Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 24 செப்டம்பர், 2012

சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடும் --RADIANT IAS ACADEMY


CkR I.H.Gv ALôPª ùTôÚ[ôRôWj§p ©uRe¡V UôQYoLs I.H.Gv úTôu\ EVo TR®LÞdÏ YWúYiÓm Gu\ úSôdLjúRôÓ ©uRe¡V UôYhPUô] ®Ýl×Wm UôYhPj§p, Ls[dϱf£«p ØRuØRXôL ùRôPeLlThPÕ.  CkR ALôPª ¡WNuh Lp® A\dLhPû[«u ¸r CVe¡ YÚ¡\Õ.  CkR ALôPª ©lWY¬-20, 2004p ùRôPeLlThPÕ.  CÕ ùRôPeLlThP Sô°­ÚkÕ Cuß YûW 100dÏm úUtThúPôûW AWÑ A§Lô¬L[ôL EÚYôd¡Ùs[Õ. CkR ALôPª«p T«t£ ùTt\YoLs TpúYß Õû\L°p EVo TR®L°p Es[]o. 
I.H.Gv Utßm CRW úTôh¥j úRoÜLÞdLôL ùT¬V SLWeLÞdÏ ùNuß UôQYoLs T¥dLúYiÓùUu\ ¨ûXûV Uôt±, Ls[dϱf£«úXúV SLWeLÞdÏ ¨LWô] T«t£ûV A°jÕ YÚ¡u\Õ.  CkR ALôPª I.H.Gv,   TNPSC Ïìl-I, II, IV, Ye¡j úRoÜLs, CW«púY úRoÜLs Utßm B£¬Vo úRoYôûQVj úRoÜLÞdÏ £\lTô] T«t£V°jÕ YÚ¡\Õ. 
CkR T«t£ ¨ßY]j§u ¨ßY]j RûXYÚm, CVdÏSÚUô] Bo.CWLUjÕpXô TpúYß LÚjRWeÏLû[ 100-dÏm úUtThP Lpí¬L°p CÕYûW SPj§Ùs[ôo. CYo _Uôp ØLmUÕ Lpí¬«u UôQYo. CYo RªrSôÓ Uô¨X UL°o BûQVj§u JÚe¡ûQlTô[WôLÜm,  RªrSôÓ Y@d× Yô¬Vj§u Lp®dÏÝ Eßl©]WôLÜm T¦Vôt±Ùs[ôo. 

TpúYß SLWeL°p I.H.Gv úTôu\ úTôh¥j úRoÜLs Tt±V ®¯l×QoÜ T«XWeLjûR SPj§Ùs[ôo.  úUÛm Lp®dLôL TpúYßl T¦Lû[ ùRôPokÕ  ùNnÕùLôiÓs[ôo. 
      CkR ALôPª«p £ßTôuûU NêLjûRf úNokRYoLÞdÏ CXYN T«t£Ùm A°dLlTÓ¡u\Õ.  ùTôÚ[ôRôWj§p ©uRe¡V UôQYoLÞdÏ T«t£d LhPQm Ïû\dLlTÓ¡u\Õ.  CkR T«t£ ûUVj§u RûXVôV úSôdLm úTôh¥j úRoÜLs Tt±V ®¯l×QoÜ HtTÓj§, UôQYoLû[ A§p TeùLÓjÕdùLôs[f ùNnÕ, ùYt±ùT\ ûYlTÕRôu. 
      CkR ALôPª«u CVdÏSo Bo. CWLUjÕpXô êuß Øû\ ùTô§ûL ùRôûXdLôh£«p úTôh¥j úRoÜLs Tt± ®[d¡Ùs[ôo.  úUÛm CYo úTôh¥j úRoÜLÞm ùYt±Ùm, Ck§V AW£VXûUl× A¥lTûP E¬ûULs B¡V èpLû[ GݧÙs[ôo.   I.H.Gv Es°hP úTôh¥j úRoÜLû[l Tt±V NkúRLeLÞdÏ GkúSWØm CVdÏSûW ùRôPo×ùLôs[Xôm.  úNûYûV CkR ¨ßY]j§u úSôdLUôL Es[Õ.
தொடர்புக்கு ,
AûXúT£ GiLs - 9842998892  - 9624309314

                                                  
        

அழிந்து வரும் மேற்கு தொடர்ச்சி மலை வனபகுதி


நெல்லை மாவட்டத்தின் வளம் மிக்க பகுதியும், கேரளா எல்லையுமான கடையநல்லூர், மேக்கரை, செங்கோட்டை, குற்றாலம், பழைய குற்றாலம், கடையம், மத்தளம் பறை பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஈத்தல் என்றழைக்கப்படும் மூங்கில் தொடர்ந்து வெட்டப்படுவதால் நீர்பிடிப்பு குறைவதுடன், யானைகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக-கேரள மாநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அரிய வகை மிருகஙகளையும், மரங்களையும், மூலிகைச் செடிகளையும் கொண்ட இயற்கை வளம் மிக்க பகுதியாகும். இங்கு யானை, சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி போன்ற மிருகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மேலும் பறக்கும் அணில் போன்ற அபூர்வ வகை அணில்களும், பலதரப்பட்ட பறவைகளும் உள்ளன. ஏராளமான அருவிகளும், நதிகளும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை நமக்கு தந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும். ஆனால் சமீபகாலமாக மேக்கரை, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இயற்கை வளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
அபூர்வ வகை மரம், மூலிகைச் செடிகள் தீ உள்ளிட்ட சக்தியாலும், சமூக விரோத கும்பல்களாலும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் யானை, மான், மிளா போன்ற உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. காடுகளை பாதுகாக்க வேண்டிய வனத்துறையினர் முழு ஈடுபாட்டோடு செயல்படாததாலும், பல நேரங்களில் காட்டை அழிப்பவர்களோடு கைகோர்த்து செயல்படுவதாலும் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு 33 சதவீதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு மளமளவென குறைந்து தற்போது 18 சதவீதமாக உள்ளதாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காடுகளை பாதுகாக்கவும், காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் ஜப்பான் நாட்டு நிதியுதவியோடு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த டிஏபி எனப்படும் காடுகள் பாதுகாப்பு திட்டமும் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் குறைந்து, மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலை உருவாகி வருகிறது. காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்விற்காகவும், வருமானத்திற்காகவும் காடுகளை நம்பி இருந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பிற்கு திட்டமிடப்பட்டது. அதாவது அவர்கள் காடுகளை நம்பி இல்லாமல் வேறு சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் இத்திட்டம் கடையநல்லூர், செங்கோ்ட்டை, தென்காசி பகுதியில் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் தொடர்ந்து அழிந்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, மேக்கரை, கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூங்கில் அதிகம் வளர்ந்துள்ளது. இந்த வகை மூங்கில் யானைகளுக்கு உணவாவதுடன் நீர்பிடிப்புக்கு அதிகம் துணை செய்கிறது. இதனால் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். இவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் உள்பட எந்த மிருகமும் ஊருக்குள் வராமல் இருந்தன. ஆனால் தற்போது இந்த வகை மூங்கில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களால் அதிக அளவு வெட்டப்பட்டு வருகிறது. அங்கு வளரும் மூங்கில்கள் ஜவுளிக் கடை பைகளுக்கு கைப்பிடியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக அங்குள்ள மூங்கில்களுக்கு சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியில் மூங்கில் அதிக அளவுக்கு வெட்டப்பட்டு செங்கோட்டை பகுதிகளிலேயே சைஸ் செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மூங்கில் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளோடு, வனத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் பல ஆண்டுகளாக இந்த தொழில் தொய்வில்லாமல் நடந்த வண்ணம் உள்ளது. வேலியே பயிரை மேய்வதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆண்டுதோறும் இப்பகுதியில் மழை அளவு குறைந்து வருவதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து தமிழக அரசுக்கு அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  ஜவுளிக் கடை பைகளுக்கு பயன்படும் இந்த மூங்கில்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காடுகளில் வளர்ந்துள்ள மூங்கில்கள் அதிக அளவில் வெட்டப்படுகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மலையடிவாரங்களில் உள்ள தென்னை, வாழை தோட்டங்களை அழித்து வருகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் விவசாய நிலங்களுக்குள் மிருகங்கள் புகாத வண்ணம் சுமார் ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியும் செயல் இழந்து விட்டதால் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கேரள வனத்துறையும், தமிழக வனத்துறையும் இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி அழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் வாழ்விடம் அழிக்கப்படுவதால் யானைகள் மனிதர்களின் வாழ்விடங்களை அழிக்கும் நிலை உருவாகி வருவதை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

"ஊரைக் காணோம்" ஆட்சித்தலைவரிடம் புகார்


நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள யாக்கோபுபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம்-யாக்கோபுபுரம் ஊராட்சி பகுதியில் யாக்கோபுபுரம் ஊர் பெயர் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள அரசு கட்டிடங்களில் யாக்கோபுபுரம் என்றே பெயர் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய பஞ்சாயத்து தலைவர் யாக்கோபுபுரம் என்ற பெயரை அழித்து சிதம்பராபுரம் என்று எழுதி வருகிறார். இதனால் யாக்கோபுபுரத்திற்கு வருபவர்கள் சிதம்பராபுரம் என்று எழுதியிருப்பதை கண்டு ஏமாற்றமடைகிறார்கள். எனவே பெயர் பலகைகளில் யாக்கோபுபுரம் என்ற பெயரை அழிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘மணிச்சுடர்’ வெள்ளிவிழாவை உலகம் வியக்க நடத்திக் காட்டுவோம்! - பேராசிரியர் கே.எம்.கே



`மணிச்சுடர்’ தமிழ்கூறும் நல்லுலக முஸ்லிம்களின் தனிச் சுடர்! தமிழ் மொழியில் இஸ்லாமிய சுடர் பரப்பும் சன்மார்க்கச் சுடர்! தமிழக முஸ்லிம்களின் இதயங்களில் ஏற்படும் ஒளியை - குரலைப் பிரதிபலிக்கும் சமுதாயச்சுடர்!

இந்த ஏடு, 1-6-1987-ல் ரமளான் திங்களில் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களும், அவர்களின் அருமைப்புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்களும் இணைந்து உருவாக்கிய மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் மூலம் துவக்கப்பட்டது.

``சென்னை பீட்டர்ஸ் சாலையில் அய்யம்பேட்டையைச் சேர்ந்த புரவலர் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களின் கட்டடமாம் தாருல் ஸமத் மாளிகையில் பிறப்பெடுத்த மணிச்சுடர், தமிழகமெங்கும் பரவி, தமிழ் பேசும் நாடுகளில் எல்லாம் விரவிச் சென்று தமிழக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி, சன்மார்க்க, அரசியல் நிலைமைகளை விளக்கும் நாளிதழாக வலம் வந்தது.

பின்னர், சென்னை நுங்கம்பாக்கம் வாலஸ் தோட்டம் `பொன் மனம்’ மாளிகை - சகோதரர் திருநாவுக்கரசர் எக்ஸ் எம்.பி. அவர்களின் கட்டடம், மணிச்சுடர் அலுவலகமாக மாறியது. இக் காலத்தில் சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளில் வாழும் தமிழக முஸ்லிம்களின் காலக் கண்ணாடியாக `மணிச்சுடர்’ திகழ்ந்தது.

அதன்பின்னர், இப்பொழுது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகம் காயிதெ மில்லத் மன்ஸில், மணிச்சுடர் அலுவலக மாக மாறியிருக்கிறது.

முஸ்லிம் லீகின் தலைமையகத்தில் இருந்து வெளிவரும் மணிச்சுடர், இன்றைக்கு இ.யூ. முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ ஏடாக பரிணமித்திருக்கிறது.

இதற்கு முன்பும், மணிச்சுடர்தான், முஸ்லிம் லீகின் பிரச்சார ஏடாக விளங்கி வந்தது.

இன்றைக்கு மணிச்சுடர் நாளிதழ் - இ-பேப்பர் ஆகியிருக்கிறது. சென்னையில் மணிச்சுடர் அச்சாகி நமது கரங்களுக்கு வருமுன்னரே, உலகின் எல்லாப் பாகங்களிலும் மணிச்சுடர் இ-பேப்பரை வாசித்து, அதன் செய்திகள் பற்றிய சாதக - பாதக விமர்சனங்களும் வந்து விடுகின்றன! என்னே காலத்தின் மாற்றம்!

ஆரம்பம் முதல் இன்றைக்கு வரைக்கும் இ.யூ. முஸ்லிம் லீகின் குரலாக - கொள்கை முரசாக - அதன் வரலாற்று விளக்காகத் திகிழும் மணிச்சுடர் இருபத்து ஐந்து ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்து இப்பொழுது 26-வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக் கிறது. கடந்து வந்த இருபத்தைந்து ஆண்டு காலத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் நடந்து வந்த பாதையை - அதன் பயணத்தில் நிகழ்ந்த பாடங்களை - காலச்சுவடுகளாகத் தொகுத்து மணிச்சுடர் வெள்ளிவிழா மலர் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சிறப்பு மலர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 4-ம் தேதி வியாழக்கிழமை 5 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறுகிறது.

மலரை வெளியிட்டு தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் நிறைவுரை நல்குகிறார்!

இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது, முந்நாள் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணியார், இந்திய தேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ்  மற்றும் இ.யூ. முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகி கள், மணிச்சுடர் நிர்வாகிகள், இயக்குநர்கள், முந்நாள் இந்நாள் ஆசிரியர் குழுவினர், இதழுக்கு ஆதரவளித்து வரும் புரவலர்கள், மணிச்சுடர் முகவர்கள், நிருபர்கள், அலுவலர்கள், சர்வதேச காயிதெ மில்லத் பேரவை நிர்வாகிகள், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிகள், அறங்காவலர்கள் மற்றும் வாசக நேசகர்கள் எல்லோரும் பங்கேற்கிறார்கள். இது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, என்றென்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகும்!

இந்த விழா, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் விழாவாகும்! இ.யூ. முஸ்லிம் லீகை வளர்த்து வரும் மணிச்சுடர், இ.யூ. முஸ்லிம் லீகினரால் வளர்ந்து வரும் ஏடாகும்!

இந்த விழாவில் பங்கேற்பது, இ.யூ. முஸ்லிம் லீகின் 25 ஆண்டு கால வரலாற்றை ஒரே இடத்தில் ஒரு சேரக் காண்பதற்கு ஒப்பாகும்! தமிழகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு முஸ்லிம் லீகரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டிய விழா என்பதை எல்லாரிடத்தி லும் எடுத்துச் சொல்லுங்கள்!

அக்டோபர் 4 - தலைவர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் - சமூக நல்லிணக்கம் பேணிய சந்தனத் தமிழ் மேதை - சன்மார்க்க அறிஞர் -சமுதாயப் போராளி - பிறந்த நாள் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்!

சிராஜுல் மில்லத் பிறந்த நாளில் மணிச்சுடருக்கு வெள்ளி விழாவை உலகம் வியக்க நடத்திக் காட்டி, அதன் பொன்விழாவை பூலோகமே அதிசயிக்கும் வகையில் நடத்துவோம் என்பதைச் சூளுரையாகக் கொள்ள வாருங்கள்!

சென்னையில் 4-10-2012 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குச் சேருவோம்! எல்லோரும் ஒரே குரலில் மணிச்சுடர் வாழ்க! மணிச்சுடர் வெல்க! முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்! என்று கூறுவோம்!