Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

அத்வானி தமிழகம் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் வீடுகளில் சோதனை: காயல்பட்டினம் பற்றி இராம.கோபாலன் அவதூறு , பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் கடும் கண்டனம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது- `சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ என் றொரு பழமொழி தமிழகத்தில் நீண்ட காலம் காலமாகத் தவழ்ந்து வருகிறது. இந்தப் பழைய மொழிக்கு உண்மையான அருத்தம் என்ன வாக இருக்கும் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்து முன்னணி தலைவர் பெரியவர் இராமகோபாலன் அவர்கள் `அந்த ஆண்டி நான்தான்’ என்று அம்பலப் படுத்தியிருக்கிறார்.

தினமலர் திருநெல்வேலி ஜூலை - 30 இதழில் ``மேலப் பாளையத்தில் கைது செய்யப் பட்டவர்களின் பின்னணி விவரங்களை விசாரிக்க வேண்டும் - இந்து முன்னணி இராம கோபாலன் வலியுறுத் தல்’’ என்னும் தலைப்பில் செய்திப் பிரசுரமாகி யிருக்கிறது.

பாரதீய ஜனதா கட்சியின் ர(த்)தம் யாத்திரை புகழ் திரு. லால்கிருஷ்ண அத்வானி அவர்கள் தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் 3 ஆயிரத் திற்கும் குறையாமல் காவல் துறையினர் பாதுகாப்பு கொடுப்பதும், கோவை, மேலப்பாளையம் போன்ற ஊர்களில் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் வீடுகளில் - கடைகளில் சோதனை என்னும் நாடகத்தை நடத்துவதும், அங்குள்ள பட்டாசு மற்றும் மத்தாப்பு குச்சிகளை யெல்லாம் ஜெலட்டின் குச்சிகள் என்றும் கூறி அறிவிப்பு செய்வதும், அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை அச் சுறுத்தலாம் என்னும் நப்பாசை யால் இந்த தொடர் நாடகங் களை தொடர்வதும் வாடிக்கை யானது; நாட்டில் நடக்கும் வேடிக்கையானது என்று எல்லோரும் தெரிந்திருக்கிறார்கள்.

தினந்தோறும் கொலையும், கொள்ளையும், திருட்டும், பறிப்பும், கன்னக்கோல் வேலை யும் தொடர்ந்து நடந்து கொண்டி ருக்கின்றன. ஒரு வார ஏடு கூறியிருப்பதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இத்தகைய சம்பவங்கள் நடந்தி ருக்கின்றன. இவற்றைப் பற்றி பெரியவர் இராமகோபாலன் அவர்கள் வாய் திறப்பதில்லை.

ஆனால், முஸ்லிம்கள் என்றால் அவருக்கு வெறும் வாயில் அவல் கிடைத்தது மாதிரி என்றும் மெல்லுவார் - ஏட்டிக்கு போட்டியாக எதை யாவது சொல்லுவார். ஐயா அவர்களின் இத்தகைய பிதற் றல்களுக்கு இப்போதெல்லாம் பத்திரிகைகளும், ஊடகங்க ளும் முக்கியத்துவம் தருவ தில்லை. ஆனால், தினமலர், அவர் இனப் பத்திரிகை என்ப தால் தனது இனத்தின் பெரு மையை இப்படிப்பட்ட ஏடா கூடங்களான செய்திகளை தருவதன் மூலம் நம்புகிறது போலும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கீழக்கரை பற்றி என்னவெல் லாம் அவதூறு சொல்ல முடி யுமோ அதையெல்லாம் சொல்லி கொச் சைப் படுத்தியவர் பெரியவர் இராம. கோபாலன் தான் அவர் கள்தான். அவர் தான் இப்போது காயல்பட்டினம் பற்றிய காழ்ப் புணர்ச்சியை கக்கியிருக்கிறார். காயல்பட்டினவாசிகள் உலகம் முழுவதிலுமுள்ள பெரு நகரங்களில் வாணிபத்தில் ஈடுபட்டு இந்தியாவின் அந்நிய செலவாணியை ஈட்டித்தந்து தாயகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்து வருகிறார்கள்.

உலகம் முழுவதிலும் சுற்றினாலும் அந்த ஊர்வாசி களுக்கு தங்கள் ஊர் காற்றில் கொஞ்ச நாள் உலா வந்தால் தான் உடலும், உள்ளமும் குளிர்ச்சி பெறும் என்று நம்பக் கூடியவர்கள். ஆண்டில் ஓரிரு முறையாவது ஊருக்கு வந்து போகாவிட்டால் அவர்களுக்கு இருப்புக் கொள்ளாது. அது அந்த ஊருக்கே உரிய தனிக் கலாச்சாரமாகும்.

