Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 3 ஏப்ரல், 2013

நீண்ட கால விசாரணை சிறைவாசிகளை நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்தவர்களை சாதி, மத வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் : சமுதாயப் போர்வாள் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.


முப்பெரும் கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏப்ரல் 2 ல் நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. திருப்பூரிலும், கோவையிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண் டார்.

திருப்பூர்
பேரணியை துவக்கி வைத்து காயிதே மில்லத் பேரவை சர்தேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பேரணி முடிவில் மாவட்ட எஸ்.டி.யூ. நிர்வாகி பாபுஜி நன்றி கூறினார்.

பேரணி நிகழ்ச்சியை மாநில பொதுக்குழு உறுப்பினர் இளம்பிறை ஜஹாங்கீர் ஒருங் கிணைத்து தொகுத்து வழங்கினார்.

கோவை
கோவையில் போலீஸ் கமிஷன் அலுவலகம் அரு கிலுள்ள செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாநகர், புறநகர் மாவட்டங்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட தலைவர் அப்துல் கபூர் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் புறநகர் மாவட்ட தலைவர் எஸ்.எம். காசிம் வரவேற்று பேசினார்.

மாநகர் மாவட்ட செயலாளர் முஹம்மது பஷீர், புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.எம். இப்ராஹிம் ஆகியோர் உரை யாற்றினர். ஒ.ஏ. செய்யது ,இப்ராஹிம், காசிம், பி.கே.ஏ. ஸலாம், யாகூப் ஹாஜியார் ஷிபிலி, சாகுல் ஹமீது, முன்னாள் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக்,

மாநில யூத் லீக் அமைப்புக்குழு உறுப்பினர் யூ.எஸ்.அப்துல் ஹக்கீம், உமர், ஐ. முஹம்மது அலி, இளைஞர் அணி ஏ. முஹம்மது, தாரிக், ஜாபர் சாதிக், மேட்டுப்பாளையம் அக்பர் அலி, அய்யூப், எம்.எம். நூர்தீன், உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். வப்பு ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

அப்துல் ரஹ்மான் எம்.பி. பேட்டி
இந்நிகழ்ச்சிகளில் செய்தி யாளர்களிடம் பேசிய எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கூறிய தாவது:

முஸ்லிம்களுக்கு கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப் பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை ஏற்று மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது முஸ்லிம் களுக்கு 3.5 சதவீத இடஒதுக் கீடு அளிக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, இந்த இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதாக முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித் திருந்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழக அரசு முஸ்லிம்களுக் கான இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்த வேண்டும்.

நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதன் மூலமாக பல்வேறு கலாசார பழக்கம் உள்ள சமுதாயம் நிம்மதியாக வாழும். பூரண மதுவிலக்கு அமல்படுத்துவதை பெண்கள் மகிழ்ச்சியுடன் வர வேற்பர்.

நாட்டின் பல்வேறு மாநில விசாரணை சிறைவாசிகளாக எண்ணற்ற அப்பாவிகள் நீண்ட காலம் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம் இளைஞர்கள் ஆவர். இந்த நீண்ட கால விசாரணை சிறைவாசிகள் நிபந்தனை யின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டு களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த தண்டனை சிறை வாசிகள் சாதி, மத வேறுபாடின்றி விடுவிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் விஷேச தினங்களில் சிறைவாசிகள் விடுவிக்கப்படும்போது முஸ்லிம்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. காந்தியை சுட்டுக்கொன்ற கொலை யாளிகளே விடுவிக்கப்பட்ட வரலாறு இந்த நாட்டில் உண்டு. ஆனால் முஸ்லிம்கள் விடு விக்கப்படாததற்கு எண்ண காரணம் அவர்களுக் கும் நீதி கிடைக்க வேண்டும்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக் கிறது. மத சார்பற்ற பன்முகத்தன்மை கொண்டு, அதில் ஸ்திரத் தன்மையுடன் இருப் போருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலிமை சேர்க்கும். மத சார்பற்ற ஆட்சியை அனைவரும் அரவணைக்கின்ற னர். அந்த வகையில் வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டார்.

