Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம் ( IIPMB )


பிளான்டேஷன் துறையை, மேலாண்மைக் கல்வி மற்றும் பயிற்சியின் மூலமாக, நவீனப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான், பிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்.

ஒரு தீவிரமான கல்வி நிறுவன - தொழிற்கூட ஒத்துழைப்பு மாதிரி அடிப்படையிலான, ஆசிய அளவில், ஒரு பிரத்யேக மேலாண்மை கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது.

கடந்த 1993ம் ஆண்டு ஒரு சுயாட்சி கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது.

நிறுவியதன் நோக்கம்
இக்கல்வி நிறுவனம், கீழ்கண்ட 5 நோக்கங்களுக்காக நிறுவப்பட்டது.

* திட்டமிட்டு செயல்படக்கூடிய பொதுநல மன்றம்

* சிறந்த தலைவர்களை உருவாக்கல்

* சிறந்த மேலாளர்களின் தொடர்ச்சியான மேம்பாடு

* செயல்பாட்டு அடிப்படையிலான ஆராய்ச்சி

* அறிவார்ந்த சுயசார்பு மற்றும் அறிவுசார் முதலீட்டை அதிகரித்தல்.

இதன் செயல்பாடுகள்
* எதிர்கால அறிவுத் தேவைகளை நிறைவுசெய்ய, வேளாண்-வணிகம் மற்றும் பிளான்டேஷன் மேலாண்மை என்ற பெயரில், முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.

* பிளான்டேஷன் மற்றும் வேளாண் வணிகம் தொடர்பான வொர்க்ஷாப்கள் மற்றும் செமினார்களை நடத்துகிறது.

* தொழில்ரீதியிலான முதலாளிகள், மேலாளர்கள் மற்றும் வாரிய அலுவலர்கள் ஆகியோர் பயனடையும் பொருட்டு, குறுகியகால எக்ஸிகியூடிவ் படிப்புகளை வழங்குகிறது.

* செயல் அடிப்படையிலான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நிபுணர்களை பரிமாறிக்கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, போஸ்ட் டாக்டோரல் ஆராய்ச்சிகளுக்கும் உதவி புரிகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள்
140க்கும் மேற்பட்ட ஜர்னல்கள், 8,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளிட்ட இன்னபிற சிறப்பான வசதிகளைக் கொண்ட நூலகமும், 30க்கும் மேற்பட்ட அதிவேக ப்ராசஸர்கள் உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்ட கணினி ஆய்வகமும், பல்வேறான சிறப்பு உபகரணங்களைக் கொண்ட ஆய்வகமும் இக்கல்வி நிறுவனத்தில் உள்ளன.

ஆராய்ச்சி நடவடிக்கைகள்
கொள்கை, மேலாண்மை மற்றும் இயங்குதல் விஷயங்களில், ஆழமான ஆராய்ச்சி திட்டத்தை இக்கல்வி நிறுவனம் கொண்டுள்ளது. தொழில்துறை, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆராய்ச்சித் திட்டங்களை இக்கல்வி நிறுவனம் மேற்கொள்கிறது. இக்கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி பேப்பர்கள், கீழ்காணும் பிரிவுகளில் விரிந்துள்ளன. அவை,

Policy and managerial issues related to specific commodity.
Functional area specific (Marketing, Finance, HRD, Strategic Management,
Operations Management, Economics, Extension Management, etc)
Management Thought, Management Theory and Social Discourse.

மேலும், இந்நிறுவனத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகளின் பரந்த நிலைகள் மற்றும் கருத்தாக்கங்களை பின்வரும் தலைப்புகளின் மூலம் அறியலாம். அவை,

Global Competitiveness of the Plantation Industry
Productivity & Quality
Market Structure, Market Intelligence and Market Information
Brand Building and New Product Innovation
E-Commerce, National Commodity Information Grid
Improving Competitiveness of Micro Enterprises
Sustainable Plantation Management
Estate Performance Agreement Systems
Commodity Futures
Extension Management and Grassroots Institution building
Agri-business Development
Social Development Contribution of Indian Plantation Industry
HRD and Work Culture Development
Social Concerns of Plantation Industry: Absenteeism, Alcoholism, etc.
Knowledge Management in Plantation Industry
Risk Management
Cost Competitiveness

