Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 13 அக்டோபர், 2012

முஸ்லிம் லீக் முகநூல் (Facebook ) சந்திப்பு


வேகமாக ஊடகத்துறை வளர்ந்து வரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ,உலகம் உள்ளங்கையில் என்பது போல் ஊடகத்துறை வளர்ச்சி கண்டுள்ளது .அதன் முக்கிய அங்கமாக முகநூல் (Facebook ) உள்ளது . 
கடந்த 12 /10 /2012 வெள்ளி அன்று துபாயில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகநூல் (Facebook ) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .

     துபாய் முதீனா தெருவில் உள்ள கேரளபவன் ஆடிட்டோரியத்தில் ஜும்மா தொழுகை முடிந்த பின்பு துஆஉடன்  நிகழ்ச்சி துவங்கியது . நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் TKN .காதர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கேஎம்சிசி யின் அகில இந்திய செயலாளர் அப்துல்கரீம் சாஹிபு ,துபாய் கேஎம்சிசி யின் தலைவர் அன்வர் நாஹா , அமீரக காயிதே மில்லத் பேரவை கொள்பரப்புச் செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா ஆகியோர் சிறப்புரையாற்றினர் .
    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகநூல் மூலம் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்ந்த அனைத்து மாநில உறுப்பினர்களோடும் ஏற்பட்டுள்ள அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் . அரபு அமீரகம் முழுவதுமிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் கலந்து கொண்டனர் .குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் , யாரையும் நேரடியாகவோ ,அலைபேசி மற்றும் தொலைபேசி மூலம் அழைக்காமல் ,முகநூல் (facebook ) மூலம் விளம்பரம் செய்யப்பட்டதை மட்டுமே அழைப்பாக ஏற்றுக் கொண்டு முஸ்லிம் லீக்கை வலுப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இளைய சமுதாயம் திரண்டது .

   அல்லாஹ் நமக்களித்த இந்த முகநூல் ஊடகத்தை நன்மையான விஷயங்களுக்காகவும் , முஸ்லிம்சமுதாயத்தையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கையும் பலப்படுத்த பயன்படுத்துவோம் என்று அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர் .

   முகநூல் மூலம் ஏற்பட்ட தொடர்பால் ,கோரப்பட்ட உதவிகளான, கேரளத்தை சார்ந்த ஒரு கேன்சர் நோயாளியின் மருத்துவச்செலவையும் ,தமிழ்நாடு திருநெல்வேலியை சார்ந்த ஒரு மாணவனின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டது .

  இறுதியாக முஸ்லிம் லீக் முகநூல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஹஷீத் நன்றி கூற துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .