Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 25 செப்டம்பர், 2013

உலக பல்கலைக்கழகங்களுக்கு நிகராக இந்திய பல்கலைக்கழகங்கள் தரம் உயரவில்லை: ஜனாதிபதி பிரணாப் வேதனை

புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசியதாவது:–

மாணவர்கள் பட்டங்களை பெற்று தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கி உள்ளீர்கள். இனிமேல் மாணவர்கள் தங்களுடைய கல்வியை வாழ்க்கையில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மாணவர்கள் அர்ப்பணிப்பையும், முயற்சியையும் வாழ்க்கை பயணத்துக்கு துணையாக கொண்டால் சரியான பாதைக்கு செல்ல முடியும்.

மாணவர்கள் தங்கள் பெற்ற கல்வியை நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல உதவ வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தற்போது அமுல்படுத்தி உள்ளோம். கட்டாய கல்வி தரமான கல்வியாக இருக்க வேண்டும். நான் பொதுச்சேவைக்கு வருவதற்கு முன்பு ஆசிரியராக பணிபுரிந்து உள்ளேன். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும்போது மனதில் சந்தேகமும், திருப்தியும் ஏற்படும். அதனை நானும் பெற்றுள்ளேன்.

மாணவர்கள் இங்கு கல்வி கற்றதோடு நின்று விடாமல் ஒவ்வொரு நாளும் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும். 6–ம் நூற்றாண்டில் இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது பிற உலக நாடுகளுடன் நாம் கல்வியில் போட்டியிட்டோம். ஆனால் இன்று நாம் பல வசதிகளை பெற்றிருந்தும் உலக அளவில் தரமான 200 பல்கலைக்கழகங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற முடியவில்லை. இது எனக்கு வேதனையை அளிக்கிறது. புதிராகவும் உள்ளது.

12–வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்விக்கென்று அதிக நிதியை ஒதுக்கி உள்ளோம். சமூகத்தில் அறிவியல், தொழில் நுட்பமே ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே ஆராய்ச்சி தரத்தை உயர்த்த வேண்டும். புதிய கண்டு பிடிப்புகளை தினசரி வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி சாலைகளை கிராமப்புறங்களிலும் அமைக்க வேண்டும்.

மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வியை கடமையை உணர்த்து நாட்டின் மேம்பாட்டுக்காக உதவ வேண்டும்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசினார்.