காயலம்பதியினர் தங்கள் ஊரில் நடக்கும் ஒவ்வொரு நல்லதும், கெட்டதும் அவர் களுக்கு அன்றே தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். இதனால் உலகத்தின் எப்பகுதியில் இருந் தாலும் தங்கள் ஊர்ச்செய்தி களை அன்றாடம் பெறாமல் தூங்க மாட்டார்கள் என்பது உலகுக்கே தெரியும். இதனால், காயல்பட்டினத்தில் பிரௌசிங் சென்டர்கள் பல இருப்பதை பார்க்கலாம். உலகின் பல்வேறு ஊர்களில் உறைந்து வாழும் ஊர்க்காரர்களுக்கு சுடச்சுட செய்திகளை அனுப்புவதற்கு இந்த பிரௌசிங் சென்டர்கள் இரவு நேரங்களில் மிக சுறுசுறுப்போடு காணப்படும். இத்தகைய சுறுசுறுப்பையும், வேலையில் மூழ்கியிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும் இந்து முன்னணியினருக்கு பயங்கரவாதிகளும், தீவிரவாதி களும் நினைவுக்கு வருகிறார் கள். விளைவு பெரியவர் இராம. கோபாலன் அறிக்கை:

``தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு பிரௌசிங் சென்டரில் இரவு 10 மணிக்கு மேல் தீவிரவாதம் எண்ணம் கொண்ட முஸ்லிம்கள் சிலர் சந்தித்து பேசுகிறார்கள். அவர்கள் இணைய தளம் மூலம் செய்திகளை அனுப்ப வும், சேகரிக்கவும் செய்கி றார்கள். அவர்கள் ஏதாவது சதிச்செயலில் ஈடுபடுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை யாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காயல்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இந்துக்களை முஸ்லிம்க ளாக மதம் மாற்றம் செய்கி றார்கள். மதம் மாறும் இந்துக்களுக்கு ஜமாஅத் மூலம் பண உதவியும் செய்கி றார்கள்.’’

காயல்பட்டினம் இஸ்லாமிய மார்க்கநெறியை உணர்ந்து அதன்படி முழுமையாக நடப்ப தற்கு எல்லா தரப்பினரும் முயலு கின்ற ஊர். அங்கே தீவிர வாதம், பயங்கரவாதம் என்று அவதூறு செய்வது பெரியவர் இராம. கோபாலன் அவர்களின் சிலை வணக்க கற்பனையே. அவதூறுகளின் அடிப்படை யில் தமிழக போலீசார் எதையும் செய்ய மாட்டார்கள் - செய்யக் கூடாது என்றும் சுட்டிக்காட்டு வோம். காயல்பட்டினம் சுற்றிலும் இந்து சகோதர, சகோதரிகள் முஸ்லிம்களாகி வருகிறார்கள் என்றதொரு நற்செய்தியையும் பெரியவர் இராம.கோபாலன் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவரது அவதூறு பரப்புரையை கடுமையாக கண்டிப்பது நமது கடமையாகும். நேற்றைக்கு நடிகர் நாகேஷ் அவர்களின் அன்புப் புதல்வர் முஸ்லிமாக மாறியிருப்பதை அவரே எங்களிடம் கூறி பெருமிதம் அடைந்தார். அவரைப் போலவே இஸ்லாத்தை ஏற்பவர் பெருமையாக முஸ்லிம் களிடம் வரும்போது அவர்களை எல்லோரும் வரவேற்க வேண் டும். இஸ்லாத்தை ஏற்றபிறகு உதவி கோரி முஸ்லிம்களி டத்தில் வரும்போது முஸ்லிம் களுக்கு முஸ்லிம்கள் செய்ய வேண்டிய உதவியை தவறாமல் செய்திட வேண்டும். ஊர் மஹல்லா ஜமாஅத்கள் இத்த கைய நற்காரியங்களை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கூறி வருகிறோம். அது இப்போது நடக்கிறது என்பதை பெரியவர் இராம. கோபாலன் அவர்கள் மூலம் அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல காரியங்களை நாள்தோறும் செய்யுங்கள் - அவதூறுகளை காற்றில் பறக்க விடுங்கள் - அல் லாஹ்வின் உதவியை எல் லோரும் பெற்று சிறக்க பாடு படுங்கள்.

-இவ்வாறு  பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் குறிப்பிட்டுள்ளார்.