Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 23 அக்டோபர், 2012

வடசென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் மரணம் ..!

ஜனாப் .ரப்பானி அப்துல் குத்தூஸ் சாஹிபு ...................

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மாவட்ட வரலாற்றில் முக்கியமானவர் ;ஏனென்றால் ,சென்னையில் முஸ்லிம் லீக்கின் மூலம் பல்வேறு பதவிகளை அனுபவித்தவர்கள் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது அவர்களை விட்டு ,கட்சியை விட்டு ஓடிய கால கட்டத்தில் , முஸ்லிம் லீக்கின் கொடியை சென்னை வீதிகளில் தூக்கிப் பிடித்த மனிதர் அவர் .

மணிச்சுடருக்காக கடைசி காலம் வரை தன்னால் இயன்றவரை பாடுபட்டவர் ,பணியாற்றியவர் . சிராஜுல் மில்லத் மற்றும் முனீருல் மில்லத் ஆகியோரின் அன்பையும் ,முஸ்லிம் லீக்கின் அடிமட்ட தொண்டன் வரையிலானோரின் மதிப்பை பெற்றவர் ,வல்ல அல்லா அவரின் ,நற்செயல்களை ஏற்றுக்கொண்டு ,பிழைகளை பொருத்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!    -- ஆசிரியர் 


நெல்லை மாவட்டத்தில் சேதமடைந்த பஸ்கள் இயக்கம் பயணிகளுக்கு ஆபத்து


நெல்லை யில் அரசு மற்றும் தனியார் மூலம் இயக்கப்படும் பஸ் கள் ஓட்டை உடைசலாக காணப்படுகின்றன. இத னால் பயணிகளின் உயி ருக்கு பாதுகாப்பற்ற சூழ் நிலை நிலவுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 கோட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான பஸ்கள் பல் வேறு பகுதிகளுக்கு இயக் கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் பழு தடைந்த நிலையில் உள் ளன. இதனால் பொதுமக் கள் தினமும் அவஸ்தை பயணத்தை அனுபவித்து வருகின்றனர்.

பொதுவாக புதிதாக இயக்கப்படும் ஒரு பஸ் அதிகபட்சம் 5 லட்சம் கிமீ தூரம் மட்டுமே இயக்கப்பட வேண்டும். பின்னர் அந்த பஸ்சின் இன்ஜினை மறு சீரமைப்பு செய்து அதில் தேய்மானம் அடைந்த உதிரி பாகங்களை மாற்ற வேண்டும். ஆனால் நெல்லை கோட்டத்தில் அதிகமான பஸ்கள் 12 லட்சம் கி.மீ. தாண்டியும் கிராமபுறங்களுக்கு இயக்கப் பட்டு வருகின்றன. இதில் மேலப்பாளையம், கோபா லசமுத்திரம், மேலச்செவல் போன்ற பகுதிகளுக்கும் பழைய பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.
இதற்கு காரணம் 1997ம் ஆண்டுக்கு பிறகு போக்குவ ரத்து கழகத்தில் தொழில் நுட்ப பணியாளர்கள் பற் றாக்குறை ஆகும். இதனால் பஸ்கள் பராமரிப்பு பணி மோசமானது. இந்நிலையில் நெல்லை கோட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 263 புதிய பஸ்கள் தற்போது பல பகுதிகளில் இயக்கப் பட்டு வருகின்றன. ஆனால் கிராமப்புறங்களுக்கு பழைய பஸ்கள் இயக்கப்படு வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதேபோல் நெல்லை மாநகர பகுதியில் இயக்கப்ப டும் தனியார் பஸ்கள் பல ஓட்டை உடைசலாக உள் ளன. இந்த பஸ்கள் வருமா னத்தை மட்டுமே குறிக்கோ ளாக கொண்டு இயக்கப்படு கின்றன. படிக்கட்டுகள் உடைந்தும், பஸ்சின் பின் பக்க கண்ணாடி இல்லாம லும் பஸ்களை இயக்கும் நிலை நீடித்து வருகிறது. மினி பஸ்கள் பல பராமரிப் பின்றி பொதுமக்களையும், இரு சக்கர வாகன ஓட்டிக ளையும் மிரட்டும் வகையில் இயக்கப்படுகின்றன.
சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அள வுக்கு அதிகமாக பொருட் களை ஏற்றிச்சென்றால் போக்குவரத்து போலீசார் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால் படிவரை பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை அவர்கள் கண்டுகொள்வ தில்லை. தற்போது வண் ணார்பேட்டை வணிக நிறு வனங்களின் கூடாரமாக மாறிவருகிறது. இதனால் பயணிகளை ஏற்றி இறக்க அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் முண்டியடித்து செல்லும் நிலை தொடர்கிறது.

இதனை தவிர்க்க போக் குவரத்து போலீசார் கண் காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து போக்குவ ரத்து விதிகளை மீறி இயக் கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக நல ஆர்வலர் கள் தெரிவித்துள்ளனர்.

