Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

குண்டேரிப்பள்ளத்துக்கு யானைகள் படையெடுப்புசுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிப்பு


கோபி சுற்று வட்டாரத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான வறட்சியால் தண்ணீர் மற்றும் உணவு தட்டுபாட்டால், குண்டேரிப்பள்ளம் அணையை நோக்கி யானைகள் வரத்து அதிகரித்துள்ளது. யானையை பார்க்க மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் அணையில் குவிய துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் மிகப்பெரிய வனப்பகுதியாகவும், யானைகள் அதிகம் காணப்படும் வனப்பகுதியாகவும் சத்தி வனக்கோட்டம் உள்ளது.சத்தி வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், கடம்பூர், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், பங்களாபுதூர் ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் இருக்கிறது.சென்ற ஆண்டில் இருந்து சுற்று வட்டாரத்தில் அக்னி வெயில் வாட்டுவது போல் வெயிலில் தாக்கம் உள்ளது.

வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கிறது. மரம், செடி, கொடியில் உள்ள இலைகள் அனைத்தும் காய்ந்து, கீழே உதிர்ந்த நிலையில் உள்ளன.

பனியால், ஒரு சில செடிகளில் இலைகள் தென்படுகின்றன. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. தண்ணீர் ஓடும் ஓடைகளில் தண்ணீர் இல்லை. வன விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. உணவு தட்டுபாடு காரணமாக வன விலங்குகள், வனத்தையொட்டி விளை நிலங்களுக்கு வர துவங்கி உள்ளன.

கோபி சுற்று வட்டாரத்தில் உணவு தேடி வந்த நான்கு வயது மான், முள்வேலியில் சிக்கி இறந்தது. தொட்டிக்குள் தவறி விழுந்த மான் ஒன்று மீட்கப்பட்டது. தண்ணீர் இல்லாமல் வன விலங்குகள் குளம், குட்டையை நோக்கி வர துவங்கி உள்ளன. கோபி கொங்கர்பாளையம் பஞ்சாயத்து குன்றி மலை அடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. குன்றி, விலாங்கோம்பை, மாவநத்தம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் குண்டேரிப்பள்ளம் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது.

குண்டேரிபள்ளம் அணையின் மொத்த கொள்ளளவு, 42 அடி. மழை நீரை மட்டுமே நம்பி இவ்வணை உள்ளது.மழைக்காலங்களில் மட்டுமே அணை நிரம்பி வழியும். மழை இல்லாத காலங்களில் மட்டுமே அணை வறண்டு விடும்.குண்டேரிபள்ளம் அணையின் மூலம், 2,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. பெரும்பாலும் கடலை, எள் போன்றவை அதிகளவில் பயிரிடப்படுகிறது.அணையில் இருந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், 10 நாட்களுக்கு ஒரு என்ற வீதம், 50 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்ற ஆண்டில் நீலம் புயலால், ஓரளவுக்கு மழை பெய்ததால், 27 அடி தண்ணீர் வசதி உள்ளது.குண்டேரிபள்ளம் அணையின் மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. அணையில் உள்ள தண்ணீரை நம்பியே உள்ளன. மாலை நேரத்தில் யானை கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூட்டமாக சென்று பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளன.

சமூகவியல் மாணவர்களுக்கு உதவித்தொகை


சமூக அறிவியல், சமூகவியல் துறை தொடர்பான மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் செல்வதற்கான களம் மற்றும் உதவித்தொகையை PCF(People Care Family) தன்னார்வ அமைப்பு வழங்குகிறது.

லெப்டினன்ட் பஸுடியோ சவ்பே கல்வி உதவித்தொகை என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இன்டர்ன்ஷிப் எனப்படும் படிப்பின் போதான களப்பயிற்சிக்கும் உதவுகிறது. கிராமப்புறப் பகுதிகளில் தங்களின் திட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இவ்வமைப்பு உதவுகிறது. மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற, தங்களது சுயவிவரம், திட்டம் சார்ந்த சிறுவிளக்கக் கட்டுரையை வரும் பிப்., 14ம் தேதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு PCFன் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம் : உள்த்துறை அமைச்சர் ஷிண்டே

மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அளித்த பேட்டியில், சம்‌ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மக்கா  மஸ்ஜித் குண்டுவெடிப்பு  மலேகான் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகளின் பயங்கரவாத செயல்களால் தான் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தான் முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டனர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.


ஷிண்டேவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஷிண்டேவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகையில், பயங்கரவாதத்திற்கு நிறம் ஏதும் கிடையாது. இதனை சோனியா ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளார் என கூறினார்.

மத்திய அரசு அறிவித்த பல திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை: பிரதமர்


மத்திய அரசு அறிவித்த பல திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பிரதமர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றியுள்ளோம். அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் வளர்ச்சி வீதம் 5.5 சதவீதமாக இருந்தது. ஆனால் பொருளாதார மந்தநிலையிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக எட்டப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் பல திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை. மத்திய அரசின் திட்டங்களை காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் தமக்கு சாதகமாக்கியுள்ளன.

விலைவாசி உயர்வு நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யில் ஏற்பட்ட விலை ஏற்றமே இதற்கு காரணம். பணவீக்கத்துக்கு எதிராக நாம் போராட வேண்டும் என இவ்வாறு பிரதமர் கூறினார்.