Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 7 மார்ச், 2013

மேன்மைப்படுத்த வேண்டிய மென்திறன்(SOFT SKILLS )


இன்று கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அடிக்கடி பேசப்படும் வார்த்தை "சாப்ட் ஸ்கில்ஸ்". மென்திறன்கள் எனப்படும் "சாப்ட் ஸ்கில்ஸ்" தான், நமது தகுதிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பிசினஸ் வெற்றிக்கு உதவும் திறன்கள் தான் "சாப்ட் ஸ்கில்ஸ்" என அழைக்கப்படுகின்றன. இவை எவை?

* குழுவாக பணியாற்றும் போது எளிதாக நட்பு கொள்ளும் திறன்.
* குழுவில் இணைந்து செயல்படும் குழு உணர்வு (டீம் ஸ்பிரிட்).
* பிறர் மனதை கவரும் முறையில் வெளிப்படுத்திக் கொள்ளும் திறன்.
* எளிமையான, தீர்க்கமான உடல் அசைவுகள்.
* அனைவரையும் கவரும் விதமான உரையாடல் திறன்.
* எதையும் உறுதியாகப் பார்க்கும் மனப்பாங்கு.
* பிறருக்கு ஊக்கமளித்து, தானும் ஊக்கத்துடன் இருத்தல்.
* எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கும் மேலாண்மைத் திறன்.

இப்பட்டியலில் அடங்காத சில அம்சங்களும் உள்ளன. ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிக்கும் அனைத்துமே மென்திறன்கள் தான். இந்த குணங்களும், திறன்களும் அனைவரிடமும் இருப்பது கடினம். இத்திறன்களை வளர்த்துக் கொள்ளத் துவங்கினாலே, வெற்றிப்பாதையில் பயணிக்கலாம்.

நேர்மை, நம்பகத்தன்மை, இலகுத்தன்மை, சிறப்பாக எழுதும் திறன், நிர்வாகத்திறன், கற்றுக் கொள்ளும் ஆர்வம், பொது அறிவு, சிறப்பான தோற்றம் ஆகியவற்றையும் "சாப்ட் ஸ்கில்ஸ்" என்றே அழைக்கிறார்கள். இவற்றில் மூன்றில் ஒரு பங்கு திறன்களையும், குணங்களையும் பெற்றிருந்தாலே நல்ல வேலை கிடைப்பது உறுதி.

எய்ம்ஸ்(AIIMS ) - எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


டில்லியில் உள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ( ஏ.ஐ.ஐ.எம்.எஸ்.,) கல்வி நிறுவனம், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி, ஐதரபாத், மும்பை போன்ற இடங்களில் ஜூன் 1 ல் நடைபெறும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கட்டணமாக எஸ்.சி/ எஸ்.டி., பிரிவினருக்கு 800 ரூபாயும், மற்றவர்களுக்கு 1000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் மார்ச் 24.

விவரங்களுக்கு www.aiimsexams.org

டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் நியமனம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக உள்ள நட்ராஜின் பதவி காலம் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வரும் நவநீத கிருஷ்ணன், டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 12-ம் தேதிக்குப் பிறகு நவநீத கிருஷ்ணன் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

மேலும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சோமையாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.