வேலைக்காக மும்பைக்கு அழைத்து செல்லப்பட்ட 17 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கடலூர் மாவட்டத்திலிருந்து வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட 17 பழங்குடி இன சிறுவர், சிறுமியர்கள் மும்பையில் மீட்கப்பட்டனர்.பழங்குடி இருளர் மக்கள் கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மரியநாதன், சின்னத்தம்பி, கோவிந்தன், ராஜா ஆகியோர் கடலூர் சங்கொலிக்குப்பம் பகுதியில் இருளர் மக்களிடம் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.மும்பையில் கவரிங் நகை செய்யும் வேலை. பிள்ளைகளை அனுப்புங்கள். மாத சம்பளம் 4,500 உங்கள் பெயருக்கு அனுப்பி விடுகிறோம். முன் பணமாக 5 ஆயிரம் தருகிறோம் என்றனர். ஆசை வார்த்தையை நம்பிய இருளர் மக்கள் தங்கள் 17 பிள்ளைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மும்பைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மும்பை மலாடு என்ற பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கவரிங் நகைகள் செய்யும் வேலையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 3 மாதங்கள் கழிந்த நிலையில் சம்பளம் வரவில் லை, பிள்ளைகளுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில் டி.எஸ்.பேட்டையை சேர்ந்த கண்ணப்பன், சுப்பிரமணியம், ஆகியோருக்கு மும்பை ஏஜன்டுகள் போன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் பிள்ளைகளை காணவில்லை எனக்கூறி தொடர்பை துண்டித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கம் மூலம் கடந்த 17ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்து குழந்தைகளை மீட்டு தருமாறு மனு அளித்தனர். குழந்தைகளை மீட்க வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது. அப்போது மும்பையில் காணவில்லை எனக்கூறப்பட்ட 3 சிறுவர்களும் டி.எஸ்.பேட்டைக்கு வந்தனர். அவர்களிடமிருந்து போன் நம்பர்களை பெற்ற தனிக்குழுவினர் மும்பையில் சிறுவர்கள் வேலை செய்து வந்த கம்பெனிகளை தொடர்பு கொண்டனர். உடனே அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள். இல்லை என்றால் சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த 14 சிறுவர், சிறுமிகள் கடந்த 20ம் தேதி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 21ம் தேதி வேலூர் காட்பாடி வந்து அங்கிருந்து நேற்று காலை கடலூர் வந்து சேர்ந்தனர்.

சுற்றுச்சூழலியல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்


இயற்கை சமநிலையை பாதுகாக்க, உலக நாடுகள் சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பற்றிய படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது படிப்பாக மட்டும் பார்க்கப்படாமல் சமூக சேவையாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழலில் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் இத்துறையில் பணிபுரிய விரும்புகின்றனர். சுற்றுச்சூழலியல் துறையில் இளநிலை, முதுநிலை மற்றம் டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன.

தகுதிகள்:
சுற்றுச்சூழல் பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர், பிளஸ் 2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். அறிவியல் அறிவு, ஆராய்ச்சியில் ஆர்வம் மற்றும் தகவல் தொடர்பு திறன் இத்துறைக்கு இன்றியமையாதவை.

சுற்றுச்சூழலியல் பட்டப்படிப்புகள்:
* பி.எஸ்சி., சுற்றுச்சூழலியல் அறிவியல்
* எம்.எஸ்சி., சுற்றுச்சூழலியல் அறிவியல்
* பி.இ., சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்
* எம்.டெக்., சுற்றுச்சூழல்

இன்ஜினியரிங்:
* எம்.டெக்., சுற்றுச்சூழலியல் அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்
* எம்.டெக்., எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
* டிப்ளமோ - சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலியல் அறிவியல் போன்ற படிப்புகள் இந்த துறையில் காணப்படுகின்றன.


கல்வி நிறுவனங்கள்:
இந்தியாவில் சுற்றுச்சூழலியல் கல்வி நிறுவனங்கள்.
* விவசாய பல்கலைக்கழகம், கோவை
* ‘ஸ்கூல் ஆப் என்விரான்மென்டல் சயின்ஸ்’, டில்லி
* எஸ்.என்.டி.டி., பெண்கள் பல்கலைக்கழகம், மும்பை
* டில்லி பல்கலைக்கழகம், டில்லி
* பி.இ.எஸ்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மாண்டியா
* எல்.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஆமதாபாத்

வேலைவாய்ப்புகள்:

சுற்றுச்சூழலியல், ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களில் இத்துறையினருக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுற்றுச்சூழலியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. சுகாதார அமைப்புகள், இயற்கை சார்ந்த சமூக அமைப்புகள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

தகவல் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த துறையில் தனியார் நிறுவனங்களில் துவக்கத்தில் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழலியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இயற்கையை காப்பாற்றும் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் மனநிறைவு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.