Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும் : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கோரிக்கை

மயிலாடுதுறை நீடூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன், M.அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் பேசினர். மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஷாஜகான், நிஜாமுதீன், மாவட்ட செயலாளர் அமீர்நூருல்லாஹ், உள்பட பலர் பேசினர். இதை தொடர்ந்து மாநிலத் தலைவர் கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

பொதுக்குழு கூட்டம்
வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அன்று மாலையில் அமைப்பின் மாணவர் அணி மாநில மாநாடு நடக்கிறது. இதில் தேசிய நிர்வாகிகள், கேரள அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வியாளர்கள் கலந்துக் கொள்கின்றனர். முன்னாள் வக்பு வாரியத் தலைவரும், மைனாரிட்டி கமிஷன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதூர்சையது முஸ்லிம்களுக்கும், எல்லோருக்கும் சேர்ந்து ஒரே விதமான சிவில் சட்டம் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். அனைவருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் வேண்டும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

4 முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்க வேண்டும்
சென்னை ஐகோர்ட்டில் 47 நீதிபதிகள் இருந்தபோது முஸ்லிம் சமுதாய நீதிபதிகள் 4 பேர் இருந்தனர். தற்போது நீதிபதிகள் பணியிடங்கள் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மட்டும் தான் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நீதிபதியாக உள்ளார். இவரும் வருகிற நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். புதிய நீதிபதிகள் 18 பேர் நியமனம் செய்யும்போது சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடி 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் 5½ கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 55 லட்சம் பேர் முஸ்லிம் வாக்காளர்கள் விகிதாச்சாரப்படி சட்டமன்றத்தில் 25 உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் 2 உறுப்பினர்கள் முஸ்லிம்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து உள்ளோம். ஜனநாயக, சமயசார்பற்ற, சமூக நீதியை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திகள் வருகிற தேர்தலில் ஒரு அணியில் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக