Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 20 ஜூன், 2012

பிள்ளையையும் கிள்ளிவிட்டுவிட்டு,தொட்டிலையும் ஆட்டும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ

                                                                       

மதுரையிலிருந்து தேனி சென்ற அரசு பஸ்சில் பயணித்த பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லாசர் உட்காருவதற்கு சீட் கொடுக்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திராவிடக் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள்தான் சொகுசாக பறக்கும் கார்கள், மிதக்கும் வாகனங்களில் பயணிப்பார்கள். ஏன், நேற்று பிறந்த தேமுதிகவைச் சேர்ந்த சாதாரண வார்டு பிரதிநிதி கூட ஸ்கார்பியோவில்தான் ஒய்யாரமாக ஊர்வலம் வருகிறார். ஆனால் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களே, ரொம்ப வித்தியாசமானவர்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாதாரணமாக அரசு பஸ்களில்தான் போவார்கள், வருவார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பெரியகுளம் எம்.எல்.ஏ லாசர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மதுரைக்குப் போயிருந்த லாசர், தேனி செல்வதற்காக பஸ் ஏற வந்தார். மதுரை அரசரடி காளவாசல் பஸ் ஸ்டாப்பில் மக்களோடு மக்களாக காத்திருந்தார். அப்போது பஸ் வந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகளோடு நெருக்கியடித்தபடி நின்றபடி பயணித்தார் லாசர்.
கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டபோது, தான் ஒரு எம்.எல்.ஏ என்றும், எம்.எல்.ஏவுக்குரிய பஸ் பாஸில் பயணிப்பதாகவும் கூறியுள்ளார். அப்படியா என்று கேட்டு விட்டு போய் விட்டார் கண்டக்டர்.பஸ் முழுக்க கூட்டம் கட்டி ஏறியபடி இருந்தது. கண்டக்டர் தனக்குரிய சீட்டில் பயணித்து வந்தார். இதைப் பார்த்த லாசர், தனது செல்போன் மூலம், தேனி கிளை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு போனைப் போட்டு தகவல் அளித்தார்.
தான் பஸ்சில் நின்று கொண்டு பயணிப்பதாக அவர் கூறினார். இதையடுத்து கிளே மேலாளர் சுப்பிரமணியம், மதுரை கிளைக்குப் போனைப் போட்டு அங்குள்ள மேலாளரிடம் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து நான்கு டிக்கெட் பரிசோதகர்களை உசிலம்பட்டிக்கு அனுப்பி பஸ்சை நிறுத்தி எம்.எல்.ஏவுக்கு சீட் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு பணித்தார் மதுரை கிளை மேலாளர்.
ஆனால் எந்த பஸ் என்று தெரியாமல் நான்கு செக்கர்களும் பஸ்சை விட்டு விட்டனர். இந்த நிலையில் தொட்டப்பநாயக்கனூரை பஸ் சென்றடைந்தது. அப்போது எம்.எல்.ஏவைத் தொடர்பு கொண்ட தேனி மேலாளர், சார் உட்கார்ந்து விட்டீர்களா என்று கேட்டுள்ளார். இல்லை என்று எம்.எல்.ஏ. பதிலளிக்க, உடனே அப்படியே போனை கண்டக்டரிடம் கொடுங்கள் என்று கூறியுள்ளார் மேலாளர். கண்டக்டரை கண்டித்த அவர் மக்கள் பிரதிநிதி ஒருவர் அரசு பஸ்சில் வரும்போது சீட் ஏற்பாடு செய்து தர வேண்டாமா என்று கடிந்து கொண்டார்.
இதையடுத்து கண்டக்டர் எம்.எல்ஏவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான் உட்கார்ந்திருந்த சீட்டைக் கொடுத்தார். அதன் பிறகு உட்கார்ந்தபடி தேனிக்குப் போய்ச் சேர்ந்தார் லாசர்.
தற்போது அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். அவருக்கு பஸ்சில் பணி வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்களாம்.
இந்த சர்ச்சை குறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், கண்டக்டர் குறித்து நான் புகார் தெரிவிக்கவில்லை. அது எனது நோக்கமும் அல்ல. நான் எம்.எல்.ஏ. என்று கூறியும் அதை கண்டு கொள்ளாமல் அவர் அலட்சியம் காட்டியதால் வருத்தப்பட்டு அதைக் கிளை மேலாளரிடம் தெரிவித்தேன். கண்டக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கூறினேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது என்றார்.இது ,பிள்ளையையும் கிள்ளிவிட்டுவிட்டு,தொட்டிலையும்  ஆட்டுவது போல் உள்ளது .
சர்ச்சையில் சிக்கிய கண்டக்டரின் பெயர் ஸ்டீபன். இவர் கூறுகையில், பஸ்சில் ஏற்கனவே 75 பேர் பயணித்து வந்தனர். எம்.எல்.ஏ முன்பக்கமாக ஏறினார். நான் பின்பக்கத்தில் உள்ள சீட்டில் உட்கார்ந்திருந்தேன். நான் உட்கார்ந்திருந்த சீட்டில் ஏற்கனவே 6 பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்களோடு நெருக்கயடித்தபடிதான் நானும் அமர்ந்திருந்தேன்.
செக்கானுரணியில் முன்பக்கமாக சில பயணிகள் இறங்கியதால் எம்.எல்.ஏ எப்படியாவது சீட்டைப் பிடித்து அமர்ந்திருப்பார் என்று கருதி விட்டு விட்டேன். மற்றபடி எம்.எல்.ஏவை அவமதிக்கும் வகையில் நான் நடந்து கொள்ளவில்லை என்றார்.
எம்.எல்.ஏக்கள் பஸ்சில் வருவதே பெரிய விஷயம், உலக மகா அதிசயம். கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் அரசு பஸ்களை நாடி ஓடி வந்து போய் வருகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம் கொடுத்திருக்கலாம்..!
அதேபோல...
அதேபோல, அரசுப் பேருந்துகளில் டவுன்பஸ் உள்பட, முன்பக்கத்தில், ஏறும் படிக்கட்டுக்கு வலது புறம் உள்ள முதல் இருக்கை மாற்றுத் திறனாளிகளுக்கும் இரண்டாவது இருக்கை எம்எல்ஏ, எம்பி என மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சுற்றறிக்கையே விடப்பட்டுள்ளது. அமரர் எம்ஜிஆர் காலத்திலிருந்து அந்த முறை கடைப்பிடிக்கப்பட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இப்போ தூக்கிட்டாங்களோ, என்னவோ!!

