Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 22 மே, 2013

விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பு (VISUAL COMMUNICATION)


விசுவல் மீடியா எனப்படும் துறையானது பரந்து பட்டு எண்ணற்ற பிரிவுகளில் வேலை வாய்ப்புகளையும் உற்சாகம் தரும் படிப்பையும் உறுதி செய்வதாக கடந்த சில ஆண்டுகளாக திகழ்கிறது. விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பதாகத் தான் நமது திரைப்பட ஹீரோக்கள் காட்டப்படுகிறார்கள். விஸ்காம் என்று பெருமையாக அழைக்கப்படும் படிப்பைப் படிப்பவர்களை கவனியுங்கள். அபரிமிதமான உற்சாகத்தையும் பொங்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துபவராக அவர்கள் இருப்பதைக் காணலாம்.

இத் துறையில் என்ன தான் இருக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன் ரேடியோ, திரைப்படம், டிவி பத்திரிகை என பல்வேறு வடிவங்களில் செயல்பட்டு வந்த பணிகளில் சிலவற்றை ஒன்று சேர்த்து இன்று இத் துறை படிப்பானது உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூட கூறலாம். செயற்கைக் கோள் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த பின் இன்று செயற்கைக் கோள் திரைப்பட ஒளிபரப்பு வரை பார்க்கிறோம். இது போல அசுர வேகத்தில் வளரும் இந்த மீடியாவில் சிறப்புத் திறன் பெற்றவர்களை உருவாக்கவே இப் படிப்பு வடிவமைக்கப்பட்டது.

பிரிவுகள்
விசுவல் கம்யூனிகேஷன்ஸ் என்பது பன்முகத் தன்மை கொண்ட மீடியா படிப்பாகும். இது
* கிராபிக் டிசைன்
* இல்லஸ்டிரேஷன்
* நுண் கலை
* மல்டி மீடியா
* போட்டோகிராபி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. தொழில்முறையில் இவற்றில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கும் சமாளிப்பதற்கும் இப் படிப்பு மிகவும் உதவியாக விளங்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று விசுவல் கம்யூனிகேசன்ஸ் துறையின் பயன்பாடானது பல இடங்களில் உணரப்படுகிறது. உதாரணமாக விளம்பரம் என்பது முழுக்க முழுக்க இமேஜ்களையும் ஒரு சில வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருப்பதை காண்கிறோம். இது போலவே இன்டீரியர் டிசைன், இன்டஸ்ட்ரியல் டிசைன், பப்ளிகேஷன்ஸ் டிசைன் ஆகிய துறைகளும் விசுவல் அடிப்படைகளை நம்பியிருக்கின்றன.இது போலவே புத்தகங்களுக்கான அல்லது பத்திரிகைகளுக்கான விசுவல் கம்யூனிகேஷன்ஸ் என்பது அதிகரிக்கும் முக்கியத்துவத்தைப் பெற்று வருவதை காண்கிறோம்.

பயன்படுவது யாருக்கு?
விளம்பர அதிகாரி, அனிமேட்டர், ஆர்ட் டீலர், ஆர்டிஸ்ட், டிஜிடல் ஆர்டிஸ்ட், கிராபிக் டிசைனர், இன்டீரியர் டிசைனர், வெப் ஆர்ட் டிசைனர், வெப்சைட் டிசைனர், ஆகியோர் தெரிந்தோ தெரியாமலோ விசுவல் கம்யூனிகேஷன்ஸ் அடிப்படை நுணுக்கங்களை நம்பியே இருக்கின்றனர்.

பாடத் திட்டம்
பொதுவாக இப் படிப்புக்கான பாடதிட்டத்தில் பின்வரும் அம்சங்கள் இருக்கின்றன. போட்டோகிராபிக்ஸ், பேசிக் டைப்போகிராபி, மல்டிமீடியா ஆதரிங், டெக்னிகல் டிராயிங், அட்வர்டைசிங் டிசைன், டெஸ்க்டாப் பப்ளிசிங், கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சோஷியல் பிஹேவியர் இன்டஸ்ட்ரியல் டிசைன் டைப்போ கிராபி, கிராபிக்ஸ் சிஸ்டம் மேனேஜ்மெண்ட், 3டி அனிமேஷன், ஆடியோ மற்றும் வீடியோ எடிட்டிங், இந்த படிப்பை எங்கு படிக்கலாம் என்பது ஒரு கேள்வி.

இன்று தமிழ்நாட்டில் சென்னை தவிர பிற நகரங்களிலும் இந்த படிப்பானது அதிகக் கல்லூரி களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனினும் சென்னை கல்லூரிகளே இதில் கோலோச்சுகின்றன. பிராக்டிகல் பயிற்சியை எந்த கல்லூரி தருகிறதோ அதுவே எதிர்கால வாய்ப்புகளை சிறப்பாக உருவாக்கித்தர முடியும்.

தமிழ்நாட்டு விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் அச்சு இதழியல், ஒலிபரப்பு தகவல் சாதனம் ,காட்சித் தகவல் சாதனம், இன்டர்நெட் இதழ்கள்
ஆகிய பிரிவுகள் உள்ளன. இவற்றில் ஒன்றை சிறப்புப் படிப்பாகப் படித்து திறன் பெறுவது முக்கியம். பிற பிரிவுகளையும் அடிப்படையில் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் டிசைனிங் என்பது இன்று எந்தத் துறைக்குமான அடிப்படை என்பதால் போட்டோசாப், இல்லஸ்டிரேட்டர், 3டி ஸ்டுடியோ, பிரீமியர், கேரக்டர் ஸ்டுடியோ, கோரல்டிரா, மார்பிங், சவுண்ட் போர்ஜ், மேக்ரோ மீடியா பிளாஸ், டைரக்டர் ஆகிய சாப்ட்வேர்களை அறிந்து கொண்டு சிறப்புத்திறன் பெற வேண்டியதும் அவசியம்.

அடிப்படையில் கலை ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் பெற்றிருப்போருக்கு இத்துறை சிறப்பான படிப்பானதாக மாறி சிறந்த வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது உண்மை தான். எனினும் பொதுவாக இப்படிப்புக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவே அறியப்படுகிறது. சுய நிதிப் படிப்பாகவே இது பொதுவாக தரப்படுகிறது. நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது.

கீழ்காணும் கல்வி நிலையங்கள் உளிட்ட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது .

Asan Memorial College of Arts & Science                               Gowrivakkam
NungambakkamLoyola College
TiruverkaduSindhi College
RoyapettahThe New College

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் மாணவர் கூட்டம்


கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில், பி.காம்., படிப்பையடுத்து, பி.எஸ்சி., கணினி பொறியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட படிப்புகளிலும், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளிலும் சேர, மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பர்.

பி.காம்., படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகள், பி.காம்., படிப்பை, பல புதிய பெயர்களில் உருவாக்கி, சுயநிதி பாடப்பிரிவுகளாக வழங்குகின்றன.

உதாரணமாக, முன்பு, பி.காம்., (ஜெனரல்) படிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது, பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன், ஹானர்ஸ் என, பல பெயரில் சுயநிதி பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இதனால், பி.காம்., படிப்பிற்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பாரதியார் பல்கலையில் மட்டும், 13 வகையான பி.காம்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளங்கலை அறிவியல் பாடப்பிரிவிலும், உயர் இயற்பியல், உயிர் வேதியியல், பகுப்பாய்வு வேதியியல், மருத்துவ உயிர் வேதியியல், கரிம வேதியியல், கொள்கை இயற்பியல் துறை என, அடிப்படை அறிவியல் படிப்புகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

வேலைவாய்ப்பை வழங்கும் படிப்புகள் எனக்கூறி, பல சுயநிதி பாடப்பிரிவுகளையும், புதிதாக பல கல்லூரிகள் துவங்குகின்றன. இதனால், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, மாநில கல்லூரியில், 7,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், அனைத்து விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன.

