Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 17 ஜூன், 2013

தமிழ்நாடு வக்ப்வாரிய உறுப்பினர்கள் தேர்தல் : எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வேட்பு மனுதாக்கல்

தமிழ்நாடு வக்ப்வாரிய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற பிரிவு உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தலை தமிழக அரசு வக்பு வாரியம் அறிவிப்பு செய்தது .

இன்று ,காயிதே மில்லத் பேரவை சர்வேதேச ஒருங்கிணைப்பாளரும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் வக்பு வாரிய உறுப்பினருக்கான  தனது வேட்புமனுவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர் முன்னிலையில் தமிழக அரசு தலைமை செயலகத்தில் சிறுபான்மை நலத்துறை இனைசெயலாளரும் தேர்தல் அதிகாரியுமான  சாமிநாதனிடம் தாக்கல் செய்தார் .

நிகழ்ச்சியில் மாநில செயலாளர் திருப்பூர் சத்தார் மற்றும் வக்ப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

கட்டாய திருமண பதிவுச் சட்டத்தை காட்டி இஸ்லாமிய திருமணங்களை தடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் : ஜமாத்துல் உலமா சபை கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்உலமா  சபையின் தலைவர் எம். அப்துல் அஹது காஷிபி தலைமையில் முஸ்லிம்கள் அளித்த மனுவில்:

முஸ்லிம் தனியார் சட்டம் வழங்கிய திருமணச் சட்டத்தின் அடிப்படையில், பெண்கள் பருவத்தை அடைந்துவிட்டாலே, திருமணம் செய்வதற்கு தகுதி பெற்று விடுகிறார்கள். இந்த சட்ட உரிமையை சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ, உச்ச நீதிமன்றமோ பறிக்க முடியாது. இது முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த அடிப்படை உரிமையாகும்.

ஆனால் சமீப காலமாக குழந்தைத் திருமண தடைச் சட்டம் என்ற பெயரில் பருவமடைந்த முஸ்லிம் பெண்களின் திருமணத்தை, மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய, வாழ்வியல் அடிப்படை உரிமையை சட்டத்தின் காவலர்களே அலட்சியம் செய்வது வேதனையளிக்கிறது. இந்த சட்ட விதிமீறல் இனியும் தொடரக் கூடாது. எனவே இந்த கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்களித்து, பள்ளிவாசல்களில் செய்யும் பதிவையே அரசுப் பதிவாக ஏற்க வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் தற்போது களை கட்டியுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இதமான காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்த்து அதன் அழகை கண்டு ரசிக்கின்றனர். தற்போது அவர்களுக்கு கூடுதல் பொழுது போக்கு அம்சமாக படகு சவாரி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

குற்றாலம் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் பெருகிவிட்டதையடுத்து அங்கு படகு சவாரி நேற்று தொடங்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் படகு சவாரியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் சரத்குமார், நாராயணன், வீட்டு வசதி வாரியத்தலைவர் முருகையாபாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றாலத்தில் படகுசவாரி தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். முதல் நாளிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றம்: 2 பேர் நீக்கம், 2 பேர் நியமனம்


தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சி.த.செல்லபாபண்டியன், முகமது ஜான் விடுவிக்கப்பட்டு, புதிய அமைச்சர்களாக எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சண்முகநாதனுக்கு சுற்றுலாத்துறையும், அப்துல் ரகீமுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த பச்சைமாலுக்கு தொழிலாளர் நலத்துறையும், பி.செந்தூர் பாண்டியனுக்கு இந்து அறநிலையத்துறையும், எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் தமிழக கவர்னர் ரோசய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் நாளை மாலை 4.45 மணிக்கு பதவியேற்கின்றனர்.