Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 23 ஜூன், 2013

காணாமல் போன அரசு தொகுப்பு வீடுகள்கண்டுபிடிக்க கோரி கலெக்டரிடம் மனு

பெருங்கோட்டூர் தெற்கு காலனியைச் சேர்ந்த சந்தனகுமார் கலெக்டர் சமயமூர்த்தியிடம் கொடுத்துள்ள புகாரில்,கூறியிருப்பாதாவது: குருவிகுளம் யூனியனில் உள்ள பெருங்கோட்டூர் பஞ்சாயத்தில், பஞ்சாயத்து நிதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு தொகுப்பு வீடுகளில் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட 8 தொகுப்பு வீடுகளை காணவில்லை.

திருமணம் ஆகாமல் முதியோர் உதவித் தொகை பெறும் ஒருவருக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கப்பட்டுள்ளது. கட்சா வீடு வழங்கிய வகையில் 15 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து பணம் வங்கியில் இருந்து காசோலை மூலம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலையில் பணிக்கு வராதவர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கி உள்ளவர்களின் பெயர்களில் வேலை செய்ததாக மோசடியாக வருகை பதிவேடு தயார் செய்து பஞ்சாயத்து பணம் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது. அரசு பணியில் உள்ள ஒருவருக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நபருக்கு கட்சா வீடும், அரசு தொகுப்பு வீடும் வழங்கப்பட்டுள்ளது. பெருங்கோட்டூர் மற்றும் பி.ஆலங்குளம் கிராமங்களில் ஊனமுற்றோர் அல்லாத நபர்களின் பெயர்களை ஊனமுற்றவர்களாக பட்டியல் தயார் செய்து தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி மோசடியாக பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சந்தனகுமார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.