப்தி ஏ. முஹம்மது இஸ்மாயில் பாஜீல் பாகவி ஹஜரத் குறிப்பிட்டார்.

உலமாபெருமக்கள், முஸ்லிம் லீக் மறு முகங்கள்
நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபி கல்லூரி துணை முதல்வர் மௌலானா அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் உரையாற்றும் போது மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதையும் மார்க்க விஷயங்களில் உலமாக்களின் வழிகாட்டுதலையே ஏற் வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக சொல்லுகின்ற ஒரே சமுதாய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே. இந்த இயக்கத்தை ஆதரிக்க வேண்டியது உலமாக் களின் கடமை எனக்குறிப் பிட்டார்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

உணர்வுமிக்க அரசியல் பாதையா ? உணர்ச்சி மிக்க அரசியல் பாதையா ? --- நம் முன் சென்ற சமுதாயத்தலைவர்கள் காட்டிய வழி என்ன ?

காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி  தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது , திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் அண்ணாதுரை தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் . ஆனால் ,அண்ணாதுரை தன ஆட்சியின் முதலாண்டை பூர்ஹ்தி செய்த நிலையில் மரண முற்றார் . பின்னர் தமிழக முதல்வராக திமுகவின் சார்பில் பதவியேற்றார் கருணாநிதி .

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் முதன் முறையாக மதுக்கடை திறக்கப்பட்டது .அப்போது திமுக கூட்டணியல் இருந்த ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அனைத்து நிர்வாகிகளும் ,தொண்டர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் , திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று தலைவர் காயிதே மில்லத்திற்கு கோரிக்கை வைத்தனர் . சிராஜுல் மில்லத் அ.க .ஆ . அப்துஸ் சமது சாஹிபு , நாவலர் AM .யூசுப் சாஹிப் , எம்.எம்.பீர் முஹம்மது சாஹிப் உள்ளிட்ட முஸ்லிம் லீக்கின் பிரச்சார பீரங்கிகள் மாநிலம் முழுவதும் முஸ்லிம் லீகின் கூட்டங்களில் மதுக்கடையை திறந்த திமுக -வினை எதிர்த்து வீர முழக்கமிட்டனர் .

இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுக்குழு தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் தலைமையில் கூடியது . பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று பேசினார்கள் .இறுதியாக பேசிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் ) அவர்கள் , மதுக்கடையை திமுக திறந்ததை நாம் கண்டிக்கிறோம் , மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோருகிறோம் . அதே நேரத்தில் ,திமுக -வா ? அல்லது எதிர் தரப்பா ? என்று நாம் நோக்கும் போது , முஸ்லிம் சமுதாயத்திற்கு திமுகவை விட எதிர் தரப்பு பாதகமாக உள்ளது ,எனவே ,திமுக உடன் கூட்டணி தொடரும் ,அவர்கள் திருந்த வேண்டும் ,அவர்கள் நம் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் , அவர்கள் தவறுக்கு அல்லா தண்டனை வழங்குவான் என்று கூறி திமுகுடன் கூட்டணி தொடரும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார்கள் ,பொதுக் குழு உறுப்பினர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு ஏற்றுக் கொண்டனர் . (தொடரும் ...............)

----------- ஜமிலா மைந்தன்

நேர்மையான அரசியல் தலைமை உருவாக தமிழ் சமுதாயம் உதவும் : டாக்டர் APJ .அப்துல் கலாம்

கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியின் மணிவிழாவை முன்னிட்டு, வளர் தமிழ் இயக்கம் நடத்தும்,தமிழ்பயிற்று மொழி, வழிபாட்டு மொழி மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதாமோகன், சாந்தி துரைசாமி, பானுமதிவேலுசாமி, ஆர்.கே.உமாதேவி, ருக்குமணி ஓதிச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தஞ்சை தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டு விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:–

ஆட்சிதுறையில் தமிழ், வாழ்வியல் வழிபாட்டில் தமிழ், நீதித்துறையில் தமிழ் என்று பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்படுவதுடன், தமிழ்அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றுவது தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

‘தாய் மொழி அறிவை வளர்க்கும். நாட்டை வளப்படுத்தும்’ என்ற தலைப்பில் இங்கு நான் உரையாற்ற இருக்கிறேன். நான் எனது ஆரம்ப கல்வியை தாய் மொழியான தமிழ்மொழி மூலம்தான் கற்றேன்.

தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்மொழியில் படித்ததால் கணிதத்தில் சிறந்த மதிப்பெண் பெறவும், அறிவியலில் ஆழ்ந்து விளங்கி படிக்கவும் உதவியாக இருந்தது. மேல்கல்வியை இணைப்பு மொழியான ஆங்கிலம் மூலம் கற்றாலும், பிற்காலத்தில் ஆராய்ச்சி திறனை அதிகரிக்க எனது ஆரம்ப கல்விதான் உதவியது. என் தாய் மொழி தமிழ் உலக பொதுமறையை உலகிற்கு தந்தது. ஆட்சிக்கும் நீதிக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் வழி சொன்னது. தாய் மொழி தமிழ் ஆழ்ந்த கல்விக்கு அடித்தளமிட்டது. ஊடக தமிழ் அறிவை விரிவடையச்செய்தது.

ஆட்சியில் தமிழ் மொழி அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக அமைந்தது. தாய் மொழி தரமான வளர்ச்சி பாதையில் தொழில் வளர உதவும். தாய் மொழி நீதி நிர்வாகம் சீர்பெற்று விரைவான நீதிக்கு வழிவகுக்கும். வழிபாட்டு தலத்தில் தாய் மொழி மக்களுக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து மனதில் அமைதி பிறக்க வைக்கும். எனவே தாய்மொழி அறிவு மக்களுக்கும், பள்ளிகளுக்கும் அரசிற்கும், நீதி நிர்வாகத்திற்கும் ஒரு அடிப்படையாகும்.

ஆரம்ப கல்வி
தரமான கல்வியும், கல்விப்பணியை அறப்பணியாக செய்யும் ஆசிரியர்களும் கல்வியை சிறக்க வைப்பதற்கு அடிப்படையாகும். கல்வி வியாபார பொருள் அல்ல. ஆரம்ப பள்ளி கல்வி, நல்லாசிரியர்களால், நல்ல பாடத்திட்டத்தின்படி மனதில் தங்கும்படி மாறிவிடும். அப்படிப்பட்ட கல்வி சிறப்பானதாக அமையும்.

நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளை கடைபிடித்து அன்பு, அறிவு, விவேகம், வந்தாரை வாழவைக்கும் தமிழ் கலாசாரம், அயலாரை போற்றும் பண்பு ஆகியவற்றை நாம் தொடர்ந்து பேணி பாதுகாக்க வேண்டும். போரில்லா உலகத்தை படைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

இனத்தின் அடையாளம்
அறிவு என்பது அழிவு ஏற்படாத கருவியாகும். சமுதாய சக்கரத்தின் அச்சு மொழியாகும். இதுஒரு தகவல் சுரங்கம். ஒரு இனத்தை அடையாளம் காட்டுவது மொழிதான். ஒரு இனம் தனது மொழியை இழந்தால் அடையாளத்தை இழந்துவிடும். நமது எண்ணம் அனைத்தும், தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அமைய வேண்டும்.
 

தமிழ்வழிக்கல்வி வாழ்க்கைக்கான கல்வியாக மட்டும் அல்லாமல், வேலைவாய்ப்புக்கான கல்வியாக மாற்றப்பட வேண்டும். அறிவியலில், கணிதத்தில், வேலை வாய்ப்பில், ஆட்சி மொழியில், நீதி நிர்வாகத்தில், மேலாண்மையில், வழிபாட்டில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், மற்ற மொழிகள் அந்த கலாசாரத்தை பற்றி அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், வேலை வாய்ப்பிற்கும், அமைதிக்கும், புரிந்துணர்வுக்கும் வழி வகுக்கும். எனவே மொழி மக்களை அறிவார்ந்த சமுதாயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

நேர்மையான அரசியல்
நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், வித்திடும் வகையில் அமைந்திருக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020–க்குள் வளர்ந்த நாடாக மாறும். ஒரு நேர்மையான அரசியல் அனைத்து மக்களையும், அவர்தம் கலாசாரத்தையும் போற்றும் வகையில் அமையும். நேர்மையான, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றும் ஓர் அரசியல் தலைமை இளைஞர் மத்தியில் உருவாகும். அதற்கு தமிழ் சமுதாயம் உறுதுணையாக இருக்கும். அதற்கு இந்த மாநாடு உதவும்.

இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கோரிக்கை

மயிலாடுதுறை நீடூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன், M.அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் பேசினர். மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜகான், நிஜாமுதீன், மாவட்ட செயலாளர் அமீர்நூருல்லாஹ், உள்பட பலர் பேசினர். இதை தொடர்ந்து மாநிலத் தலைவர் கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

பொதுக்குழு கூட்டம்
வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அன்று மாலையில் அமைப்பின் மாணவர் அணி மாநில மாநாடு நடக்கிறது. இதில் தேசிய நிர்வாகிகள், கேரள அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வியாளர்கள் கலந்துக் கொள்கின்றனர். முன்னாள் வக்பு வாரியத் தலைவரும், மைனாரிட்டி கமிஷன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதூர்சையது முஸ்லிம்களுக்கும், எல்லோருக்கும் சேர்ந்து ஒரே விதமான சிவில் சட்டம் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். அனைவருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் வேண்டும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும்
சென்னை ஐகோர்ட்டில் 47 நீதிபதிகள் இருந்தபோது முஸ்லிம் சமுதாய நீதிபதிகள் 4 பேர் இருந்தனர். தற்போது நீதிபதிகள் பணியிடங்கள் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மட்டும் தான் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நீதிபதியாக உள்ளார். இவரும் வருகிற நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். புதிய நீதிபதிகள் 18 பேர் நியமனம் செய்யும்போது சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடி 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் 5½ கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 55 லட்சம் பேர் முஸ்லிம் வாக்காளர்கள் விகிதாச்சாரப்படி சட்டமன்றத்தில் 25 உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் 2 உறுப்பினர்கள் முஸ்லிம்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து உள்ளோம். ஜனநாயக, சமயசார்பற்ற, சமூக நீதியை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திகள் வருகிற தேர்தலில் ஒரு அணியில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


வெள்ளி, 6 செப்டம்பர், 2013

2014 நாடாளுமன்றத் தேர்தலும் கூட்டணி யூகங்களும் (தமிழகம் )

தமிழகத்தை பொருத்தவரையில் மத்தியில் உள்ள கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் எந்த கட்சியும் பிரதான கட்சியாக இல்லை .மாநில கட்சிகளாகிய அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை பொறுத்தே கூட்டணிகள் அணி சேரும் .

ஆளும் கட்சியான அதிமுக தலைவி ஜெயலலிதா சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து நின்று 40 தொகுதிகளிலும் வெல்லும் என்று பேசினார் .எவ்வாறு இருந்தாலும் ,இறுதியில் ஜெயலலிதா கூட்டணி அமைப்பார் என்று இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் நம்பிக்கையோடு காத்து இருக்கின்றன .தேர்தல் முடிந்த பின் ,மோடி பிரதமர் வேட்பாளரானால் பிஜேபிக்கு ஜெயலலிதா ஆதரவு கொடுப்பார் என்று பிஜேபி நம்பிக்கையோடு இருக்கின்றது .அதிமுக கூட்டணி அமைத்தால் தேமுதிக ,புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெறாது என்பது உறுதியாகிவிட்டது .

எதிர்கட்சியான திமுகவோ மிக பலத்த யோசனையில் உள்ளது .எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் இலங்கை பிரச்சினை எதிரொலிக்குமா ? எதிரொலிக்காதா? என்பதுதான் திமுகவின் முக்கிய யோசனை ஆகிவிட்டது . காங்கிரசை விடுவதற்கு திமுக தலைமைக்கும் ,திமுகவை விட காங்கிரஸ் தலைமைக்கும் மனமில்லை .திமுக தலைமையில் திமுக ,காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என்றும் , இந்த கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க காங்கிரஸ் முயற்சிக்கின்றது என்றும்; எனவே ,திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையலாம் என்றும் அரசியல் யூகங்கள் அடிபடுகின்றன .

பாஜக தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க தேமுதிகவை தனது பக்கம் இழுக்க பேரம் பேசிக்கொண்டுள்ளதாகவும் , தேமுதிகவோ தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாஜகவுடன் சேருவதற்கு விரும்பவில்லை என்றும் தேமுதிக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது .

இந்த நிலையில் ஆளும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 சீட்டுகளை ஒதுக்கிவிட்டு மீதி 36 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதற்கு ஜெயலலிதா திட்டம் வைத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன .

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றால் காங்கிரசுக்கு 9 , தேமுதிக விற்கு 6 , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு தலா 2 , புதிய தமிழகத்திற்கு 1 என்று கொடுத்து விட்டு மீதி 20 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம் போட்டுள்ளதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது .ஏனென்றால் ,திமுக 20 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட விரும்பவில்லை .

புதன், 4 செப்டம்பர், 2013

200 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 30 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 4 ஆண்டுகளில் 670-லிருந்து இப்போது 450 ஆகக் குறைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புகளை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வழங்குகின்றன.

காத்திருப்போர் எண்ணிக்கை 2.70 லட்சம்: தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2.70 லட்சமாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது.

ஆனால், பள்ளிக் கல்வித் துறையில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதால், மிகக் குறைந்த அளவிலான ஆசிரியர்களே இப்போது அரசுப் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு கூட 2 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பு பிரகாசமாக இல்லாததால், இந்தப் படிப்பில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (DTERT) (இப்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- (SCERT) வெளியிட்டிருந்த தகவலின்படி, 2010-11 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 670-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இருந்தன.

ஆண்டுதோறும் மூடப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 450 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 200-க்கும் கீழே குறையலாம் என ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு சேர்க்கை அதிகரிப்பு: கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது சுமார் 600 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன்காரணமாக, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்திருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மொத்தமாக 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

20 ஆயிரம் இடங்கள் காலி!

தமிழகத்தில் இப்போதுள்ள 450 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் தற்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.

இந்த ஆண்டு ஒற்றைச்சாளர கலந்தாய்வு மற்றும் நிர்வாகப் பிரிவு ஒதுக்கீடுகளின் கீழ் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

மொத்தம் 33 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கும்போது தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் இப்போது சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.

திங்கள், 2 செப்டம்பர், 2013

டெல்லி செங்கோட்டையில் சமயச்சார்பற்ற ஜனநாயக சமூகநீதிக் கொடிதான் பறக்கும் --- பேராசிரியர் கே. எம். கே.

இந்திய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி பாரதீய ஜனதா கட்சி. ஆளும் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி. முற்போக்குக் கூட்டணி, நாடாளுமன்றத்தை நடத்த நினைத்த போதெல்லாம் பா.ஜ.க., அதைத் தடுத்து நிறுத்துவதிலேயே தனது காலம் முழுவதையும் கடத்திவிட்டது.

முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளை விமர்சித்து வந்துள்ள பா.ஜ.க. எப்போதாவது, அந்தக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கை எதையும் முன்வைத்துள்ளதா என்றால், அதை அது எப்போதும் செய்ததில்லை.

நாடாளுமன்றம் நடந்தால் தான், நாட்டுக்குத் தேவைப்பட்ட நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும்-சீர்திருத்தம் செய்வதற்குச் சட்டங்களைக் கொண்டுவர முடியும். இதில் எதுவும் நடக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பா.ஜ.க., இன்று வரை இருந்து வந்திருக்கிறது.