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகளின் விபரங்கள்
PGP - ABPM எனப்படும், முதுநிலை டிப்ளமோ படிப்பானது, பிளான்டேஷன் மற்றும் வேளாண் வணிகத் துறையில் நுழைபவர்களுக்கான ஒரு மேலாண்மைப் படிப்பாக வழங்கப்படுகிறது. மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நவீன ஐடியாக்கள் மற்றும் நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவதே இப்படிப்பின் நோக்கம். இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களது தொழில்துறையில் சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

காலஅளவு - இப்படிப்பின் காலஅளவு 24 மாதங்கள். இது ரெசிடென்ஷியல் படிப்பாகும். இப்படிப்பு AICTE அங்கீகாரம் பெற்றது மற்றும் எம்பிஏ படிப்பிற்கு நிகரானது.

மாணவர் சேர்க்கை நடைமுறைகள்
இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, பொது சேர்க்கை முறை மற்றும் Sponsored சேர்க்கை முறை ஆகிய 2 முறைகளில் நடத்தப்படுகிறது. இளநிலைப் பட்டப் படிப்பில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்(SC/ST 45%) பெற வேண்டும். NRI/PIO மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

CAT/MAT/ATMA/CMAT ஆகிய தேர்வுகளில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்களே விண்ணப்பிக்கலாம். உங்களின் கல்வி செயல்பாடுகள், தேர்வு மதிப்பெண்கள், எழுத்துத் திறன், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இடஒதுக்கீட்டு முறை உண்டு. மேலும், உதவித்தொகை திட்டங்களும் உண்டு.

கல்விக் கட்டணம்
2 ஆண்டுகளுக்கான கல்வி நிறுவனக் கட்டணம் மட்டும் ரூ.3.5 லட்சங்கள். இதை 2 தவணைகளாக கட்டலாம். வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் NRI/PIO Sponsored மாணவர்களுக்கான கட்டணம் 10,500 அமெரிக்க டாலர்கள். இக்கட்டணங்களில், உணவு, இருப்பிடம், மின்சாரம், கணினி, புத்தகங்கள், கள ஆய்வு மற்றும் இதர செலவினங்கள் அடங்காது.

விரிவான விபரங்களுக்கு: http://www.iipmb.edu.in/index.php?option=com_content&view=article&id=62&Itemid=173


நான் சொன்னது கொஞ்சமோ கொஞ்சம்.....!


பேராசிரியர் K.M.காதர் மைதீன் அவர்களை பற்றிய ஒரு படமும் செய்தியும் சில நாட்களாக முக நூலில் பட்டய கிளப்பிக் கொண்டிருக்கிறது.. சந்தோசத்துக்குரிய செய்தி அது.. நானும் கொஞ்சம்... சொல்ல ஆசைப் படுகிறேன்.

அவரோடு 2004ல் தான் எனக்கு முதல் சந்திப்பு நிகழ்ந்தது. மயிலாடுதுறையில் நடந்த இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார். உணவு இடைவேளையில் சற்று ஓய்வாக இருந்தவரை சுற்றிலும் கட்சி பெரியவர்கள். சற்றே தயங்கித் தயங்கி அவர் அருகில் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு நமது முற்றம் இதழுக்காக ஒரு பேட்டி தர முடியுமா என்று கேட்டேன்..சில இதழ்களையும் கொடுத்தேன். பார்த்துவிட்டு, ஒப்புக் கொண்டார். எவ்வளவு பெரிய தலைவர்..உடனே ஒப்புக் கொண்டாரே என்று எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை . எனக்கு உதவியாக இருந்தவர் அன்புத் தம்பி அப்துல் அஜீஸ் தாயிப் .அவர்தான் போட்டோவெல்லாம் எடுத்தார். அரை மணி நேரம் அவரது ஓய்வைக் கெடுத்த புண்ணியத்தை நான் கட்டிக் கொண்டேன். அதன் பிறகு எங்கள் தொடர்பும் நட்பும் வளர்ந்தது.அடிக்கடி சந்தித்தோம். தலைவரை பலமுறை பேட்டி எடுத்து நமது முற்றத்தில் போட்டிருக்கிறேன். அதன் பிறகு பேராசிரியரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேச முடிந்தது. சில சமயங்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் இருப்பார். அப்போது நான் போன் செய்தால் எடுக்க மாட்டார். ஆனால் வெளியே வந்தவுடன் போன் செய்து விவரம் கேட்பார். அத்தனை பணிவு. 2007ல் சென்னையில் ஒரு மாநாடு. தலைவர் மேடையில் அமராமல் கீழே முன் வரிசையில் உட்கார்ந்து அமைச்சர் மற்றும் பிரமுகர்களோடு பேசிக் கொண்டிருந்தார். நான் நிகழ்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கண்டதும் உடனே எழுந்து வந்த தலைவர் என் தோளில் உரிமையோடு கை போட்டு " அபு ஹாஷிமா .. நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார் ....அவரை பேச அழைக்கும் வரை. "ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு தலைவர் இப்படியும் மரியாதை கொடுப்பாரா?"

அந்த " மனிதர்" போகும் பாதையை அதிசயமாக பார்த்து நான் ஸ்தம்பித்து நின்றேன்.

மற்றொரு முறை " நபிகள் நாயகக் காப்பியம் " எழுதியதற்காக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் சென்னையில் வைத்து

எங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தியது. அந்த விழாவுக்கு வருகை தந்த தலைவர் எல்லோரும் அழைத்த பிறகும் மேடையில் ஏறாமல் முன் வரிசையில் அமர்ந்து விழாவை ரசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் பேசுவதை குறிப்பும் எடுத்துக் கொண்டிருந்தார். அங்கே அவரது வாழ்த்து எனக்குக் கிடைத்த பாக்கியம்.

எங்கேயும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அவரது உயர்ந்த குணத்திற்கு பல சான்றுகளை நான் அவரிடம் நேரில் பார்த்திருக்கிறேன். கட்சியின் நலனுக்காக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டி இடுவதையே தவிர்த்த தானைத் தலைவர்அவர். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் எல்லோருக்கும் தான் சொந்தமானவன் என்று பெருமிதமாகச் சொல்லும் பண்புள்ளவர்.

எல்லா செல்வமும் செல்வாக்கும் நிறைந்த ஒரு மனிதர் ஒரு தலையணையை வைத்துக் கொண்டு கிடைத்த இடத்தில் உறங்குகிறார் என்றால் அவர் மனது சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அச்சமில்லை என்பது அதன் விளக்கம்.

இப்படிப்பட்ட குண நலன்கள் உள்ள "மனிதர்"களைத்தான் உலகம் " மாமனிதர் " என்று அழைக்கிறது..மரியாதை செய்கிறது.

பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் "பெரிய மனிதர்" என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் சமுதாயத்துக்காக பணியாற்றும் வலிமையையும் நமது பேராசிரியர் அவர்களுக்கு தந்து அல்லாஹ் அருள் புரிவானாக..ஆமீன்.

 நான் சொன்னது கொஞ்சமோ கொஞ்சம்......!

-----------அபு ஹாசிமா வாவர்

17 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் மந்திரி ரயில்வே பட்ஜட் தாக்கல் :தமிழகத்திற்கு 14 புதிய ரயில்கள்


 17 ஆண்டுகளுக்குப் பின்  காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவர் ரயில்வே துறை அமைச்சராகி இன்று முதல் பட்ஜட் தாக்கல் செய்யப்பட்டது  .2013 - 2014 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வேதுறை அமைச்சர் பார்லி.,யில் இன்று தாக்கல் செய்து  உரையாற்ற துவங்கியதும், ரயில்வே துறை இந்த நாட்டின் முக்கிய பணியை செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பது ரயில்வே துறை எனறார்.

அமைச்சர்  பன்சால் உரையில் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:

* ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்

* ரயில்வே துறையில் 22 ஆயிரத்து 500 கோடி இழப்பு

* பட்ஜெட் : ரயில்வே பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்

* ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குகிறது; பன்சால்

* 17 ஆண்டுக்கு பின் காங்., தாக்கல் செய்யும் பட்ஜெட்

* யானைகள் பலியை தடுக்க முழுக்கவனம்

* புதியபாதைகள் - மின்வசதி பெருக்கப்படும்

*10 ஆயிரத்து 700 ஆள் இல்ல லெவல் கிராசிங்குகளை நீக்க முடிவு

* கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இழப்பை ஈடுகட்ட முடியும்

* சமீப காலங்களில் ரயில்வே விபத்துக்கள் குறைந்துள்ன

* ரிசர்வேஷன் அலர்ட் எஸ்.எம்.எஸ் திட்டம் விரிவுப்படுத்தப்படும்

*மாறறுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணியிடம்

*தரமான உணவு வழங்கிட விலை உயர்த்த திட்டம்

* இ டிக்கெட் பணிகள் டிசம்பருக்குள் முடிவைடயும்


* ரயில் நீர் உற்பத்தி நிலையம் 6 இடங்களில் அமைப்பு

*ஆசாதி ரயில் சேவை இயக்க திட்டம்

* ரயில்வே உணவு தரத்தை பரிசோதிக்க கூடுதல் கவனம்

* உ பி,யில் ரயில் வார்ப்பட தொழிற்சாலை

* துறைமுகம்- ரயில்வேஇணைக்க 3ஆயிரத்து 800 கோடியில் திட்டம்

* மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்கலேட்டர்

* இணையதள முன்பதிவு இரவு 11. 30 வரை நீடிப்பு


ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு புதிய ரயில்கள்

தஞ்சாவூர்- புதுக்கோட்டைக்கு புதிய ரயில்பாதை

67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில் 26 புதிய பாசஞ்சர் ரயில்

ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்

* ரயில்வே பட்ஜெட் திட்ட மதிப்பீடு 63 ஆயிரத்து 363 கோடி

* ரயில்வே கட்டணம் மூலம் 42 ஆயிரத்து 210 கோடி திரட்ட முடிவு

* டீசல் மூலம் வரும் ஆண்டில் 5 ஆயிரத்து 100 கோடி இழப்பு வரும்

*சரக்கு ரயில் கட்டணம் மூலம் 93 ஆயிரத்து 554 கோடி திரட்ட முடிவு

* விளையாட்டு வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை

*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்

* 1. 5 2 லட்சம் பணியிடங்கள் நிரப்ப இலக்கு

* ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க ரூ . 300 கோடி

*ரயில் கட்டமைப்பில் புதிதாக அருணால் சேர்ப்பு

* துறைமுகம்- ரயில்வே ஸ்டேஷன் இணைக்க ரூ 3, 800 கோடி

* ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்த ஆயிரம் கோடி

* செகந்திராபாத்தில் ரயில்வே நிதி நிர்வாகவியல் கல்லூரி

* சூரிய மின்சக்தி மூலம் ஆயிரம் ரயில்வே கேட் செயல்படுத்த திட்டம்


*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்

* கோவை - மன்னார் குடிக்கு புதிய ரயில்

*சென்னை- ஜோலார்பேட்டைக்கு புதிய ரயில்

*தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்பாதை

* தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள்

தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவைகள்... சென்னை பீகானுருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை காரைக்குடி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் வாராந்திர ரயில் , சென்னையிலிருந்து சேலம் வழியாக பழநிக்கு தினசரி ரயில், கோவையிலிருந்து திருச்சி, தஞ்சை வழியாக மன்னார்குடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து வேளாங்கன்னிக்கு புதிய ரயில், சென்னை- தஞ்சை இடையே தினசரி ரயில், சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் , நாகையிலிருந்து-பெங்களூருக்கு மதுரை திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கப்படும் என கூறியுள்ளார்.