Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 25 ஜனவரி, 2014

உ.பி. முஸஃப்பர்நகர் கலவரம் : சொந்த இருப்பிடம் திரும்ப முடியாதவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காலனி வீடுகள்


உத்தரபிரதேச மாநிலம் முஸஃப்பர் நகர் கல வரத்தில் பாதிக்கப்பட்டு இன்னமும் ஊர் திரும்ப முடியாமல் இருப்போ ருக்கு காலனி வீடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைத்துக் கொடுக்கிறது. நிவாரண குழுவினர் நேரில் சென்று மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளையும் செய்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் முஸஃப்பர் நகர் சாம்லி மாவட் டங்களில் 2013 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற கலவரங்களில் 60க்கும் மேற்பட்டோர் படு கொலை செய்யப்பட்டனர். எண்ணற்றோர் படுகாயமடைந் தனர்.

94 கிராமங்களிலிருந்து 42 ஆயிரம் பேர் சொத்து சுகங் களை விட்டுவிட்டு நிவாரண முகாம்களில் தங்கினர். அடிப்படை வசதி இல்லாமை, சுகாதாரக் குறைவால் இம் முகாம்களில் தங்கியிருந்த நூற்றுக் கணக்கானோர் உயிர் இழந்தனர். இதில் ஏராள மானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகாம்களில் தங்கியோ ருக்கு உ.பி.மாநிலஅரசு நிதி யுதவி அளித்து அவர்களை சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பச் செய்தது.

இவ்வாறு திரும்பியபோது சிலர் படுகொலை செய்யப் பட்டனர். இதனால் இன்னமும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பலர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தேசியத் தலைவர் இ.அஹமது பார்வை

முஸப்பர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான இ.அஹமது சாஹிப் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆறுதல் கூறி உடனடி உதவி களும் செய்ததோடு முதல்வர் அகிலேஷ் யாதவையும் சந்தித்து அவர்களுக்கு உதவியும் பாதுகாப்பும் அளிக்க நேரில் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிதி திரட்டியது.

இதனிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய பொருளாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி ஆகியோரின் ஆலோ சனையின்பேரில் நிவாரண குழுவினர் நிவாரண முகாம் களுக்கு சென்றனர்.

இக்குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர்கள் இ.டி.முஹமது பஷீர் எம்.பி., டெல்லி குர்ரம் அனீஸ் உமர், கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழ்நாடு மாநில பொது செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி தங்ஙள்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், யூத் லீக் தேசிய அமைப்பாளர் பி.கே.பெரோஸ், திருச்சூர் மாவட்ட தலைவர் நாஸர்., வைக்கம் செய்யது முஹம்மது,

உ.பி.மாநில பொதுச் செய லாளர் டாக்டர் மத்தீன்கான், செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது உவைஸ், மீரட் மாவட்ட செயலாளர் அன்ஜீம் அஸ்பாக், மீரட் முஹம்மது சாபீர்,

முஹம்மது இத்ரீஸ் உள்ளிட் டோர் இடம் பெற்றிருந்தனர்.


நேரில் உதவி
இக்குழுவினர் நேற்று (ஜன வரி 24) ஜும்ஆ தொழுகைக்கு காஜியாபாத் மாவட்டம் தோடி கிராமத்துக்கு சென்றனர். அங்குள்ள முகாமில் எந்த அடிப்படை வசதிகளும் இல் லாமல் அவதிப்படுவோருக்கு ஆறுதல் கூறி உணவு மற்றும் செலவிற்காக பொருளுதவியும் செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுஹைல், செய்யது அஹமது, நயீமா உள்ளிட்டோரின் முழு மருத்துவ செலவையும் மருத்துவ மனையில் செலுத்தி உதவி புரிந்தனர். தோடி பஞ்சாயத்து தலைவர் தாஹிர் உசைன், இளைஞரணி வசீம் மற்றும் தன்னார்வ தொண்டர்களை சந்தித்து நிரந்தர தீர்வு குறித்து ஆலோசனை செய்தனர்.

காஜியாபாத்திலிருந்து முஸப்பர் நகர் மாவட்டம் நக்லாராய் என்ற பகுதியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உருவாக்கப்படும் காலனிக் கான இடங்களை ஜாமிஆ ஆயிஷா சித்திக்காவின் பனாத் மற்றும் அல் புர்கான் பள்ளியின் தலைவர் முஹம்மது புர்கான் அஸதி உள்ளிட்டோர் சுற்றிக் காண்பித்து விளக்கினர்.

முஸப்பர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை சொந்தஇருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் இருக்கும் அப்பாவி மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காலனி வீடுகள் உருவாக் கப்பட இருக்கிறது. இக் காலனியில் பள்ளிவாசல், மதரஸா, மருந் தகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேசிய தலைவர் இ.அஹமதுவுடன் இ.யூ. முஸ்லிம் லீக் நிவாரண குழுவினர் டில்லியில் ஆலோ சனை செய்து வருகின்றனர்.