Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 27 ஜூன், 2012

கனவுகள் யாவும் நனவாக நிதிக்குழு வகுத்துள்ள திட்டம்:கே.எம்.கே.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்றைக்குத் தேசிய அளவில் எழுச்சி பெற்று வரும் இயக்கமாக எழுந்திருக்கிறது. இந்தியா முழுவதிலும் ஒரே பெயரில் - இ.யூ. முஸ்லிம் லீக் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது மட்டுமின்றி, கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்சியாகவும், `ஏணிச் சின்னம்� ஒதுக்கப்பட்டுள்ள இயக்கமாகவும் ஏற்றம் பெற்றிருக்கிறது.

1948 மார்ச் 10 முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் இயக்கம் அரசியலில் ஈடுபட்டு வந்திருந்தாலும், இன்றைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் போல் அது எக்காலத்திலும் பெற்றிருக்கவில்லை என்பது சரித்திர உண்மையாகும்.

கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்றுள்ளதால், அதே பெயரில் எல்லா மாநிலங்களிலும் - இந்தியா முழுவதிலும் இயங்கும் அரசியல் இயக்கம் என்னும் சிறப்பைப் பெற்றிருக்கிறது. கேரளாவில் அங்கீகரித்துள்ள ஏணி சின்னத்தில் பிற மாநிலங்களிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரில் போட்டியிடும் வாய்ப்பை இப்பொழுது பெற்றிருக் கிறோம்.

இதற்கு முன்னர் இப்படிப்பட்டதொரு சாதகமான சூழ்நிலை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு இருந்ததில்லை. இன்றைய கேரளாவில் இருந்து இருபது எம்.எல்.ஏ.க்களும், ஐந்து அமைச்சர்களும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.

கேரள எம்.பி.யாகவுள்ள இ.அஹமது, மத்திய வெளி விவகாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்புடன் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

மத்திய அமைச்சராக உள்ள இ.அஹமது, இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராகப் போற்றப்படு கிறார். அவர் சுற்றி வரும் உலக நாடுகள் அனைத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் கட்சியும் இயக்கமும் தனது பெயரில் சுற்றி வருகிறது. இதன்மூலம், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் உலக நாடுகள் அனைத்திலும் இ.யூ. முஸ்லிம் லீக் என்னும் இந்த இயக்கத்தின் சிறப்பும், பெருமையும் ஒளிபரவுவது போல பரவி வருகிறது. 

இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் இல்லாததொரு தனிச் சிறப்பு, இன்றைக்கு இ.அஹமது அவர்களால் இ.யூ. முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டிருக்கிறது.

பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களி லும் உள்ள அரசுத் துறை மேல்மட்ட அதிகாரிகள் மத்தியில் இ.யூ. முஸ்லிம் லீகிற்கு `அஹமது சாஹிப் பார்ட்டி� என்று பெயர் சூட்டப்படுகிறது.

அரசுத் துறைச் செயலாளர்கள், காவல் துறைத் தலைவர்கள் மற்றும் பல துறைகளைச் சார்ந்தவர்களு டன் கலந்துரையாடல் நிகழும் தருணம் ஏற்படும்போதெல் லாம், `நீங்கள் அஹமது சாஹிப் பார்ட்டியா?� என்று கேட்பது இன்றைக்குச் சர்வ சாதாரணமான தொரு செய்தியாகி விட்டது.

இவற்றையெல்லாம் இங்கு எடுத்துக் காட்டுவதன் நோக்கம் வேறொன்றுமல்ல, எல்லோரும் வாய் நிரம்ப வாழ்த்திப் பேசும் ஓர் இயக்கமாக எழுச்சி பெற்றிருக்கும் இ.யூ. முஸ்லிம் லீகை சமுதாய மக்கள் மத்தியில் வேரூன்றச்செய்து, சமுதாயமனைத்தையும் இதன் நிழலில் கொண்டு வந்து சேர்க்கும் பணியை இன்றைக்கு ஒவ்வொருவரும் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றியாக வேண்டும் என்பதற்கே ஆகும்.

கேரளாவில் உள்ளதைப் போல இ.யூ. முஸ்லிம் லீகைத் தமிழகத்தில் வலிமை மிக்கதாக உருவாக்குவதற்குரிய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் இ.யூ. முஸ்லிம் லீகின் செயல் திட்டங்கள் என்று மார்ச் 10 - நிறுவன நாள் கொண்டாடுவது, ஜூன் 5 - காயிதெ மில்லத் பிறந்த தின விழா மற்றும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்துவது, அக்டோபர் 4 - சிராஜுல் மில்லத் பிறந்த தின விழா - சமூக நல்லிணக்க விழா - விருது வழங்குவது - டிசம்பரில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு காண்பது என்பனவற்றை அறிவித்து, அவற்றை ஒவ்வொரு ஆண்டிலும் சிறப்பாகச் செய்து வருகிறோம்.

இயக்கத்தின் பொது நடவடிக்கைத் திட்டங்களுடன், இயக்கத்தின் கட்டமைப்பில் சில புதிய கிளையமைப்பு கள்உருவாக்கியும் வருகிறோம். முஸ்லிம் யூத் லீக், எம்.எஸ்.எஃப் (முஸ்லிம் ஸ்டூடன்ஸ் ஃபெடரேஷன்), எஸ்.டி.யு. (சுதந்திர தொழிலாளர் யூனியன்), வனிதா லீக் (மகளிர் அணி) ஆகிய நான்கும் தேசிய அளவில் உள்ள அமைப்புகளாகும். அவற்றின் கிளைகளைத் தமிழகத்திலும் சிறப்பாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நான்கு அமைப்புகளுக்கும் மேலாக, சார்பு அமைப்புகள் - குறிப்பாக, வர்த்தகர் அணி, விவசாயி அணி, உலமாக்கள் அணி, காயிதெ மில்லத் பேரவை, சிராஜுல் மில்லத் பேரவை, இலக்கிய அணி என்பன போன்ற கிளை அமைப்புகளை மாவட்ட அளவில் ஏற்படுத்திக் கொள்ளும் சிறப்புச் சலுகைகளும் இயக்கச் சட்டவிதிகளில் வரையறை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் இயக்க அமைப்பு முறையிலும், சார்பு கிளைகள் உருவாக்கும் முறையிலும் சிறப்பான பணிகள் தொடர்கின்றன.

இவற்றை இன்னும் ஊக்கப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவ தற்கும் பிரைமரி, நகர, மாவட்ட, மாநில லீகுகளின் பொருளாதார பலமும் அதிகரிக்க வேண்டும். அதற்கான திட்டங்களும், எல்லாக் கட்டங்களிலும் உருவாக்கப் பெற்று சிறப்பாகச்செயல்படுத்தப் படுதல் வேண்டும். சமீப காலத்தில் சில நகரங்களில் இ.யூ. முஸ்லிம் லீகிற்கு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சொந் தக் கட்டடங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய விவரங்கள் தலைமை நிலையத்தில் இருந்தாக வேண்டும் என்பதால், சொத்து விவரங்கள் பற்றிய தகவல்களை தலைமை நிலையத்துக்கு அனுப்பிடக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு மாவட்ட முஸ்லிம் லீக் ஆண்டுக் கூட்டங்களைத் தவறாமல் நடத்திடவும், ஆண்டறிக்கை சமர்ப்பிக்கவும், தணிக்கை செய்யப்பட்டுள்ள கணக்கு சமர்ப்பித்து அவையின் ஒப்புதல் பெறவும், இதுபற்றிய விவரங்களை தலைமை நிலையத்துக்கு அனுப்பித் தரவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மாவட்ட முஸ்லிம் லீகுகள் கட்டாயம் வங்கியில் கணக்கு வைத்திடும் முறையை உடனடியாகச் செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுயாவும் பிரைமரி, நகர, மாவட்ட லீகுகளின் பொருளாதார வலிமையைப் பெருக்கிடுவதற்கான ஆரம்பக் கட்டச் செயல்பாடுகளாகும் என்பதை உணர்ந்து கொண்டு பொறுப்பாளர்கள் பணி தொடர வேண்டும்.

அதோடு, மாநில தலைமை நிலையத்தின் பொருளா தார வலிமை பற்றியும், நிதி சேர்க்க வேண்டிய அவசியம் பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசி வந்திருக்கிறோம். பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்ட ஆலோசனை குழுக்கள் அனைத்திலும் பலப்பல தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.

தலைமை நிலையத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற் குரிய ஆலோசனைகளையும், திட்டங்களையும் வழங்கிடக் கேட்டுக் கொண்டு, மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் அவர்கள் தலைமையில் இயக்க வளர்ச்சி நிதிக்குழு உருவாக்கப் பட்டதும், அதில் எம்.எஸ். துராப்ஷா, தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத், கமுதி பஷீர், ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மில்லத் முஹம்மது இஸ்மாயில், எஸ்.எம். அமீர் அப்பாஸ் ஆகிய உறுப்பினர் கள் இடம் பெற்றுள்ளதும் இயக்கத்தினருக்கு தெரிந்ததே.

கடந்த மூன்றாண்டுகளாக நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களையும் கவனத்தில் கொண்டு, இன்றைக்குள்ள தேவையையும், வருங்காலத்தின் தேவையையும் கருத்திற் கொண்டு இயக்க வளர்ச்சி நிதியை உருவாக்கும் திட்டத்தை தலைமை நிலையத்தில் 26-6- 2012 அன்று இயக்க வளர்ச்சி நிதிக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.

மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் தலைமையிலான நிதிக் குழுவினர் அளித்திட்ட இயக்க நிதி வளர்ச்சித்திட்டம் பற்றிய கலந்தாலோசனையும் நடந்தது.

மூன்றாண்டு காலமாக நாம் கண்டு வந்துள்ள கனவுகள் யாவும் விரைவில் நிறைவேறி நனவாகும் வகையில் நிதிக்குழுவின் திட்டங்கள் அமைந்துள்ளன. அந்த அரிய திட்டங்கள் பற்றியும் அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை விரைவில் இயக்கத்தவருக்கும், சமுதாயத்தவருக்கும் தருவோம்! அனைத்துத் திட்டங்களையும் விரைவில் நிறைவேற இறையருளைப் பெறுவோம்!

இந்திய குடும்பத்திற்கு கின்னஸ் அவார்டா ? இயற்கையான கடினங்களை சந்திப்பது உலக சாதனையா ?



புனேயைச் சேர்ந்த, நாட்டின்மிக உயரமான குடும்பத்தினர்,உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேநகரைச் சேர்ந்தவர் சரத் குல்கர்னி, 52. இவரது உயரம், 7 அடி1.5 அங்குலம். மனைவி சஞ்சோத், 46, உயரம், 6 அடி 2.6 அங்குலம். மகள் ம்ருகா, 22, உயரம்,6 அடி ஒரு அங்குலம். மற்றொருமகள் சன்யா, 16, 6 அடி 4 அங்குலம். ஒட்டுமொத்த குடும்பத்தின் மொத்த உயரம் 26 அடி.குல்கர்னி - சஞ்சோத்துக்கு,1988ல், திருமணம் நடந்தது.1989ல், நாட்டின் உயரமான தம்பதியராக, "லிம்கா சாதனை'ப்புத்தகத்தில் இடம் பெற்றனர். இந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைகளும் உயரமாக இருப்பதால், நாட்டிலேயே உயரமான குடும்பத்தினர் என்ற பெருமை பெற்றுள்ளனர். அமெரிக்காவின், கலிபோர்னியாவின் ஸ்டாக்டன் நகரைச்சேர்ந்த வெயின்-லவுரி ஹால்கிவிஸ்ட் தம்பதியினரின் மொத்தஉயரம், 13 அடி, நான்கு அங்குலம். இந்த தம்பதியர் தான் உலகின் மிக உயரமான தம்பதியர்என, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். விரைவில், உலகின் உயரமான குடும்பத்தினர் என்ற சாதனையை குல்கர்னி குடும்பம்தட்டிச் செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கின்னஸ் சாதனைபுத்தகத்தில் உயரமான குடும்பத்தினர் தொடர்பான பிரிவு தற்போது இல்லை என்பதால்,மீண்டும் அதைச் சேர்ப்பதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
""டீன் ஏஜ் பருவத்தில் என்உயரம், 7 அடியாக இருந்தது. இந்த உயரத்தால் பல விமர்சனங்களைச் சந்தித்துள்ளேன். உயரத்தின் மூலம் விளையாட்டில் சாதிக்க வேண்டும் எனகருதி, என் சக்தியை செலவழித்தேன். குறிப்பாக, கூடைப்பந்துபோட்டியில் சாதிக்க விரும்பினேன். ஆனால், நான் வசித்தது குக்கிராமம் என்பதால், என்முயற்சி பலனளிக்கவில்லை. வித்தியாசமான வாழ்வுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் மகிழ்ச்சி,'' என, சரத் குல்கர்னி தெரிவித்தார்.

அவரது மனைவி சஞ்சோத்,""இந்தியாவில் ஆணை விடபெண் உயரமாக இருப்பது பெண்ணுக்கு சங்கடமாக இருக்கும். என் உயரத்தைப் பார்த்து,மன வருத்தம் அடையக் கூடிய,என்னை விட குள்ளமானவரைநான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஒருநாள் என் கணவர் மும்பை வீதியில் நடந்து சென்றார். என்பாட்டி அவரை அணுகி, என்னை திருமணம் செய்துகொள்வது குறித்து பேசினார்.சில நாட்களில் என் கணவர் அவரது குடும்பத்தினருடன் வந்து,என்னை பேசி மணமுடித்தார்,''என்றார்.
நாட்டின் உயரமான குடும்பதலைவர் என்ற பெருமைக்குசொந்தக்காரரான சரத் குல்கர்னி, அவருக்கு பொருத்தமான உடைகள், காலணிகள் கிடைக்காமல்அவதிபட்டு வருகிறார். அவருக்கு உரிய காலணிகளை,"ஆன்-லைன்' மூலம் பதிவுசெய்து, ஐரோப்பாவில் இருந்து வரவழைக்கிறார். அவரது வீட்டின் சமயலறையில் இருந்து அனைத்து அறைகளும், நீள அகலத்துடன் உள்ளன. இவர்கள்பஸ்களில் பயணிப்பதில்லை.இரு சக்கர வாகனங்களிலேயே செல்கின்றனர்.
மனிதனை எப்படி ,எந்தக் கோணத்தில் ,அழகுடன் படைக்க வேண்டும் என்று அறிந்த எல்லாம் வல்ல இறைவன் படைத்த அந்த உயராமான மனிதர்கள் உள்ள குடும்பத்திர்க்கல்லவோ கின்னஸ் அவார்டு கிடைக்கப்போகின்றது .