Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

நெல்லையில் கண்ட உண்மை இந்தியா முழுவதும் என்று காண்போம் .....?


பாளையங்கோட்டை வி.எம்.சந்திரம் ஹசீன் நகரில் தனியாருக்கு சொந்தமான அபார்ட்மென்ட் உள்ளது. இதன் கட்டுமான பணி முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் உள்ள வீடுகளுக்கு உரிமை கோருதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக பாளை மகாராஜாநகர் தொழில் அதிபர் சாகுல்அமீது என்பவருக்கும், சென்னை ஆலந்தூரையை சேர்ந்த பால சுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

இந்த நிலையில் நெல்லை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. போனில் மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேசினார். அவர் ஹசீன் நகரில் உள்ள அபார்ட் மெட்டில் சிலர் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அபார்ட்மென்ட் அருகே ஓடைபாலத்தில் நாட்டு வெடிகுண்டு, வெடி பொருட்கள், வாள் போன்றவை இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.


இதையடுத்து அபார்ட்மென்ட் வீடுகளில் வெடிகுண்டு பதுக்கப்பட்டு உள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக மகாராஜ நகர் சாகுல்அமீது, மேலப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது காவலாளி மைதீன், உதுமான் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்த கிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீசுக்கு தகவல் கொடுத்தவரே வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து விட்டு நாடகம் ஆடியது கண்டு பிடிக்கப்பட்டது. குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணன் கொடுக்கல் வாங்கல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அந்த அபார்ட்மென்ட்டில் கிருஷ்ணன் 2 வீடுகள் வாங்கியுள்ளார். அதை கூடுதல் விலைக்கு விற்க கிருஷ்ணன் திட்டமிட்டார். இதற்கு மகாராஜநகர் சாகுல் அமீது தடையாக இருந்துள்ளார். இதனால் சாகுல் அமீதை போலீசில் சிக்க வைக்கும் நோக்கில் ஓடை பாலம் அருகே வெடிகுண்டு மற்றும் பொருட்களை கிருஷ்ணனே வைத்துள்ளார். பின்பு அவரே போலீசுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மதரஸா கல்வி மேம்பாடு தேசிய ஆலோசனைக்குழு : உறுப்பினராக கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்


இந்தியாவின் அனைத்து மதரஸாக்களிலும் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது இதற்காக ஆலோசனை வழங்க தேசிய அளவில் மத்திய மனித வளமேம்பாட்டுதுறை அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் 31 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக மத்திய மனித வள மேம்பா ட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில் துணைத் தலைவராக இணை அமைச்சர் இ.அஹமது ஆகியோர் உள்ளனர்.

இக்குழுவின் உறுப்பினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் இடம் பெற்று ள்ளார்.

பள்ளிக்கல்விச் செயலாளர், இணைச்செயலாளர், நோயிடா, நியாஸ் சேர்மேன் டாக்டர் எஸ் எஸ். சனா, உத்திர பிரதேச மாநில சிறுபான்மை நலத்துறை, மத்திய பிரதேச பொதுக் கல்வி துறை செயலாளர் , பீகார் கல்வித்துறை செயலாளர் கேரள கல்வி துறை இயக்குனர் மத்திய பிரதேச மதரஸா வாரியத் தலைவர் ராஜஸ் தான்,மதரஸா வாரியத் தலைவர், பீகார் மதரஸா வாரியத் தலைவர் தனியார் சட்ட வாரிய மௌலானா வலி ரஹ்மான், மும்பை ஹபீன் பக்கீம்.

புதுடெல்லி முப்தீ, இஜாஸ், அர்ஷத் காசிமி, டாக்டர் காலித் அன்வர், டாக்டர் சையதா முபீன் ஷஹரா, மத்திய பிரதேச மத்திய மானியம் மற்றும் உதவிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஹலீம் கான்,

உத்திரபிரதேச மதரஸா நவீனத்துவ ஆசிரியர் சங்க தலைவர் ஐஜாஸ் அஹமது, அகில இந்திய மதரஸா அதுனி க்கரன் சிக்ஷாக் சங்க் தலைவர் முஸ்லிம் ரசாக் கான், ஒடிசா மதரஸா அசோஷேசியன் பொது ச்செயலாளர் முனவ்வர் அஹ மது, அஸ்ஸாம் மதரஸா ஆசிரியர் சங்கத் தலைவர் பசலுதீன் பஸ்ஸானி, உத்தர் காண்ட் ஐமாஸ் பொதுச்செய லாளர் ஜியா வுதீன், பீகார் மதரஸா சையன்ஸ் டீச்சர்ஸ் அசோஷேசன் செயலாளர் எஹ்தாசம் சத்ரி, உத்திர பிரதேசம் அகில இந்திய மதரஸா நவீனத்துவ சங்கத் தலைவர் சமியுல்லாகான், துணைத் தலைவர் முஹம்மது அஹமது,

மத்திய பிரதேச மதரஸா டீச்சர்ஸ் சோஷேசன் முஹம்மது சுஹப் குரைஷி, புதுடெல்லி ஜாமிய மில்லியா இஸ்லாமியா பேரசிரியர் எம்.எச்.குரைஷி,

