Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 1 நவம்பர், 2013

கிராமப்புறங்களில் பணியாற்றாத டாக்டர்களின் சொத்துகள் பறிமுதல்

மகாராஷ்டிராவில், கிராமப் புறங்களில் பணியாற்றாத, 99 டாக்டர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

கட்டாயம் பணியாற்ற வேண்டும் : மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை இயக்குனர், சதீஷ் பவார் கூறியதாவது: மகாராஷ்டிராவில், எம்.பி.பி.எஸ்., படிப்பவர்கள், படிப்பு முடிந்ததும், கட்டாயமாக, கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஒருவேளை, மேற்படிப்பு படிக்க வேண்டியிருந்தால், இரண்டு ஆண்டுகள் கழித்து, கிராமப்புறத்தில் பணியாற்ற வேண்டும்.
இதன் படி, இந்தாண்டில், கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்காக, 255 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில், 99 பேர், பணி ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள், தற்போது எங்கு உள்ளனர் என்ற விவரத்தையும் அறிய முடியவில்லை.
கிராமப் புறங்களில் பணியாற்றாததன் மூலம், இவர்கள், அரசுடன் செய்துள்ள ஒப்பந்த விதமுறைகளை மீறியுள்ளனர். 

உரிமங்கள் ரத்து : இதனால், இவர்கள் அளித்துள்ள பிணைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை, அரசு பறிமுதல் செய்யும். அல்லது அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமங்கள் ரத்து செய்யப்படும். மேலும், இவர்கள், மகாராஷ்டிராவில், டாக்டராக பணியாற்ற முடியாது. இவ்வாறு, டாக்டர் சதீஸ் பவார் கூறியுள்ளார்.