Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

வெளிநாட்டு கல்விக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

இந்திய மாணவர்கள் அதிகம் செல்லக்கூடிய, சில முக்கிய நாடுகளில், எந்தெந்த காலகட்டங்களில், விண்ணப்பம், விசா செயல்பாடுகள் மற்றும் வகுப்புகள் தொடங்குகின்றன என்பதன் சுருக்கமான விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அமெரிக்கா
12 முதல் 18 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது. ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
பிப்ரவரி இறுதியில், விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்துவிட வேண்டும்.
மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைபட்ட காலகட்டத்தில், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அறிவிக்கும்.
விசா சுழற்சி: I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 120 நாளுக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பயணத்தை தொடங்கலாம்.
வகுப்புகள் தொடக்கம் - செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
பிரிட்டன்
படிப்பில் சேர்வதற்கு முந்தைய ஆண்டின் அக்டோபரில் விண்ணப்ப செயல்பாடு தொடங்கும்.
பொதுவாக மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடு முடிந்துவிட்டாலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு ஜுன் வரை நீட்டிப்பு வழங்கப்படும்.
விசா சுழற்சி - செமஸ்டர் துவங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிப்பது சிறந்தது.
செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
ஆஸ்திரேலியா
பிப்ரவரியில் தொடங்கும் விண்ணப்ப செயல்பாடு, டிசம்பரில் முடிவடையும்.
நவம்பர் தொடங்கி, ஜனவரி மாதத்திற்குள், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது இல்லையா என்பதை கல்வி நிறுவனங்கள் அறிவித்துவிடும்.
விசா செயல்பாடு அக்டோபரில் துவங்கி, டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிந்துவிடும்.
பொதுவாக, பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்கினாலும், பல்கலையைப் பொறுத்து, வேறுபாடு இருக்கலாம். மேலும், சில பல்கலைகள், செப்டம்பர் மாதத்தில், இடை சேர்க்கையையும்(mid term intake) நடத்துகின்றன.
ஜப்பான்
படிப்பு தொடங்குவதற்கு 7 அல்லது 8 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது.
செமஸ்டர் தொடங்குவதற்கு ஏறக்குறைய 4 மாதங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஜனவரி, ஏப்ரல், ஜுலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் வகுப்புகள் தொடங்குகின்றன.
பிரான்ஸ்
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விண்ணப்ப செயல்பாடு தொடங்குகிறது.
ஜுன் மாதத்திற்கு முன்னதாக, விண்ணப்ப செயல்பாட்டை முடித்துவிட வேண்டும்.
செமஸ்டர் தொடங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
ரஷ்யா
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
முதல் செமஸ்டர் - செப்டம்பர் முதல் ஜனவரி வரை
இரண்டாம் செமஸ்டர் - பிப்ரவரி முதல் ஜுன் வரை.
ஜெர்மனி
கோடைகால செமஸ்டருக்கு, ஜனவரி 15ம் தேதிக்குள்ளும், குளிர்கால செமஸ்டராக இருந்தால், ஜுலை 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்ப செயல்பாடுகள் முடிந்துவிடும்.
விமானம் ஏறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
குளிர்கால செமஸ்டர் அக்டோபர் மாதத்திலும், கோடைகால செமஸ்டர் ஏப்ரல் மாதத்திலும் தொடங்குகின்றன.
சிங்கப்பூர்
மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடுகள் முடிந்துவிடுகின்றன.
குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்னதாக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், 6 மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பிக்கக் கூடாது.
ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
கனடா
மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக, 15 முதல் 18 மாதங்களுக்கு முன்பாகவே, விண்ணப்ப செயல்பாடுகள் தொடங்கி விடுகின்றன.
செமஸ்டர் தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பரில் வகுப்புகள் தொடங்குகின்றன. மேலும், குளிர்கால வகுப்புகள், அவ்வப்போது, இரண்டாக பிரிக்கப்படுகின்றன. அதாவது, செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஒன்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒன்றுமாக நடைபெறுகிறது.
அயர்லாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாகவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
புறப்படுவதற்கு 8 முதல் 10 வாரங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்குகின்றன. சில சமயங்களில் பிப்ரவரி மாதமும் தொடங்கும்.
நியூசிலாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
படிப்பு தொடங்குவதற்கு 8 முதல் 10 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்தல் நன்று.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வகுப்புகள் தொடங்குகின்றன.

முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று ஹாஜிகளை நியமித்தது அதிமுக அரசு ; சமுதாய பிரச்சினைகளை அமைச்சர் அப்துல் ரஹீமும் ,வக்ப்வாரிய தலைவரும் முதல்வருக்கு எடுத்துசொல்ல வேண்டும் :பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

மதுரை மாநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவரும், ஜீவா நகர் முஸ்லிம் ஜமாஅத் தலைவருமா கிய ஹாஜி ஏ. செய்யது புதல்வர் எஸ். அப்துல் ரஜாக், பி.இ. மணமகனுக்கும், கமுதி எம். உம்முசல்மா பர்வீன், பி.ஏ., மணமகளுக்கும் சென்னை எஸ்.ஐ.இ.டி. பெவிலியன் மஹால் அரங்கத்தில் திருமணம் நடை பெற்றது.

இத் திருமண விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆவடி அப்துல் ரஹீம், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், மாநிலச் செயலா ளர் காயல் மகபூப், சுதந்திர தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் ஆப்பனூர் ஜபருல்லாஹ், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மவ்லவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், செயலாளர் ஏ. இக்பால் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அ.இ.அ.தி.மு.க. சிறு பான்மை நலப்பிரிவு தலைவர் ஹாஜி கவிஞர் வீரை கறீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மணமக்களை வாழ்த்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உரையாற்றினார்.

அப்போது அவர் குறிப்பிட்ட தாவது-

மதுரை மாநகர் மாவட்டத் தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துணைத் தலைவரான அருமைச் சகோதரர் ஏ. செய்யது அவர்கள், மதுரை ஜீவா நகர் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் ஜமாஅத்தினுடைய தலைவராக இருந்து அதனுடைய வளர்ச் சிக்கு திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஏறத்தாழ 65 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார் கள். இவர்கள் மஹல்லா ஜமா அத் அமைப்புகளுக்கு கட்டுப் பட்டவர்கள். மார்க்க விஷயங் களில் உலமா பெருமக்களின் வழிகாட்டுதல்களை இந்த சமுதாயம் ஏற்றுக் கொண்டு மஹல்லா ஜமாஅத்துக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது. போட்டி ஜமாஅத், போட்டி பள்ளிவாசல் போன்றவைகள் ஜமாஅத் கட்டுப்பாட்டிற்கு மாற்ற மான செயல்பாடுகள் சமுதாயத் திற்கு அவப் பெயரையும், தலை குனிவையும் ஏற்படுத்தும்.

இஸ்லாமிய மார்க்கம் என்பது மனித சமுதாயத்தை நெறிப்படுத்தும் வாழ்க்கை நெறி. இம்மைக்கும், மறுமைக் கும் வழிகாட்டக்கூடியது திருக் குர்ஆனும், திருநபியின் வழி முறையுமேயாகும். இதனை விளக்குவதற்கு உலமாக்க ளுக்கே தகுதியுண்டு.

பள்ளிவாசலை மையமாக கொண்ட மஹல்லா ஜமாஅத் அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. உண்மையான, இயற்கையான அமைப்பு இதுதான். இதற்கு கட்டுப்பட்டு எல்லா முஸ்லிம்களும் தங்களு டைய வாழ்க்கையை அமைத் துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம் களில் 95 சதவீதத்தினருக்கு மேற்பட்டோர் மஹல்லா ஜமாஅத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதில் உறுதி கொண்டவர் கள்.

ஆனால், இந்த கட்டுப் பாட்டை தகர்த்து தாங்கள் விரும்புவதைப் போல் வாழ்வதற் கும் சிலர் தலைப்படுகின்றனர். மஹல்லா ஜமாஅத் நிர்வாகம், காஜிகள், ஙாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள் சமுதாயத்தை வழிநடத்தக் கூடியவர் கள். ஆனால், இந்த வழிகாட்டு தல் வேண்டாம் என இன்று சிலர் சொல்ல தலைப்பட்டிருக்கி றார்கள்.

காஜிகள் நியமனம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அன்வர் ராஜா அவர்கள் அமைச்சராக இருந்த போது, காஜிகள் நியமிக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது. அதை முதல்வரு டைய கவனத்திற்கு அமைச்சர் கொண்டு சென்றார். 7, 8 மாவட்டங்களுக்கு காஜிகள் நியமிக்கப்பட்டனர். காஜிகள் நியமனத்தை தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா அம்மை யார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் என்பதை நான் இங்கே நன்றியோடு நினைவு படுத்த விரும்புகிறேன்.

அடுத்து வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களி டம் காலியாக உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் காஜிகள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதை கலைஞர் அவர்கள் ஏற்று செயல் படுத்தினார்கள்.

திருமணங்களை நடத்தி வைப்பது, வாழ்வியல் தொடர் பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது, சான்று வழங்குவது போன்ற பணிகளை தலைமை காஜி, மாவட்ட காஜிகள், ஙாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள் செய்து வருகின்ற னர்.

ஆனால், இது கூடாது எனச் சொல்லி, அதற்காக நீதிமன்றத் தின் வாசலையும் சில பேர் தட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளில் சமுதாயத்தின் நிலைபாட்டை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இங்கே வந்திருக் கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் அப்துல் ரஹீம் அவர்களும், வஃக்பு வாரியத்தினுடைய தலைவர் தமிழ்மகன்உசேன் அவர்களும் எடுத்துச் சொல்ல வேண்டுமென அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம் - விமர்சிக்க வேண்டிய விஷயங்களை கண்ணியத்தோடு விமர்சிப் போம். எடுத்துச்சொல்ல வேண் டிய சமுதாய காரியங்களை தயக்கமின்றி கோரிக்கையாக வைப்போம்.

மணிச்சுடர் நாளிதழ்
இந்த மேடையில் மணிச்சுடர் நாளிதழ் உங்கள் கரங்களில் தரப்பட்டிருக்கிறது. அது தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே நாளிதழ். அதில் தமிழக அரசின் செய்திகள் ஏராளமான இடம் பெறுகின்றன. அரசு எங்க ளுக்கு விளம்பரம் தருவதில்லை. அதற்காக அரசாங்கத்தின் செய்திகளை நாங்கள் புறக் கணிக்கப்பதும் இல்லை. சமுதாயம் சம்பந்தப்பட்ட பல் வேறு கோரிக்கைகள் அர சாங்கத்தின் கவனத்திற்காக இந்த நாளிதழில் இடம் பெறு கின்றன. அப்படிப்பட்ட செய்தி களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மணமக்களை வாழ்த்துவதற்காக நாம் இங்கே வருகை தந்திருக்கிறோம். அவர்களுடைய வாழ்விற்கும் - வளத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம். ஏனெனில், பிரார்த்தனை தான் இறைவ னுடைய சந்நிதானத்தின் கதவு களை தட்டும். இந்த மணமக்களுக்காக நாம் பிரார்த்திப்போம் இவ்வாறு  பேராசிரியர்  கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.