Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 28 ஜூன், 2013

அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளை போலீசார் தத்தெடுத்தனர்

மதுரை மாவட்டத்தில் போதிய அடிப்படை வசதியின்றி செயல்படும் பள்ளிகளை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி மாவட்ட போலீசார் தத்தெடுத்தனர்.

வசதியின்றி செயல்படும் பள்ளிகள்
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், மதுரை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் பட்டியலை போலீசார் தயாரித்தனர். அதன்படி, பல்வேறு பள்ளிகள் அடங்கிய பெயர் பட்டியல் போலீஸ் சூப்பிரண்டு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முடிவில், பழங்காநத்தம் வசந்தநகரில் உள்ள தியாகராசர் உயர்நிலைப்பள்ளி, சோழவந்தான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தத்தெடுக்கப்பட்டன. அதன்மூலம் அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளையும், அங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உரிய ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிக மதிப்பெண்
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறுகையில், 10, 12–ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக கல்வித்துறையின் ஒத்துழைப்பை கோரி உள்ளோம்.மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும். இதன்மூலம் பள்ளியில் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

பதிவு மையங்கள்
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக, பொதுமக்களுக்கு உதவும் வகையில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வாக்காளர் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம் –6),

பெயர் நீக்கல் (படிவம் –7), பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்தல் (படிவம் –8), வாக்காளர் பட்டியலில் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் (படிவம் 8ஏ), குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம் –6ஏ), வாக்காளர் அட்டை நகல் பெறுதல் (படிவம் 001சி) ஆகிய 6 பணிகளை இந்த வாக்காளர் பதிவு மைய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் பதிவு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். அனைத்து கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களையும், வாக்காளர் பதிவு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் இந்த மையங்களிலேயே கொடுக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மனுதாரர் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், வயது மற்றும் குடியிருப்புக்கு ஆதாரமாக கல்வி சான்றுகள், பிறப்பு சான்று, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வருமான வரி கணக்கு அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அடையாள அட்டை போன்றவற்றையும் ஆதார ஆவணங்களாக பயன்படுத்தலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சி.சமயமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்பு

21ம் நூற்றாண்டில் எழுச்சி பெறும் துறைகளுள் ஒன்றாக இருப்பது ஈவன்ட் மேனேஜ்மென்ட். முன்பு போல அல்லாமல் இன்று எந்த விழாவை எடுத்தாலும் அதை மிக பிரம்மாண்டமாகவும் மனதை கவருவதாகவும் நடத்த வேண்டியிருக்கிறது.

அரசியல் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் விதத்தைப் பார்த்தால் மிரட்சியாகவே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இன்று எல்லாமே பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எல்லா விழாக்களுமே ரெகார்ட் செய்யப்பட்டு ஓரிரு நாட்களிலேயே அவை ஒளிபரப்பப்படுகின்றன. எனவே நேரில் பார்ப்பவரைத் தவிர டிவியில் பார்ப்பவர் எண்ணிக்கை தான் பல லட்சக்கணக்கில் இருக்கிறது. டிவியிலும் நேரிலும் நாம் பார்க்கும் விருது வழங்கும் விழா, முக்கிய மேளாக்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து நடத்தும் மேலாண்மையைத் தான் ஈவண்ட் மேனேஜ்மென்ட் எனக் கூறுகிறார்கள்.

முறையான எந்த ஈவண்ட் மேனேஜ்மென்ட் படிப்பும் படிக்காமல் எத்தனை பேர் அனாயசமாக இது போன்ற மெகா திருவிழாக்களை நடத்துவதை நாம் பார்த்து வந்துள்ளோம்? எனினும் இன்றைய காலத்தின் கட்டாயம் இந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட். ஒரு நிகழ்ச்சியின் ஒவ்வொரு சிறு அசைவும் தெளிவாக திட்டமிடப்பட்டு பிரமாதமாக செயல்படுத்தப்படுவதற்கு ஈவன்ட் மேனேஜ்மென்ட் தான் மிகவும் உதவுகிறது. திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், நிறுவனங்களின் மாநாடுகள், செமினார்கள், கருத்தரங்குகள், புதிய பொருட்களை அறிமுகம் செய்யும் விழாக்கள் என அனைத்து ஷோக்களுக்கும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் இன்று அத்தியாவசியமாகியுள்ளது. பிரபலமானவர்களோடும் புகழ் பெற்ற பிரமுகர்களோடும் ஈவன்ட் மேனேஜர்கள் தோளோடு தோள் சேர்த்து பழகுகிறார்கள்.

விழா நடத்த விழைபவர்கள் ஈவன்ட் மேனேஜிங் நிறுவனங்களை அணுகியவுடன் அந்த நிறுவனம் துவக்கத்தில் புராஜக்ட் ரிபோர்ட் ஒன்றை தயார் செய்து தருகிறது. எவ்வளவு செலவாகும்? என்னென்ன அம்சங்கள் தேவை? எத்தனை நாளில் அதை தயார் செய்யலாம் போன்ற அனைத்து விபரங்களும் ஒரு புளூபிரின்ட் போல அந்த அறிக்கையில் தரப்படுகின்றன. விழா நடத்த விரும்புபவர்கள் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன் திட்டம் செயலாக்கத் துவங்குகிறது.

ஈவண்ட் மேனேஜிங் துறையில் நுழைய அடிப்படையில் உங்களுக்கு சில திறன்களும் குணாதிசயங்களும் தேவை.

* தலைமை தாங்கும் பண்பு

* யாரையும் நயம்பட பேசி மசிய வைக்கும் திறன

* எளிதாகப் பழகும் திறன

* ஒன்றிணைக்கும் திறன

* மார்க்கெட்டிங் மற்றும் வாணிப உத்திகளைப் பெற்றிருப்பத

* லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடு செய்யும் திறன்கள

* எதிர்பாராமல் ஏற்படும் திருப்பங்களை லாவகமாக கையாளும் திறன

* பகுத்தாராயும் திறன், நுண் திறன் மற்றும் பிரச்னைகளை கையாளும் திறன்

இத் துறையில் சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகள் தரப்படுகின்றன. பொதுவாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்புகள் மும்பை, டில்லி, கோல்கட்டா போன்ற மாநகரங்களில் தான் நேரடிப் படிப்புகளாக நடத்தப்படுகின்றன.