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியுடன் சமுதாயத்தலைவர்கள் சந்திப்பு

                                                                                 

தென் பொதிகை சாரல் தொடங்கியது :புலிகள் காப்பகமும் காரையாரில் புதிய ஹோட்டல் திறந்தது

            முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் ஓட்டல் திறக்கப்பட்டது.புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ள காரையார், பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவிகளை பார்வையிட தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு புலிகள் காப்பகம் பாபநாசம் சூழல் மேம்பாட்டு திட்டம் சார்பில் மைலார் காணிக்குடியிருப்பு இயற்கை மகளிர் சுயஉதவி குழு சார்பில் காரையாரில் ஓட்டல் நடத்தப்படுகிறது.ஓட்டலை அம்பை., புலிகள் காப்பக துணை இயக்குநர் வெங்கடேஷ் திறந்து வைத்தார். முண்டந்துறை வனச்சரகர் செல்வின் லால், பாபநாசம் சூழல் சரக உதவி வன உயிரின காப்பாளர் இளங்கோ, காணிக்குடியிருப்பு ஊர் தலைவர் தட்சிண மூர்த்திகாணி, செயலாளர் கணேசமூர்த்தி, அகஸ்தியர் காணிக்குடியிருப்பு சேர்மன் தமிழரசி, ஊக்குநர் சீதா உட்பட வனத்துறையினர், காணியின மக்கள் கலந்து கொண்டனர்.                  

நெல்லை மாநகராட்சிக்கு IUML கோரிக்கை


                                                                                            

மேலப்பாளையம் 29வது வார்டு விரிவாக்கப்பகுதியில் குடிநீர் பிரச்னை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேயரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலப்பாளையம் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து தலைவர் நாகூர்கனி, செயலாளர் முகைதீன் அப்துல்காதர், பொருளாள் அப்துல்ஜப்பார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் 29வது வார்டு காயிதே மில்லத் நகர், அமுதா நகர் விரிவாக்கப்பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இப்பகுதியில் குடிநீர் இணைப்பு அதிகமாக உள்ளதால் குடிநீர் சீராக வருவதில்லை. குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டியும் இல்லை. மின் கம்பங்களில் மின் குழல் விளக்குகள் அமைத்து தரவேண்டும். துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமித்து துப்புரவு பணிகளை விரைவாக செய்யவேண்டும். அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மரணம்?

                                                                     

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிறையிலிருந்து ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அவருக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணமடைந்துவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இயற்கை சூழலில் தரமான கல்வி

                                                                             
மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்று பொறியியல் படிக்க ஆசைகொண்டு ,எதிர்காலத்தை பற்றி கனவு கண்டுகொண்டிருக்கும் இஸ்லாமிய மாணவர்களே !

உங்கள் கனவுகளை நனவாக்கிட உங்களை அழைக்கின்றது அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி; 
நன்கொடை இல்லாமல் கல்விக் கட்டணம் மட்டுமே செலுத்தி கல்வி கற்று பொறியாளர் ஆகிட நல்லதொரு கல்விச்சாலை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி !
இயற்கை சூழலில் கல்வி கற்றிட நல்லதொரு வாய்ப்பை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி வழங்கியுள்ளது .

சிறுபான்மையினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும்.

 பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர்மொய்தீன் தெரிவித்தார்.
 இதுகுறித்து, விருதுநகரில் அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:


 பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ய, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தால், மக்கள் மத்தியில் கண்டிப்பாக மரியாதை கிடைக்கும்.


 சேது சமுத்திரத் திட்டம் முடங்கியுள்ளதால் தமிழகத்தின் தென் பகுதியில் தொழில்கள் முடங்கி உள்ளன.


 வருகிற செப்டம்பர் 8-ம் தேதி கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற இருக்கிறது. அதில், கட்சியின் அகில இந்திய தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.


 சிறுபான்மையினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும்.


 கலாம் என்றால் அராபியில் வேதத்தின் அடியார் என்று பொருள் உண்டு. அதேபோல, தமிழில் கலகம் என்றும் பொருள் இருக்கலாம்.
 இதுவரையில், அப்துல்கலாம் கலகம் எதுவும் விளைவிக்கவில்லை.
 கருணாநிதி அப்துல்கலாம் மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர்தான், கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராகக் கொண்டு வர முயற்சி செய்தார் என்றார் அவர்.


 கட்சியின் மாநிலச் செயலர் பஷீர், நெல்லை மாவட்டச் செயலாளர் கே.எம்.நிஜாமுகைதீன், விருதுநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எ. இப்ராஜூம் ஷா உள்ளிட்ட பலர் இருந்தனர்.


 நன்றி :தினமணி (ஜூன் 20 ,2012 ) ௦