Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 நவம்பர், 2013

சவூதியில் தத்தளிக்கும் இந்திய மக்களை தாயகம் கொண்டுவர மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியா நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருப் பதாக கூறி கைது செய்யப் பட்டுள்ள, வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற இந்தியர்களை மீட்பதற்கு இந் திய அரசு செய்து வரும் முயற்சிகள் என்ன என்பதை எம்.அப் துர் ரஹ்மான் எம்.பி. மத்திய அமைச்சர்களிடம் நேரில் சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளார். வயலார் ரவியுடன் சந்திப்பு

வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியை புதுடெல்லியிலுள்ள அவ ரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி, """"சவூதி அரேபியாவில் நிதா கத் சட்டம் அமலுக்கு வந்த பிறகு அங்கு சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. சவூதி அரசினால் வழங் கப்பட்ட காலஅவகாசத்தை பயன்படுத்தி, விசாவை முறைப் படுத்திக் கொண்டவர்களும், முறைப்படுத்த முடியாமல் வெளி யேறியவர்களும் போக இன்னும் பல லட்சம் பேர் அங்கு இச்சட் டத்தால் சிக்கிக் கொண் டுள்ளனர். அவர்களில் ஏராளமா னோர் இந்தியர்கள். அவர்களை மீட்பதற்கு இந்திய தூதரகம் உரிய முயற்சிகளை மேற் கொண்டுள்ளதா? இந்திய அரசு இதுவிஷயத்தில் தீவிர அக் கறை காட்டுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் அம்மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு உத வுவதற்கு இந்திய அரசு உடன டியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

எம்.அப்துர் ரஹ்மான்,எம்.பி, முன் னிலையில் ரியாத்திலுள்ள இந்திய தூதரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்ட வயலார் ரவி இதுபற்றி கேட்ட போது, "அப்துர் ரஹ்மான் சொல் வது முற்றிலும் உண்மை.அங்கே நிதாகத் சட்டத்தில் பாதிக்கப் பட்டஇந்தியர்களை மீட்க தீவிரம் காட்டப்படவேண்டும்" என இந்தியத் தூதர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் இப்பிரச்னையில் தீவிரம் காட்டு மாறு வயலார் ரவியிடம் எம்.அப் துர் ரஹ்மான் எம்.பி. கேட்டுக் கொண்டார்.

துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு ;பயணிகள் உற்சாகம்

துபாயில் இருந்து முதல் முறையாக இன்று காலை மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு, வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் சேவையால் தென் மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி பெறும் என தொழிலதிபர்களும், பணமும், நேரமும் மிச்சம் ஆவதாக பயணிகளும் உற்சாகத்துடன் கூறினர். 

மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நேற்று தொடங்கியது. மதுரை விமான நிலையத்தில் நேற்றிரவு 11.35 மணிக்கு குத்து விளக்கேற்றிய பின், முதல் விமானம் துபாய்க்கு புறப்பட்டது. இதில் மதுரை சுங்கத் துறை கமிஷனர் பஹ்கீம் அகமது, இணை கமிஷனர் மீனலோசினி, விமான நிலைய இயக்குனர் சங்கையா பாண்டியன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், ஸ்பைஸ் ஜெட் விமான நிலைய சேவை பிரிவு முதுநிலை துணை தலைவர் கமல்கிங் கோரானி, விற்பனை பிரிவு முதுநிலை துணை தலைவர் ராஜா, துணை பொது மேலாளர் ரஞ்சீவ், துணை கமாண்டர் குருசரண் சிங், இமிகிரேஷன் இன்ஸ்பெக்டர் விக்டர், மதுரை டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா, மதுரை விமான நிலைய ஸ்பைஸ் ஜெட் மேலாளர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தூது குழுவை சேர்ந்த 36 பேர் சென்றனர். 

ஸ்பைஸ்ஜெட் சேவை குறித்து சுங்கத் துறை கமிஷனர் பஹ்கீம் அகமது கூறுகையில், மதுரையில் இருந்து கொழும்புக்கு 2012 செப்டம்பர் 20ம் தேதி முதல் விமான சேவையை அளித்ததும் ஸ்பைஸ் ஜெட்தான். தற்போது துபாய்க்கு விமான சேவையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் மதுரை விமான நிலையம் பன்மடங்கு வளர்ச்சி பெறும். வரும் ஜனவரியில் சிங்கப்பூர், பிப்ரவரியில் மலேசியா நாடுகளுக்கு ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து தொடங்கும் என நம்புகிறோம். சரக்கு விமான போக்குவரத்தும் விரைவில் தொடங்க உள்ளது என்றனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவு துபாயில் இருந்து புறப்பட்ட முதல் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று காலை 9.35 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்திறங்கியது. இந்த விமானத்துக்கு ‘வாட்டர் சல்யூட் எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

முதல் விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள், ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் வரவேற்றனர். விமான நேர விவரம் தினசரி மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் விமானம் (எண்:எஸ்ஜி 023) மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு துபாய் சென்றடையும். அங்கிருந்து தினசரி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் விமானம் (எண்:எஸ்ஜி 024) சென்னை வழியாக மதுரைக்கு காலை 9.45 மணிக்கு வந்து சேரும்

பின்னலாடை ஏற்றுமதி அதிகரிப்பு:வளர்ச்சி பாதையில் தொழில் துறை

"கடந்த அக்., மாதம் மட்டும், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 31 சதவீதம் அதிகரித்து, 1,190 மில்லியன் டாலரை எட்டியுள்ளது,'' என ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதிக்கு, அமெரிக்கா, ஐரோப்பா, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற பல்வேறு நாடுகள் சந்தைகளாக உள்ளன. நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, பாரம்பரிய சந்தைகள் அல்லாத மற்ற நாடுகளிலும், புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. இதனால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சியடைய துவங்கியுள்ளது.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜவுளித்துறைக்கு, மத்திய அரசின் உதவியுடன் புதிய சந்தை வாய்ப்புகள் பெறப்பட்டுள்ளன. பாரம்பரிய சந்தைகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளும் நீங்கியுள்ளன. இதனால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சியடையத் துவங்கியுள்ளது.கடந்த அக்., மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 1,190 மில்லியன் டாலரை எட்டியுள்ளது; இது, கடந்த நிதியாண்டில், இதே காலத்தை விட, 30.91 சதவீதம் அதிகம். நாட்டின் ஏற்றுமதிக்கு டாலர் மதிப்பு உயர்வும் கைகொடுத்து வருகிறது. கடந்த ஏப்., முதல் அக்., வரையிலான காலத்தில், டாலர் மதிப்பு 15.5 சதவீதம் அளவில் உயர்ந்து, ஏற்றுமதிக்கு சாதகமாக உள்ளது. இக்காலத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட, 26.18 சதவீதம் அதிகரித்து, ரூ.49,096 கோடியை எட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி நீங்கியுள்ளதால், அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்திலும், சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜன., முதல் செப்., வரையிலான மாதங்களில், அமெரிக்காவின் ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு, 5 சதவீதம் உயர்ந்துள்ளது.மிக பெரிய வர்த்தக நாடான ஐரோப்பாவின் ஆடை இறக்குமதி மதிப்பு 47.8 பில்லியன் டாலர் அளவில் மாற்றம் இன்றியே காணப்படுகிறது. ஆயினும், அந்நாட்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஜன., முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஒரு சதவீதம் அதிகரித்து, 3.4 பில்லியன் டாலரை தொட்டுள்ளது.

ஆடை ஏற்றுமதியில் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகளை பயன்படுத்தி, போட்டி நாடுகள் உலகளாவிய சந்தைகளை பலப்படுத்தி வருகின்றன. அதேநேரம், பல்வேறு பிரச்னைகளால், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. ஆயத்த ஆடை துறையின் ஏற்றுமதி வளர்ச்சியடைய, மத்திய ரிசர்வ் வங்கி, தனது நிதிக்கொள்கையில், ஜவுளித்துறைக்கு தனி பிரிவு ஏற்படுத்த, வேண்டும்; ப்ரீ பேக்கிங் கிரெடிட், பேக்கிங் கிரெடிட்களை 7.5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு, சக்திவேல் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

கிராமப்புறங்களில் பணியாற்றாத டாக்டர்களின் சொத்துகள் பறிமுதல்

மகாராஷ்டிராவில், கிராமப் புறங்களில் பணியாற்றாத, 99 டாக்டர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

கட்டாயம் பணியாற்ற வேண்டும் : மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை இயக்குனர், சதீஷ் பவார் கூறியதாவது: மகாராஷ்டிராவில், எம்.பி.பி.எஸ்., படிப்பவர்கள், படிப்பு முடிந்ததும், கட்டாயமாக, கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஒருவேளை, மேற்படிப்பு படிக்க வேண்டியிருந்தால், இரண்டு ஆண்டுகள் கழித்து, கிராமப்புறத்தில் பணியாற்ற வேண்டும்.
இதன் படி, இந்தாண்டில், கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்காக, 255 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில், 99 பேர், பணி ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள், தற்போது எங்கு உள்ளனர் என்ற விவரத்தையும் அறிய முடியவில்லை.
கிராமப் புறங்களில் பணியாற்றாததன் மூலம், இவர்கள், அரசுடன் செய்துள்ள ஒப்பந்த விதமுறைகளை மீறியுள்ளனர். 

உரிமங்கள் ரத்து : இதனால், இவர்கள் அளித்துள்ள பிணைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை, அரசு பறிமுதல் செய்யும். அல்லது அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமங்கள் ரத்து செய்யப்படும். மேலும், இவர்கள், மகாராஷ்டிராவில், டாக்டராக பணியாற்ற முடியாது. இவ்வாறு, டாக்டர் சதீஸ் பவார் கூறியுள்ளார்.