Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இந்திய ரிசர்வ் வங்கி - ன் இளம் மாணவர்கள் பரிசுத்திட்டம்


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ., ) இந்திய வங்கித்துறை மற்றும் ஆர்.பி.ஐ.,  மீதான ஆர்வத்தையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஆர்.பி.ஐ., இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆர்.பி.ஐ.,  நாடெங்கிலுமான  போட்டித் தேர்வு வாயிலாக அதிகபட்சம் இளம் மாணவ மாணவிகளை தெரிவுசெய் தேர்வு செய்து மாணவர் உதவி தொகை வழங்க இருக்கிறது.

தகுதி: 
இந்தியாவில் எந்த அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலும் எந்தப்பாடதிலும் தமது பட்ட படிப்பைத் தொடரும் 18 லிருந்து 23 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் போட்டித் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

தேர்வு ஆர்.பி.ஐ., மற்றும் இந்திய வங்கிகளின் பங்கு மற்றும் செயல்பாடுகளை மையமாக கொள்ளும். இத்தேர்வு ஆங்கிலத்திலும், பிற முக்கிய பிராந்திய மொழிகளிலும் நடைபெறும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆர்.பி.ஐ., யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களில் 2 முதல் 3 மாதங்களுக்கு செயல் திட்டங்களில் பணியாற்ற வேண்டும், அந்த காலத்தில் தொகுப்பு உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ 7500/- வழங்கப்படும். வெளியூர் நபர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிக்கு ஆர்.பி.ஐ., உதவும்.

பரிசாளர்களுக்குஆர்.பி.ஐ., யில் பணி நியமனம் கோர எந்தவித உரிமையும் இல்லை . முந்தைய ஆண்டுகள் எதிலும் ஆர்பிஐ இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்று ஆர்.பி.ஐ., யில் பணிபுரிந்தவர்கள் எவரும் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் அல்ல.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசுத் திட்டம்,
செயல் திட்டம் எண் 9277
அஞ்சல் பெட்டி எண் 7639
மலாட்(மேற்கு), மும்பை

ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசு திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் ஆர்.பி.ஐ., இணைய தளம் www.rbi.org.in , "எம்ப்லாய்மென்ட் நியூஸ்" மற்றும் "ரோஜ்கார் சமாச்சார்" பத்திரிக்கைகளிலும் கிடைக்கிறது.

கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வு தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வுகள் ஆரம்பமாகிறது.தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டு தோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வு நடத்தப்படுகிறது.

 வரும் ஜூன் மாதத்திற்குரிய தேர்வுகள் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. ஜூன் மாதம் 22ம் தேதி முதல் தாள் தேர்வு, 23ம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் தலா 2 மணி நேரம் நடக்கிறது.இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் மே மாதம் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் இளநிலை தமிழ் அல்லது ஆங்கிலம் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அரசு துறைகளில் தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்களாக பணியாற்றுபவர்கள் கண்டிப்பாக கம்ப்யூட்டர் ஆபிஸ் ஆட்டோமேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் இத்தேர்வுக்கான பயிற்சி மையங்களில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரும் ஜூன் மாதத்திற்கான தேர்வில் பங்கேற்கின்றனர்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட கவர்னர் உத்தரவு



வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் குறித்த தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு, கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன், ஒப்பந்தங்களை செய்துள்ளன. இந்நிலையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் நிலையை, அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள், அந்த நாட்டு அரசுகளிடம் பெற்றுள்ள அங்கீகாரம் குறித்து, உயர்கல்வி மன்றம் ஆய்வு செய்ய வேண்டும். அதுகுறித்த அறிக்கையை, உயர்கல்வி மன்ற இணையதளத்தில், வெளியிட வேண்டும். மாணவர்களுக்கு வழிகாட்ட, இப்பணியை, செய்ய வேண்டும். இவ்வாறு, கவர்னர் கூறியுள்ளார்.