இன்றைக்கு இந்திய ரூபாயின் மதிப்பு, டாலருக்குரிய மதிப்புடன் மிகவும் சரிந்த நிலையை எட்டி இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வாழ்க்கையில் மெத்தனம், குந்தகம், பாதகம் என்று ஏற்பட்டு, பலவித உள்நாட்டுச் சிக்கல்களும், வெளிநாட்டுப் பிரச்சினைகளும் தோன்றிவிடும் என்னும் அச்சம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட அச்ச நிலையிலும் வருங்காலம் பற்றிய நம்பகத் தன்மையில் குறைவுள்ள நிலையிலும் நாட்டுப் பொருளாதாரத்தைக் கொண்டுவந்து நிறுத்தியதற்கு மிக முக்கிய காரணம், பா.ஜ.க., வின் எதிர் மறை அரசியல் தான் என்று நன்கு அறிந்திருக்கிறார்கள். இவ்வளவு நெருக்கடியிலும், நாடாளுமன்றத்திற்கான தேர்தலை டாக்டர் மன்மோகன் சிங் அரசு, முன்கூட்டியே நடத்திட முன் வரும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து பா.ஜ.க., இன்று ஏமாந்து நிற்கிறது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2013 ல் நிச்சயமாக இல்லை. அடுத்த ஆண்டு 2014 மே திங்களில்தான் தேர்தல் நடக்கும் என்று இப்போது நிச்சயமாகிவிட்டது.

தேர்தலில் எப்படியாவது, வெற்றிக் கனியைப்பறித்திடலாம்-நாடாளுமன்றத்தில் 272 பிளஸ் இடங்களைப்பிடித்திடலாம் -ஆட்சி அமைந்திடலாம்- இந்தியாவை இந்து ராஸ்ட்ரம் ஆக்கிடலாம்- பாரத தேசம் முழுவதிலும் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினருக்கென்று உள்ள தனியார் சட்டங்களை எல்லாம் அழித்துவிட்டு எல்லா மதத்தவருக்கும் பொதுமான சிவில் சட்டத்தை அமுலாக்கலாம்- பாபரி மஸ்ஜிது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தீர்க்கப்பட்டாலும் தீர்க்கப்படாவிட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாபரி மஸ்ஜிது இருந்த இடத்தில் ராமர் கோயிலை எழுப்பி விடலாம், அதன் மூலம் இந்தியாவில் ஏகத்துவக் கொள்கைக்கு இடம் கிடையாது- சிலை வணகத்துக்கும்- பலதெய்வக் கொள்கைக்கு மட்டுமே இந்த தேசம் உள்ளது என்று உலகத்திற்குப் பறை சாற்றலாம்- இப்படிப்பட்ட கற்பனைகளில் மிதந்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியினர் இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் வியூகத்தில் முனைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தின் நெஞ்சத்தாமரையாம் திருச்சியில் செப்டம்பர் 26 தேதியில் நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரம் நடக்கப்போகிறது எனவும், தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவில் பா.ஜ.க., ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதற்குக் கட்டியம் கூறும் வகையில் சமுத்திரம் போல் ஜனங்கள் திரளவேண்டும் என்று கூறி, அதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

பா.ஜ.க., வின் பிரச்சார பீரங்கியாக மோடி அவர்கள் முழுங்கி வருகிறார். அவருக்கு இணையாக, தேசிய காங்கிரஸ் கட்சியில் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை.

தமிழ் நாட்டில் உள்ள பத்திரிகை உலகிலும் ஊடகத் துறையிலும் ஒரு மறைமுக பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த டெல்லி ஆட்சி பா.ஜ.க., கையில் தான் என்னும் கருத்தோட்டத்தை - எழுத்திலும் எண்ணத்திலும் பத்திரிகை உலகம் பிரதிபலிப்பதை அங்கங்கே காணமுடிகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டிலும் பா.ஜ.க., உடன் மக்கள் ஜனநாயக கட்சி இருக்கிறது என்றுஅதன் நிறுவனர் பாரிவேந்தர் கூறி வருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க., வுக்கு ஆதரவாக மறுமலர்ச்சி திமுக,தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் போன்றவை அணி சேரும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக காந்தீய மக்கள் கழகத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் கூறி வருகிறார் என வார இதழ்களில் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இல்லை, இல்லை தமிழகத்தில் திமுக தலைமையில் மீண்டும் காங்கிரஸ் வருகிறது. அதற்கு தேமுதிக ஆதரவு தருகிறது. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கின்றன. இப்படிப்பட்ட மெகா கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஊடுருவிச் செல்லும் வாக்குகளை வெல்லும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு மாறாக தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் தேமுதிக சேரப்போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அணி அ.இ.அ.தி.மு.க., அணி, திமுக அணி, தேமுதிக அணி, காங்கிரஸ் அணி, பா.ம.க., அணி என்று ஐந்து அணிகள் வலம் வரப்போகின்றன. தமிழக வாக்காளர்கள் திணறப்போகிறார்கள் என்றும் சில அரசியல் நோக்கர்கள் எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி, எதையும் தெளிவாக சொல்ல முடியாமல், மூடு மந்திரம் நிறைந்ததாக நிலைமை சென்று கொண்டிருக்கிறது. வழுக்குப் பாறையில் ஏறுவது போல தேர்தல் கூட்டணி கணிப்புகள் அமைந்திருக்கின்றன.

எதுவெல்லாம் நடக்குமோ, அதுவெல்லாம் நடக்கும், அதே சமயத்தில், இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டையில் ஜனநாயக சமயச் சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளில் ஊறித் திளைத்தவர்கள்தாம் சுதந்திரக் கொடியை ஏற்றுவார்கள் என்பதில் நமக்குக் கிஞ்சிற்றும் ஐயமில்லை. உங்களுக்கு எதிலும் சந்தேகமிருந்தால் அதைத் தூக்கி எறிந்திடுங்கள்.

செங்கோட்டையில் ஜனநாயக சமயச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையின் கொடிதான் உயர்ந்து பறக்கும் என்பதில் உறுதியாக இருங்கள்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தி ஹிந்துவின் பார்வையில்...தமிழ்நாடு முஸ்லிம் அரசியலின் மாறிவரும் முகம் ----காயல் மகபூப்.

பேரா. எம்.எச். ஜவாஹிருல்லாஹ் பதிலுக்குப் பதில் :
முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்வு காணும் இயக்கமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீக் இல்லாத காரணத்தால்தான் த.மு.மு.க தோன்றியதாககூறுகிறார்.

த.மு.மு.க தோன்றிய பின்சமூகத்தில் தீர்த்துக் வைக்கப்பட்டபிரச்சனை தான் என்ன?அந்த அமைப்புஉருவானதற்குபின் தமிழ்நாட்டில் 50அமைப்புகள் உருவாயின.

பள்ளிவாசல் விவாகரங்கள்காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.

தொழுகையும், நோன்பும் விவகாரமாக்கப்பட்டன,
மூன்று, நான்கு நாட்கள் பெருநாள்களாக கொண்டாடப்பட்டன.

அப்பாவி இளைஞர்கள் சிறைவாசம்அனுபவித்தார்கள்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு அடித்தளம்அமைத்தது இந்திய யூனியன் முஸ்லிம்லீக்.1999 ல் இதற்காக ஒற்றை கோரிக்கை மாநாடு நடத்தப்பட்டதும், அதில் கலந்துகொண்ட அன்றைய முதல்வர் கலைஞர் வாக்குறுதி வழங்கியதும் வரலாற்றுப்பதிவுகள்.

‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்அடுத்தக் கட்சியின் சின்னத்தில் தான்போட்டியிடுகிறது. த.மு.மு.க வின்அரசியல் அங்கமான ம.ம.க தன் சொந்த சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுள்ளது. மற்ற சமுதாய மக்களும் எங்களை தான் ஆதரிக்கிறார்கள்’’என பேராசிரியர் ஜவாஹிருல்லா குறிப்பிடுவது வரலாற்றை இருட்டடிப்புசெய்யும் முயற்சி.

2009 நாடாளுமன்ற தேர்தலில் நான்குதொகுதிகளில் போட்டியிட்ட ம.ம.கபெற்ற ஒட்டுக்கள் 68 ஆயிரத்து 346 இதில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லா 19 ஆயிரத்தி814 ஒட்டுக்கள் மட்டுமே பெற்றார்.மத்திய சென்னையில் ஹைதர் அலி13 ஆயிரத்து 160 ம், இராமநாதபுரத்தில் சலீமுல்லாகான் 21 ஆயிரத்து 430ஒட்டுகளும் பெற்றனர்.

ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 1991லேயே 5 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்றதொகுதிகளிலும் ‘‘ஏணி சின்னத்தில்’’தனித்து போட்டியிட்டது மக்களவை தொகுதிகளில் மட்டும் 1 லட்சத்து 29ஆயிரத்து 048 வாக்குளை பெற்றது.

அதே மயிலாடுதுறையில் ஏ.கே.எ.அப்துஸ்ஸமது 37 ஆயிரத்து 677வாக்குகளும், இராமநாதபுரத்தில்எ.எ.அப்துல் ரசாக் 49 ஆயிரத்து442 வாக்குகளும், வேலூரில்முஹம்மதுஇஸ்ஹாக் 31 ஆயிரத்து381 வாக்குகளும் பெற்றது வரலாற்றுச்சாதனை.

ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்பட்டு அனுதாப அலை வீசியஅந்த நேரத்தில் எந்த பெரிய கட்சியின் துணையுமில்லாமல் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் இந்த சாதனையைபடைத்தது. வன்னியர் சங்கம் அப்போதுதான் பட்டாளி மக்கள் கட்சியாகஅரசியலில் பிரசவித்தது. முஸ்லிம்லீக் போட்டியிட்ட இடங்களில் அதற்குபலமும் இல்லை அதற்கு களமும் இல்லை.

அந்த காலகட்டங்களில் ‘அரசியல்ஹாரம், ஒட்டுப்போடுவதும், ஜனநாயகமும் இஸ்லாத்திற்கு விரோதமானது’ எனபரப்புரை செய்தவர்களுக்கு இந்தவரலாற்று பதிவுகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது;சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடுகிறது; முஸ்லிம்களின் காலச்சாரதனித்தன்மைகளை காப்பாற்றபோராடுகிறது; தீவிரவாதமும் &வன்முறையும் கூடாது என போதிக்கிறது.அதனால் முஸ்லிம் சமுதாயம் இந்த இயக்கத்தை நேசிக்கிறது.

‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்பழைய நல்ல நாட்கள் அரசியலில்மீண்டும் வராதா’ என்ற சமுதாயஎதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.

தமிழகத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக கிளை மற்றும் "காயிதெ மில்லத் பல்கலைக் கழகம் " - முஸ்லிம் மாணவர் பேரவை

திருச்சிக்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ,முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய அளவில் அங்கீகரிக்கப் பட்ட நான்கு அமைப்புகளில் ஒன்றாகும். மற்ற மூன்றும் முஸ்லிம் யூத் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி ஆகியவைகளாகும்.

முஸ்லிம் மாணவர் பேரவை யின் மாநில மாநாடு ஏற்கனவே நெல்லை மாவட்டம் குற்றா லத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது எதிர்வரும் அக்டோபர் 5- ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

பல்லாயிரக்கணக்கான சீருடையணிந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், கல்வி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், கல்விக்கடன் துரிதமாக கிடைக்கவும் -அதற்கான வட்டியை ரத்து செய்யவும் மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொண்டும், சிறு பான்மை மாணவர்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் விடுதிகள் அமைக்க கோரியும்,

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளையை தமிழ் நாட்டில் அமைக்க கோரியும், சிறுபான்மையினருக்கென மத்திய அரசு அமைக்கும் 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வலியுறுத்தியும், காயிதெ மில்லத் பெயரில் ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மாணவச் சமுதாயம் சாதி, மத, கல்லூரி அடிப்படையிலும் மோதிக் கொள்ளாமலும், ஒழுக்க மாண்புகளுக்கு உட் பட்டு தலைசிறந்த எதிர்கால பிரஜைகளாக உருவாக்கப்படும் முயற்சியாக செயல் திட்டங் கள்அறிவிக்கப்பட உள்ளன. வன்முறை, தீவிரவாதம், போதை மற்றும் குற்றப் பழக்க வழக்கங்கள் பக்கம் தலை காட்டாமல் மாணவச் சமுதாயம் தற்காத்து கொள்ளும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இம் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசி யப் பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.