Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 2 ஜனவரி, 2013

சிறைச்சாலைகளில் வாடும் முஸ்லிம்களின் விடுதலை ,அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 % இடஒதுக்கீடு வலியுறுத்தி நாடு தழுவிய பேரணி :இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் 01-01-2013 செவ்வாய் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை பூந்த மல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் அபுபேலஸில் நடை பெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது சாகிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய பொருளாள ரும் கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலி குட்டி, துணைத் தலைவர் தஸ்தகீர் இப்ராகிம் ஆகா, தேசிய செயலாளர்கள் இ.டி. முகம்மது பஷீர் எம்.பி, அப்துஸ் ஸமத் சமதானி எம்.எல்.ஏ, டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர், தேசிய துணைச் செயலாளர்கள் நாக்பூர் ஷமீம் சாதிக், லக்னோ டாக்டர் மத்தீன், ஆம்பூர் அப்துல் பாசித் (முன் னாள் எம்.எல்.ஏ), இளைஞர் அணி பி.கே. ஃபெரோஸ்,

தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், மாநில செயலா ளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், பேங்காக் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் வாவு சம்சுதீன், டைம்ஸ் ஆஃப் லீக் துணை ஆசிரியர் கே.டி. கிஸர் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு 
1.இந்திய நாட்டில் சிறுபான்மை சமுதாயங்கள் 18 சதவீதம் உள்ளனர். இவர்களில் பெரும் பான்மையாக அதாவது 13.5 சதவீதம் முஸ்லிம்களாவர்.

கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா, நீதியரசர் ராஜேந்திர சச்சார் ஆணையங்கள் பரிந்துரைத் தன. இந்த இடஒதுக்கீடு வழங் கப்பட வேண்டும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால், இதுவரை இந்த இடஒதுக்கீடு  மிகுந்த வருத்தத்தை தருகிறது. எனவே முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

2.அநியாயமாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் இக்கூட்டம் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது .

3.இக்கோரிக்கைகளை  நிறைவேற்ற கோரி அனைத்து மாநில தலைநகர்களிலும் மார்ச் மாத இறுதியில் கவன ஈர்ப்பு பேரணி களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்துவது .

கூட்டத்தின் முடிவுக்குப்பின் செய்தியாளர் களை சந்தித்த இ. அஹமது சாஹிப் கூறியதாவது:

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் விடுதலை
முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் அதை நிறைவேற்ற மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அனைத்து மாநில தலைநகர்களிலும் கவன ஈர்ப்பு பேரணிகளை மார்ச் மாதம் இறுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்த உள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா, உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் விசாரணையின்றி நீண்ட காலம் சிறை வைக்கப் பட்டுள்ளனர். அற்ப காரணங் களுக்காக வும், காவல்துறைக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க மறுத்ததற்காகவும், பொய் வழக் குகள் புனையப்பட்டு இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறை வைக்கப் பட்டுள்ள முஸ்லிம் இளைஞர் களில் பெரும்பாலோனோர் குற்ற வழக்குகளில் எத்தகைய தொடர்பும் இல்லாதவர்கள். ஆய்வு செய்தவர்களும் இந்த உண்மையை வெளிபடுத்தி யுள்ளனர்.

எனவே அநியாயமாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முஸ்லிம் லீக் நடத்தவுள்ள பேரணிகளிலும் இந்தக் கோரிக்கை பிரதானமாக வலியுறத்தப் படும்.

கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கு நீதி மறுக்கப்படுகிறது. கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவர் உடனடியாக விடுவிக்கப் பட வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல்
நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி யிலும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிக்கும். மற்ற மாநிலங்களில் அதற் காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்

இவ்வாறு இ. அஹமது சாஹிப் குறிப்பிட்டார்.

டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை


பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவ, மாணவியருக்கு மும்பை, கே.சி., மஹிந்திரா எஜுகேஷன் டிரஸ்டு நிறுவனம் உதவித்தொகை அறிவித்துள்ளது.

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு, உடல் ஊனமுற்றக் குழந்தைகளுக்கு, ராணுவத்தில் பணி செய்பவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு, ஆண்டிற்கு ரூ.5 ஆயிரம் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

முகவரி: 
ஆர். வெங்கடராமன்
ரீஜினல் மேனேஜர் - எஸ்எஸ்பியு
மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட்
மஹிந்திரா டவர்ஸ், பட்டுல்லாஸ் ரோடு,
சென்னை - 600 002.

Scholarship : டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை
Course        : டிப்ளோமா
Provider Address : ஆர். வெங்கடராமன் ரீஜினல் மேனேஜர் - எஸ்எஸ்பியு மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் மஹிந்திரா டவர்ஸ், பட்டுல்லாஸ் ரோடு, சென்னை - 600 002.

பள்ளி பாட நன்னெறி கல்வி திட்டத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்


"பள்ளி பாடங்களில், நன்னெறி புகட்டும் கருத்துகளையும், பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும், பாடங்களையும் புகுத்த வேண்டும்" என, மனித வள மேம்பாட்டு துறைக்கு, பிரதமர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீப காலமாக, பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதால், கலக்கம் அடைந்துள்ள மத்திய அரசு, கல்வி முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கான, நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், சில முயற்சிகளை, பிரதமர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

சில ஆலோசனைகளை, மனித வள மேம்பாட்டு துறைக்கு, பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ளது. அதில், பள்ளி கல்வியிலேயே, பெண்களை மதிக்கும் மனப்பான்மையை, மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்காக, பாட திட்டங்களில் மாற்றம் செய்து, நன்னெறி கதைகள், அறிவுரைகள், பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் பாடங்களை, பள்ளிப் பாடங்களிலேயே புகுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை, மத்திய மனித வள மேம்பாட்டு துறை, சி.பி.எஸ்.இ., - என்.சி.இ.ஆர்.டி., மற்றும் மாநில கல்வி வாரியங்களுக்கு, கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் புதிய சட்டம் :பணக்காரர்களுக்கு அதிக வரி


பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.

 அமெரிக்கா தற்போது நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது. இதை தவிர்ப்பதற்காக, தான் மீண்டும் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பணக்காரர்களுக்கு அதிக வரி, மற்றும் அரசின் செலவுகளை குறைப்பது உள்ளிட்ட மசோதாக்களை கொண்டு வருவதாக ஒபாமா தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தார். இதன்படி, பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது தொடர்பான மசோதா நேற்று அமெரிக்க பார்லிமென்ட்டின் மேல் சபையான செனட்டில் கொண்டு வரப்பட்டது. ஒபாமா சார்ந்திருக்கும் ஜனநாயக கட்சியினர் அதிகம் இருக்கும் செனட்டில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 89 ஓட்டுகளும், எதிராக 8 ஓட்டுகளும் கிடைத்தன.

இதையடுத்து, இம்மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த மசோதாவுக்கு குடியரசு கட்சிப்பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து துணை அதிபர் ஜோ பிடன், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா மீதான ஓட்டெடுப்பு நேற்றிரவு நடந்தது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 257 ஓட்டுகளும், எதிராக 167 ஓட்டுகளும் கிடைத்தன. இரண்டு சபைகளிலும் ஒப்புதலை பெற்றுள்ளதையடுத்து, மசோதா அதிபர் ஒபாமாவின் ஒப்புதலோடு அமலுக்கு வரும்.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது அதிகம் பேசப்பட்ட இச்சட்டத்தின் படி, 98 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் அதிகப்படியான வரி விதிப்பில் இருந்து தப்பியுள்ளனர். அதே சமயம் பணக்காரர்களுக்கு மிக அதிக அளவில் வரி உயர்வு அமலுக்கு வரும். இதன்படி, தனிநபர் வருமானம் 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருந்தாலோ, அல்லது குடும்ப வருமானம் 4 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக இருந்தாலோ அவர்கள் பணக்காரர்களாக கருதப்பட்டு, அவர்கள் அதிக வரி செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள  ஒபாமா, தற்போதைய நிதி நெருக்கடியில், இம்மசோதா மிகவும் அவசியம் என்றும், அப்போது தான் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.