மியான்மர் முஸ்லிம்களுக்காக ஏப்.14 ஜித்தாவில் கூடும் உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு இலங்கை முஸ்லிம்களின் நிலை பற்றியும் பரிசீலிக்க வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முப்பெரும் கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாட் டில் அனைத்து மாவட்ட தலைநகர் களிலும் ஏப்ரல் 2 செவ்வாயன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

அப்போது அவர் கூறியதா வது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றுப் பெருமை பெற்ற பேரியக்கம். தேசிய ஒருமைப் பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மை மக்களின் கலா சார தனித்தன்மையை பாதுகாத்தல் ஆகிய லட்சியங்களை முன்னி றுத்தி பாடுபடுகிறது.

மத்திய அமைச்சர் இ. அஹமது தலைமையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லி லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அப்பாவிகளை விடுவிக்க முயற்சி மேற்கொண்டோம்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மாநில அரசுக ளுக்கு ஒரு தாக்கீதை அனுப்பி யது. விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களை மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து பரிசீலித்து விடுதலை செய்ய வேண்டும் என்று, ஆனால் அது அமல் படுத்தப்படவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்தோரை பேரறிஞர் அண்ணா அவர்கள் கருணை அடிப்படையில் விடு தலை செய்து தொடங்கி வைத் தார். ஜெயலலிதாகூட கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்டி ருக்கிறார். ஆனால், இப்போது விடுவிக்க மறுக்கிறார். எனவே, கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

2004-ல் ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம் லீக் வைத்த கோரிக்கையை யடுத்து நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிஷன், நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை அமைக்கப்பட்டன.

இந்தியாவில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தில் பெரும் பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விட கல்வியறிவு இல்லாமல் அன்றாடங் காய்ச்சி களாக கூலித் தொழிலாளிக ளாக, ரிக்ஷா இழுப்பவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு கல்வி, பொருளாதார அடிப்படையில் அந்த மக்களை முன்னேற்ற வேண்டுமானால் தனியாக 10 சதவீத இடஒதுக் கீடு வழங்க வேண்டும். அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மிஸ்ரா குழு பரிந் துரை செய்தது.

ஆனால், சிறுபான்மையின ருக்கு 4.5 சதவீத இடஒதுக் கீட்டை மத்திய அரசு அறி வித்தது. நீதிமன்றத்தில் அதுவும் தடை விதிக்கப்பட்டு விட்டது.

மத்திய அரசு உடனடியாக 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என்று இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் முதல் கோரிக்கையாக எடுத்தி ருக்கிறோம். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு நியாயம் செய்வதாக கூறியது. ஆனால், கானல் நீராக பொய்த்து போய் உள்ளது.

அதேபோன்று தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு வழங்கிய 3.5 சத வீத இடஒதுக்கீட்டை தமழக அரசு உயர்த்தி தர வேண்டும்.

மத்திய - மாநில அரசுகள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

இப்போது இளைய தலை முறையினர் மதுப் பழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். ஆட்டை கடித்து மாட்டை கடித்து... என்று மனிதனையே கடித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மதுப் பழக்கம் ஆழமாக இளைஞர்கள் - மாணவர்கள் மத்தியில் பதிந்து வருகிறது. மது மனிதனை மிருகமாக்குகிறது. மதுவால் கொலை, கொள்ளை, பாலியல் பலாத் காரம் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். நாங்கள் மதுக்கடைக ளுக்கு பூட்டு போடும் வேலையை செய்ய மாட்டோம். மனிதர்களின் மதுகுடிக்கும் மனக் கதவை இழுத்துப் பூட்டும் வேலையை செய்வோம். அதற் கான முயற்சி எடுப்போம். மது விலக்கால் ஏற்படும் தீமைகளை - கொடுமைகளை மக்களிடத் திலே பிரச்சாரம் வாயிலாக எடுத்துச் சொல்வோம். எங்க ளுடைய இந்த கோரிக்கைக ளுக்கெல்லாம் தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பையும், ஆதர வையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதோடு, மியான்மரில் புத்த மத வெறியர்களால் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர் பாக பரிசீலனை செய்ய சவூதி அரேபியா ஜித்தாவில் ஏப்ரல்

14-ம் தேதி உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்தும், அங்கு ஹலால் பிரச்சினை தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.இதுபற்றி அந்த நாடுகளின் கவனத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொண்டு செல்லும். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார் .

டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை


மஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்      

 பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவ, மாணவியருக்கு மும்பை, கே.சி., மஹிந்திரா எஜுகேஷன் டிரஸ்டு நிறுவனம் உதவித்தொகை அறிவித்துள்ளது.

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு, உடல் ஊனமுற்றக் குழந்தைகளுக்கு, ராணுவத்தில் பணி செய்பவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

 Scholarship : டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை
 Course         : டிப்ளோமா
 Provider Address : ஆர். வெங்கடராமன் ரீஜினல் மேனேஜர் - எஸ்எஸ்பியு       மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் மஹிந்திரா டவர்ஸ்,
பட்டுல்லாஸ் ரோடு, சென்னை - 600 002. www.mahindra.com

நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரத்தில் புதிய தொழிற்பேட்டைகள்


நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில், நான்கு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கையில் இடம் பெற்றுள்ளவை:கடந்த, 2012-13ம் ஆண்டில், தஞ்சை பாளையப்பட்டி, வேலூர் வாணியம்பாடி, புதுக்கோட்டை மாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில், 10 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள், தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டான, 2013-14ம் ஆண்டில், நான்கு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி பிடாநேரி, தேனி மரிக்குண்டு, நெல்லை குருக்கல்பட்டி, விழுப்புரம் பட்டணம் ஆகிய இடங்களில், 20 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தொழில் பேட்டைகள் அமைக்கப்படுகின்றன.தகவல் தொழில்நுட்ப வசதிமாவட்ட தொழில் மையங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுகிறது.

இதன் மூலம், தொழில் முனைவோருக்கு உதவும் கூடுதல் கணினிகள், வலைதள வசதிகள் மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியன மேற்கொள்ளப்படும். மாவட்டங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் புள்ளி விவர தொகுப்புகள் மேம்படுத்தப்படும்.மேலும், மாவட்ட தொழில் மைய அலுவலகங்களை, தொழில் வணிக ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து, பல்வேறு இணையதள வாயிலான சேவைகள், தொழில் முனைவோருக்கு வழங்கப்படும்.மேம்பாட்டு திட்டம்படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல், புதிய தொழில் துவங்க திட்டங்கள் தயாரித்தல், ஆகிய உதவிகளை அளிக்க, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக, 2013-14ம் ஆண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது.இவ்வாறு, மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மோடி ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு

மத்திய தணிக்கை துறை (சி.ஏ.ஜி.) கடந்த 2009-10 மற்றும் 2010-11 ஆகிய ஆண்டுகளில் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் ஊழல் மற்றும் முறைகேடான செயல்பாடுகள் ஆகியவற்றால் மாநிலத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மாநிலத்தில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க மோடி அரசு தவறி விட்டது.  இதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அண்ணா பல்கலையில் பொறியியல் படிக்க வாய்ப்பு


அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாட்டில் வேலை செய்யும் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் படிப்புகளில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வரும் கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.பி, எம்.டெக், எம்.பி.ஏ, எம்.எஸ்சி ஆகிய படிப்புகளுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக வளாகத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் (யூஎஸ் $200)விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை எடுத்து Director, Centre for International Affairs. Anna University. Chennai என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 15ம் தேதி கடைசி நாளாகும். முதுகலை மற்றும் அயல்நாட்டு மாணவர்கள் இளநிலை, முதுகலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.annauniv.edu/cia/advertisement%20%28cnf%29.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.