Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 29 செப்டம்பர், 2012

இந்தியாவில் ஆண்டு தோறும் 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்


இந்தியாவில் ஆண்டு தோறும் சுமார் 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று சென்னை அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் ஆஸ்பத்திரி சீனியர் கன்சல்டன்ட் ரேடியேஷன் ஆன்கோலஜிஸ்ட் டாக்டர் மகாதேவ் கூறினார்.

இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் பேருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக வயிறு, வாய், மார்பகம், கர்ப்பப்பை, கணையம், மூளை, தண்டுவடம் உட்பட பல்வேறு உறுப்புகளை இந்த நோய் தாக்குகிறது. புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து உரிய சிசிக்சைகளை மேற்கொண்டால் குணப்படுத்தலாம். ஆனால் பெரும்பாலான நோயாளிகள் கடைசி கட்டத்திலேயே கேன்சர் நோய் சிகிச்சைக்கு வருவதால் இதனை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு புற்றுநோய் வகைக்கும் வித்தியாசமான அறிகுறிகள் தென்படும். சில நோய் ஆரம்ப கட்டத்தில் தெரியாது. நோயின் பாதிப்பு தீவிரமடைந்ததும் வெளியே தெரிய வரும். ஆரம்ப காலங்களில் புற்று நோய்க்கு ஆபரேஷன் மட்டுமே சிகிச்சை முறையாக இருந்தது. ஆனால் தற்போது நவீன சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ரேடியேஷன் சிகிச்சையில் "சைபர் நைப்' என்பது நவீன சிகிச்சை முறையாகும். பாதித்த உறுப்பின் மிகவும் சிறிய இடத்திலும் சரியான முறையில் சிகிச்சை அளிக்க இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. ஆபரேஷன் செய்ய முடியாத இடங்களில் இச்சிகிச்சை முறை பயன்படுகிறது. தற்போது நவீன சிகிச்சை முறைகளின் மூலம் 70-80 சதவீதம் நோயாளிகள் இந்நோயில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர்.

 தமிழகத்தை பொறுத்தவரை சென்னை உட்பட பல்வேறு பெரு நகரங்களில் வயிறு புற்றுநோய் பிரச்னையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய் ஏற்படாமல் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ கருத்தரங்குகள், தூத்துக்குடியில் விரைவில் இம்மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விறகு மூலம் மின்சாரம் தயாரிப்பு "யூனிட்' மூடல்


மதுரை மாவட்டம் பேரையூரில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட, விறகு மூலம் மின்சாரம் தயாரிக்கும் "யூனிட்' மூன்றாண்டுகளாக மூடிக்கிடக்கிறது.பேரையூர் பேரூராட்சிக்கு மின்தேவையை பூர்த்தி செய்ய, சமன்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் 2006ல் இந்த "யூனிட்' அமைக்கப்பட்டது. சீமை கருவேல் மரக் குச்சிகளை காய வைத்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை எரிப்பதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகம், குடிநீர் வினியோகத்துக்கான மோட்டார் இயக்கம், பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள விளக்குகள், கடைகளுக்கு தேவையான மின்சாரம், இந்த யூனிட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த யூனிட் துவங்கி சில மாதங்கள் மட்டும் செயல்பட்டது.

இதை இயக்கும் ஆப்பரேட்டர்கள் பற்றாக்குறை காரணமாக காலப்போக்கில் யாரும் இந்த யூனிட்டை கண்டுகொள்ளவில்லை. மூன்றாண்டுகளாக மூடப்பட்டு, தயாரிப்பு இயந்திரங்கள் துருபிடித்து உள்ளன. தற்போது நிலவும் மின்தட்டுப்பாட்டில் இந்த யூனிட்டை செயல்படுத்தினால், பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோக மோட்டாருக்கு மின்சாரம் கிடைக்கும். மின் தடையால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு வராது. பேரூராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை. ரூ.பல லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வீணடிக்கப்படுகின்றன.
பேரூராட்சி நிர்வாக அலுவலர் கலையரசி கூறுகையில், ""விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்ற விவரம் எனக்கு தெரியவில்லை,'' என்றார்.மின் தட்டுபாடு நேரத்தில் இத்தகைய யூனிட்டுகளை பேரூராட்சி நிர்வாகங்கள் இயக்கி, மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

ஆழ்வார்குறிச்சியில் இல்லம் தோறும் காய்கறி தோட்டம்



ஆழ்வார்குறிச்சியில் பரமகல்யாணி கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் இல்லம் தோறும் காய்கறி தோட்டம் எனும் புதிய திட்டம் துவக்கப்பட்டது.
ஆழ்வார்குறிச்சியில் வாழும் குடும்பங்களுக்கு பூச்சி மருந்து, செயற்கை உரம் பயன்படுத்தப்படாத புதிய காய்கறிகளை அவர்களாகவே உற்பத்தி செய்து கொள்வதற்காக இல்லம் தோறும் ஒரு காய்கறி தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறி விதைகளை வழங்கி வீட்டு தோட்டம் அமைப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு கல்லூரி முதல்வர் ரஞ்சித்சிங் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் ஆர்.ரஞ்சித், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். இல்லம் தோறும் காய்கறி தோட்டம் எனும் திட்டத்தை அறிமுகம் செய்து தோட்டம் அமைக்கும் ஆலோசனை, செய்முறை பயிற்சி ஆகியவற்றை என்எஸ்எஸ் அலுவலர் ரஞ்சித் எடுத்து கூறினார்.

என்எஸ்எஸ் திட்ட அணிகள் 18, 19, 120, 177, 178 ஆகியன சார்பில் திட்ட அலுவலர்கள் முத்துலட்சுமி, சுதாகரன், ராஜகோகிலா மேற்பார்வையில் மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் மாரிமுத்து, ராஜசேகர், பாண்டியராஜா, சிதம்பர பிரியதர்ஷினி, மணிமேகலா ஆகிய குழுவினர் வீடு வீடாக சென்று காய்கறி விதைகளை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக டவுன் பஞ்., தலைவர் முத்தையா கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து காய்கறி விதைகளை வழங்கினார். சுதாகரன் நன்றி கூறினார்.

வீடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் காய்கறி விதைகளை பயன்படுத்தி சிறந்த முறையில் காய்கறி தோட்டம் அமைத்திருக்கும் வீடுகளுக்கு 1 மாதத்திற்கு பின்னர் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.


