Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பத்ர் போர் வரலாற்றில் ஏன் ?


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், நுபுவ்வத்தின் பின் பதின்மூன்று வருடங்கள், இரத்தம் ஒட்டுதலைத் தவிர்ந்த பல்வேறு கொடுமைகளை தாங்கிக் கொண்டு மக்காவில் வசித்திருந்தார்கள். இறுதியில், அவர்கள் தமது தாயகத்தை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். எனினும், இவற்றுடன், நபியவர்களை துன்புறுத்துவதை காபிர்கள் விட்டுவிடவில்லை.அவர்கள்,தனிமைப்படத்தப்பட்ட முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தி, அவர்களை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செல்ல விடாது தடுத்தும் வைத்திருந்தனர்.

மேலும், அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள் மீதும் கடினமான பொருளாதாரத் தடையைத் திணிப்பதில் உறுதியாக இருந்தனர். மதீனாவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பிரயாணக் கூட்டங்களைத் தடுத்து வைத்தனர். இந்தத் தடையானது நீண்ட காலம் நீடித்து, மதீனாவாசிகளின் மீது பெரும் சுமையையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தியதோடு, அத்தியவசியமான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக செங்கடல் ஓரங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்த்திலும் அவர்களைத் தள்ளியிருந்தது.

அபூஜஹ்ல், கடினமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு கடிதத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு அனுப்பியிருந்தான். ஆதில் நபியவர்கள் மீதான தாக்குதலுக்கும், யுத்தத்திற்குமான ஏற்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தான். 

இவ்விசயத்தில் இரண்டு புனித அல்குர்ஆன் வசனங்கள் இறங்கின,
'அநியாயத்துக்குள்ளானவர்களுக்கு, யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ், இவர்களுக்கு உதவி செய்யப் ஆற்றலுடையோனாக இருக்கின்றான். இவர்கள், நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம். மனிதர்களில் அக்கிரமம் செய்யம்சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்படும் மஸ்ஜித்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவர் உதவி செய்கின்றாரோ அவருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலவானும் யாரையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான்' (அல்ஹஜ்- 39,40)

முஸ்லிம்களுடைய வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், முஷ்ரிகீன்களுக்கு சாதகனமான ஒரு சந்தர்ப்பத்தை முறியடிப்பதற்காகவும் ஹிஜ்ரி இரண்டாம் வருடம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், குறைஷியரை எதிர்கொள்ள வெளிப்பட்டார்கள். பத்ரில், காபிர்களின் எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்கினராக மட்டுமே முஸ்லிம்கள் இருந்து, அவர்களை நேருக்குநேர் எதிர்கொண்டார்கள். தமது ஈமானுடைய பலத்தினாலும், அல்லாஹ்வுடைய நாட்டத்தினாலும் வெற்றி பெற்றார்கள்.

கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின் வேண்டுகோள்


புத்தகம் வைத்து தேர்வு எழுதுவது சாத்தியமா ?


மாணவர் மனப்பாடம் செய்யும் நிலைமாறி, அறிவு மேம்படும் வகையில் புத்தகத்தை வைத்து எழுதும் தேர்வு முறை அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது மாணவர் அறிவை மேம்படுத்தவும், புத்தக சுமையை குறைக்கவும் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம்முறையைப் போலவே, தேர்வு முறையிலும் நவீனத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போதுள்ள முறையில் மாணவர்கள் மனப்பாடம் செய்யும் முறையே அதிகம் உள்ளது. பெரும்பாலும் புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினாக்களே அதிகம் கேட்கப்படுகிறது. எனவே வினா-விடை புத்தகங்களையே மாணவர்கள் அதிகம் அதிகம் நம்பி உள்ளனர்.
மனப்பாட சக்தியுள்ள மாணவரே அறிவுத்திறன் மிக்கவர் என்ற நிலை உள்ளது. இதை விடுத்து புத்தகத்தினுள் இருந்து ஒரு வினாவை கேட்டால், "வினாத்தாள் மிகவும் கடினம்" என விமர்சனம் கிளம்புகிறது. எனவே, ஒரு தலைப்பிலான பாடம் அல்லது கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை புரட்டிப் படிக்கும் வகையில் மாணவர்கள் தேர்வு முறை இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடித்தபின், தேர்வில் வினாக்களை பாடப் புத்தகத்தினுள் இருந்து நுணுக்கமாக கேட்க வேண்டும். தேர்வு எழுதும்போது புத்தகத்தையும் கையில் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்கள் விடையை புத்தகங்களில் தேடி எடுத்து எழுத வேண்டும். இதற்கு புத்தகத்தை ஆழ்ந்து படித்திருந்தால்தான் விடையை தெளிவாக எழுத முடியும். அரசு துறைகள் பலவற்றில் இதுபோன்ற தேர்வுகள் (டிபார்ட்மென்டல் எக்ஸாம்) தற்போது நடைமுறையில் உள்ளது.