கேரள பதிப்பிறையம் உஸ் மான் மதனி, கோழிக்கோடு பி.எம். கோயா மாஸ்டர், கன்னூர் எஸ்.கே. ஹம்சா ஹாஜி, தமிழ் நாடு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், உத்திர பிரதேசம் மவ்லானா கவ்சர் ஹயாத்கான் ஆகியோர் உறுப்பினராக இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர் செயலாளர் மற்றும் அமைப் பாளராக மனித வள மேம் பாட்டுத்துறை துணைச் செயலாளர் வீரேந்திர சிங் இருப் பார் எனவும்;ஆண்டுக்கு இருமுறை இக்கூட்டங்கள் நடைபெற்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் மதரஸா கல்வி மேம்பாட்டிற் கான தேவையான ஆலோ சனைகள் பெறப்பட்டு அமுல் படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய மனதவளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரையில் ஜப்பான்மாணவர்கள் ஆய்வு


ஜப்பான் சீக பெர்பெக்சர் யுனிவர்சிட்டியில் பயிலும் ஜப்பானிய ஆராய்ச்சி மாணவர் சுக்ராய்(23),மாணவி சின்யா யூ வேனிஸ்(23) ஆகியோர் சுற்றுலா மற்றும் பழங்கால கட்டிட கலை ஆராய்ச்சிக்காக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதிக்கு வந்தனர். வெளிநாட்டிநர் ஆராய்ச்சிக்காக இங்கு வரும் போது உள்ளூர் காவல்துறையிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட விதிமுறைகளை இவர்கள் பின்பற்றததால் போலீசார் இப்பகுதியில் சுற்றுவதற்கு அனுமதி மறுத்தனர்.இதனால் இவர்கள் ஹோட்டலில் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனை அறிந்த தொல்பொருள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் கீழக்கரை இளைஞர் அபுசாலிஹ் இவர்கள் முறையான அனுமதி பெறுவதற்கான உதவிகளை செய்து தந்து அறிவுரைகளும் வழங்கினார்.

இது குறித்து ஜப்பானிய மாணவிகள் கூறியதாவது, நாங்கள் ஏற்கெனவே கட்டிட கலை ஆராய்ச்சிக்காக இந்தியா வந்துள்ளோம் 2 மாதத்திற்கு மேல் தங்கியிருந்து ராமேஸ்வரம்,கீழக்கரை பகுதியில் பழங்கால் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்தோம்.இங்குள்ள பழங்கால‌ க‌ட்டிட‌ங்க‌ள் எங்க‌ளை பிர‌மிக்க‌ வைத்த‌து. என‌வே த‌ற்போது எங்க‌ள் ப‌டிப்பிற்கான‌ ஆராய்ச்சியை நிறைவு செய்வ‌த‌ற்காக‌ மீண்டும் வ‌ந்தோம்.இப்ப‌குதிக்கு வ‌ந்த‌ நாங்கள் இம்முறை த‌னியாக‌ வ‌ந்த‌தாலும்,மொழி தெரிய‌த‌தாலும் அர‌சு முறை ச‌ம்பிராத‌ய‌ங்க‌ளை நிறைவு செய்ய‌ முடிய‌வில்லை.இத‌னால் ஹோட்ட‌லை விட்டு வெளியே வ‌ர‌ முடியாத‌ சூழ‌ல் ஏற்ப‌ட்ட‌து.என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் திகைத்த‌ நாங்க‌ள் சென்ற‌ முறை அறிமுக‌மான‌ ந‌ண்ப‌ர் அபுசாலிஹை தொட‌ர்பு கொண்டோம்.அத‌ன் பேரில் அவ‌ர் எங்க‌ளுக்கு உத‌வினார்.த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் விருந்தோம்ப‌லுக்கு சிற‌ந்த‌வ‌ர்க‌ள் என்று அறிந்திருந்தோம் த‌ற்போது நேரில் க‌ண்டுகொண்டோம் என்ற‌ன‌ர்.

இது குறித்து அபுசாலிஹ் கூறிய‌தாவ‌து,
இவ‌ர்க‌ள் சென்ற‌ முறை என‌க்கு அறிமுக‌மானார்க‌ள்.த‌ற்போது மீண்டும் தொட‌ர்பு கொண்டும் உத‌வ‌ வேண்டும் என்று கேட்டார்க‌ள் அத‌ன‌டிப்ப‌டையில் ‌ அர‌சின் முறையான அனும‌தியை பெறுவ‌த‌ற்கு உரிய‌ வ‌ழிமுறைக‌ளை அமைத்து தந்தேன்.மேலும் கீழ‌க்க‌ரை வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ இட‌மாக‌ இருப்ப‌தால் சுற்றுலாத்துறை கீழ‌க்க‌ரையில் த‌க‌வ‌ல் சிறப்பு மைய‌ம் ஒன்றை ஏற்ப‌டுத்தி இதுபோன்று வ‌ரும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு உத‌வ‌ வேண்டும் என்றார்.

நன்றி :கீழக்கரை டைம்ஸ்