Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 29 அக்டோபர், 2012

நானோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்


கோழிக்கோடு  பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., நனோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி படிப்பிற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் எம்.எஸ்சி., நனோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, இயற்பியல், அப்ளைடு கெமிஸ்ட்ரி அல்லது பாலிமர் கெமிஸ்ட்சி ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500ம், எஸ்.சி, எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.250ம் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

தகுதியான மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

நவம்பர் 10 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.universityofcalicut.info/notification/MtechNanoscience19.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

அரவணைப்பார் யாருமில்லாமல் மியான்மார் முஸ்லிம்கள் தவிப்பு!


மியான்மர் நாட்டில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான  பயங்கர மோதல் ஏற்பட்டு நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இடையில் அமைதி நிலவி வந்தது. இந்த நிலையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாக ரக்கைன் பிராந்தியத்தில் கலவரம் நடந்து வருகிறது. இதில் இதுவரை 82 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடான வங்காள தேசத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே மியான்மரில் இருந்து ஓடி வந்த பல லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனவே மேற்கொண்டு அகதிகளை அனுமதிக்காமல் வங்காள தேச படைகள் அவர்களை விரட்டி அடிக்கின்றன. இதனால் அவர்களால் வங்காள தேசத்துக்கும் செல்ல முடியாமல் , சொந்த பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் அங்குள்ள தீவு பகுதிகளிலும், மலை காடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் இப்படி தஞ்சம் அடைந்துள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பட்டினி கிடக்கிறார்கள். காடுகளில் கிடைக்கும் உணவு மட்டுமே அவர்கள் பசியாற்றுகிறது.

அகதிகள் தங்கி இருக்கும் பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் சென்று பார்த்தனர். அவர்கள் இந்த அகதிகளுக்கு உடனடியாக உணவு சப்ளை செய்ய வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளனர். எனவே அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

   உலக மக்களின் அரவணைப்பை எதிர்பார்த்து அம்மக்கள் ஏங்கி காத்துக் கிடக்கின்றனர் .

நியூசிலாந்து -கல்வி கற்க எளிய நடைமுறை, குறைந்த கட்டணம்!


எளிதான குடியேற்ற நடைமுறைகள் மற்றும் குறைந்த கல்வி கட்டணங்கள் ஆகியவை, நியூசிலாந்து நாட்டை வெளிநாட்டு மாணவர்கள் விரும்புவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

இங்கே படிக்கவரும் சர்வதேச மாணவர்களின் பாதுகாப்பிற்கு, பல சிறந்த விதிமுறைகளை இந்நாடு வகுத்துள்ளது. இந்நாட்டின் கல்வி அமைப்பானது, 100க்கும் மேற்பட்ட பாடங்களை வழங்கி வருகிறது மற்றும் வணிகம், மானுடவியல், மேலாண்மை, மருத்துவம், ஐடி, தூய அறிவியல் போன்ற துறைகளில், சர்வதேச நிலையிலான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகம், கேன்டர்பரி பல்கலைக்கழகம், லின்கன் பல்கலைக்கழகம், வெய்கடோ பல்கலைக்கழகம் போன்றவை, இந்திய மாணவர்கள் மத்தியில் பிரபலமானவை.

கல்வி உதவித்தொகைகள்

படிப்பில் சிறப்பான செயல்பட்டுள்ள வெளிநாட்டு மாணவர்கள், நியூசிலாந்து அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி அமைப்புகள் போன்றவை வழங்கும் பலவிதமான நிதியுதவிகளைப் பெறலாம். அந்நாட்டின் பல பல்கலைகள், 70 முதல் 100 உதவித்தொகைகள் வரை வழங்குகின்றன.

