Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

111 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வந்த உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி மூடப்பட்டது :தொடர்ந்து நடத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை

சென்னையில் 111 ஆண்டு காலமாக இயங்கி வந்த தமிழகத்தின் ஒரேயொரு உர்தூ ஆசிரியர் பயிற்சி நிறுவனமான உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி மூடப்பட்டது முஸ்லிம்களி டையே மிகப் பெரும் அதிர்ச்சி யலைகளை ஏற்படுத்தியுள் ளது. இப்பயிற்சிப் பள்ளியை திறந்து மீண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இதுவிஷயத்தில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் மூலம் உரிய பரிகாரம் காண இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ. அஹமது சாஹிப், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் இன்று காலை புதுடெல்லியில் ஆலோசனை நடத்தினர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1902-ம் ஆண்டு சென்னை அண்ணாசாலை தாஹிர் சாஹிப் தெருவில் உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி துவக்கப்பட்டது. தமிழ்நாட்டி லேயே ஆண்களுக்கான ஒரே யொரு உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியாக இந் நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வந்தது.

ஆண்டுக்கு 40 மாணவர் கள் பயிற்சி பெற்று வெளியேறி வந்த நிலையில் கடந்த 10 வருட காலமாக இதன் முக்கியத்துவம் படிப் படியாக குறைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இப் பயிற்சிப் பள்ளிக்கான உர்தூ மொழி, கணிதம், அறிவியல், மனோதத்து வம், ஆங்கிலம், சமூக அறிவியல் உள்ளிட்ட 7 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு பணியிடம் கூட நிரப்பப்பட வில்லை.

இதைவிட மிகப் பெரிய கொடுமை என்னவெனில், உர்தூ மொழியே தெரியாத தெலுங்கு ஆசிரியர் இப் பயிற்சிப் பள்ளிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டார். பயிற்சியளிப் பதற்கு உரிய விரிவுரையாளர் கள் இல்லாததால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர தயக்கம் காட்டினர். தமிழக அரசின் முழு நிதியுதவியில் நடத்தப்பட்ட இப் பயிற்சிப் பள்ளியை மூட முடிவெ டுத்த அரசு அதிகாரிகள் கடந்த இரண்டு வருட காலமாக திட்டமிட்டு காய் நகர்த்தினர். முதல் கட்டமாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் விட்டதோடு, அடுத்த கட்ட நடவடிக்கையாக இப் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பித் திருந்த 12 மாணவர்களின் விண்ணப்பங்களையும் ஏதேதோ காரணங்களை சொல்லி நிராகரித்தனர். இது மட்டுமின்றி பயனின்றி கிடக் கும் இந்த இடத்தை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு பெற் றோர் - ஆசிரியர் சங்கத்தின் மனு ஒன்றையும் அவர்கள் பெற்றனர்.

இவ்வளவையும் செய்து விட்டு உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் சேரவில்லை என காரணம் காட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் கண்ணப்பன் உத்தரவின்பேரில் இப் பள்ளி மூடப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை
இச் செய்தி குறித்து உர்தூ டீச்சர்ஸ் அசோசியேஷன் மாநில அமைப்பாளர் ஒசூர் ஹபீபுர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வாணியம் பாடி நரி முஹம்மது நயீம் ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத் தின் கவனத்துக்கு கொண்டு வந்த னர்.

தலைமையின் அறிவுறுத்த லுக்கிணங்க மாநிலச் செயலா ளரும், மணிச்சுடர் செய்தியாசிரி யருமான காயல் மகபூப், செய்தி யாளர் மகபூப் ஷரீப் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் அமா னுல்லாஹ், தமிழ்நாடு உர்தூ ஸ்கூல் டீச்சர்ஸ் அசோசியே ஷன் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ. அப்துல் அஜீஸ் மற்றும் அப் பயிற்சி நிறுவனத் தில் பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள் சுற்று வட்டார பொதுமக்களிடையே தகவல் களை திரட்டினர்.

இப்பயிற்சி பள்ளி மூடப் பட்டது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கும், மொழிவழி சிறுபான்மையின ருக்கும் செய் யப்பட்ட மாபெரும் துரோகம் என பொது மக்கள் கருத்து தெரி வித்தனர்.

பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கோரிக்கை 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாட்டில் உர்தூ மொழி பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது முஸ்லிம்களை வேதனைப்படுத்தி வரும் நிலையில் அதன் ஆசிரியர் பயிற்சி நிறுவனமே மூடப்பட் டுள்ளது என்பது பேரிடியாக விழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப் புரம், ஈரோடு, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங் களில் உர்தூ மொழி பள்ளிக் கூடங்கள் 350-க்கும் மேல் உள்ளன. சுமார் 15 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இந்த பள்ளிக்கூடங்களில் 150 ஆசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன.

அரசின் நிதியுதவியில் நடத்தப்பட்ட பள்ளிகள் எல்லாம் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வரும் நிலையில் தனியார் நிர்வாகத்தின் மூலம் நடத்தப் படும் சுமார் 50 பள்ளிகளே சிறப்பாக செயல்படுகின்றன. இப் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள் மூலமே நிரப்பப் பட வேண்டும். ஆனால் அது மூடப்படுவது அனைத்து உர்தூ பள்ளி களையும் மூடுவதற்கான முன் னோட்ட நடவடிக்கையாகும்.

எனவே, தமிழக அரசு மதம் மற்றும் மொழிவழி சிறுபான்மை யினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு மூடப்பட்ட உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை மீண்டும் திறந்து தொடர்ந்து நடத்த ஆவன செய்ய வேண் டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இ.அஹமதுடன் அப்துல் ரஹ்மான் எம்.பி. சந்திப்பு 
இதனிடையே, இன்று காலை புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை இணைய மைச்சரும், தேசியத் தலைவரு மான இ.அஹமது சாஹிபை தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப் பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. சந்தித்து இதுபற்றி எடுத்துக் கூறினார். உர்தூ மொழி வளர்ச்சிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் உர்தூ மொழி வளர்ச்சிக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது கோரிக்கை வைத்து அது மத்திய அரசால் ஏற்கப்பட்டுள் ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நூறு ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் ஒரு பயிற்சிப் பள்ளியை மூடுவது என்பது ஏற்க முடியாதது. எனவே, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச் சகத்தின் மூலம் தமிழக அரசுக்கு உரிய வேண்டுகோள் விடுக்க இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், மத்திய மதரஸா மேம்பாட்டு வாரிய உறுப்பினரு மான கே.ஏ.எம்.முஹம்மது அபூ பக்கர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜுவுக்கு அனுப்பி யுள்ள அவசர செய்தியில் இதுவிஷயத்தில் தலையிட்டு உர்தூ பயிற்சி பள்ளி தமிழ்நாட் டில் தொடர்ந்து செயல்பட கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவிகள் அச்சம் 
ஆண்களுக்கான உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டு விட்ட நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்காக நடத்தப்படும் சென்னை ராயப்பேட்டை ஹோப்பாட் வளா கத்தில் உள்ள உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் மூடப்பட்டு விடும் என்ற அச்சம் அங்கு பயின்று வரும் மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் உர்தூ மொழியி லான மாணவிகளுக்கு ஒன் றாக பயிற்சியளிக்கப்படுவ தால் இப்பள்ளி காப்பாற்றப் பட்டு வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழக அரசு கல்வி உதவித் தொகை அறிவிப்பு

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பி.சி./எம்.பி.சி./டி.என்.சி. மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள், அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும்.

http://www.tn.gov.in/announcements/announce_view/38917 இணையதளத்தில் விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன...