Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 10 செப்டம்பர், 2012

சச்சார் கமிசனும் ,ரங்கநாத் மிஸ்ரா கமிசனும் அமைக்க முழுக்காராணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : இ.அஹமது சாஹிப்


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்ப கோணம் அல்-அமீன் பள்ளி மைதானத்தில் அல்ஹாஜ் எம்.ஏ. ஜமால் முகைதீன் பாப்பா நுழைவு வாயிலில் அரசியல்ஞானி வடகரை எம்.எம். பக்கர் நினை வரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் `கல்வி விழிப் புணர்வு மாநாடு'மிகப் பிரம் மாண்டமாக நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் மாநில கல்விப் பணி செயலாள ரும், மாநாட்டு அமைப்பாளரு மான ஆடுதுறை ஏ.எம். ஷாஜ ஹான் வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிப் மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, காயிதெ மில்லத் பேரவை சர்வ தேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தமிழாக்கம் செய்தார்.

மாண்புமிகு இ.அஹமது சாஹிப் இம் மாநாட்டில் பேசிய தாவது-

தஞ்சை தரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னோடிகள் மிகப் பிரம்மாண் டமாக ஏற்பாடு செய்திருக்க கூடிய இம் மாபெரும் மாநாட்டில் நான் பங்கேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் இருந்து இந்த இரவு வரை நடக்கின்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கிடைத்த பெரும் பாக்கியத்தை எண்ணி பூரிப்படைகின்றேன்.

இன்று காலையில் நடை பெற்ற முஸ்லிம்களின் கல்வி நிலையும், இடஒதுக்கீட்டின் பயனும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றியவர் கள் பல அரிய கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். நானும் அதிலே கலந்து கொண்டு பல விளக்கங்களை அளித்தேன். இன்று மாலையில் நடை பெற்ற எழுச்சிமிகு ஊர்வலத்தில் அருமைமிகு இளைஞர்களும், அன்பு மாணவர்களும் உணர்ச்சி முழக்கத்தோடு கம்பீரமாக அணிவகுத்து வந்த காட்சியை காணுகின்ற போது எனக்கே ஒரு உத்வேகம் பிறந்து விட்டது.

இந்த அணிவகுப்பில் யானை ஒன்று கம்பீரமாக பீடு நடை போட்டு வந்ததும், குதிரை களில் இளைஞர்கள் கொடி பிடித்து வந்தது மகிழ்ச்சியை தந்தது. அந்த காட்சியை பார்க்கின்ற போது இந்த நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பலம் பொருந்திய யானையைப் போன்று பலம் பொருந்தி செயல்படுகிறது. தலைமை நிலையம் அமைந்துள்ள தமிழ கத்தில் அதன் தலைவர்கள் பலம் மிக்க இயக்கமாக தாய்ச் சபையை வளர்த்து வருகி றார்கள்.

கண்ணியமிக்க காயிதெ மில்லத் சொன்னார்கள்: `இரண் டரை கோடி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று� அவர்கள் காலத்தில் இரண்டரை கோடி முஸ்லிம்கள் இருந்தார் கள். இன்று நமது நாடடில் 18 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார் கள். அவர்கள் அத்தனை பேருக்கும் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்பதை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இளைய தலை முறையா னாலும், மூத்த தலை முறையா னாலும், அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்,

இன்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது ஏதோ கேரளாவிலும், தமிழ்நாட்டில் மட்டும்தான் செயல்படுகிறது என்று. கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரை அது பல்வேறு மாநிலங்களில் பரவி செயல் பட்டு கொண்டு இருக்கிறது.

அஸ்ஸாம் கலவரத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவ ரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் களை பார்ப்பதற்காக என்னு டைய தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு சென்றது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் வந்து கலந்து கொண்டனர்.
அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளாவில் இருந்து ரயில்வே வேகன்களில் ஆடைகளும், தமிழ்நாட்டில் இருந்து பணமும், உணவுப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு ஏறத் தாழ ஒன்றரை லட்சம் மக்க ளுக்கு அவைகளை விநியோ கித்தோம். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. சாதி, சமய வித்தியாசம் இன்றி ஒட்டு மொத்த பாரத மக்களுக்கா கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இத்தகைய கடமைகளை செய்து வருகிறது. முஸ்லிம் லீக் பழமைவாய்ந்த இயக்கம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில பேர் இது மதவாத இயக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மதச் சார்பற்ற தன்மையை கடைபிடிப்பதில் நாம் உறுதியாக இருப்பவர்கள் மட்டும் அல்ல; மதச்சார்பற்ற அரசில் ஆளும் கட்சியாக திகழும் காட்சியை கண்டு கொண்டு இருக்கிறீர்கள்.

முஸ்லிம் லீக் வரலாற்று பேரியக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா வின் எந்த மூலையில் வேண்டு மானாலும் நின்று கொண்டு முஸ்லிம் லீக் என்று சொல்லிப் பாருங்கள். ஜிந்தாபாத் என்ற பதில் கோஷம் உடனே வரும்.

ஆளும் கட்சியாக இடம் பெற்று பேசாமடந்தைகளாக நாங்கள் சும்மா இருக்கவில்லை. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எண்ணற்ற நன்மைகளை பெற்றுத் தரும் பல்வேறு திட் டங்கள் உருவாவதற்கு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கி றோம்.

சச்சார், மிஸ்ரா கமிஷன்கள் வர இ.யூ. முஸ்லிம் லீகே காரணம்
முஸ்லிம்களுக்கு நன்மை கள் கிடைப்பதற்காகத்தான் சச்சார் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு இந்த சமுதாயத் துக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்து வருகின்றன. சச்சார் கமிஷன் அமைக்கப்படுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் காரணம் என்று பெருமைப் படுகிறோம்.

இந்த சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் பாரதப் பிரதமரின் 15 அம்ச திட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாக செயல்படுத்தப்படுவது முஸ்லிம்களுக்கான கல்வி உதவித் தொகை. இந்த உதவித் தொகை கடந்த ஆண்டில் மட்டும் 62 கோடியே 71 லட்சம் நம்முடைய சமுதாயத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது மகத்தான சாதனை ஆகும். நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம், இத்தகைய உதவிகள் செய்யப் படுகின்றன. 

சிறுபான்மை முஸ்லிம் களின் கல்வி நலனுக்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது என்பதை இங்கு மிகுந்த மகிழ்ச்சியோடு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த தொகை போதாது. இது உயர்த்தப்பட வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசாங்கத்தின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சிறுபான்மை பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற கார ணத்தால் எங்கெல்லாம் அந்த வசதி தேவைப்படுகிறதோ அந்த பள்ளிகளில் எல்லாம் குறிப்பாக மாணவர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் பொது சுகாதார வசதிகள் எங்கெல்லாம் தேவைப்படு கிறதோ அங்கெல்லாம் ஒவ் வொரு பள்ளிக்கும் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் முஸ்லிம் சமுதாயம் நடத்துகின்ற பள்ளி களுக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 350 முஸ்லிம் பள்ளிகளுக்கு 135 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள் ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த 50 லட்ச ரூபாயில் மத்திய அரசு 90 சதவிகிதமும், மாநில அரசுகள் 10 சதவிகிதமும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நலத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு பயன ளிக்கும் வகையில் உருவாக் கப்பட்டுள்ள இத் திட்டத்தால் பயன்பெறும் பள்ளிகள் மூலம் எல்லா சமுதாய மக்களும் பயனடைந்து வருகிறார்கள் என்பதற்காக அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசு தரும் 90 சதவிகிதத்தைப் பெற்று தங்களின் பங்களிப்பாக 10 சதவீதத்தையும் சேர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றன. மத்திய அரசு நிதியை செயல்படுத்த மறுக்கும்

குஜராத் பி.ஜே.பி. அரசு

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது ஒரே ஒரு மாநிலம் மட்டும் முஸ்லிம்க ளுக்கு நன்மை பயக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அடம் பிடிக்கிறது. அந்த ஒரு மாநிலம் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் ஆகும்.

90 சதவிகிதம் நாங்கள் தரும் தொகையோடு வெறும் 10 சதவிகிதம் மட்டும் நீங்கள் சேர்த்து இத் திட்டத்தை பயன் படுத்தினால் என்ன என்று கேட்டபோது, நரேந்திரமோடி அரசு சொன்ன பதில், `நாங்கள் 10 சதவிகிதம் தந்தால் தானே 90 சதவிகித உங்கள் பணம் சிறுபான்மை சமுதாய நலனுக்கு செல்லும். ஆகவே, இந்த 10 சதவிகிதம் தரவே மாட்டோம் என அடம் பிடிக்கின்றனர். இதனால் முஸ்லிம் சமுதா யத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மை கிடைக்காமல் இருக் கிறது. இப்படி சாதி, மத வெறி பிடித்த அரசு குஜராத்தில் இருக்கிறது என்பது நமக்கு எல்லாம் வருத்தம் அளிக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசில் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முஸ்லிம்களின் நலனுக் காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கி றார். நாங்கள் அவருக்கு உறு துணையாக ஒருங்ணைப்போடு செயல்படுகிறோம். இன்று, சச்சார் கமிஷன், ரங்கநாத் கமிஷன் அறிக்கை கள் எல்லாம் பெறப்பட்டதற்கு பிறகு முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

சிறுபான்மை முஸ்லிம்க ளுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 4.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அதற்கான திட்டம் தீட்டப்பட்டது. இது போதாது குறைந்தபட்சம் ஆறு சதவீத அளவிலாவது இந்த இடஒதுக்கீடு இருக்க வேண் டும் என முஸ்லிம் சமுதாயம் வேண்டுகோள் விடுத்த நிலை யில் நீதிமன்றத்தால் இது முடக் கப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறையில் நான் அமைச்சராக இருக்கிறேன். இந்த இடஒதுக் கீட்டை எப்படி பயன்படுத்த போகிறோம் என யோசித்துக் கொண்டு இருக்கும்போது எங்கள் கனவில் பேரிடியாக இந்த நீதிமன்ற உத்தரவு ஏற் படுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கின்ற நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். டாக்டர் மன்மோகன்சிங் அரசு பொறுப் பேற்றுள்ள நாள் முதல் பி.ஜே.பி., சிவசேனா கட்சிகள் எல்லாம் எதற்கெடுத்தாலும் கண்மூடித் தனமாக எதிர்ப்பதையும், நாடாளுமன்றத்தை முடக்குவ தையும் வழக்கமாக கொண்டுள் ளன. இதற்கு காரணம் சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத் திற்கு இந்த அரசு நன்மைகள செய்து வருகின்றது என்பதால் தான்.

ஊழலில் ஒட்டுமொத்தமாக திகழ்ந்து கர்நாடகத்தை பங்கு போடும் பா.ஜ.க., டாக்டர் மன்மோகன்சிங் அரசை ஊழல் அரசு என குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்பது எங்களின் நிலைப்பாடு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கம் ஜனநாயகத்தின் அத்தனை விஷயங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ள இயக்கமாகும். மதச்சார்பற்ற தன்மையில் ஆழமாகவும், அழுத்தமாகவும் உறுதி கொண்டுள்ள இயக்கம். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் பிரச்சினைகள் வரும் போது விவாதத்திற்கு தயார் ஆகி உண்மைகளை அறிந்து கொள்ள முன்வர வேண்டும். விவாதத்திற்கும் தயாராக இல்லை; நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வரத் தயாராக இல்லை என்றால் இவர்களை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்ச்சபை என்ற வரலாற்று பேரியக்கத்தை தம்முடைய மூத்த தலைவர்கள் தந்துள்ள னர். இந்த பெருமைக்குரிய வரலாற்றை தொடங்கி வைத் தது காயிதெ மில்லத் அவர்கள். அவர்களுக்குப் பின் சையது அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள், சி.ஹெச். முஹம்மது கோயா, ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், சையது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்ட தலைவர்கள் இந்த தாய்ச்சபை யின் பணிகளை நம்முடைய கரங்களில் ஒப்படைத்திருக்கி றார்கள்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற் கும், மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்டவும் மிக உறுதியாக இருந்தார்கள். இந்த அடிப்படை யில்தான் மதச்சார்பற்ற, மத சகிப்புத்தன்மை, மதங்களி டையே வேறுபாடு கிடையாது. எல்லாரும் சகோதர்கள்; நாமெல்லாம் இந்தியர்கள் என்ற உணர்வோடு உறவு முறை களோடு வாழச்செய்வதை எடுத்து இயம்புகின்ற இயக்க மாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயங்குகின்றது.

இந்த இயக்கத்தை அழிப் பதற்கோ, ஒடுக்குவதற்கோ யாராலும் முடியாது. இந்த நாட்டில் கடைசி முஸ்லிம் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை முஸ்லிம் லீக் என்ற இந்த இயக்கம் செயல்படும். முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்!

இவ்வாறு இ. அஹமது சாஹிப் உரையாற்றினார்.