Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 3 அக்டோபர், 2012

மணிச்சுடர் தந்த மாமனிதர்


அக்டோபர் 4 !
ஆம், சமுதாய சங்கநாதமாம் "மணிச்சுடர் " வெள்ளி விழா !
ஆம், அன்று தான் ,மணிச்சுடர் தந்த மாமனிதர்  சிராஜுல் மில்லத் பிறந்த நாள் !
1926 அக்டோபர் 4ல் காரைக்காலில பிறந்தார்  சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ்ஸமத் சாஹிபு .
அவர் வாழ்க்கையை பிற மக்களுக்கு பாடமாக வல்ல அல்லா ஆக்கினான் ,ஆம் அவரை ,தன சமுதாயப் பணிக்கு அல்லா தேர்ந்தெடுத்தான் என்றே சொல்லவேண்டும் . அவர் இஸ்லாமிய சமுதாயத்தின் கல்விப்பணிக்கு ஆற்றியே தொண்டு மகத்தானது . சென்னை புதுக்கல்லூரி முதல் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரை மட்டுமல்ல ,தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் தோன்றுவதற்கும் அவர்பணி காரணமாயிற்று என்று சொன்னால் மிகையாகாது .
    எல்லா மக்களும் எல்லா வளமும் பெற வேண்டுமானால் ,கல்வி முக்கியம் என்பதை தன் குறிக்கோளாக வைத்து தன் சமுதாயப் பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார் என்பதை அவர் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நாம் காணலாம் .
    அந்த காலக் கட்டத்தில் ,இன்று அப்போலா மருத்துவ மனை இருக்கும் இடத்திற்கு அருகில் , வாலஸ் கார்டனில் 'மணிச்சுடர் ' அலுவலகம் செயல் பட்டு வந்தது . அப்துஸ் சலாம் காகா என்பவர் வரவேற்பு அலுவலராக செயல் பட்டு வந்தார் . அந்த கால கட்டத்தில் ,ஒரு நாள் ஒரு சகோதர சமுதாயத்தை சார்ந்த ஒருவர் ,தன் மகளுடன் மணிச்சுடர் அலுவலகம் வந்தார் .சலாம் காகா என்ன வேண்டும் என்று கேட்டார் ,."பெரியவரை" பார்க்க வேண்டும் என்று பதில் சொன்னார் . சலாம் காகா ,உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா ? என்று கேட்டார் ,அதற்க்கு அந்த மனிதர் ,இதுவரைக்கும் நேரில் பார்த்து பேசியது இல்லை ,துதான் முதல் முறை என்று பதில் கூறினார் .உடனே , முகவரியை கேட்டு தெரிந்து கொண்டு , தலைவர் சிராஜுல் மில்லத்திடம் சென்று விபரம் கூற , தலைவர் உள்ளே வர அனுமதி கொடுத்தார்கள் . வந்த விபரம் என்ன ? என்று தலைவர் கேட்டார்கள் ; அதற்க்கு வந்த மனிதர் அளித்த பதில் தலைவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது . 
அப்படி என்ன அந்த மனிதர் கூறியிருப்பார் , வேறொன்றும் இல்லை , அவர் கூட அழைத்து வந்திருக்கும் அவர் மகள் அரசு கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிக்க இடம் கிடைத்து முதல் வருடம் முடித்துவிட்டு , இரண்டாம் வருடம் ஆரம்பித்துவிட்டது ; ஆனால் , கல்விக் கட்டணம் கட்டுவதற்கும் , மற்றைய செலவிற்கும் எங்களிடம் பணம் இல்லை ,அவள் படிப்பு நின்று விடும் என்று பயப்படுகிறோம் ,எப்படியாவது என்மகள் டாக்டர் படித்து முடிக்க வேண்டும் என்று அந்த மனிதர் தலைவர் சிராஜுல் மில்லத்திடம் அழுத வண்ணம் வேண்டுகோள் வைத்தார் .
தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் ,வந்தவர் எந்த மதம் ,எந்த சாதி என்று பார்க்கவில்லை .அந்த ,மனிதரை ஆறுதல் கூறி உங்கள்   மகள் படிப்பு இன்ஷாஅல்லாஹ் ,ந்த விதத்திலும் தடை படாது என்று கூறி ஆறுதல் படுத்திவிட்டு . அன்று துபையில் பணி செய்துகொண்டிருந்த ,அன்றைய காயிதே மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் ,இன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான சமுதாயப் போர்வாள் அண்ணன் அப்துல் ரகுமான் அவர்களை தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் தொடர்பு கொண்டு அந்த மாணவியின் டாக்டர் படிப்புக்கான செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள கட்டளையிடுகிறார்கள் .அந்த தலைவரின் தொண்டரல்லவா ,அண்ணன் அப்துல் ரகுமான் ,மறு பேச்சு பேசாமல் உடனே ஏற்றுக் கொள்கிறார்கள்.
அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை  செலவுகள் முழுவதும் செலவு செய்யப் படுகின்றது .அந்த மாணவியும் நன் முறையில் படித்து மருத்துவராகி விட்டார் .ஆனால் ,சிராஜுல் மில்லதோ, அவர் வழி நடத்திய இயக்கமோ அவர்கள் மூலம் எந்த ஒரு உதவியும் ,பிரதி பலனோ அடைந்தது இல்லை ,இன்னும் சொல்லப் போனால் ,அண்ணன் அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்னும் அந்த டாக்டர் முகம்  தெரியாது .
இது ஒரு சிறிய உதாரணம் தான் , தமிழகத்தில் எத்தனையோ மருத்துவர்களும் ,பொறியாளர்களும் ,பட்டதாரிகளும் உருவாக சிராஜுல் மில்லத்தும் ,அவர் கட்டிக் காத்த இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கும் ,அதன் தொண்டர்களும் காரணமாக இருந்துள்ளார்கள் ,இனிமேலும் இருப்பார்கள் .
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் காயிதே மில்லத்தும் , அவர் வழிவந்த சிராஜுல் மில்லத்தும் தன்னலம் கருதாமல் சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தி ,தன் சுகங்களை அழித்துக்கொண்டு வாழ்ந்தார்கள் . அதே ,வழியில் இன்றைய நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை அவர்களும் அவரை தொடர்ந்துள்ள நிர்வாகிகளும் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்வை அர்பணித்துக் கொண்டுள்ளனர்  கொண்டுள்ளார்கள் .அவர்கள் ,செல்லும் வழி வெல்லும் வழியாகட்டும் ! வல்ல அல்லா அருள் புரிவானாக !

அல்லாஹு அக்பர் ! முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் !

-----அபு ஆஸிமா