Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 21 நவம்பர், 2012

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ? - நேனோடெக்னாலஜி


 மருத்துவம், தொழிற் துறைகளில் நேனோடெக்னாலஜி அடுத்த சில ஆண்டுகளில் புரட்சியை உருவாக்கப் போகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

 சூரிய ஒளியிலிருந்து அளவற்ற மின்சாரம் தயாரிப்பதிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட செல்லை சரி செய்திட, பெரிய நீர் நிலைகளை சில நொடிகளில் சுத்தம் செய்திட என்று இதன் பயன்பாட்டைப் பற்றிக் கேட்டால் நம்ப முடியாததாக இருக்கிறது.

இப்படித்தான் கம்ப்யூட்டரைப் பற்றியும் இதன் பயன்பாட்டைப் பற்றியும் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். அதுபோலவே விஞ்ஞானத்தின் அடுத்த புரட்சி நேனோடெக்னாலஜி தான் என கருதப்படுகிறது.

குற்றவாளிகளின் டி.என்.ஏவைக் கொண்டு அவர்களை எளிதாக அடையாளம் காணுவது, கெமிக்கல் ஆயுதங்களிடமிருந்து பாதுகாக்கும் ஆடைகளைத் தயாரிப்பது, இது இயற்பியல், வேதியியல், பயோஇன்பர்மேடிக்ஸ், பயோடெக்னாலஜி போன்றவற்றின் மிகச் சிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முறையாக தற்போது அறியப்படுகிறது.

16 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இதைப் பற்றிய ஆய்வுகள் தொடங்கினாலும் கடந்த சில ஆண்டுகளாகத் தான் இத்துறை வேகமாக வளரத் தொடங்கியுள்ளது.

நேனோடெக்னாலஜி தகுதிக்கான வேலைத் துறைகள்:
பார்மாசூடிக்கல், மருத்துவம், விவசாயம், உணவு மற்றும் பானங்கள், சுற்றுச்சூழல் நிறுவனங்கள், அரசு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் ஆய்வு மையங்கள்.கல்வி நிறுவனங்கள், பயோடெக்னாலஜி, ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் மற்றும் மையங்கள் மற்றும் புதிய பொருட்களை வடிவமைப்பது, தொழில் நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளை கிரியேட்டிவாக பயன்படுத்தக்கூடிய மீடியா மற்றும் கம்யூனிகேஷன் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் நானோடெக்னாலஜியைப் படித்துத் திறன் பெறுபவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தற்போது இத்துறையில் பட்ட மேற்படிப்புகள் குறிப்பாக எம்.டெக். படிப்பு மட்டுமே தரப்படுகிறது,என்றாலும் விரைவில் பட்டப்படிப்புகளும் சிறப்பு டிப்ளமோ படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றே நம்பலாம்.

இதில் சிறப்புப் படிப்புகளைத் தரும் நிறுவனங்கள்:
Jawaharlal Nehru Center for Advanced Scientific Research, Bangalore
Indian Institute of Science, Bangalore
National Physical Laboratory, Delhi
Solid State Physics Laboratory, Delhi
National Chemical Laboratory, Pune
Central Scientific Instruments Organization, Chandigarh;
Defence Materials Store Research & Development Organizations, kanpur
Indian Institutes of Technology at Kanpur, Chennai, Guwahati, Delhi and Mumbai

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பேரணி


ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும்  இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது.

6வது ஊதிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின்படி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தை கணக்கிட்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும்.

இடைநிலை, பட்டதாரி, கைத்தொழில் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது.

சுதந்திரமான பாலஸ்தீனம் என்பதிலும், ஜெருசலம் அதன் தலைநகரம் என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது


பாலஸ்தீன நாட்டின்  காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு இந்தியா தனது கண்டனத்தைத்  தெரிவித்துக் கொண்டுள்ளது.

தில்லியில் புதன்கிழமை இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் வெளியுறவு இணை அமைச்சர் இ.அஹமது ஆகியோர் கூட்டாக இது தொடர்பாகப் பேசியபோது,

இஸ்ரேல் தேவையற்ற வகையில் ராணுவ பலத்தை அதிகமாக பயன்படுத்துகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. காஸா பகுதியில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் விஷயம். பெண்களும், குழந்தைகளும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். எனவே, காஸா பகுதியில் உடனடியாக அமைதியை ஏற்படுத்த வேண்டும். இதற்கான முயற்சிகளுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் அளிக்கும்.

சுதந்திரமான பாலஸ்தீனம் என்பதிலும், ஜெருசலம் அதன் தலைநகரம் என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் கூறினர்.

மரண தண்டனையை ஒழிக்கும் ஐ.நா. தீர்மானம்: எதிராக ஓட்டளித்து இந்தியா


மரண தண்டனையை ஒழிப்பது குறித்து ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 110 நாடுகள் ஓட்டளித்துள்ளன. இதி்ல் 36 நாடுகள் ஓட்டளிக்காமல் புறக்கணித்துள்ளது. ஆனால் இந்தியா உள்ளிட்ட 39 நாடுகள் எதிர்த்து ஓட்டளித்துள்ளன.