தர உத்திரவாதம்

உலகின் அனைத்து தொழில்துறை நாடுகளிலும், 15 வயது மாணவர்களின் சாதனைகள் தொடர்பாக, 3 வருடங்களுக்கு 1 முறை நடத்தப்படும் The Programme for International Student Assessment(PISA) என்ற சர்வேயானது, நியூசிலாந்து நாட்டின் பள்ளி அமைப்பிற்கு நற்சான்றிதழ் அளிக்கிறது. Times Higher Education Supplement Top 500 மற்றும் Shanghai Jiao Tong Top 500 போன்ற சர்வேக்களிலும், நியூசிலாந்து பல்கலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும், Newzealand Qualifications Authority(NZQA) என்ற அமைப்பானது, அந்நாட்டின் தேசிய பாடத்திட்டங்கள் மற்றும் தகுதிகளை மேம்படுத்தி, தர நிர்ணயம் செய்கிறது.

விசா விசாரணைகள்

மொத்தம் 3 மாதங்கள் வரை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை மேற்கொள்ள விசா பெற வேண்டியதில்லை. Newzealand Qualifications Authority இந்த முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற சூழலில் ஒருவர், விசிட்டர் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேசமயம், படிக்கும் காலம் 3 மாதங்களுக்கு மேல் என்றால், மாணவர்கள் அங்கிருக்கும் காலத்தில், தேவைப்படும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

விசா வழிகாட்டுதல்கள்

* பல்கலையிடமிருந்து அனுமதி கடிதம், செல்லத்தக்க பாஸ்போர்ட், கட்டணம் செலுத்தியதற்கான சான்று மற்றும் போதுமான நிதி ஆதாரங்கள் ஆகியவற்றுக்கான சான்றுகளுடன், பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

* மருத்துவ மற்றும் தற்காலிக நுழைவு எக்ஸ்-ரே சான்றிதழை சமர்ப்பிக்கவும்.

* உங்கள் நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச்சீட்டிற்கான ஆதாரம் அல்லது அந்த பயணச் சீட்டை வாங்குவதற்கான நிதி ஆதாரம் ஆகியவற்றுக்கான சான்றுகளை காட்ட வேண்டும்.

* நியூசிலாந்திலிருந்து நீங்கள் திரும்பிவரும் தேதிக்குப் பிறகு, உங்களின் பாஸ்போர்ட் 3 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்குமா? என்பதை உறுதிசெய்து கொள்க.

அமெரிக்க படத்திற்கு எதிராக ஐநா சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் --- சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ்


புனித ஹஜ்யாத்திரை நிகழ்வை முன்னிட்டு மக்காவில் நடந்த உலக முஸ்லிம் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மன்னர் அப்துல்லா பேசியதாவது ,முஹம்மது நபியின் வாழ்கையை கொச்சை படுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க படத்திற்கு எதிராக  ஐநா சபையில் கண்டன தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும்.இஸ்லாத்தையும் ,இறைத்தூதர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் .

     அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இன்னொசென்ஸ் ஆப் முஸ்லிம் என்ற படம் உலக முஸ்லிம்கள் அமெரிக்காவை எதிர்ப்பதற்கும் ,அமெரிக்க உணவுப் பொருட்களை  , அவர்களின் கல்விநிலையங்களை புறக்கணிப்பதற்கும் ,தூதரகங்கள் தாக்கப்படுவதற்கும் காரணமாயிற்று .

     சவூதி அரபிய அரசு அந்த படத்தை நீக்குமாறு கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் இருந்ததால் youtube மற்றும் google மீது நடவடிக்கை மேற்கொண்டோம் .அவர்கள் தன நிலையை மாற்றாவிட்டால் ,சவூதி அரசின் நடவடிக்கை அவர்கள் மீது தொடரும் .

         முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில்,நாடுகளில் உள்ள அமைப்புகளுக்கு மத்தியிலும்  கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கபட்டு ,ஒற்றுமைக்கு வழிகோலவேண்டும்.பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல்களையும் ,தீவிரவாதத்தையும் ஒழிக்கலாம் என்று மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் பேசினார் .