Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 26 மே, 2013

சௌதி அரேபியாவில் நிதாகத் தொழிலாளர் ஒழுங்குமுறை சட்டம்: இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை


சவூதி அரேபிய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் கொள்கையால் (நிதாகத்) அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சவூதி இளவரசர் சவுத் அல்-ஃபைசல் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் நிதாகத் சட்டத்தின்படி அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் பலர் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சவூதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஜூலை 3-ஆம் தேதிக்குள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அப்படி வெளியேறாவிட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சவூதிக்குச் சென்றுள்ளார். அங்கு சவூதி இளவரசரும்ம் வெளியுறவுத்துறை அமைச்சருமான சவுத் அல்-ஃபைசலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து இந்தியர்கள் நாடு திரும்பும் விவகாரத்தில் பிரச்னைகள் ஏற்படாதவாறு சவூதி அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அல்-ஃபைசல் நம்பிக்கை அளித்துள்ளார்.

இது தொடர்பாக சல்மான் குர்ஷித் கூறியதாவது:

சவூதி அரேபியா, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகும். இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்தியர்களின் வேலைத்திறன் பற்றி சவூதி அரசு நன்கு அறிந்துள்ளது.

இந்தியர்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அல்-ஃபைசத் உறுதியளித்துள்ளார்.

இந்தப் பயணத்தின்போது இரு நாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது, எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்றார் சல்மான குர்ஷித்.

கொடைக்கானலில் ரம்மிய மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி


கொடைக்கானலில் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை சீசனையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.

கொடைக்கானலில் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மாலை நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது.

சனிக்கிழமை காலை முதலே மேக மூட்டம் காணப்பட்டது. பிற்பகலில் சிறிது நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழையில் நனைந்தவாறே குளுமையை பயணிகள் அனுபவித்தனர்.

கொடைக்கானல் ஏரிச் சாலை, பிரையண்ட் பூங்கா பகுதிகளில் அதிகமான பயணிகள் காணப்பட்டனர்.

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொடர்பான படிப்பு

தற்போதைய நவீன தொழில் யுகத்தின் அடிப்படையாக விளங்குவது பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழில் தான். பிளாஸ்டிக்கை சிந்தடிக் ரெஸின்கள், எத்திலீன், பென்சீன், அம்மோனியா போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டு உருவாக்குகிறார்கள். விஞ்ஞானிகள் பிளாஸ் டிக்கின் புதிய வகைகளை ஆய்வுகளின் மூலமாக உருவாக்குகிறார்கள்.

பிளாஸ்டிக் விரிப்புகள், உடையாத பாத்திரங்கள், தோல் ரெக்ஸின் போன்ற பல்வகைப் பொருட்களின் தயாரிப்பானது பிளாஸ்டிக்கை நம்பியே உள்ளது. பிளாஸ்டிக்/பாலிமர் இன்ஜினியரிங் படிப்பில் இன்று பலர் விரும்பி சேருவதைப் பார்க்க முடிகிறது. அடிப்படையில் விஞ்ஞான நோக்கு கொண்டவர்களுக்கான சிறந்த துறை இது.

உலகெங்கும் இத் துறை வேகமாக வளரும் துறையாகவே விளங்குவதைக் காண்கிறோம். நுகர்வோர் கலாசாரம் உச்சத்தில் இருப்பதால் பிளாஸ்டிக் பொருட்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடிப்படையில் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருப்போர் மட்டுமே இத் துறைக்குச் செல்ல முடியும். இத் துறையில் பி.டெக்., பி.இ., படிப்புகள் தரப்படுகின்றன. பி.எஸ்சி., வேதியியல் முடித்துவிட்டு பி.டெக்., பாலிமர் டெக்னாலஜி படிப்பவர்களையும் நாம் காண முடிகிறது.

சென்னையிலுள்ள மதிய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இத் துறையில் சிறப்புப் படிப்பைத் தருகிறது. இது சென்னையிலுள்ள கிண்டியில் அமைந்துள்ளது. இது பின்வரும் படிப்புகளை நடத்துகிறது. பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங், பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் பிராசசிங் டெக்னாலஜி, பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெஸ்டிங் மற்றும் கன்வெர்ஷன் டெக்னாலஜி, பி.ஜி. டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் கம்போசிட் டெக்னாலஜி ஆகிய படிப்புகளை இது நடத்துகிறது. இதற்கு சிப்பெட் என்னும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாகவே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

முழு விபரங்களை அறியும் இணைய முகவரி: www.cipetindia.com