Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

உணர்வுமிக்க அரசியல் பாதையா ? உணர்ச்சி மிக்க அரசியல் பாதையா ? --- நம் முன் சென்ற சமுதாயத்தலைவர்கள் காட்டிய வழி என்ன ?

காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி  தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது , திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் அண்ணாதுரை தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் . ஆனால் ,அண்ணாதுரை தன ஆட்சியின் முதலாண்டை பூர்ஹ்தி செய்த நிலையில் மரண முற்றார் . பின்னர் தமிழக முதல்வராக திமுகவின் சார்பில் பதவியேற்றார் கருணாநிதி .

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் முதன் முறையாக மதுக்கடை திறக்கப்பட்டது .அப்போது திமுக கூட்டணியல் இருந்த ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அனைத்து நிர்வாகிகளும் ,தொண்டர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் , திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று தலைவர் காயிதே மில்லத்திற்கு கோரிக்கை வைத்தனர் . சிராஜுல் மில்லத் அ.க .ஆ . அப்துஸ் சமது சாஹிபு , நாவலர் AM .யூசுப் சாஹிப் , எம்.எம்.பீர் முஹம்மது சாஹிப் உள்ளிட்ட முஸ்லிம் லீக்கின் பிரச்சார பீரங்கிகள் மாநிலம் முழுவதும் முஸ்லிம் லீகின் கூட்டங்களில் மதுக்கடையை திறந்த திமுக -வினை எதிர்த்து வீர முழக்கமிட்டனர் .

இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுக்குழு தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் தலைமையில் கூடியது . பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று பேசினார்கள் .இறுதியாக பேசிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் ) அவர்கள் , மதுக்கடையை திமுக திறந்ததை நாம் கண்டிக்கிறோம் , மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோருகிறோம் . அதே நேரத்தில் ,திமுக -வா ? அல்லது எதிர் தரப்பா ? என்று நாம் நோக்கும் போது , முஸ்லிம் சமுதாயத்திற்கு திமுகவை விட எதிர் தரப்பு பாதகமாக உள்ளது ,எனவே ,திமுக உடன் கூட்டணி தொடரும் ,அவர்கள் திருந்த வேண்டும் ,அவர்கள் நம் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் , அவர்கள் தவறுக்கு அல்லா தண்டனை வழங்குவான் என்று கூறி திமுகுடன் கூட்டணி தொடரும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார்கள் ,பொதுக் குழு உறுப்பினர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு ஏற்றுக் கொண்டனர் . (தொடரும் ...............)

----------- ஜமிலா மைந்தன்

நேர்மையான அரசியல் தலைமை உருவாக தமிழ் சமுதாயம் உதவும் : டாக்டர் APJ .அப்துல் கலாம்

கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியின் மணிவிழாவை முன்னிட்டு, வளர் தமிழ் இயக்கம் நடத்தும்,தமிழ்பயிற்று மொழி, வழிபாட்டு மொழி மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதாமோகன், சாந்தி துரைசாமி, பானுமதிவேலுசாமி, ஆர்.கே.உமாதேவி, ருக்குமணி ஓதிச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தஞ்சை தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டு விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:–

ஆட்சிதுறையில் தமிழ், வாழ்வியல் வழிபாட்டில் தமிழ், நீதித்துறையில் தமிழ் என்று பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்படுவதுடன், தமிழ்அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றுவது தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

‘தாய் மொழி அறிவை வளர்க்கும். நாட்டை வளப்படுத்தும்’ என்ற தலைப்பில் இங்கு நான் உரையாற்ற இருக்கிறேன். நான் எனது ஆரம்ப கல்வியை தாய் மொழியான தமிழ்மொழி மூலம்தான் கற்றேன்.

தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்மொழியில் படித்ததால் கணிதத்தில் சிறந்த மதிப்பெண் பெறவும், அறிவியலில் ஆழ்ந்து விளங்கி படிக்கவும் உதவியாக இருந்தது. மேல்கல்வியை இணைப்பு மொழியான ஆங்கிலம் மூலம் கற்றாலும், பிற்காலத்தில் ஆராய்ச்சி திறனை அதிகரிக்க எனது ஆரம்ப கல்விதான் உதவியது. என் தாய் மொழி தமிழ் உலக பொதுமறையை உலகிற்கு தந்தது. ஆட்சிக்கும் நீதிக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் வழி சொன்னது. தாய் மொழி தமிழ் ஆழ்ந்த கல்விக்கு அடித்தளமிட்டது. ஊடக தமிழ் அறிவை விரிவடையச்செய்தது.

ஆட்சியில் தமிழ் மொழி அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக அமைந்தது. தாய் மொழி தரமான வளர்ச்சி பாதையில் தொழில் வளர உதவும். தாய் மொழி நீதி நிர்வாகம் சீர்பெற்று விரைவான நீதிக்கு வழிவகுக்கும். வழிபாட்டு தலத்தில் தாய் மொழி மக்களுக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து மனதில் அமைதி பிறக்க வைக்கும். எனவே தாய்மொழி அறிவு மக்களுக்கும், பள்ளிகளுக்கும் அரசிற்கும், நீதி நிர்வாகத்திற்கும் ஒரு அடிப்படையாகும்.

