Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 8 டிசம்பர், 2012

களக்காடு புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி


களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள தலையணை மற்றும் நம்பிகோயில் ஆறுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உட்பட பல்வேறு புலிகள் காப்பகங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக தலையணை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் சில கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கியது. அனுமதி வழங்கிய பின்னரும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முண்டந்துறையில் நடந்தது. இதில் கலெக்டர் செல்வராஜ் மற்றும் வனத்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ., உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் களக்காடு வனப்பகுதியில் உள்ள தலையணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று முதல் களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக புலிகள் காப்பக துணை இயக்குநர் சேகர் தெரிவித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

45 ஆண்டுகளுக்கு பின் பாலஸ்தீனம் திரும்பிய தலைவர்


பாலஸ்தீனத்தின் தலைவர் களில் ஒருவரான காலீத் மெஷால், 45 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை, இஸ்ரேல் இன்னும் தன் வசம் வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில், குடியிருப்புகளை கட்டவும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

தங்கள் பகுதிகளை ஒப்படைக்கும் படி, பாலஸ்தீனத்தினர் நீண்ட நாட்களாக போராடி வருகின் றனர். பாலஸ்தீன தனி நாடு தீர்மானம் சமீபத்தில் தான், ஐ.நா.,வில் நிறைவேற்றப் பட்டது. இஸ் ரேலுடன், நீண்ட நாட்களாக நடந்த சண்டையின் காரணமாக, ஹமாஸ் அமைப் பின் தலைவர் களில் ஒருவரான காலீத் மெஷால், 45 ஆண்டுகளுக்கு முன் குவைத்தில் தஞ்சம் புகுந்தார். ஈராக் போர் தொடுத்ததால், ஜோர்டானில் குடிபெயர்ந்தார்.

பாலஸ்தீனத்திற்கு நிதி திரட்டி வந்த மெஷாலை கொல்ல, இஸ்ரேலிய உளவு படையினர் திட்டமிட்டிருந்தனர். இதனால், அவர், கத்தார் நாட்டுக்கு சென்றார். பின், சிரியாவில் தஞ்சம் அடைந்தார்.ஹமாஸ் அமைப்பின் ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக, 45 ஆண்டு களு க்கு பின், நேற்று அவர் காசாவுக்கு திரும்பினார். பாலஸ்தீன பிரதமர், அவரை வரவேற் றார். இன்று நடக்கும்  பேரணியில், காலீத் மெஷால் சிறப்புரையாற்ற உள்ளார்.

அந்நிய முதலீட்டின் மூலம் உண்மையான பசுமை புரட்சி : பிரதமர் மன்மோகன்


பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற எங்களது முயற்சிக்கு பஞ்சாப் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் சிறந்த ஆதரவு அளித்தன. அன்னிய முதலீடு, நமது விவசாயிகளுக்கும், நுகர்வோர்க்கும், நமது மக்களுக்கும் நிச்சயம் பயனளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக வும், விவசாய வளர்ச்சி 4 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடையவும், விவசாய துறையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் மேலாண் அனுபவங்கள் பெறவும் அன்னிய முதலீட்டை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்னிய முதலீட்டின் மூலமாக விவசாயத்துறையில் புதிய முதலீடுகள் செய்யப்படும். கடினமாக உழைக்கும் பஞ்சாப் மற்றும் இதர மாநில விவசாயிகள், இதன் மூலமாக உண்மையான பசுமைப்புரட்சியையும், உணவு பாதுகாப்பையும் ஏற்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மோடிக்கு விசா இல்லை,தடை தொடரும் : அமெரிக்கா


 குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குஜராத்தில் கலவரத்துக்கு காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டி மோடிக்கு விசா மறுப்பு கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியது: அமெரிக்க எம்.பி.க்கள் எழுதிய கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற அமெரிக்காவின் கொள்கையிலும் மாற்றம் இல்லை.

குஜராத் மாநிலத்துடன் வர்த்தக உறவு, முதலீடு, பல்கலைக்கழகங்கள் அளவிலான தொடர்புகள் தொடரும். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்து விட்டதா என்ற கேள்வியை இந்திய அரசிடம்தான் கேட்க வேண்டும் என்றார் மார்க் டோனர்.

எஃப்டிஐ விவகாரம்: தொடர்ந்து இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) அனுமதிப்பது தொடர்பாக நிலவும் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, எனவே எஃப்டிஐ குறித்து அங்குள்ள அனைவரும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதன் சாதக, பாதகங்களை ஆய்வு செய்யவும், பொருளாதார நன்மைகளை அளவிடவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.