Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மத்திய அரசு அறிவித்த பல திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை: பிரதமர்


மத்திய அரசு அறிவித்த பல திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பிரதமர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றியுள்ளோம். அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் வளர்ச்சி வீதம் 5.5 சதவீதமாக இருந்தது. ஆனால் பொருளாதார மந்தநிலையிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக எட்டப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் பல திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை. மத்திய அரசின் திட்டங்களை காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் தமக்கு சாதகமாக்கியுள்ளன.

விலைவாசி உயர்வு நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யில் ஏற்பட்ட விலை ஏற்றமே இதற்கு காரணம். பணவீக்கத்துக்கு எதிராக நாம் போராட வேண்டும் என இவ்வாறு பிரதமர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக