Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 17 மே, 2013

திருநெல்வேலிமாவட்டம் தென்காசியில் பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு


தென்காசியில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
தென்காசி 9வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புள்ளியியல் துறை சார்பில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் தலைமை வகித்தார். தென்காசி வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் ஆலி செய்யது சிராஜூதின் பாபா, வாசுதேவநல்லூர் புள்ளியியல் ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோர் வகுப்பினை நடத்தினர்.

அதில், கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கணக்கெடுப்பு பகுதிக்கு உட்பட்டவீடு, அமைப்பு, கட்டடம் போன்றவை விடுபடாமல் பூர்த்தி செய்ய வேண்டும். கணக்கெடுப்பு பகுதியில் உள்ள நிறுவனங்களின் விபரங்கள் பெறுவதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிறுவனங்கள் செயல்படும் இடத்திற்கான கட்டமைப்பினை கணக்கில் கொண்டு வரவேண்டும். நிரந்தர கட்டமைப்பு இன்றி செயல்படும் நிறுவனங்கள்,அவர்களின் பெயர், வீடு முகவரிகளை பதிவு செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சி வகுப்பில் கவுன்சிலர்கள், கருப்பசாமி, சங்கர சுப்பிரமணியன், குணசேகரன், ராமதாஸ், ஜெயலட்சுமி,வேல்விழி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் 42 கணக்கெடுப்பாளர்கள், 21 மேற்பார்வையாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
செங்கோட்டை வட்டார புள்ளியியல் ஆய்வாளர் இசக்கி நன்றி கூறினார்.

புள்ளியியல் (Statistics) படிப்புகள்


புள்ளியியல் என்பது கணித அறிவியல். இது விவரங்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், விளக்குதல், விவரங்களை வரைபடமாக வழங்குதல் ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

இவ்வாறு பெறப்படும் புள்ளியியல் விவரங்கள் வணிகம் மற்றும் அறிவியல் போக்குகளை முன்கூட்டியே கணிக்க உதவகின்றன. இயற்கை அறிவியல்கள், அனைத்து சமூக அறிவியல்கள், அரசாங்கம் மற்றும் வணிகம் போன்ற பல்வேறு கல்வித்துறைகளிலும் புள்ளியியல் பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் தொகை, மிருகங்கள், தயாரிப்பு பொருட்கள் முதலியவற்றின் புள்ளி விவரங்களை சேகரித்து, கணக்கியல் அடிப்படையில் ஆராய்ந்து, தொகுக்கப்பட்ட தகவல்களை கணக்கியல் வடிவத்தில் வெளிப்படுத்துவதே புள்ளி விவர படிப்பு.உயிரியல், கல்வி, பௌதிகம், மனோதத்
துவம், சமூகவியல் முதலிய துறைகளில் புள்ளி விவரம் பயன்படுத்தப்படுகிறது.

சேகரிக்கப்பட்ட விவரங்களை விளக்க, புள்ளியியல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்துறை, புள்ளியியல் என அழைக்கப்படுகிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மக்கள்தொகை அல்லது செயல்முறை பற்றி முடிவெடுக்க இந்த விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது அனுமானம் சார்ந்த புள்ளியியல் எனப்படுகிறது. விவரணை, முன்கணிப்பு மற்றும் அனுமானம் சார்ந்த புள்ளியியல் ஆகியவை இணைந்ததே பயன்பாட்டு புள்ளியில் எனப்படுகிறது.

புள்ளியியல் கோட்பாடுகளை ஆராயும் பிரிவு கணிதப் புள்ளியியல் என்று அழைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, துல்லியமான நிகழ்தகவு முடிவுகளைக் கொண்டு ஆராயும் பிரிவு துல்லியப் புள்ளியியல் என்று அழைக்கப்படுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்
பி.ஏ., (Applied Statistics)
எம்.எஸ்சி., (Applied Statistics)
பி.எஸ்சி., (Statistics)
எம்.எஸ்சி., (Statistics)
எம்.பில்., (Development Statistics)

இதைத்தவிர டிப்ளமோ, சான்றிதழ், முதுகலை டிப்ளமோ ஆகியவற்றிலும் புள்ளியியல் படிப்பு வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள்
இத்துறை படித்தவர்களும் மத்திய அரசின் புள்ளியியல் துறையில் பணி வாய்ப்புகள் உள்ளன. தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில்  இப்படிப்பு வழங்கப்படுகிறது.

1.Loyola College,   Nungambakkam, Chennai - 600034

2.Indian Statistical Institute, 37 Nelson Manickam Road, Chennai - 600 029

3.Madras Christian College,Tambaram,Chennai - 600059

4.PSG College of Arts and Science ,Avinashi Road, Civil Aerodrome Post, Coimbatore-641014

5.Manonmaniam Sundaranar University, Abishekapatti, Tirunelveli-627012