மரணதண்டனையை முற்றிலும் ஐ.நா.உறுப்புகள் கைவிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை கூடும். இந்நிலையில் நேற்று ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் கூடியது. எத்த‌கைய கொடூர குற்றங்கள் செய்திருந்தாலும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு , உச்சபட்ச தண்டனையாக மரணதண்‌டனை வழங்கிடக்கூடாது எனவும் இது போன்ற கொடிய தண்டனையை ஒழிப்பது குறித்த ஐ.நா. குழு வரைவு தீர்மானம் கொண்டு வந்தது. பின்னர் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த ஓட்டெடுப்பில் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, பிரேசில், சில ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 110 நாடுகள் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என ஆதரவாக ஓட்டளித்தன.. 36 நாடுகள் ஓட்டளிக்காமல் புறக்கணித்தன. ஆனால் இந்தியா, சீனா, வங்கதேசம், ஈரான், ஈராக், ஜப்பான், குவைத்,லிபியா, பாகிஸ்தான், அமெரிக்கா, வடகொரியா, சிரியா, ஜிம்பாப்வே, உள்ளிட்ட 39 நாடுகள் எதிராக ஓட்டளித்துள்ளது. முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு இதே போன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது 107 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.இது குறித்து இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட பதில், மரணதண்டனை விதிக்கும் விவகாரம் இந்தியாவின் சட்டமுறை அதனை எக்காரணம் கொண்டும் எங்களது தனித்தன்மையை
விட்டுக்கொடுக்கமாட்டோம் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த முடிவிற்கு தால்கல்சா என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கிடைத்த நல்லவாய்ப்பினை இந்தியா தவறவிட்டுவிட்டது. பிற நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை நல்க வேண்டும் என காரணத்திற்காக இந்த முடிவினை இந்தியா எடுத்துள்ளது.இந்தியாவில் உள்ள பல்வேறு மக்களுரிமை அமைப்புகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆண்டுக்கு 1500 விவாகரத்து வழக்குகள் "பெண்டிங்'


மண வாழ்க்கையில் இணைந்த கணவன் மனைவியை சட்டப்படி பிரிப்பதும், மீண்டும் சேர்த்து வைப்பதும் குடும்ப கோர்ட்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. ஆயிரக்காலத்து பயிர்களை, ஆர்வக் கோளாறு காரணமாக ஆறு மாதத்தில் அறுத்து எரியத் தயாராகி விட்டனர் இளம் வயது ஜோடிகள்.

தாலியுடன் இளம் பெண்களும், ஏக்கப் பார்வையில் ஆண்களும் அதிகமாக காத்துக்கிடக்கும் இடமாக குடும்ப கோர்ட் வளாகம் மாறி விட்டது. காலை முதல் மாலை வரை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளை இங்கு பார்க்கலாம். தொடர்ந்து "வாய்தா'வில் ஓடும் வழக்குகளின் விசாரணை எப்போது முடியும், விவாகரத்து எப்போது கிடைக்கும், புது வாழ்க்கையை எப்போது துவக்கலாம் என திக்குத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் இவர்கள் காத்திருக்கின்றனர்.விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே, ஊராருக்கும், கோர்ட்டுக்கும் தெரியாமல், தாலி கட்டி சிலர் குடித்தனம் துவங்கி விட்டனர். இன்னும் சிலர், தாலி கட்டாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் முடிவு தெரியாமல் 10 ஆண்டுகளாகக் கூட கோர்ட்டுக்கு நடையாய் நடக்கின்றனர்.கோர்ட்களில் வழக்குகள் தேங்குவதற்கு, ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், ஜீனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவு செய்வதே இதற்கு காரணமாக உள்ளன.

வழக்குகள் அதிகமாவதால், வாய்தாவுக்கே கோர்ட்டில் நேரம் சரியாக உள்ளது. இதனால் வழக்குகளின் விசாரணை தேதிகள், ஆண்டுக்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வழக்குகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. கோவை குடும்ப நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டன.கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1300க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.நடப்பு ஆண்டில், கடந்த 10 மாதங்களில் 1,225க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகியுள்ளன.இப்படி ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பது சமூகத்தில் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி உள்ளது.குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற மன உளைச்சலில்,குடும்ப பெரியவர்கள் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.விவாகரத்து மற்றும் சேர்ந்து வாழக் கோரும் வழக்குகள் குடும்ப கோர்ட் மட்டுமல்லாது, கோவை சட்ட மையத்திலும் நடக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 5 முதல் 7 வழக்குகள் இருதரப்பு சம்மதத்துடன் விசாரிக்கப்படுகின்றன.

இவ்வழக்குகள் அனைத்தும் குடும்ப கோர்ட்டில் இருந்து பெறப்பட்டவையாகும்.தொடர்ந்து அதிகரித்து வரும் வழக்குகளால், விரைந்து வழக்குகளை விசாரிக்கமுடியாமல் கோவை குடும்ப நீதிமன்றம் திணறுகிறது. இதனால் வழக்குகள் முடிய தாமதமாகின்றன. இதை தவிர்க்க, கூடுதலாக ஒரு கோர்ட் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஐகோர்ட் இதற்கான அனுமதி வழங்கியும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், கோர்ட் கட்டடம் கட்ட இடம் இல்லாததால் நின்று போனது. ஏற்கனவே 2001க்கு முன், கோர்ட்கள் செயல்பட்ட குதிரை வண்டி கோர்ட் வளாகம் தற்போது உபயோகத்தில் இல்லாமல் இருக்கிறது.இந்த வளாகத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்ட பல ஆண்டுகளாக திட்டம் இருந்த போதிலும், ஒரு பகுதியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்ற முடிவும் ஏற்பட்டுள்ளதால், குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும் என,கோவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.