ஆரம்ப கல்வி
தரமான கல்வியும், கல்விப்பணியை அறப்பணியாக செய்யும் ஆசிரியர்களும் கல்வியை சிறக்க வைப்பதற்கு அடிப்படையாகும். கல்வி வியாபார பொருள் அல்ல. ஆரம்ப பள்ளி கல்வி, நல்லாசிரியர்களால், நல்ல பாடத்திட்டத்தின்படி மனதில் தங்கும்படி மாறிவிடும். அப்படிப்பட்ட கல்வி சிறப்பானதாக அமையும்.

நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளை கடைபிடித்து அன்பு, அறிவு, விவேகம், வந்தாரை வாழவைக்கும் தமிழ் கலாசாரம், அயலாரை போற்றும் பண்பு ஆகியவற்றை நாம் தொடர்ந்து பேணி பாதுகாக்க வேண்டும். போரில்லா உலகத்தை படைக்க உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

இனத்தின் அடையாளம்
அறிவு என்பது அழிவு ஏற்படாத கருவியாகும். சமுதாய சக்கரத்தின் அச்சு மொழியாகும். இதுஒரு தகவல் சுரங்கம். ஒரு இனத்தை அடையாளம் காட்டுவது மொழிதான். ஒரு இனம் தனது மொழியை இழந்தால் அடையாளத்தை இழந்துவிடும். நமது எண்ணம் அனைத்தும், தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அமைய வேண்டும்.
 

தமிழ்வழிக்கல்வி வாழ்க்கைக்கான கல்வியாக மட்டும் அல்லாமல், வேலைவாய்ப்புக்கான கல்வியாக மாற்றப்பட வேண்டும். அறிவியலில், கணிதத்தில், வேலை வாய்ப்பில், ஆட்சி மொழியில், நீதி நிர்வாகத்தில், மேலாண்மையில், வழிபாட்டில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், மற்ற மொழிகள் அந்த கலாசாரத்தை பற்றி அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், வேலை வாய்ப்பிற்கும், அமைதிக்கும், புரிந்துணர்வுக்கும் வழி வகுக்கும். எனவே மொழி மக்களை அறிவார்ந்த சமுதாயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

நேர்மையான அரசியல்
நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், வித்திடும் வகையில் அமைந்திருக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும்வகையில் அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020–க்குள் வளர்ந்த நாடாக மாறும். ஒரு நேர்மையான அரசியல் அனைத்து மக்களையும், அவர்தம் கலாசாரத்தையும் போற்றும் வகையில் அமையும். நேர்மையான, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றும் ஓர் அரசியல் தலைமை இளைஞர் மத்தியில் உருவாகும். அதற்கு தமிழ் சமுதாயம் உறுதுணையாக இருக்கும். அதற்கு இந்த மாநாடு உதவும்.

இவ்வாறு அப்துல்கலாம் கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கோரிக்கை

மயிலாடுதுறை நீடூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன், M.அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் பேசினர். மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜகான், நிஜாமுதீன், மாவட்ட செயலாளர் அமீர்நூருல்லாஹ், உள்பட பலர் பேசினர். இதை தொடர்ந்து மாநிலத் தலைவர் கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

பொதுக்குழு கூட்டம்
வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அன்று மாலையில் அமைப்பின் மாணவர் அணி மாநில மாநாடு நடக்கிறது. இதில் தேசிய நிர்வாகிகள், கேரள அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வியாளர்கள் கலந்துக் கொள்கின்றனர். முன்னாள் வக்பு வாரியத் தலைவரும், மைனாரிட்டி கமிஷன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதூர்சையது முஸ்லிம்களுக்கும், எல்லோருக்கும் சேர்ந்து ஒரே விதமான சிவில் சட்டம் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். அனைவருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் வேண்டும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும்
சென்னை ஐகோர்ட்டில் 47 நீதிபதிகள் இருந்தபோது முஸ்லிம் சமுதாய நீதிபதிகள் 4 பேர் இருந்தனர். தற்போது நீதிபதிகள் பணியிடங்கள் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மட்டும் தான் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நீதிபதியாக உள்ளார். இவரும் வருகிற நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். புதிய நீதிபதிகள் 18 பேர் நியமனம் செய்யும்போது சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடி 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் 5½ கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 55 லட்சம் பேர் முஸ்லிம் வாக்காளர்கள் விகிதாச்சாரப்படி சட்டமன்றத்தில் 25 உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் 2 உறுப்பினர்கள் முஸ்லிம்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து உள்ளோம். ஜனநாயக, சமயசார்பற்ற, சமூக நீதியை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திகள் வருகிற தேர்தலில் ஒரு அணியில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.