Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆகஸ்டு 15 : தன் கல்லூரிப்படிப்பை தாய் நாட்டிற்காக துறந்த கண்ணியத்தலைவரை நினைவு கூறுவோம்

இந்திய இஸ்லாமியர்களின் உரிமையை பெற்றுத்தந்த தலைவராக  விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப்(ரஹ்). நீண்ட காலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர். அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். 

தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். நேரு,இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார். இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896 ம் ஆண்டு பிறந்தார். 

இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் குர்ஆனும்,இஸ்லாமிய நடைமுறைகளையும் கற்றுக்கொடுத்தார். திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். 

பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920 ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார். 1936 ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 

1945 ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1946 முதல் 52 ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952 ம் ஆண்டு முதல் 58 ம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராக பதவி வகித்தார். 

1962 ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர். 

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி.இவர் 1962 ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

 "காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25 ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31 ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஏப்ரல் 4 ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. 

தொடர்ந்து மோசம் அடைந்தது. முதல் அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர். அன்றைய தினம் (4.4.1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. 

 முஸ்லிம் லீக் தொண்டர்களும் ,அரபிக் கல்லூரிகளின் மாணவர்களும்  அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள். நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76. 

மறுநாள் (5 ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள். 

முதல் அமைச்சர் கருணாநிதி, காலை 8.25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர். பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். 

 பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. 

அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல் அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர். 

தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள். இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. 

அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது: 

"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல  இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது. 

எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்." 

இவ்வாறு கருணாநிதி கூறினார். 

கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள். பாராளுமன்றம்  சட்டசபை அனுதாபம் இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல் மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். 

டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர்களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

தமிழகத்தில் பிறந்த பச்சை தமிழனாக சுற்றி வந்த பெருமகனார் காயிதே மில்லத் ( ரஹ்) அவர்கள் ,கேரளா மண்ணிலிருந்துதான் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டார்களே தவிரே ,தமிழ் நாட்டிலிருந்து ஒருமுறை கூட தேர்ந்தெடுத்து அனுப்பப்படவில்லை,என்பது தமிழகத்திற்கு ,குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு கரும் புள்ளி என்பதை யாராலும் மறுக்க முடியாது .

பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை


இளநிலை பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உத்திரப்பிரதேச அரசின் சாத்ரா கல்யாண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி:
இளங்கலை பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பு : முந்தைய வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பி.எச்டி., : முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். காலம்: ஒரு ஆண்டு
மதிப்பு:
விவசாயம் மற்றும் பொதுப்பிரிவு இளநிலை பட்டம்: 2,400 ரூபாய்
தொழில்நுட்பம்/மருத்துவம் இளநிலை பட்டம்: 3,600 ரூபாய்
விவசாயம் மற்றும் பொதுப்பிரிவு முதுநிலை பட்டம்: 3,000 ரூபாய்
தொழில்நுட்பம்/மருத்துவம் முதுநிலை பட்டம்: 4,800 ரூபாய்
பி.எச்டி.,:
வகுப்பு ஏ: ஆறாயிரம் ரூபாய்
வகுப்பு பி: எட்டாயிரம் ரூபாய்
வகுப்பு சி: பத்தாயிரம் ரூபாய்
வகுப்பு டி: 12 ஆயிரம் ரூபாய்
இதர தகுதிகள்:
இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம்:  பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/- க்கு குறைவாக இருக்க வேண்டும்.

பி.எச்டி.,: பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
உதவித் தொகை விபரம்:உதவித் தொகை எண்ணிக்கை : தகுதி அளவைப் பொறுத்தது
கால அளவு: ஒரு ஆண்டு                                                                             
வழங்கப்படும் தொகை:                                                               பட்டப்படிப்பு படிப்போருக்கு : விவசாயம் மற்றும் பொதுப்பாடப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.2400/-
பட்டதாரிகளுக்கு: தொழில்நுட்பம் / மருத்துவம் ரூ.3600/-
முதுகலை பட்டம் படிப்பவர்களுக்கு : விவசாயம் மற்றும் பொது பாடப்பிரிவு ரூ.3000/-
முதுகலை பட்டம்: தொழில் நுட்பம் / மருத்துவ படிப்புகளுக்கு ரூ.4800/-பி.எச்டி., படிப்போருக்கு: * பிரிவு ஏ ரூ.6000, * பிரிவு பி ரூ.8000 * பிரிவு சி ரூ.10,000/- * பிரிவு டி ரூ.12,000/-
விண்ணப்ப நடைமுறைகள்:
பிரிவு ஏ:
இந்தி, உருது, அரபி, பெர்சியன், வரலாறு,தத்துவம், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், இசை, இதழியல், சமூக சேவை.

பிரிவு பி:
பொருளாதாரம், வர்த்தகம், மனித அறிவியல், கல்வி, ராணுவம், <உளவியல், மொழியியல், பழைமையான வரலாறு, தொல்பொருள் ஆய்வியல்

பிரிவு சி:
புவியியல், ரசாயனம், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விவசாயம், மருத்துவம், பொறியியல், கணிதம், புள்ளியியல், டிராயிங், ஓவியம், வனம் சுற்றுச் சூழல்.

பிரிவு டி:
பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, பயோ இன்ஸ்ட்ரூமென்டேசன், பயோ மெட்ரிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, சுற்றுச் சூழல் மற்றும் எரிதி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்.

கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அலகாபாத்.

Scholarship : பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை
Course : பி. இ., பி.டெக்.,பி.டிசைன். பி.பார்ம்.,
Provider Address : INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY, ALLAHABAD, The Director, IIIT- Allahabad (IIIT-A), Deoghat Jhalwa, Allahabad 211 011 (UP), Tel:0532-2431684, 2552380, Fax: 0532-2430006, E-Mail: contact@iiita.ac.in, www.iiita.ac.in

உலக பாரம்பரிய சின்னமாகிறது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை


கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலாத் துறை, பாரம்பரிய சின்னங்கள் பட்டி யல் சேர்க்கை குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கு ஒன்று சென்னையில் நடந்தது. இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர். 

இதில் சென்னை செயி ன்ட் ஜார்ஜ் கோட்டையை பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பது குறித்த பரிந்துரை கட்டுரையை பேராசிரியர் ஸ்ரீராம் சமர்ப்பித்தார். அதே போல பெர்ணார்டு டிராகன் என்ப வர் செட்டிநாடு குறித்தும், ரூப்மதி ஆனந்த் என்பவர் ஸ்ரீரங்கம் கோயில் குறித்தும், சேவியர் பெணடிக்ட் என் பவர் புலிக்காடு குறித்தும் தங்களது பரிந்துரை கட்டுரைகளை அளித்துள்ளனர். 

உலக பாரம்பரிய சின்னங்கள் குறித்த ஆலோசனைக்குழு தலைவர் சுஜித் பாணர்ஜி இந்த கட்டுரைகளை பெற்றுக்கொண்டு, கட்டுரைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த இடங்கள் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வரலாறு 

 இந்தியாவில் பிரித்தானியரின்முதலாவது கோட்டையாகும். இது, 1639ஆம் ஆண்டில் கரையோர நகரானமதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிகநடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.1678ம் ஆண்டு…கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலராக இருந்தவர் பிரான்சிஸ் டே. இவர் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை வாங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானம் இருக்கும் இடத்தில் போர்ட் ஹவுஸ் என்ற கட்டடத்ததைக் கட்டினார்.  1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்குஅண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர்
இந்தக் கோட்டையை வடக்கு தெற்காக 108 கஜங்களும் கிழக்கு மேற்காக 100 கஜங்களாக இருக்குமாறு அமைத்தனர். அன்று கட்டப்பட்ட கோட்டை அப்படியே 1714 வரை இருந்ததாகத் தெரிகிறது. கோட்டை கட்டப்பட்டதே ஒரு தனியான சரித்திரம். கோட்டை கட்டுவதற்கான முதற்கல் 1640 மார்ச் முதல் தேதியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 1642 ஜனவரி 27ஆம் தேதியிடப்பட்ட ஒரு குறிப்பில் “சூரத் தலைமையிடத்தை இந்த ஜார்ஜ் கோட்டை” என்றே குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பிற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே ஒரு டச்சுக் குறிப்பு இதை ‘செ, ஜார்ஜ் கோட்டை’ என்று அடையாளம் காட்டுகிறது
இந்தக் கருத்து சரியாக இருக்க முடியாது என்று வேறு சிலர் கூறுகிறார்கள். ஏனெனில் மார்ச் முதல் தேதியன்றே ஆரம்பித்திருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் கட்டியிருக்க முடியாது. இங்கிலாந்தின் ரக்ஷகராகக் கருதப்படும் புனித ஜார்ஜ் முனிவர் பெயரில்தான் இந்தக் கோட்டையைக் கட்டியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தக் கட்டடம் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான 23.4.1640 அன்று பயன்பாட்டுக்கு வந்தபோது,“செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ என்று பெயரிடப்பட்டது. கோட்டை வளாகத்தில் தொன்மையான புனித மேரி ஆலயம் ஒன்று உள்ளது. கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும்,ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினஅரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.
6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது. அங்குள்ள மிக உயரமான கொடிமரத்தைப் போலவே கம்பீரமானது.
கோட்டையின் கொடிக்கம்பம் வந்ததே ஓர் அற்புதமான கதையாகும். 1687ஆம் வருடத்தில் கவர்னராக யேல் இருந்தபோதுதான் இந்தக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. லாயல் அட்வெஞ்சர் என்றறியப்பட்டு, அப்படித்தான் நினைக்கப்படுகிறது.
கரை தட்டி உடைந்த கப்பலின் பெயர் லாயல் அட்வெஞ்சர் ஆகையால் அக்கப்பலிலிருந்துதான் கொடிக் கம்பம் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கப்பலின் கொடிக்கம்பத்திலான கம்பம் அக்கப்பலிலிருந்து எடுக்கப்பட்டு கோட்டையில் ஒரு கொத்தளத்தில் நிறுத்தப்பட்டது. இதன் உயரம் 50 அடி. இதுதான் இந்தியாவிலேயே அதிக உயரமான கொடிக்கம்பம். முன்பு குறிப்பிட்டது போலவே முதல் முறையாக கவர்னர் யேல் இங்கிலாந்தின் சென் ஜார்ஜ் கிராஸ் வடிவத்துடன் கூடிய கொடியை 1687ஆம் ஆண்டு முதல் முறையாக ஏற்றினார். இந்திய சுதந்திரத்தின் போது இதில்தான் மூவர்ணக் கொடியும் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
   ஜார்ஜ் கோட்டை இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இந்தியாவில் கட்டிய முதலாவது பிரமாண்ட கோட்டை என்ற பெயரைக் கொண்டது. 1639ம் ஆண்டு அப்போதைய மதராஸில் இது கட்டப்பட்டது. இந்தக் கோட்டைதான் சென்னைப் பட்டணத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மூல வேராகும். இந்த கோட்டையை மையமாகக் கொண்டுதான் சென்னை மாநகரம் வியாபித்து வளர ஆரம்பித்தது.
கிழக்கிந்திய கம்பெனியினராக உள்ளே நுழைந்த வெள்ளையர்கள், மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்டன.
.தமிழகத்தின் செயல்பாடுகளைத் தன்னகத்தே வைத்துள்ளது இந்தக் கட்டிடம். ஆம், இந்த புனித ஜார்ஜ் கோட்டை எத்தனை அரசுகளைப் பார்த்திருக்கிறது. எத்தனை மனிதர்களின் பேச்சுக்களை கிரகித்துக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் கட்டப்பட்ட ‘கவுன்சில் அறைகள்’ 1693ம் ஆண்டில் தகர்க்கப்பட்டு, புது அமைப்புகள் உண்டாக்கப்பட்டன. நந்தானியல் ஹிக்கின்ஸ் கவர்னராக இருந்தபோது கட்டப்பட்ட அலுவலகங்களில் சில இன்னும் உள்ளன. சட்டசபையில் இருக்கும் சபை தலைவர் நாற்காலி, இங்கிலாந்தின் ‘ஹவுஸ் ஆஃப் காமர்ஸ்’ஸில் இருப்பது போலவே அமைந்திருக்கும் இந்த அசெம்பிளி நாற்காலியே ஒரு கதை சொல்லும். லார்ட் விலிங்டன் கவர்னராக இருந்தகோதுதான் இந்த நாற்காலி சபைக்கு வழங்கப்பட்டது. தனது மனைவி விலிங்டனுடன் சேர்ந்து இந்த நாற்காலியை 1922 ஆம் வருடம் மார்ச் மாதம் 6 ஆம் தேதியன்று அசெம்பிளிக்கு பரிசாக அளித்தார்.