Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 25 மே, 2013

ஆயுர்வேத மருத்துவ படிப்பு (BAMS)

தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவமும், எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கு நிகரானதாகவேக் கருதப்படுகிறது. மேலும், நமது பாரம்பரிய மருத்துவ முறை என்பதாலும், பல தீராக வியாதிகளுக்கும் ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது என்பதாலும் தற்போது ஏராளமானோர் ஆயுர்வேத மருத்துவர்களை நாடுகின்றனர்.

தமிழகத்தில் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை வழங்கும் 8 கல்லூரிகள் உள்ளன. அதில் 1 அரசுக் கல்லூரியும், 7 சுயநிதிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

இவை அனைத்துமே தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன்தான் செயல்படுகின்றன.

பி.ஏ.எம்.எஸ்.(BAMS)

பேச்சுலர் ஆப் ஆயுர்வேதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி என்ற ஆயுர்வேத மருத்துவ படிப்பு நான்கரை ஆண்டு கால படிப்பும், ஓராண்டு கால கட்டாய பயிற்சியும் சேர்ந்ததாகும். இப்படிப்பில் சேர பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுதியுடையவர்களாவர். வகுப்பறை பாடமாகவும், ஆய்வக பயிற்சியாகவும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் தனியார் ஆயுர்வேத மருத்துவமனைகளில் பணி வாய்ப்பு பெறலாம். ஆயுர்தேவ மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபடலாம். மேற்கொண்டு முதுநிலை பட்டப்படிப்பும் படிக்கலாம்.

எம்.டி.(MD) 

இது ஆயுர்வேத முதுகலைப் படிப்பாகும். இரண்டு ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பில் சேர இளநிலை ஆயுர்வேதப் படிப்பான பி.ஏ.எம்.எஸ். தேர்ச்சி பெற்று ஓராண்டு காலம் பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும்.

1. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

தமிழக அரசால் நடத்தப்படும் ஒரே ஆயுர்வேதக் கல்லூரி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். எம்.டி. எனப்படும் முதுகலைப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவ சேர்க்கை நடத்தப்படுகிறது.
முகவரி : கோட்டாறு, நாகர்கோயில்

2. ஆயுர்வேதக் கல்லூரி, சூலூர், கோவை

1978ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு பிஏஎம்எஸ் மருத்துவப் படிப்பும். எம்.டி. எனப்படும் முதுநிலைப் படிப்பும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : 242பி, திருச்சி சாலை
சூலூர், கோவை - 641108

3. வெங்கடரமணா ஆயுர்வேதக் கல்லூரி, சென்னை

1979ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி சென்னையை அடுத்த பெரியார்நகரில் உள்ளது. இந்த ஆயுர்வேதக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ். படிப்பில் ஆண்டு தோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் வளாகத் தேர்வு நடத்தப்பட்டு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : 596, ஏ1, ஏ2, 31வது சாலை, டிஎன்எச்பி காலனி,
பெரியார்நகர், கொரட்டூர்,
சென்னை - 600 080.

4. தர்ம ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரியான இதில் இருபாலரும் பயிலும் வசதி உள்ளது.  பி.ஏ.எம்.எஸ். படிப்பு மட்டும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 20 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : 17, கிராண்ட் வெஸ்ட் டிரங்க் சாலை,
ஸ்ரீபெரும்புதூர் - 602 105

5. ஸ்ரீசாய் ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

2001ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேதப் படிப்பான பி.ஏ.எம்.எஸ். என்ற நான்கரை ஆண்டு கால படிப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : சாய் லியோ நகர், பூந்தண்டலம்,
மேற்கு தாம்பரம், சென்னை - 600 044

6. ஸ்ரீ சங்கரா ஆயுர்வேதக் கல்லூரி, திருச்சி

2001ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி இருபாலரும் பயிலும் சுயநிதி மருத்துவக் கல்லூரியாகும். இளநிலைப் படிப்பான பிஏஎம்எஸ் படிப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : சன்னசிப்பட்டி, திருச்சி - 620 006.

7. ஸ்ரீ ஜெயேந்திரர் சரஸ்வதி ஆயுர்தேவ கல்லூரி, நசரத்பேட்டை

1995ம் ஆண்டு வதுங்கப்பட்ட இந்த கல்லூரியில் இளநிலை ஆயுர்வேத மருத்துவப் படிப்பு வழங்கப்படுகிறது. இது சுயநிதி மருத்துவக் கல்லூரியாகும்.  ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : நசரேத்பேட்டை,
திருவள்ளூர் - 602 103

திருநெல்வேலி மாவட்டத்தில் தலை விரித்தாடும் வறட்சி 1.37 லட்சம் எக்டேரில் சாகுபடி பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் அணைக்கட்டுகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 765 மி.க.அடியாகும். இதில் தற்போது 3,139 மி.க.அடி கொள்ளளவு மட்டுமே உள்ளது. தற்போது அணைகளில் 23 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,449 குளங்களில் 2,427 குளங்கள் முற்றிலும் வறண்டுள்ளது. 16 குளங்களில் ஒரு மாதத்திற்கு மட்டும் தண்ணீர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்டத்தில் கடந்த ஆண்டு 754 மி.மீ அளவுகளில் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 228.23 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் இயல்பான மழை அளவை விட 7 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் 2013-13ம் ஆண்டில் 1.41 லட்சம் எக்டேர் பரப்பில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை 4,621 எக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் 5,736 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மாவட்டத்தில் உரங்களை பதுக்குதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், கண்காணிக்கவும் வட்டார அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார அளவிலான சிறப்பு குழுவின் உர ஆய்வாளர்/வேளாண்மை அலுவலர் மற்றும்வேளாண்மை உதவி இயக்குனர் இடம் பெற்றுள்ளனர்.

பல்வேறு கல்லூரிகளில் இடங்கள் பூர்த்தியாகாத நிலையில் தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ.அனுமதி


இந்திய தொழிற்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியன இணைந்து, "தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான செயல்பாடுகள்" என்ற தலைப்பில், மண்டல அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கை, சென்னை, சி.எல்.ஆர்.ஐ., நிறுவனத்தில், நேற்று துவக்கின.

கருத்தரங்கை துவக்கி வைத்து, மான்தா பேசியதாவது: தொழிற்துறையும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால், தொழில்நுட்பக் கல்வியின் தரம் மேம்படுவதுடன், மாணவர்கள், படிப்பை முடித்ததும், உடனுக்குடன், வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழலும் உருவாகும்.

ஆனால், இரு துறைகளுக்கும் இடையே, பெரும் இடைவெளி இருக்கிறது. இதை, சரி செய்ய வேண்டும்.பொது துறை நிறுவனங்கள் பயிற்சிமேலும், பொதுத் துறை நிறுவனங்கள் சார்பில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் துவக்கி உள்ளோம்.

முதற்கட்டமாக, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்துடன், சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 43 பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள், அனைத்து நவீன வசதிகளைக் கொண்டவை.தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த மாணவர்களுக்கு, இந்த மையங்களில் பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். 400 மணி நேரம், இந்த பயிற்சி அளிக்கப்படும்.

இதற்காக, மாணவர்கள், கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏ.ஐ.சி.டி.இ., சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு, நிதியை வழங்கும். அந்நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு வழங்கும். இவ்வாறு மான்தா பேசினார்.

பின், நிருபர்களிடம், மான்தா கூறியதாவது: தமிழகத்தில், 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எட்டு பொறியியல் கல்லூரிகள், தாமாகவே முன்வந்து, மூடி விடுவதாக தெரிவித்துள்ளன.

தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த, என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என, அனைத்து மாநிலங்களுக்கும், கடிதம் எழுதினோம். மகாராஷ்டிரா மட்டும், பதில் அளித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட, வேறு எந்த மாநிலங்களும், உயர்கல்வியின் தர மேம்பாடு குறித்து, பதில் அளிக்கவில்லை. இவ்வாறு மான்தா கூறினார்.

தமிழகத்தில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில், 1.30 லட்சம் இடங்களே, ஆண்டுதோறும் சராசரியாக நிரம்புகின்றன. மீதம் உள்ளவற்றில், மாணவர்கள் சேர்வதில்லை.

இந்நிலையில், 17 பொறியியல் கல்லூரிகளை, புதிதாகத் துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப, இடங்கள் நிரம்பும் என்ற நிலையில், கல்லூரி ஒன்றுக்கு, தற்போதைய நிலவரப்படி, மூன்றில் ஒரு பங்கு இடங்கள், காலியாகவே இருக்கின்றன.

புதிதாகத் துவக்கப்படும் கல்லூரிகளிலும், இதே நிலை காணப்படும்.இந்த நிலையைத் தவிர்த்து, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில், இடங்களை நிரப்ப, மாநில அரசு ஆவன செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.