Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 29 ஜூன், 2013

அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..!

தமிழக கல்வி அமைச்சர் வைகை செல்வன் அவர்களின் அருப்புக்கோட்டைக்கு பக்கத்து தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில்தான் இந்தசம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் பூதலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டகிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

போதிய கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியிலும். அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்திலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

வகுப்புகளில் கரும்பலகைகள் இல்லாமல் சுவரில் எழுதி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால் மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை விடும் சூழ்நிலை உள்ளது.

மேல்நிலையில் கணிதம் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டது. ஆனால் கணித பாடபிரிவுக்கு மட்டும் 2 ஆசிரியர்கள் நியமனம்செய்யப்பட்டனர். வரலாறு பாட பிரிவுக்கு ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை.

ரூ. 53 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி இன்னமும் கட்டி முடித்தபாடில்லை.

இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பெற்றோர்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து மாணவ,மாணவிகளை வெளியே அனுப்பிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு விட்டனர்.