Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 19 ஜூலை, 2014

இஸ்ரேல் தீவிரவாதிகள் தாக்குதல்: காஸாவில் உயிரிழப்பு 300-ஐ தாண்டியது

காஸா மீது இஸ்ரேல் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இதனால், காஸாவில் 12ஆவது நாளாக இஸ்ரேலின் தீவிரவாதிகள் நடத்தி வரும் கடும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.

இஸ்ரேல் தீவிரவாதிகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடந்த 8ஆம் தேதி முதல் கடும் போர் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலின் தீவிரவாதிகள்  விமானப்படை, கடற்படை மற்றும் பீரங்கிப்படை என முப்படைகளும் குழந்தைகள் ,பெண்கள் ,வயதானோர் என்று பாராமல்  காஸா மீது இரவு பகலாக குண்டுகளை வீசி கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதற்கு பதிலடியாக,இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரை குறிவைத்து காஸா பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் போராளிகள்  தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 காஸாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2,200 பேர் காயமடைந்துள்ளதாகவும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.