Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 18 ஜூன், 2013

கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு

"இன்ஸ்ட்ரக்ட்" எனும் நிறுவனத்தால் குறுகிய கால மாலை நேர படிப்பாக கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு வழங்கப்படுகிறது.

இந்த படிப்பில் கட்டிடக் கட்டுமானத்தை மேற்பார்வையிடுவது, சட்டங்கள், அளவீடுகள், திட்டமிடுதல் போன்றவை பற்றி பாடங்கள் அளிக்கப்படும்.

தகுதி: பி.இ. - சிவில் படித்திருக்க வேண்டும்.

கட்டணம்: 10,900 ரூபாய்

காலம்: 11 வாரங்கள் (ஜூலை முதல் செப்டம்பர் வரை)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.instructindia.com என்ற இணையதளத்தை காணவும்.

புதுக்கோட்டையில் பள்ளி ஆசிரியை கற்பழித்துக் கொலை: உறவினர்கள் போராட்டம் , போலீஸ் தடியடி

புதுக்கோட்டை டவுன் காந்திநகரைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகள் தனபாக்கியம், 24. பெருங்குடி தனியார் நர்சரி பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த, 15ம் தேதி, பள்ளிக்கு விடுமுறை என்பதால், வீட்டில் இருந்துள்ளார். அன்று காலை, 9:30 மணிக்கு, மொபைல் போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், பெற்றோரிடம், பள்ளிக்குச் செல்வதாக கூறி, சென்றுள்ளார்.

இரவு, 7:00 மணி வரை, வீடு திரும்பாததால், பெற்றோர், பல இடங்களில் தேடிப் பார்த்தனர்; எங்கும் காணவில்லை. இதை அடுத்து, போலீசில் கொடுக்கப்ப்டடது. போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். திருமயம் அடுத்த கண்ணங்காரைக்குடி, கண்மாய்க்கரையில், தனபாக்கியத்தின் உடல் கிடந்தது. தலை, நெற்றி, கழுத்து, மார்பு பகுதிகளில், பலத்த காயத்துடன், நிர்வாண கோலத்தில், கிடந்த உடலை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரை கடத்தி சென்ற மர்ம நபர்கள், கற்பழித்து கொலை செய்து, பிணத்தை வீசிச்சென்றது தெரியவந்தது. இளம்பெண் உடல், நேற்று, பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, பெண்ணின் உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்யக் கோரி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர்.  பெண் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்தவர்களை விடுவித்தால்தான், பெண்ணின் உடலை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் மறுத்ததால், உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம், நேற்று மாலை, 4:00 மணிவரை, பரபரப்புடன் காணப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஏமாற்றுக்காரர்கள் போல, சித்தரிக்கப்படுகின்றனர்; அந்த நிலைமை மாற வேண்டும் : தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்


காஷ்மீர் பல்கலைக் கழகத்தில், சட்ட மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் கூறியதாவது: சமூகத்திற்காக பாடுபட வேண்டிய பொறுப்பு, வழக்கறிஞர்களுக்கு உள்ளது. அதனால், அவர்கள் சட்ட உதவி பணிகளில், அதிக அளவில் பங்கேற்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கான சிலவற்றை செய்து கொள்வதற்காக, சட்டம் உருவாக்கப்படவில்லை. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறி வரும் உலக சூழ்நிலையில், சட்டம் படித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், அவர்கள் சமுதாயத்திற்காக கொஞ்சமாவது செய்ய வேண்டும்.

கார்ட்டூன்களில் எல்லாம், வழக்கறிஞர்கள், ஏமாற்றுக்காரர்கள் போல, சித்தரிக்கப்படுகின்றனர். அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். சமூக அக்கறை கொண்டவர்கள் வழக்கறிஞர்கள் என்பதை, மக்களுக்கு செயல்பாடுகள் மூலம் காட்ட வேண்டும். புதிதாக சட்டப்படிப்பை முடித்து வருபவர்களை, நாம் ஊக்கப்படுத்தினால், எதிர்காலத்தில், அவர்கள் திறமையான வழக்கறிஞர்களாக வருவர்.

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக, பணியாற்றத் துவங்கிய, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், ஆரம்பத்தில், வழக்குகளில் வாதாட மிகவும் தயங்கினார். "நன்றாக வாதிட வேண்டும்' என, நான் அவரை ஊக்கப்படுத்தினேன். இன்று அவர் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவ்வாறு அல்டமாஸ் கபீர் கூறினார்.