Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 நவம்பர், 2013

சவூதியில் தத்தளிக்கும் இந்திய மக்களை தாயகம் கொண்டுவர மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியா நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருப் பதாக கூறி கைது செய்யப் பட்டுள்ள, வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற இந்தியர்களை மீட்பதற்கு இந் திய அரசு செய்து வரும் முயற்சிகள் என்ன என்பதை எம்.அப் துர் ரஹ்மான் எம்.பி. மத்திய அமைச்சர்களிடம் நேரில் சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளார். வயலார் ரவியுடன் சந்திப்பு

வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியை புதுடெல்லியிலுள்ள அவ ரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி, """"சவூதி அரேபியாவில் நிதா கத் சட்டம் அமலுக்கு வந்த பிறகு அங்கு சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. சவூதி அரசினால் வழங் கப்பட்ட காலஅவகாசத்தை பயன்படுத்தி, விசாவை முறைப் படுத்திக் கொண்டவர்களும், முறைப்படுத்த முடியாமல் வெளி யேறியவர்களும் போக இன்னும் பல லட்சம் பேர் அங்கு இச்சட் டத்தால் சிக்கிக் கொண் டுள்ளனர். அவர்களில் ஏராளமா னோர் இந்தியர்கள். அவர்களை மீட்பதற்கு இந்திய தூதரகம் உரிய முயற்சிகளை மேற் கொண்டுள்ளதா? இந்திய அரசு இதுவிஷயத்தில் தீவிர அக் கறை காட்டுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் அம்மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு உத வுவதற்கு இந்திய அரசு உடன டியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

எம்.அப்துர் ரஹ்மான்,எம்.பி, முன் னிலையில் ரியாத்திலுள்ள இந்திய தூதரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்ட வயலார் ரவி இதுபற்றி கேட்ட போது, "அப்துர் ரஹ்மான் சொல் வது முற்றிலும் உண்மை.அங்கே நிதாகத் சட்டத்தில் பாதிக்கப் பட்டஇந்தியர்களை மீட்க தீவிரம் காட்டப்படவேண்டும்" என இந்தியத் தூதர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் இப்பிரச்னையில் தீவிரம் காட்டு மாறு வயலார் ரவியிடம் எம்.அப் துர் ரஹ்மான் எம்.பி. கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக