Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 8 ஏப்ரல், 2013

கணிதம் படிப்பவர்களுக்கு உதவித்தொகை


சென்னை கணிதவியல் நிறுவனத்தில், கணித துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள், இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

இங்கு வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் முழுவதும் கணிதம் தொடர்பான பாடங்களை உள்ளடக்கியதாகும். மற்ற பாடங்கள் எதுவும் இந்த படிப்பில் இடம்பெறுவதில்லை. மேற்படிப்புகளை தொடர்பவர்களுக்கும், முழவதும் கணிதப் படிப்புகளை படிக்க விரும்புபவர்களுக்கும் இப்படிப்பு ஏற்றதாகும்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் கூட இப்படிப்புகளை முடித்தவர்கள் மேற்படிப்புகளைத் தொடர வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம், மேலாண்மை, நிதி கணிதவியல், சாப்ட்வேர் போன்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கணிதவியல் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.

பி.எஸ்சி (ஹானர்ஸ்), கணிதம் மற்றும் கணினி அறிவியல், பி.எஸ்சி (ஹானர்ஸ்) இயற்பியல் ஆகிய இரண்டு இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றது. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழத முடியும். இப்படிப்புக்கான கல்விக் கட்டணம் பருவத்திற்கு ரூ.750 செலுத்த வேண்டும்.

இந்த படிப்பிற்கு உதவித் தொகையாக மாதந்தோரும் ரூ.4000 மும், இதர செலவுகளுக்கு ரூ.1000மும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி விகிதத்தைப் பொருத்து உதவித்தொகை வழங்கப்படும்.

முதுநிலைப் படிப்பில் எம்.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், பயன்பாட்டுக் கணிதம் உள்ளிட்ட மூன்று பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.

எம்.எஸ்சி., கணிதப் படிப்பில் சேர பி.டெக்., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைப்பெறும். எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பில் சேர கணினி துறையில் பி.இ., பி.டெக்., முடித்திருப்பது அவசியமாகும். எம்.எஸ்சி., பயன்பாட்டுக் கணிதப் படிப்பில் சேர பி.எஸ்சி.,யில் கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் பி.இ, பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

இந்த படிப்பிற்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4,800 வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகையுடன் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 கூடுதலாக வழங்கப்படுகிறது.

பிஎச்.டி., படிப்பில் கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. கணிதப் படிப்பில் சேர எம்.எஸ்சி., கணிதம், பி.இ பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். இயற்பியல் ஆராய்ச்சி படிப்பில் சேர பி.இ, பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி கணினி அறிவியல் போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை தொடர்பவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி உதவித் தொகையாக மாதத்திற்கு ரூ.16,000மும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.18,000மும் வழங்கப்படுகிறது. இதை தவிர புத்தகத்திற்கு என தனியாக ஆண்டுக்கு ரூ.10,000 மற்றும் தங்கும் விடுதி செலவுக்கு கல்வித் தொகையில் 30 சதவீதம் கூடுதலாகவும் வழங்கப்படுகிறது.

இந்த கல்வி நிறுவனத்தில் முழநேர படிப்பு மட்டுமல்லாமல் பகுதி நேர ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய: www.cmi.ac.in

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கும் கல்வி உதவித் தொகை


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடட் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது.

பொறியியல், மருத்துவம், எம்.பி.ஏ. முதல் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் மிகச் சிறந்த முறையில் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2600 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

இதில் 2000 ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000மும், 300 பொறியியல் மாணவர்களுக்கும், 200 மருத்துவ மாணவர்களுக்கும் (4 ஆண்டுகளுக்கு), 100 எம்.பி.ஏ. மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாணவிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு www.iocl.com இணையதளத்தை காணவும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல் ரகுமான் வீட்டில் தமிழக போலீஸார் அத்து மீறல் :நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சி


வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., இல்லத்தில் காவல்துறையினர் அத்து மீறி அநாகரீகமாக நடந்து கொண் டது பற்றி விசாரித்து நட வடிக்கை எடுக்கும்மாறு காவல்துறை உயர் அதிகாரி களுக்கும், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று 08.04.2013 காலை வெளிவந்த தினமலர் நாளிதழில், "வேலூர் எம்.பி. அண்ணன் மகன் வைர நகைகளுடன் தலைமறைவு" என செய்தி வெளியிடப்படிருந்தது.

அத்துடன் அவரது சென்னை இல்லத்தில் சோதனை நடப்பதாக தலைமை செயலகத்திலிருந்து பரப்பப்ட்ட செய்தியை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.இது பற்றி கேரள தொலைக்காட்சி ஊடங்களில் எழுத்துக்கள் ஓடவிடப்பட்டன.

இச்செய்தி தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு தொலை பேசி விசாரிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இது பற்றி நாம் விசாரித்து அறிந்த வரையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:

முத்துப்பேட்டையல் பரபரப்பு
எம். அப்துல் ரஹ்மான் எம்.பியின் புதல்வியின் திரு மணம் வரும் மே 5ம் தேதி திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கான அழைப் பிதழ் கொடுக்கும் பணியில் அக்குடும்பம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. எம்.பியின் உடன் பிறந்த சகோதரர் ராஜ் முஹம்மது புதல்வர் முஹம்மது நிஜாம் வெளிநாட்டில் பணி செய்கிறார். இவர் மீது கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் ராஜேஷ்குமார் என்ற காவல் துறை அதிகாரி தலைமையில் 5ம் தேதி மாலை போலீசார் முத்துப்பேட்டைக்கு சென்றுள் ளனர். அங்கு குற்றம் சுமத்தப் பட்டவரை தேடுவதற்கு பதிலாக எம்.பியின் முத்துப்பேட்டை இல்லத்தின் முன் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்காவல்துறை கூட்டத்தை கூட்டி பரபரப்பை உண்டாக்கி யுள்ளனர்.

அதன் பின்னர் இரவு (சூரிய அஸ்தமனத்திற்கு பின்) 7 மணி யளவில் எத்தகையை சோதனை வாரண்டும் கைது வாரண்டும் இல்லாமல் எம்.பி.யின் இல்லத் தில் நுழைய முற்பட்டிருக்கின் றனர்.

எம்.பியின் வயதான தாயார் தன் வீட்டில் எந்த ஆண்களும் இல்லை. ஆண்கள் வந்த பின் வாருங்கள் என கூறியிருக் கிறார் ஆனால் கதவை திறக்க வில்லையெனில் உடைத்து உள்ளே வருவோம் என அடம் பிடித்த காவல்துறையினர் அத்து மீறி உள்ளே நுழைந்திருக் கின்றனர். ஒவ்வொரு அறை யாக தேடி பார்த்தும் தாங்கள் தேடியது கிடைக்க வில்லை என திரும்பி சென்றிருக்கின்றனர்.

எம்.பியின் இல்லம் தேவை யில்லாமல் அவமானப்படுத்தப் பட்டதற்கு உள்ளுர் காவல் நிலைய ஆய்வாளர் செங்குட்டு வன் என்பவரே காரணம் என்றும் எண்ணற்ற புகார்களின் பேரில் பணிமாற்றம் செய்யப்பட்ட அவர் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும்

முத்துப்பேட்டைக்கே வந்துள்ளார் என்றும் அவரே தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிவிட்டார் என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தினர். தனது திட்டப்படி 6ம் தேதி காலை முத்துப்பேட்டை வந்த எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. காவல்துறை அதிகாரிகளிடம் """"""""ஒரு எம்.பியின் இல்லம் எனத் தெரிந்தும் எத்தகையை சோதனை வாரண்டும் இல்லாமல் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டது ஏன் எனக் கேட்ட போது "தவறாக நடந்து விட்டது மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று மட்டுமே சொல்லியுள்ளனர். ஆனால் ஊடங்களில் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற் படுத்தும் வகையில் செய்தி வந்துள்ளதே ஆகவே நான் நவடிக்கை எடுப்பேன் என எம்.பி. உறுதியாக கூறிவிட்டார்.

இதன்படி தஞ்சாவூர் காவல் துறை துணைத் தலைவரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டு ள் ளது.

சென்னையில் புரளி
இதனிடையே சென்னையில் உள்ள எம்.பி.யின் இல்லத்தில் சோதனை நடைபெறுவதாக இன்று காலை தலைமை செயவகத்திலிருந்து செய்தி பரப்பப்பட்டு ஊடகத் தினர் ஏராளமானோர் குவிந்த னர்.

ஆனால் எத்தகைய சோதனையும் நடைபெறவில்லை என்பதும், இது வீண் புரளி என்பதும் தெரிந்து அவர்கள் கலைந்து சென்றனர். திட்ட மிட்டப்படி எம்.பியின் குடும்பத் தினர் திருமண அழைப்பிதழை கொடுப் பதற்காக காலை யிலேயே வெளியில் சென்றி ருந்தனர். எம். அப்துல் ரஹ்மான் எம்.பியும் வேலூர் தொகுதியில் நடை பெறும் விழாவில் பங்கேற்க சென்றிருந்தார்.

ஆனால் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபாடு கொண்டு உழைப்பதாலும், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மிகச்சிறந்த பணியாற்றுவ தாலும், நாடாளுமன்ற நடவடிக் கைகளில் அற்புதமாக வாதம் செய்வதாலும் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அனைவராலும் புகழப்படுகிறார். அவரது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டே இச்சதி நடைபெறுவ தாக தெரிகிறது.

எனவே இந்த சோதனை மற்றும் புரளி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கு புகார் செய்ய இருப்பதாக எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. செய்தியாளர் களிடம் தெரிவித்தர்.