புது கல்லூரியில், 3,000 விண்ணப்பங்களில், 2,000 விண்ணப்பங்களும், வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரியில், 5,000 விண்ணப்பங்களில், 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன.

இதுகுறித்து மாநில கல்லூரி முதல்வர் சபாநாயகம் கூறுகையில், "மொத்தம், 7,000 விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், 1,500 விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை அனைத்து கல்லூரிகளிலும் நடந்து வருகிறது.

இதனால், மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் வெளியிடும் போது, எந்த துறைக்கு, மாணவர்கள் எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது தெரிய வரும்" என்றார்.

தமிழகத்தில் காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம்


காகித ஆலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது மொண்டிப்பட்டி ஊராட்சி. இது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊராட்சியில் ரூ.1,200 கோடி செலவில் 989 ஏக்கர் பரப்பளவில் அரசு காகித ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. முதற்கட்டமாக நில ஆர்ஜித பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகள் கையகப்படுத்தி வருவது விளை நிலங்கள் என்றும் இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறி விவசாய நிலப்பகுதியை தவிர்த்து வேறு இடத்தில் காகித ஆலையை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆனால் அரசு உத்தரவிற்கு இணங்க நில ஆர்ஜி தம் நடப்பதாக கூறி விவ சாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடர்ந்தனர். இதனால் விவசாயி கள் விவசாய நில ஆர்ஜிதம் கண்டித்து போராட்டம் நடத்த விவசாய நில மீட்புக்குழுவை ஏற்படுத்தி போரா ட்டத்துக்கு தயாராகினர்.

முதற்கட்டமாக சென்னையில் முதல்வரின் தனிப்பிரிவு உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நில ஆர்ஜிதத் தை கைவிடக்கோரி நேரில் மனு அளித்தனர். பின்னர் தங் கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மணப்பாறை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். போராட்டத்தை கைவிடக்கோரி ஆர்டிஓ பஷீர், காகித ஆலை ஆணைய அதிகாரி சீனிவாசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு உள்ளிட்ட பயிர்களை ஏந்தியபடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் குருசாமி, ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராணி, முன்னாள் ஊராட்சித்தலைவர் பாப்பாத்தி, காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு மாவட்ட தலைவர் முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டப்படி தாலுகா அலுவலகத்தில் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்குழு பிரதிநிதிகள் சிலர் மட்டும் அலுவலகத்துக்குள் சென்று தாசில்தார் குளத்தூர் பாண்டியனிடம் மனு அளித்தனர்.

இன்று சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்


பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம்.

பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

"பல்லுயிர் மற்றும் தண்ணீர்" என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. மனிதன், பல்லுயிர் மற்றும் இயற்கை என அனைத்துக்கும் தண்ணீர் அவசியம். பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழும் எண்ணற்ற உயிரின வகைகளின் (பறவை, விலங்குகள், மரங்கள், தாவரங்கள்) தொகுப்பு, "பல்லுயிர் பரவல்" எனப்படுகிறது.

17ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பிறகு, பூமி பெரிய அழிவுகளை சந்தித்து வருகிறது. பல லட்சம் எக்டேர் பரப்பளவில் காடுகளும், நுண்ணியிரிகள் முதல் பெரிய உயிரினங்கள் வரையிலான வாழ்விட சூழல்களும் அழிக்கப்படுகின்றன. பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்றவற்றால் இயற்கை பாதிப்பிற்குள்ளாகிறது. இதன் காரணமாக, பல்லுயிரிகள் பாதிப்புக்குள்ளாகின்றன.


இந்தியாவில் இமயமலை, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றில் பலவகையான மருத்துவ குணமிக்க தாவரங்கள், மரங்கள், உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்தியா நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இதில் ஏரளாமான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

நாட்டில் பல வகையான காடுகளும் உள்ளன. இவற்றில் வாழும் பலவகையான உயிரினங்கள் அழிந்து வருகின்றன. எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்தால் தான், எதிர்கால உலகம் வாழத் தகுதியாக இருக்கும்.