Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

சிரியா :அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை


நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்வை  சீனாவின் மூத்த பிரதிநிதி தாய் பின்க்கூ சந்தித்து சிரியாப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அதன் பிறகு ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் அமெரிக்காவிற்கு எதிராக கூறியதாவது,
 
ஒரு நாடு தனது நாட்டு எல்லைதாண்டி அடுத்த நாட்டுப் பிரச்னையில் தலையிட கூடாது. பன்னாட்டு சட்டத்தை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். அப்படி மீறி தாக்குதல் நடத்தினால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஒரு நாடு மக்களுக்கு எதிராக குண்டுகளால் தாக்குதல் நடத்தினால் அதை தடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அதிகாரம் உள்ளது. அதை விட்டு அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்தி ஜனநாயகத்தை கொண்டு வர நினைக்கும் போக்கை கைவிட வேண்டும்.
 
சிரியாவின் உள்நாட்டு பிரச்னையில் அந்நாட்டு பிரதிநிதிகள் தங்களுக்குள் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வுக்கு வர அந்நாட்டின் துணை பிரதமர் கத்ரி ஜமிளுடன் பேசியுள்ளேன். உள்நாட்டுப் பிரச்னையான இதில் வெளிநாட்டு தலையீடு ஒரு இடையூறாக இருக்கும் என்று அப்போது சிரியாப் பிரதமர் என்னிடம் கூறினார்.
 
இவ்வாறு செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.
 

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - ஜெனடிக் கவுன்சிலிங்


வம்சாவளி குறைபாடுகள் குறித்த தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, குடும்ப உறுப்பினர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களை களைய உதவுகிறார்கள். உலக மக்கள் தொகையில், ஏறக்குறைய 5% பேர், வம்சாவளி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனெனில், குழந்தை பருவத்தில் இதுபோன்ற குறைபாடுகள் பொதுவாக தெரிய வருவதில்லை என்பதால், இதுபோன்ற ஆலோசனைகள், அத்தகைய குறைபாடுகளின் எதிர்கால வீரியத்தைக் கலைய உதவுகிறது.
சுகாதாரத் துறையில், கடந்த 2003ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனித ஜீனோம் திட்டம்(Human Genome Project), ஜெனடிக் ஆலோசனை பங்களிப்பை அதிகரித்துள்ளது. ஜெனடிக் ஆலோசகர்கள், கல்வியாளர்களாகவும், இதர மருத்துவத் துறை நிபுணர்களுக்கும், பொது மக்களுக்கும் பலவகைகளில் உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும், இத்துறை நிபுணர்களுக்கு, ஜெனடிக் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
பணித் தன்மைகள்
ஜெனடிக் ஆலோசகர்கள், நோயாளிகளுக்கு உதவுபவர்களாக இருப்பதுடன், இதர மருத்துவர்களுக்கு ஜெனடிக் தொடர்பான விஷயங்களில் முக்கியப் பங்காற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். வம்சாவளி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு, தேவையான தகவல்களைத் தந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் முக்கியப் பணியை செய்யும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வம்சாவளி அமைப்புகளையும், அதன் மறுநிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றோடு, ஆபத்துகளையும், சிக்கல்களையும் அடையாளம் காண உதவுவதோடு மட்டுமின்றி, நோயாளிகளுக்கென இருக்கும் ஜெனடிக் டெஸ்டிங் வாய்ப்புகளையும் மதிப்பாய்வு செய்கிறார்கள். இதுபோன்ற ஜெனடிக் ஆலோசனைகளின் மூலம், ஜெனடிக் நோய்களைப் பற்றிய புரிந்துணர்வை அதிகப்படுத்தல் மற்றும் அதன் விளைவுகளை விளக்குதல் போன்ற நன்மைகளை அடையலாம்.
பயிற்சி மற்றும் மேம்பாடு
பயாலஜி, ஜெனடிக்ஸ் அல்லது உளவியல் ஆகியவற்றை இளநிலைப் படிப்பில் முடித்து, எம்.எஸ்சி/பி.டெக்/எம்.டெக் படிப்புகளை லைப் சயின்சஸ் துறையில் மேற்கொள்வது இத்துறைக்கான ஒரு சிறந்த நுழைவாயில்.
வேலை வாய்ப்புகள் மற்றும் பணி நிலைகள்
கிளினிக்கல்: மருத்துவமனைகளில் பணி செய்வதோடல்லாது, கிளினிக் வைத்து நடத்துவதோடு, தனிப்பட்ட ஆலோசகராகவும் பணிபுரியலாம்.
பரிசோதனை ஆய்வகம்: மருத்துவர்களுக்கும், பரிசோதனை ஆய்வகத்திற்கும் இடையில், ஒரு இணைப்பு பாலமாக செயல்படலாம்.
கல்வி மற்றும் பொதுக்கொள்கை: கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரியலாம்.
ஆராய்ச்சி: ஜெனடிக் ஆராய்ச்சி திட்டங்களுக்கு, ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம்.
சம்பளம்
பணி நிலைகள் மற்றும் பணிபுரியும் இடத்தைப் பொறுத்து ஒருவரின் சம்பளம் வேறுபடுகிறது. தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர் அல்லது தனியே கிளீனிக் வைத்து நடத்துபவர் மாதம் ரூ.50000 வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், அரசுத் துறைகளில் பணியாற்றுபவர், மாதம் ரூ.25000 முதல் 40000 வரை சம்பாதிக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
Guru Nanak Dev university - Punjab
The Oxford college of science - Bangalore
National institute of mental health and Neuro sciences - Bangalore
Jawaharlal Nehru university - Delhi
Sanjay Gandhi postgraduate institute of medical sciences - Lucknow
போன்ற சில முக்கிய கல்வி நிறுவனங்கள், வேறுபட்ட இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. அதேசமயம்,
AIIMS
Sir Gangaram Hospital - Delhi
போன்ற கல்வி நிறுவனங்கள், இத்துறையில், குறுகியகால படிப்புகளை வழங்குகின்றன.
நிபுணர்களின் கருத்து
ஜெனடிக் ஆலோசனைத் துறையானது, இந்தியாவில் பெரியளவில் வளர்ந்துவரும் ஒரு துறையாக விளங்குகிறது. இதன் பயன்பாட்டிற்கு ஏற்ப, இத்துறை பரந்து விரிந்த ஒன்றாக உள்ளது. பிறப்பிற்கு முந்தைய பரிசோதனையிலிருந்து, பிறப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது வரை பல சுவாரஸ்யமான பணித் தன்மைகளைக் கொண்டிருப்பதால், மருத்துவமனை என்னும் பாரம்பரிய அமைப்பிற்கு வெளியேயும், இத்துறை நிபுணர்கள் பல அரிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்பது நிபுணர்களின் கருத்து.

கடையநல்லூர் அருகில் சேர்ந்தமரத்தில் வறட்சியால் வாடும் மரக்கன்றுகள் :லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள்


சேர்ந்தமரம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மரக்கன்றுகளை காப்பாற்ற டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் மழையளவு குறைந்துள்ளது. இதனால் வானம் பார்த்த பூமியாக உள்ள சேர்ந்தமரம் பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இப்பகுதியில் உள்ள சேர்ந்தமரம் வீரசிகாமணி, திருமலாபுரம், தன்னூத்து, குலசேகரமங்கலம், கடையாலுருட்டி, பாண்டியாபுரம், ஆனைகுளம், வெள்ளாயன்குளம், வென்றிலிங்கபுரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டும், கிணறுகளில் தண்ணீரின்றி வற்றியும் காணப்படுகிறது. 

 இதனால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.தென்னை மரங்கள் அழியும் அபாயத்திலும், பல நூறு ஆண்டு பலன் தரும் பனை மரங்கள் கூட வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பச்சைப்பசேல் என காட்சிதரும் இப்பகுதி விவசாய நிலங்கள், தற்போது வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறியுள்ளது. மேற்கு தொடச்ச்சி மலையில் உள்ள கருப்பாநதியின் பாசன நீர் கிடைக்காதது இதற்கு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். உரிய நீர் ஆதாரமின்றி நிலத்தடி நீரும் குறைந்துள்ளது. 

   சுமார் 300 மற்றும் 500 அடி ஆழ்துளை கிணறுகள் கூட வறண்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயிகள் பயிரிட்டுள்ள மா, தென்னை, தேக்கு மரக்கன்றுகளை காப்பாற்ற வெகு தொலைவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். விவசாயிகளின் இந்த அவலநிலையை போக்க எதிர்காலத்தில் கருப்பாநதி அணை நீரை பகிர்ந்தளிக்கவும், நிலத்தடி நீர் ஆதாரம் பெற மழைநீர் சேகரிப்பு முறையாக செயல்படுத்த வேண்டும என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.