Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 29 அக்டோபர், 2012

அரவணைப்பார் யாருமில்லாமல் மியான்மார் முஸ்லிம்கள் தவிப்பு!


மியான்மர் நாட்டில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான  பயங்கர மோதல் ஏற்பட்டு நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இடையில் அமைதி நிலவி வந்தது. இந்த நிலையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாக ரக்கைன் பிராந்தியத்தில் கலவரம் நடந்து வருகிறது. இதில் இதுவரை 82 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடான வங்காள தேசத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே மியான்மரில் இருந்து ஓடி வந்த பல லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனவே மேற்கொண்டு அகதிகளை அனுமதிக்காமல் வங்காள தேச படைகள் அவர்களை விரட்டி அடிக்கின்றன. இதனால் அவர்களால் வங்காள தேசத்துக்கும் செல்ல முடியாமல் , சொந்த பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் அங்குள்ள தீவு பகுதிகளிலும், மலை காடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் இப்படி தஞ்சம் அடைந்துள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பட்டினி கிடக்கிறார்கள். காடுகளில் கிடைக்கும் உணவு மட்டுமே அவர்கள் பசியாற்றுகிறது.

அகதிகள் தங்கி இருக்கும் பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் சென்று பார்த்தனர். அவர்கள் இந்த அகதிகளுக்கு உடனடியாக உணவு சப்ளை செய்ய வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளனர். எனவே அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

   உலக மக்களின் அரவணைப்பை எதிர்பார்த்து அம்மக்கள் ஏங்கி காத்துக் கிடக்கின்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக