Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 4 ஜூலை, 2013

தமிழ்நாட்டில் பால்வள தொழில் நுட்பம் (DAIRY TECHNOLOGY ) பிரிவில் படிப்புகளைத் தரும் கல்லூரிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம்,

சி.எம்.சி., வேலூர்,

எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேசன், சென்னை,

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை,

என்.டி.டி.பி., ஈரோடு,

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்,

விவசாய கல்லூரி மற்றும் ஆய்வு மையம், கோயம்புத்தூர்,

தமிழ்நாடு கால்நடை அறிவியல் கல்லூரி, சென்னை,

கால்நடை கல்லூரி மற்றும் ஆய்வு மையம், நாமக்கல்,

சென்னை கால்நடை கல்லூரி, சென்னை,

இன்ஸ்டிடியூட் ஆப் அனிமல் நியூட்ரிசன், காட்டுப்பாக்கம்,

 பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம், ஈரோடு,

விவசாயிகள் பயிற்சி மையம், காட்டாங்குளத்தூர்

ஆகியவற்றில் பால்வளம் தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன

24 அமைப்புகளின் கூட்டமைப்பு எனும் பெயரில் நடக்கும் அத்துமீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் --- எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி .


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! விரைந்து ஓடுகிற ஓட்டத்தில் சில பேர் சில துண்டுச் சீட்டுகளை வீசிவிட்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடங்களுக்கும் போய்சேர்ந்துவிடுவார்கள். ஆனால், துண்டுச் சீட்டுகளின் சேட்டை கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கிவிடும். அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் புயலாய் உருவெடுத்து பூசல்களை உருவாக்கி சலனமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகத்தையே அலைக்கழித்துவிடுகிற நிகழ்வுகளும் நடந்துவிடும். யார் காரணம்? என்று அறிந்து அவர்களிடம் போய்க் கேட்டால் ‘‘நாங்கள் ஓடுகிற ஓட்டத்தில் எந்தச் சீட்டை எறிந்தோம் எனத் தெரியவில்லை; யார் அவைகளை எடுத்துப் படிக்கச் சொன்னது?’’ என்று கேட்பார்கள்.

பிறைநெஞ்சே! அதைப் போலத்தான் நம் சமுதாயத்தில் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைப்புச் செய்கிறோம் எனக் கூறிக் கொண்டு ‘இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு’’ என்ற பெயரில் இயங்குவதாகச் சொல்லி, ஓடுகிற ஓட்டத்தில் சம்பந்தமில்லாமல் நம் இயக்கப் பெயரை நமது தலைமையின் அனுமதியின்றியே பயன்படுத்தி துண்டுச் சீட்டுகளைப் பரப்பிவிட்டு அண்மையில் கோவை நகரில் ஒரு பூசலை உருவாக்கியிருக்கிறார்கள். கூட்டமைப்பின் பொதுக் கூட்ட பிரசுரத்தில் ஒரு தனிநபரின் பெயரை ‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’’ என அடையாளப்படுத்தியுள்ளதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்களாக கோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் தலைமைக்குத் தகவல் தந்தார்கள்.

நானும் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் அப்போலோ ஏ.கே. முஹம்மது ஹனீபா அவர்களிடம் விளக்கமாய் பேசினோம்; தனக்கு தெரிவிக்காமலேயே நோட்டீஸ் போடப்பட்டதாகவும் உடனே தலையிட்டு நோட்டீஸ் விநியோகத்தைத் தடுத்து நிறுத்திவிடுவதாகவும், முடிந்தால் இப்போதே வேறு நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்வதாகவும் சொல்லி எங்களை அமைதிப்படுத்தினார். இது முதல் தடவையும் அல்ல. ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இதுபோன்று வேண்டுமென்றே நமது இயக்கத்தின் பெயரை வம்புக்கு இழுத்து, பிறகு வருத்தம் தெரிவித்து இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. மீண்டும் அதே விளையாட்டை கோவை நிகழ்ச்சியிலும் ஏன் காட்டியிருக்கிறார்கள்? என்றுதான் புரியவில்லை. நாங்கள் இருவரும் விளக்கமாய் பேசிய பிறகும், அடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு நிகழ்வுற்ற அந்த நிகழ்ச்சியில் இவரே தலைமை தாங்கி, அந்த தனிநபரின் பெயரைச் சொல்லி உரையாற்ற அழைக்கிறபோது ‘‘தேசிய பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’’ என்றே அழைத்திருக்கிறார் என்றால் ‘ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் சமுதாயத்தில் குழப்பம் செய்யத் தொடங்கிவிட்டார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நாம் எதிலும் தெளிவாக இருக்க விரும்புகிறோம். இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பில் நாம் இல்லை. அதனால் அதற்கு நாம் எதிர்ப்பும் இல்லை. இக்கூட்டமைப்பில் 22 அமைப்புகள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் இத்தனை அமைப்புகள் இருக்கின்றன என்று சொன்னால் அதனால் பெருமை என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் 60 அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றனவா? என்று இப்போது ஏளனம் பேசுபவர்கள் அதிகமாகிவிட்டனர் இதுதான் நிதர்சனமான உண்மை.

முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதில் யாரையும்விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறைந்ததல்ல. ஆனால், சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பில் நாம் இணைந்திருக்க முடியாததற்கு முக்கிய காரணங்கள் உண்டு. 1. முஸ்லிம் சமுதாயத்தில் மஹல்லா ஜமாஅத் எனும் பாரம்பரிய கட்டமைப்பு எல்லா ஊர்களிலும் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அதனைச் சிதைப்பதற்கோ, பிளவுபடுத்துவதற்கோ, தனி திருமண பதிவு (தப்தர்), தனி கப்ருஸ்தான் என தனித்தனியாக உருவாக்கிக்கொண்டு போட்டி ஜமாஅத் முறையை உண்டாக்குவதற்கோ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு காலத்திலும் உடன்படாது. மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டு, ஒற்றுமையைப் பேணி வாழ்கிற வாழ்க்கைதான் இஸ்லாம் காட்டுகிற வாழ்வுமுறை. இவ்வாழ்வு முறைக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தச் செயலையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் ஏற்காது. 2. மார்க்க விஷயங்களில் மார்க்க அறிஞர் பெருமக்களான சங்கைமிகு உலமாக்களை மதித்து அவர்களின் வழிகாட்டுதலை, மார்க்கச் சட்ட விளக்கங்களை ஏற்றுச் செயல்பட வேண்டும். அவரவர்களின் சிற்றறிவுக்கேற்ப புதுப்புது எதிர்ப்புகளையும், நவீன ஆய்வுகளையும் தெரிவித்துக் கொண்டு குழப்பங்கள் உருவாக்குவதை நாம் அனுமதிக்கவியலாது.

மேற்குறிப்பிட்ட இரண்டு நிலைபாடுகளிலும் நம்மைப் போன்று தெளிவாகவும், உறுதியாகவும் இருந்துவிட்டால் நமக்கு கருத்து வேறுபாடு இல்லை. கூட்டமைப்பில் அத்தகைய உறுதிப்பாடு ஒட்டுமொத்தமாக இல்லாததால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அந்த கூட்டமைப்பில் இல்லை என்கிறோம். தனிப்பட்ட முறையில் நாம் யாருக்கும் எதிரியுமல்ல; பகையுமல்ல. நம்முடைய இந்த நிலைபாட்டை தெளிவாக்கிய பிறகும், சென்ற மாதம் இதே போன்ற ஒரு நிகழ்ச்சியில் முஸ்லிம் லீகின் பெயரை வேண்டுமென்றே பயன்படுத்தி, நம்முடைய அதிருப்தியைக் காட்டிய பின் ‘‘இனிமேல் அப்படி நடவாமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்லப்பட்டது. இப்போது கோவையிலும் அதே போன்று வேண்டுமென்றே பயன்படுத்தியது குழப்பம் செய்வதற்கான பிடிவாதத்தையே காட்டுகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் தொலைபேசி மூலம் மிகவும் கண்டிப்புடன் பேசிய பிறகும், அவரும் திருத்திக் கொள்வதாக உறுதியளித்த பிறகும் அவரே மேடையில் தலைமையேற்று நடத்திய நிகழ்ச்சியில் ‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர்’’ என்று குறிப்பிட்டு ஒரு தனிநபரை பேசுவதற்கு அழைத்து அங்குள்ள நம்முடைய மாவட்ட நிர்வாகிகளை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறார். இப்படி வேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்குகிற இந்த நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்ட மேடையை முற்றுகையிடப் போவதாக நம்மிடம் அனுமதி கேட்ட மாவட்ட நிர்வாகிகளை நாம் அமைதிப்படுத்தியிருக்கிறோம். ‘‘முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு’’ என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பத்தை உருவாக்குவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

ஒரு அரசியல் இயக்கத்தை அனுமதித்து அங்கீகரிப்பதும், அதனை முறைப்படி அறிவிப்பதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உரித்தான உரிமை. அதன்படி ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ இயக்கத்தைப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஏற்று, கேரள மாநிலத்தில் 5 அமைச்சர்களையும், 2 எம்.பி.க்களையும், 20 சட்டமன்ற உறுப்பினர்களையும் மத்திய அரசின் அமைச்சரவையில் ஒருவர் இடம் பெற்றிருப்பதையும் கருத்தில் கொண்டு அரசியல் அங்கீகாரம் வழங்கி தனிச் சின்னமாக ‘‘ஏணி’’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பையும் புறந்தள்ளி எந்த தனிநபரோ, எந்த அமைப்போ அத்துமீறுமானால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய்விடும் என்பதை மட்டும் இப்போது சொல்லி வைக்க விரும்புகிறோம். அரசியல் பணிகளில் தூய்மை, வாய்மை, நேர்மை எனும் நேர் கோட்டுப் பாதையினை வகுத்தளித்து, சமுதாயப் பணிகளில் உண்மை, பணிவு, துணிவு போன்ற அருங்குணங்களையே தனதாக்கிக்கொண்டு வாழ்ந்து மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் நமக்குக் கற்றுத்தந்த பாடங்கள்தான் இன்று முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையிலும் மிளிர்கின்றன, இப்போதும் தொடர்கின்றன; இதனை எவரும் மறுத்திட முடியாது. அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அன்பு பாராட்டி, நேசக்கரம் நீட்டி, பாச உணர்வுகளைப் பகிர்ந்து வல்ல இறைவனுக்கு மட்டுமே அஞ்சியவர்களாக, அவனிடமே உதவி கோரியவர்களாக நாம் நமது பயணத்தைத் தொடர்கிறோம். இப்படித் தொடர்கிற நமது பயணத்தை எவரும் கோழைகளின் பயணம் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். பயணத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டியதாகிவிடுகிறதா? அவைகளை எப்படி எதிர்கொண்டு சந்திப்பது என்பதையும் அறிந்தே இருக்கிறோம். இருந்தபோதிலும், நிதானமும், நியாய உணர்வும், அடக்கமும், அமைதியும் நம்மை முன்னெடுத்துச் செல்கின்றன. அதனாலேயே சீண்டாதீர்கள் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைப்பது நல்லது என எண்ணி நமது வழியில் பயணத்தைத் தொடர்வோம். இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்,
எம். அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்,பிறைமேடை