வியாழன், 27 செப்டம்பர், 2012

கேரளாவில் இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம்


இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தின் ஆரன்முளா பகுதியில் அமைய உள்ளது. தேசிய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி பெற்றுள்ள இந்த விமான நிலையத்திற்கு கே.ஜி.எஸ். சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இதுபற்றி பேசிய கே.ஜி.எஸ். நிறுவன இயக்குனர் நந்தகுமார், ‘தேசிய விமான நிலைய ஆணையத்தின் குழு ஒன்று விமான நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளது. ரூ.20000 கோடி செலவில் உருவாகும் இந்த விமான நிலையத்தால் ஆரன்முளா பகுதி, பத்தனம்திட்டை மாவட்டம் மட்டுமின்றி கேரளா முழுவதும் வளர்ச்சி அடையும்’ என்றார்.
 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அருகில் அமைய இருக்கும் இவ்விமான நிலையம், பயன்பாட்டிற்கு வந்தால் சபரிமலை செல்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வழக்கம்போல் இவ்விவகாரத்திலும், விமான நிலையத்தை அமைக்கக் கூடாது என ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாயின. எனினும் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய தகவல்கள் வெறும் வதந்திதான் என கே.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒரே பல்கலையின் கீழ் தொலைதூர கல்வி படிப்புகள் ?


பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும், தொலைதூர கல்வி படிப்புகளை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து, உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை; மதுரை காமராஜர்; பாரதியார்; பாரதிதாசன் பல்கலை என, பல பல்கலைக்கழகங்கள், தொலைதூர கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு பல்கலையிலும், கோடிக்கணக்கில் பணம் புழங்கி வருகிறது. தரமான கல்வி திட்டங்கள் இல்லாதது, நிதியை பயன்படுத்துவதில் முறைகேடு என, பல்வேறு குற்றச்சாட்டுகள் மலிந்து கிடக்கின்றன.

தொலைதூர கல்வி படிப்புகளை நடத்துவதற்கென, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது தான், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துவங்கப்பட்டது. "தொலைதூர கல்வி திட்டத்தில் கிடைக்கும் வருவாயில் தான், பல்கலைகளே இயங்குகின்றன. திடீரென, அத்திட்டத்தை நிறுத்தினால், பல்கலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்&' என, அப்போதிருந்த துணைவேந்தர்கள், அரசிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தொலைதூர கல்வி திட்டங்களை, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, இந்தப் பிரச்னையை முறைப்படுத்தும் முயற்சியில், உயர்கல்வித்துறை இறங்கியுள்ளது. இக்கருத்து குறித்து, ஏற்கனவே உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.

அனைத்து பல்கலைகளில் நடக்கும், தொலைதூர கல்வி திட்டங்களை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் கீழ் கொண்டு வர, உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், தொலைதூர கல்வித் திட்டங்களை தரமானதாக வழங்கவும், முடிவு செய்து உள்ளது.

இத்திட்டம் குறித்து, பட்ஜெட்டுக்கு முன், விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அறிவிப்பாக வெளியாகலாம் என்றும், உயர்கல்வி வட்டாரம் தெரிவித்தது.

அரசின் முயற்சி குறித்து, பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் பிச்சாண்டி கூறியதாவது: இந்த திட்டத்தை முழு மனதுடன் வரவேற்கிறோம். பல்கலைகளுக்கு, தொலைதூர கல்வித் திட்டங்கள், பணம் காய்ச்சி மரங்களாக இருந்து வருகின்றன. எந்த வரைமுறையும் இல்லாமல், காலத்திற்கு ஏற்ற தரத்திற்கு உகந்ததாக இல்லாமல், பெயருக்கு தொலைதூர கல்வி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

சேர்க்கை மையம் பல்கலைகள், போட்டி போட்டுக்கொண்டு, தெருவிற்கு ஐந்தாறு மாணவர் சேர்க்கை மையங்களை துவங்கி, ஏமாற்றி வருகின்றன. தொலைதூர கல்வி திட்டங்களை முறைப்படுத்தி, அனைத்து பல்கலைகளில் நடக்கும் தொலைதூர கல்வி திட்டங்களையும், ஒரு பல்கலையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், தற்போது போதிய பணியாளர் கிடையாது. அனைத்து பல்கலைகளில் உள்ள தொலைதூர கல்வி திட்டங்களை எடுத்து, சிறப்பாக செயல்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்பவசதிகளும் இல்லை.

எனவே, முதலில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையை, அனைத்து வகைகளிலும் வலுப்படுத்தி, அதன்பின் அதன் கீழ் தொலைதூர கல்வி திட்டங்களை கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக, அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். இவ்வாறு பிச்சாண்டி கூறினார்.

புதன், 26 செப்டம்பர், 2012

நெல்லையில் தகிக்கும் வெப்பம்;தவிக்கும் மக்கள்


திருநெல்வேலியில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் 100 டிகிரியைவிட அதிகமாக பதிவாகிவருகிறது. செவ்வாய்க்கிழமை தமிழகத்திலுள்ள பிறநகரங்களை காட்டிலும் அதிகமாக 103 டிகிரி வெயில் பாளையங்கோட்டையில் பதிவானது. தகிக்கும் இந்த வெப்பத்தால் மக்கள் அவதியுறுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் கோடையிலும் தமிழகத்தின் மற்ற நகரங்களைப்போல் 100 டிகிரியையொட்டி வெப்பம் பதிவாகியிருந்தது. கோடைக்குப்பின்னரும் அதே வெப்பநிலை நீடித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் காலநிலையில் மிகப்பெரும் அளவுக்கு மாற்றம் ஏற்படவில்லை. கடந்த மாதத்தில் வானில் மேகங்கள் திரள்வதும், சாரல் மழை பெய்வதுமாக ஓரிரு நாள்களில் காலநிலை இருந்தது. ஆனால், கடந்த 2 வாரமாகமே திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வெயில் சுட்டெரித்தது.
பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒருவாரமாக பதிவாகியுள்ள வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியே இருக்கிறது. கடந்த 18-ம் தேதி 103 டிகிரி வெப்பநிலை இருந்தது.

அதுபோல் செவ்வாய்க்கிழமையும் வெப்பநிலை 103 டிகிரியாக பதிவாகியிருக்கிறது. கடந்த கோடையில்கூட திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் ஒருசில நாள்களை தவிர்த்து மற்ற நாள்களில் 100 டிகிரிக்குள் வெப்பநிலை இருந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளைகளில் நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை பகலில் நகரில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் அவதியுற்றனர். வீடுகளிலும் மக்கள் புழுங்கி தவிக்க நேரிட்டது. ஏற்கெனவே மின்தடையால் பகலில் மின்விசிறிகள் இயங்காமல் மக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழகத்திலேயே அதிகம்: பாளையங்கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை 103 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. இது தமிழகத்தின் மற்ற நகரங்களைவிட அதிகமாகும். வெயில் நகரம் என்றழைக்கப்படும் வேலூரில் 97 டிகிரி வெயில்தான் பதிவாகியிருந்தது.
கன்னியாகுமரியில் 90 டிகிரி, தூத்துக்குடியில் 93 டிகிரி வெயிலும் பதிவானது.
கோடையை மிஞ்சும் வெயில் சுட்டெரிப்பதால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைதூக்கியிருக்கிறது. பல்வேறு இடங்களில் பொது குடிநீர் குழாய்களில் தண்ணீருக்காக நூற்றுக்கணக்கான குடங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களும் காலிகுடங்களுடன் வீதியில் இறங்கி போராட தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக பாளையங்கோட்டையில் பதிவான வெப்பநிலை (பாரன்கீட்):
செப்.18- 103 டிகிரி
செப்.19- 101 டிகிரி
செப்.20- 102 டிகிரி
செப்.21- 101 டிகிரி
செப்.22- 102 டிகிரி
செப்.24- 101 டிகிரி
செப்.25- 103 டிகிரி

திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மை பள்ளிகளுக்கு நிதி: விண்ணப்பிக்க வலியுறுத்தல்

சிறுபான்மை பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி நிதி உதவி பெற தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்.சிறுபான்மை கல்வி நிலையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.இத்திட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், கம்ப்யூட்டர் அறைகள், ஆய்வகம், நூலகம், கழிப்பிடம், குடிநீர் வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசின் நிதி உதவி பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்.


மத்திய அரசு திட்டத்தின் கீழ் முஸ்லிம், கிறிஸ்தர், சீக்கியர், பவுத்தர் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் சார்பாக நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தவர் நடத்தப்படுகின்ற பள்ளிகளின் முழு அஞ்சல் முகவரி, அலுவலக டெலிபோன் எண், பள்ளி தாளாளர் செல்போன் என 3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்க், சங்கம், டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் நிபந்தனைகளை நிறைவு செய்ததை உறுதி செய்து கருத்துருக்களை அனுப்ப வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் பள்ளிகள் தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் விதிகள் 1977 விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் லாபத்தை நோக்கமாக கொண்டு செயல்பட கூடாது.
அரசால் மானியம் பெறும் பள்ளிகள் மானியம் சார்பான விபரங்களை ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்து சான்று பெறப்பட வேண்டும். செலவின மதிப்பீடு ஆடிட்டரால் தயார் செய்யப்பட்டு பொதுப்பணித் துறை நிர்வாக இன்ஜினியரால் மேலோப்பம் செய்யப்பட வேண்டும்.
பதிவு துறையின் கீழ் உள்ள சங்கம் பதிவு சட்டத்தின் கீழ் தன்னார்வ முகமைகள் 6 மற்றும் 7 சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மை நிறுவனங்கள் சிறுபான்மை அந்தஸ்து உறுதி செய்யப்பட்ட அரசாணை இணைத்து அனுப்ப வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை கல்வி நிலையங்கள், பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு கருத்துருக்களை 4 பிரதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக சமர்ப்பிக்க சிறுபான்மை பள்ளி தாளாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி தெரிவித்தார்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடும் --RADIANT IAS ACADEMY


CkR I.H.Gv ALôPª ùTôÚ[ôRôWj§p ©uRe¡V UôQYoLs I.H.Gv úTôu\ EVo TR®LÞdÏ YWúYiÓm Gu\ úSôdLjúRôÓ ©uRe¡V UôYhPUô] ®Ýl×Wm UôYhPj§p, Ls[dϱf£«p ØRuØRXôL ùRôPeLlThPÕ.  CkR ALôPª ¡WNuh Lp® A\dLhPû[«u ¸r CVe¡ YÚ¡\Õ.  CkR ALôPª ©lWY¬-20, 2004p ùRôPeLlThPÕ.  CÕ ùRôPeLlThP Sô°­ÚkÕ Cuß YûW 100dÏm úUtThúPôûW AWÑ A§Lô¬L[ôL EÚYôd¡Ùs[Õ. CkR ALôPª«p T«t£ ùTt\YoLs TpúYß Õû\L°p EVo TR®L°p Es[]o. 
I.H.Gv Utßm CRW úTôh¥j úRoÜLÞdLôL ùT¬V SLWeLÞdÏ ùNuß UôQYoLs T¥dLúYiÓùUu\ ¨ûXûV Uôt±, Ls[dϱf£«úXúV SLWeLÞdÏ ¨LWô] T«t£ûV A°jÕ YÚ¡u\Õ.  CkR ALôPª I.H.Gv,   TNPSC Ïìl-I, II, IV, Ye¡j úRoÜLs, CW«púY úRoÜLs Utßm B£¬Vo úRoYôûQVj úRoÜLÞdÏ £\lTô] T«t£V°jÕ YÚ¡\Õ. 
CkR T«t£ ¨ßY]j§u ¨ßY]j RûXYÚm, CVdÏSÚUô] Bo.CWLUjÕpXô TpúYß LÚjRWeÏLû[ 100-dÏm úUtThP Lpí¬L°p CÕYûW SPj§Ùs[ôo. CYo _Uôp ØLmUÕ Lpí¬«u UôQYo. CYo RªrSôÓ Uô¨X UL°o BûQVj§u JÚe¡ûQlTô[WôLÜm,  RªrSôÓ Y@d× Yô¬Vj§u Lp®dÏÝ Eßl©]WôLÜm T¦Vôt±Ùs[ôo. 

TpúYß SLWeL°p I.H.Gv úTôu\ úTôh¥j úRoÜLs Tt±V ®¯l×QoÜ T«XWeLjûR SPj§Ùs[ôo.  úUÛm Lp®dLôL TpúYßl T¦Lû[ ùRôPokÕ  ùNnÕùLôiÓs[ôo. 
      CkR ALôPª«p £ßTôuûU NêLjûRf úNokRYoLÞdÏ CXYN T«t£Ùm A°dLlTÓ¡u\Õ.  ùTôÚ[ôRôWj§p ©uRe¡V UôQYoLÞdÏ T«t£d LhPQm Ïû\dLlTÓ¡u\Õ.  CkR T«t£ ûUVj§u RûXVôV úSôdLm úTôh¥j úRoÜLs Tt±V ®¯l×QoÜ HtTÓj§, UôQYoLû[ A§p TeùLÓjÕdùLôs[f ùNnÕ, ùYt±ùT\ ûYlTÕRôu. 
      CkR ALôPª«u CVdÏSo Bo. CWLUjÕpXô êuß Øû\ ùTô§ûL ùRôûXdLôh£«p úTôh¥j úRoÜLs Tt± ®[d¡Ùs[ôo.  úUÛm CYo úTôh¥j úRoÜLÞm ùYt±Ùm, Ck§V AW£VXûUl× A¥lTûP E¬ûULs B¡V èpLû[ GݧÙs[ôo.   I.H.Gv Es°hP úTôh¥j úRoÜLû[l Tt±V NkúRLeLÞdÏ GkúSWØm CVdÏSûW ùRôPo×ùLôs[Xôm.  úNûYûV CkR ¨ßY]j§u úSôdLUôL Es[Õ.
தொடர்புக்கு ,
AûXúT£ GiLs - 9842998892  - 9624309314

                                                  
        

அழிந்து வரும் மேற்கு தொடர்ச்சி மலை வனபகுதி


நெல்லை மாவட்டத்தின் வளம் மிக்க பகுதியும், கேரளா எல்லையுமான கடையநல்லூர், மேக்கரை, செங்கோட்டை, குற்றாலம், பழைய குற்றாலம், கடையம், மத்தளம் பறை பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஈத்தல் என்றழைக்கப்படும் மூங்கில் தொடர்ந்து வெட்டப்படுவதால் நீர்பிடிப்பு குறைவதுடன், யானைகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக-கேரள மாநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அரிய வகை மிருகஙகளையும், மரங்களையும், மூலிகைச் செடிகளையும் கொண்ட இயற்கை வளம் மிக்க பகுதியாகும். இங்கு யானை, சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி போன்ற மிருகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மேலும் பறக்கும் அணில் போன்ற அபூர்வ வகை அணில்களும், பலதரப்பட்ட பறவைகளும் உள்ளன. ஏராளமான அருவிகளும், நதிகளும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை நமக்கு தந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும். ஆனால் சமீபகாலமாக மேக்கரை, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இயற்கை வளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
அபூர்வ வகை மரம், மூலிகைச் செடிகள் தீ உள்ளிட்ட சக்தியாலும், சமூக விரோத கும்பல்களாலும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் யானை, மான், மிளா போன்ற உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. காடுகளை பாதுகாக்க வேண்டிய வனத்துறையினர் முழு ஈடுபாட்டோடு செயல்படாததாலும், பல நேரங்களில் காட்டை அழிப்பவர்களோடு கைகோர்த்து செயல்படுவதாலும் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு 33 சதவீதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு மளமளவென குறைந்து தற்போது 18 சதவீதமாக உள்ளதாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காடுகளை பாதுகாக்கவும், காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் ஜப்பான் நாட்டு நிதியுதவியோடு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த டிஏபி எனப்படும் காடுகள் பாதுகாப்பு திட்டமும் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் குறைந்து, மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலை உருவாகி வருகிறது. காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்விற்காகவும், வருமானத்திற்காகவும் காடுகளை நம்பி இருந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பிற்கு திட்டமிடப்பட்டது. அதாவது அவர்கள் காடுகளை நம்பி இல்லாமல் வேறு சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் இத்திட்டம் கடையநல்லூர், செங்கோ்ட்டை, தென்காசி பகுதியில் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் தொடர்ந்து அழிந்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, மேக்கரை, கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூங்கில் அதிகம் வளர்ந்துள்ளது. இந்த வகை மூங்கில் யானைகளுக்கு உணவாவதுடன் நீர்பிடிப்புக்கு அதிகம் துணை செய்கிறது. இதனால் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். இவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் உள்பட எந்த மிருகமும் ஊருக்குள் வராமல் இருந்தன. ஆனால் தற்போது இந்த வகை மூங்கில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களால் அதிக அளவு வெட்டப்பட்டு வருகிறது. அங்கு வளரும் மூங்கில்கள் ஜவுளிக் கடை பைகளுக்கு கைப்பிடியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக அங்குள்ள மூங்கில்களுக்கு சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியில் மூங்கில் அதிக அளவுக்கு வெட்டப்பட்டு செங்கோட்டை பகுதிகளிலேயே சைஸ் செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மூங்கில் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளோடு, வனத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் பல ஆண்டுகளாக இந்த தொழில் தொய்வில்லாமல் நடந்த வண்ணம் உள்ளது. வேலியே பயிரை மேய்வதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆண்டுதோறும் இப்பகுதியில் மழை அளவு குறைந்து வருவதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து தமிழக அரசுக்கு அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  ஜவுளிக் கடை பைகளுக்கு பயன்படும் இந்த மூங்கில்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காடுகளில் வளர்ந்துள்ள மூங்கில்கள் அதிக அளவில் வெட்டப்படுகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மலையடிவாரங்களில் உள்ள தென்னை, வாழை தோட்டங்களை அழித்து வருகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் விவசாய நிலங்களுக்குள் மிருகங்கள் புகாத வண்ணம் சுமார் ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியும் செயல் இழந்து விட்டதால் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கேரள வனத்துறையும், தமிழக வனத்துறையும் இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி அழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் வாழ்விடம் அழிக்கப்படுவதால் யானைகள் மனிதர்களின் வாழ்விடங்களை அழிக்கும் நிலை உருவாகி வருவதை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

"ஊரைக் காணோம்" ஆட்சித்தலைவரிடம் புகார்


நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள யாக்கோபுபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம்-யாக்கோபுபுரம் ஊராட்சி பகுதியில் யாக்கோபுபுரம் ஊர் பெயர் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள அரசு கட்டிடங்களில் யாக்கோபுபுரம் என்றே பெயர் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய பஞ்சாயத்து தலைவர் யாக்கோபுபுரம் என்ற பெயரை அழித்து சிதம்பராபுரம் என்று எழுதி வருகிறார். இதனால் யாக்கோபுபுரத்திற்கு வருபவர்கள் சிதம்பராபுரம் என்று எழுதியிருப்பதை கண்டு ஏமாற்றமடைகிறார்கள். எனவே பெயர் பலகைகளில் யாக்கோபுபுரம் என்ற பெயரை அழிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘மணிச்சுடர்’ வெள்ளிவிழாவை உலகம் வியக்க நடத்திக் காட்டுவோம்! - பேராசிரியர் கே.எம்.கே



`மணிச்சுடர்’ தமிழ்கூறும் நல்லுலக முஸ்லிம்களின் தனிச் சுடர்! தமிழ் மொழியில் இஸ்லாமிய சுடர் பரப்பும் சன்மார்க்கச் சுடர்! தமிழக முஸ்லிம்களின் இதயங்களில் ஏற்படும் ஒளியை - குரலைப் பிரதிபலிக்கும் சமுதாயச்சுடர்!

இந்த ஏடு, 1-6-1987-ல் ரமளான் திங்களில் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களும், அவர்களின் அருமைப்புதல்வர் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்களும் இணைந்து உருவாக்கிய மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் மூலம் துவக்கப்பட்டது.

``சென்னை பீட்டர்ஸ் சாலையில் அய்யம்பேட்டையைச் சேர்ந்த புரவலர் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களின் கட்டடமாம் தாருல் ஸமத் மாளிகையில் பிறப்பெடுத்த மணிச்சுடர், தமிழகமெங்கும் பரவி, தமிழ் பேசும் நாடுகளில் எல்லாம் விரவிச் சென்று தமிழக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி, சன்மார்க்க, அரசியல் நிலைமைகளை விளக்கும் நாளிதழாக வலம் வந்தது.

பின்னர், சென்னை நுங்கம்பாக்கம் வாலஸ் தோட்டம் `பொன் மனம்’ மாளிகை - சகோதரர் திருநாவுக்கரசர் எக்ஸ் எம்.பி. அவர்களின் கட்டடம், மணிச்சுடர் அலுவலகமாக மாறியது. இக் காலத்தில் சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளில் வாழும் தமிழக முஸ்லிம்களின் காலக் கண்ணாடியாக `மணிச்சுடர்’ திகழ்ந்தது.

அதன்பின்னர், இப்பொழுது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகம் காயிதெ மில்லத் மன்ஸில், மணிச்சுடர் அலுவலக மாக மாறியிருக்கிறது.

முஸ்லிம் லீகின் தலைமையகத்தில் இருந்து வெளிவரும் மணிச்சுடர், இன்றைக்கு இ.யூ. முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ ஏடாக பரிணமித்திருக்கிறது.

இதற்கு முன்பும், மணிச்சுடர்தான், முஸ்லிம் லீகின் பிரச்சார ஏடாக விளங்கி வந்தது.

இன்றைக்கு மணிச்சுடர் நாளிதழ் - இ-பேப்பர் ஆகியிருக்கிறது. சென்னையில் மணிச்சுடர் அச்சாகி நமது கரங்களுக்கு வருமுன்னரே, உலகின் எல்லாப் பாகங்களிலும் மணிச்சுடர் இ-பேப்பரை வாசித்து, அதன் செய்திகள் பற்றிய சாதக - பாதக விமர்சனங்களும் வந்து விடுகின்றன! என்னே காலத்தின் மாற்றம்!

ஆரம்பம் முதல் இன்றைக்கு வரைக்கும் இ.யூ. முஸ்லிம் லீகின் குரலாக - கொள்கை முரசாக - அதன் வரலாற்று விளக்காகத் திகிழும் மணிச்சுடர் இருபத்து ஐந்து ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்து இப்பொழுது 26-வது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக் கிறது. கடந்து வந்த இருபத்தைந்து ஆண்டு காலத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் நடந்து வந்த பாதையை - அதன் பயணத்தில் நிகழ்ந்த பாடங்களை - காலச்சுவடுகளாகத் தொகுத்து மணிச்சுடர் வெள்ளிவிழா மலர் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சிறப்பு மலர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 4-ம் தேதி வியாழக்கிழமை 5 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறுகிறது.

மலரை வெளியிட்டு தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் நிறைவுரை நல்குகிறார்!

இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது, முந்நாள் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணியார், இந்திய தேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ்  மற்றும் இ.யூ. முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகி கள், மணிச்சுடர் நிர்வாகிகள், இயக்குநர்கள், முந்நாள் இந்நாள் ஆசிரியர் குழுவினர், இதழுக்கு ஆதரவளித்து வரும் புரவலர்கள், மணிச்சுடர் முகவர்கள், நிருபர்கள், அலுவலர்கள், சர்வதேச காயிதெ மில்லத் பேரவை நிர்வாகிகள், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிகள், அறங்காவலர்கள் மற்றும் வாசக நேசகர்கள் எல்லோரும் பங்கேற்கிறார்கள். இது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, என்றென்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகும்!

இந்த விழா, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் விழாவாகும்! இ.யூ. முஸ்லிம் லீகை வளர்த்து வரும் மணிச்சுடர், இ.யூ. முஸ்லிம் லீகினரால் வளர்ந்து வரும் ஏடாகும்!

இந்த விழாவில் பங்கேற்பது, இ.யூ. முஸ்லிம் லீகின் 25 ஆண்டு கால வரலாற்றை ஒரே இடத்தில் ஒரு சேரக் காண்பதற்கு ஒப்பாகும்! தமிழகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு முஸ்லிம் லீகரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டிய விழா என்பதை எல்லாரிடத்தி லும் எடுத்துச் சொல்லுங்கள்!

அக்டோபர் 4 - தலைவர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் - சமூக நல்லிணக்கம் பேணிய சந்தனத் தமிழ் மேதை - சன்மார்க்க அறிஞர் -சமுதாயப் போராளி - பிறந்த நாள் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்!

சிராஜுல் மில்லத் பிறந்த நாளில் மணிச்சுடருக்கு வெள்ளி விழாவை உலகம் வியக்க நடத்திக் காட்டி, அதன் பொன்விழாவை பூலோகமே அதிசயிக்கும் வகையில் நடத்துவோம் என்பதைச் சூளுரையாகக் கொள்ள வாருங்கள்!

சென்னையில் 4-10-2012 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குச் சேருவோம்! எல்லோரும் ஒரே குரலில் மணிச்சுடர் வாழ்க! மணிச்சுடர் வெல்க! முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்! என்று கூறுவோம்!

வியாழன், 20 செப்டம்பர், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - இன்டீரியர் டிசைனிங்


உட்புற அலங்காரம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. கட்டிடக்கலையின் அம்சங்கள், பொருளின் வடிவமைப்பு மற்றும் சுற்றுசூழல் உளவியல் போன்ற பல அம்சங்கள், உட்புற பரப்பை, நேர்த்தியாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் மாற்றும் பணியில் கலந்திருக்கின்றன. ஒரு உட்புற அலங்கரிப்பாளர் என்பவர், தனது திறமையை வெளிப்படுத்தும்போது, வாடிக்கையாளரின் தேவையையும் மனதில் கொண்டு, அவரை திருப்திப்படுத்த வேண்டும். தான் ஏற்கனவே திட்டமிட்ட வடிவமைப்பு முறையை மாற்றம் செய்யவேண்டிய நிலை வந்தால், வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து, அதை மாற்றிக்கொள்ள அலங்கரிப்பாளர் தயங்கக்கூடாது.
உள்கட்டமைப்பின் பிரம்மாண்ட வளர்ச்சியால், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலும் இன்டீரியர் டிசைன் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள்: நல்ல படைப்புத் திறன்தான் இத்துறைக்கு அடிப்படையான மூலதனம். இத்தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். அலங்காரம் தொடர்புடைய பலவித பொருட்களைப் பற்றிய விரிவான அறிவும், அறிமுகமும் இருக்க வேண்டும். மேலும், எந்தெந்த வகை அலங்காரங்களுக்கு, எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றியும் தெளிவான அறிவை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்களின் நிதிநிலைக்கேற்ப, ஒரு தெளிவான திட்டத்தை உடனடியாக தயாரித்து வழங்க முடியும்.

படிப்புகள்: ஜெய்ப்பூரில் உள்ள அயோஜன் ஸ்கூல் ஆப் ஆர்க், இன்டீரியர் டிசைன் பிரிவில் 5 ஆண்டு படிப்பாக வழங்குகிறது. சென்னை பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்சி., மற்றும் பி.எப்.ஏ., படிப்பாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூன்று ஆண்டு பி.எஸ்சி., ஓர் ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளாக வழங்குகின்றன. கோவை அவினாசிலிங்கம் பல்கலை பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் உடன் இன்டீரியர் டிசைன் பாடப்பிரிவை வழங்குகிறது.


கல்வி தகுதி: மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருப்பதே, உட்புற அலங்கார படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி. பலவித கல்வி நிறுவனங்களில், உங்களின் வரைதல் மற்றும் வடிவமைப்பு திறனை சோதிக்கும் வகையில், நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இத்தேர்வுகளில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வேண்டும்.

இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Madras University
AvinashilingamUniversity, Coimbatore
Mangalore University
University of Mumbai
Arch Academy of Design, Jaipur
Amity School of Design, Delhi
Guru Nanak Dev University, Amristar


கடையநல்லூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை :தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ?


தாண்டவமாடும் தண்ணீர் பிரச்னையால் கடையநல்லூர் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பெரியாற்று படுகையில் முற்றிலுமாக நீர்பிடிப்பு குறைந்துவிட்டது. இப்பகுதியில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட கிணறுகளிலும் நீர்மட்டம் முழுவதும் குறைந்துவிட்ட நிலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக வரக்கூடிய தண்ணீர் வினியோகம் தான் தற்போது பரவலாக மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடுமையான குடிநீர் பற்றாக்குறையை அடுத்து கடையநல்லூர் நகராட்சியில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றிற்கு நான்கு லாரிகள் மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் நகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் என்ற நிலையும் இருந்து வருகிறது. லாரி மூலம் வினியோகம் செய்யப்படுகின்ற தண்ணீரும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடான நிலையிலேயே கிடைத்து வருகிறது.
இதனிடையில் குடிநீர் முறையாக வழங்கிட கோரி நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தி வரும் போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வறட்சி நிவாரணத்தின் சிறப்பு நிதி மூலம் கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்திற் கொண்டு போர்க்கால அடிப்படையில் முறையான ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக எழுந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம் இதேநிலையில் தொடர்ந்தால் அடுத்த வாரம் தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீரை கூட பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலைதான் இருக்கக்கூடும். இருப்பினும் குடிநீர் வினியோகம் பற்றாக்குறையை தவிர்த்திட லாரிகள் மூலம் வழங்க எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
குடிநீர் பற்றாக்குறை கடையநல்லூரில் தாண்டவமாடும் நிலையில் மாவட்ட நிர்வாகம் வறட்சி நிவாரண சிறப்பு நிதியினை ஒதுக்கீடு செய்து லாரிகள் மூலம் கூடுதலான வகையில் அனைத்து வார்டு மக்களுக்கும் குடிநீர் கிடைத்திட ஏற்பாடு செய்திட வேண்டும் என்பதே நகராட்சி மக்களின் உடனடி எதிர்பார்ப்பாகும்.

புதன், 19 செப்டம்பர், 2012

முஸ்லிம்களின் போராட்டங்கள் தொடரும் - பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன்

முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வாழ்க்கையை கொச்சை படுத்தி எடுக்கப்பட்ட படத்திற்கு தடை வித்தித்து ,அதனை எடுத்தவர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கும் வரை முஸ்லிம்களின் போராட்டங்கள் தொடரும் - பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் 


இஸ்லாத்தை இழிவுப்படுத்தி அமெரிக்க யூதரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துவ பாதிரியாரால் விளம்பரப் படுத்தப்பட்டுள்ள ‘இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படத்தை அதன் விளம்பர காட்சிகளை தடை செய்து அதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்காத வரை உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பு அடங்காது. யாராலும் அடக்கவும் முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு விளம்பரப் படுத்தப்பட்டுள்ள ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்"என்ற திரைப்பட முன்னோட்ட காட்சிகள் உலக முஸ்லிம்களை கொந்தளிக்க செய்து அமெரிக்க துhதரகங்களுக்குமுன்னால் ஆர்ப்பாட்டம் போராட்டம் என வீரியமடைந்து வருகிறது. சென்னையில் அமெரிக்க துணைத்துhதரகத்துக்கு முன்னால் கடந்த 5 நாட்களாக நடைபெறும் முற்றுகை போராட்டங்கள் துhதரக செயல்பாடுகளையே முடக்கிப் போட்டுவிட்டன.

இன்று (18-09-2012) மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற போராட்டம் சென்னையின் பிரதான பகுதிகளை செயலிழக்கச் செய்து விட்டது. பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணிவரை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடிப் போயின போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் களைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த போராட்டம் முடிந்ததற்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்ட கலைஞர் செய்திகள் இரவுப் பதிப்பு செய்தி அறிக்கையில் நேர்க்கானலுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அளித்த பதில்களும்:-

கேள்வி:- சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. வாகனங்களில் வருவோருக்கு ஏன் எதற்கு இந்த போராட்டம் என்றே தெரியவில்லை இந்த போராட்டம் தேவைதானா? என்பதே முதல் கேள்வி எதற்காக இந்த போராட்டம்?

பேராசிரியர் பதில்:- போராட்டம் தேவை தானா என்ற கேள்வியே இப்போது இல்லை. போராட்டம் தேவை என்ற உணர்வே முஸ்லிம்கள் மனதில் உள்ளது. மற்ற விஷயங்களாக இருந்தால் தேவையா? தேவையில்லையா என்ற கேள்வி எழும். இப்பொழுது நடைபெறுவதில் அந்த பிரச்சனையே இல்லை.

இது தேவைதான் என்ற அளவுக்கு முஸ்லிம்களின் உணர்வு உள்ளது. அதற்கு என்ன காரணம் என்றால் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறான  செய்தி அருவருக்கத்தக்க படங்கள் வெளியிடப்பட்டுள்ளன!

என்னை பொருத்தவரை மிதவாதி, இதவாதி என்று சொல்வார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் அந்த காட்சிகளை என்னிடத்தில் சொல்லிக் காட்டினார்கள். என்னாலேயே தாங்க முடியவில்லை. ஆனால் அதைப்பார்க்கின்ற இளைஞர்கள், வாலிப பிள்ளைகள் நிச்சயமாக கொந்தளிப்பார்கள்.

அதனுடைய வெளிப்பாடுதான் இப்பொழுது நடந்துக்கொண்டு இருக்கிறது. இது உலகம் முழுவதும் நடக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக நடக்கின்ற கொந்தழிப்புகளை நாம் செய்தியாக பார்க்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்று முழுமையாக நமக்கு தெரிவதில்லை. இதை விட பன்மடங்கு கொந்தளிப்பு வெளிநாடுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றி குற்றம் குறை சொல்வது என்பது- முஸ்லிம்களைப் பற்றி விமர்சனம் செய்வது என்பது வேறு. ஆனால் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறு பரப்புவது என்பதை எந்த ஒரு முஸ்லிம்களும் தாங்கிக்கொள்ள மாட்டான். அதற்கு காரணம் என்னவென்றால், யாரை விடவும், தன்னை விடவும், தன்னுடைய தாய்,தந்தயரை விடவும் எதை விடவும் மிக உயர்வாக முஸ்லிம்கள் மதிப்பது நபிகள் நாயகத்தை தான்.

இஸ்லாத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான் அந்த உணர்வுகளின் ஆழம் தெரியும். இதை நான் சொல்லும் போது இவருக்கு என்ன இவ்வளவு வெறியா? என்று எண்ணத் தோன்றும் இது இதயத்தில் ஏற்றுக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு கொள்கை.

அப்படிப்பட்ட நபிகள் நாயகத்தைப் பற்றி ‘ இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ளகலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாம் பேசில் என்ற யூதர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இவர் சர்ச்சைக்குரிய ஆபாச படங்களை நிறைய தயாரித்துள்ளார். இதற்காக இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இப்படிபட்டவர் சமீபத்தில் ‘டெசட் வாரியர்’ பாலைவன வீரர் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து 60 நடிகர் நடிகைகளை நடிக்க செய்து அந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு 50 லட்சம் டாலர்களை 100 யூதர் செல்வந்தர்களிடம் இருந்து வசூலித்துள்ளார் 35 பேருடைய ஒத்துழைப்போடு 3 மாதங்களில் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜார்ஜ் என்று ஹீரோவிற்கு பெயர் வைத்தார். இந்த படத்தை எடுத்து முடித்ததும் ஹீரோவின் பெயரை முஹம்மது என்றும், படத்தின் பெயரை ‘இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்றும் மாற்றியுள்ளார்.

இப்படி மாற்றியதோடு மட்டுமில்லாமல் இந்த வசனங்களையும் தன் இஷ்டத்துக்கு மாற்றியுள்ளார் இதற்காக அந்த நடிகர், நடிகைகள் இவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆக ஒரு மிகப்பெரும் மோசடி செய்து இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முஸ்லிம்களை மோசடிகாரர்கள், கள்ளக்கடத்தல்காரர்கள், இஸ்லாம் மார்க்கம் புற்று நோய் என்று சித்தரிக்கப்பட்டுள்ளன.

இவைகளைக் கூட ஒரு முஸ்லிம் பொறுத்துக்கொள்வான். நபிகள் நாயகத்துக்கு உருவமில்லை. நபி உருவப்படத்தை வெளியிடுவதுமில்லை. ஆனால் நபிகள் என்று ஒரு உருவத்தை அமைத்து முஹம்மது என்று பெயர் சூட்டி, தாடி வைத்து ஒருவிளைமாதுடன் உறவு கொள்வதாக காட்சி அமைத்து, இன்றைக்கு வரையில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதை யார் பொருத்த கொள்ள முடியும்? இந்தியாவில் இதை தடை செய்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் ஏன் தடை செய்யவில்லை என்பதுதான் கேள்வி.

கேள்வி:- உங்களுடைய தெளிவான விளக்கத்தில் இருந்து இந்தத் திரைப்படம் முஸ்லிம்களின் உள்ளங்களை காயப்படுத்துவதற்காக வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உங்களுடைய உலக முஸ்லிம்களுடைய கோரிக்கை இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்பது தானே?

பேராசிரியர் பதில்:- உலக இஸ்லாமியர்களின் கோரிக்கை என்பதை நான் தெளிவுப்படுத்துகிறேன் அமெரிக்காவின் கொள்கை என்பது, இஸ்லாத்தை முஸ்லிம்களை எதிர்க்கும் கொள்கை என்ற பொதுவான நம்பிக்கையே உலக முஸ்லிம்களிடம் உள்ளது. அது இல்லை என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவையே சார்ந்தது.

அடுத்து புனித திருக்குர்ஆனை எரிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் அங்கு தொடர்ந்து நடந்து வருகின்றன. முதலில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் அதைச் செய்தார்கள். அதற்கு மறுப்பு, மன்னிப்பும் அமெரிக்கா தெரிவித்தது. அதே போன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக்கில் அவமரியாதை செய்தனர். அதற்கு பிறகு அமெரிக்காவில் ஒரு பாதிரியார் அவர் பெயர் டெர்ரி ஜோன்ஸ் திருக்குரானை எரிக்கும் போராட்டத்தை முன் கூட்டியே அறிவித்து, அவர் எரித்ததை அமெரிக்க தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்தன.

அமெரிக்க அரசு அதை தடுக்கவும் இல்லை அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இல்லை. அதைத்தொடர்ந்து இப்பொழுது நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் திரைப்படத்தை எடுத்து இப்பொழுது ஒளிபரப்பு செய்கின்றார்கள். அதை இன்று வரை தடை செய்ய வில்லை.

இது உலகலாவிய முஸ்லிம்கள் உணர்வை புண்படுத்துகிறது. உள்ளங்களை காயப்படுத்துகிறது என்று கருதி அமெரிக்க அரசு இதை தடை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யவில்லை. அப்படியானால் குர் ஆனை எரிப்பதற்கு அவர்கள் உடன்படுகிறார்களா? அதனுடைய தொடர்ச்சிதான் இது. எனவே முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கமா? என்பதே முஸ்லிம்களின் கேள்வி.

எனவே தான் இந்த போராட்டங்கள் தொடர்கின்றன. என்னை இந்த போராட்டத்திற்கு அழைத்தார்கள். நான் செல்ல வில்லை என்னை போன்று வயதானவர்கள் நடுநிலையாக சிந்திக்க கூடியவர்கள் பொறுமையாக இருக்கலாம் ஆனால் வாலிபனாக உள்ளவன் இந்த காட்சிகளைப் பார்க்கிறான் கொந்தளிக்கிறான் உணர்வுகளை வெளிப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல்தான் இப்படிப்பட்ட செயல்களை செய்கிறான்.

கேள்வி:- உலகம் முழுவதும் இது போன்ற போராட்டங்கள் நடைபெறுகின்றன அமெரிக்காவிலும் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் இந்த அளவிற்கு இல்லை. சென்னையில் அதிகம் நடைபெறுகின்றன. சென்னையில் நடைபெறும் போராட்டம் அமெரிக்காவில் எட்டுமா?

பேராசிரியர் பதில்:- நிச்சயம் எட்டும் அமெரிக்காவில் முஸ்லிம்கள் அதிகம் இல்லை. முஸ்லிம்கள் அதிகம் உள்ள நாடுகளில் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. குறைந்த பட்சம் அமெரிக்கா இணைய தளத்தில் உள்ள படங்களை தடைசெய்து இருக்கலாமே! அதை ஏன் நிறுத்தவில்லை? முதலில் இணையதளங்களில் உள்ள படங்களை நிறுத்தட்டும் அதற்கு பிறகு படம் எடுத்தவன், வெளியிட்டவன் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும்

அமெரிக்கா இதை செய்யும் வரை இந்த போராட்டங்கள் ஓயாது. இதை  நிறுத்தவும் யாராலும் முடியாது, மிதவாதிகள் வயதானவர்கள் அதை எரிக்க வேண்டாம், இதை செய்ய வேண்டாம் என சொல்லலாம் ஆனால் உணர்வு என்பது மிக ஆழமானது அந்த உணர்வை நாம் நிறுத்த முடியாது அது வெளிப்பட்டே தீரும். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லை: குடியரசுத் தலைவர்


உலகத்தரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மலர்வதற்கு இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் என இந்திய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான கரக்பூர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
கரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதைக் கொண்டாடும் நோக்கில் நடந்த வைரவிழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே அறிவியல் தேடலையும், ஆராய்ச்சி மனோநிலையையையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டிய உடனடித் தேவை இந்தியாவுக்கு உள்ளது என்று பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இல்லாதிருப்பதன் காரணங்கள் பற்றி இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.சி.குழந்தைசாமி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.
"கல்வி புகட்டும் அதேநேரத்தில் ஆராய்ச்சிகள் செய்து அறிவுப் பெருக்கத்துக்கு பங்காற்ற வேண்டிய இடங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அந்த நிலை இல்லை" என்று குழந்தைசாமி கூறினார்.
"இந்தியாவில் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களில் பாடம் புகட்ட வேண்டியது மட்டுமே ஆசிரியர்களுக்கு கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் கல்விக் கட்டமைப்பில் இடமில்லை" என்று அவர் நொந்துகொண்டார்.
இந்த நிலை மாறினால்தான், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவால் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்

திங்கள், 17 செப்டம்பர், 2012

விரைவில் 3,000 முதுகலை ஆசிரியர் நியமனம் : அமைச்சர் சிவபதி

"தமிழகத்தில் விரைவில், 3,000 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்,'' என, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பேசினார்.
தமிழக மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், முதல் கட்டமாக, 1,080 பணியிடங்களுக்கு மாவட்ட அளவிலான கவுன்சிலிங், ஆன்-லைன் மூலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 397 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள, 683 காலிப் பணியிடங்களுக்கு, மாநில அளவிலான கவுன்சிலிங், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.இந்தியாவிலேயே முதல் முறையாக, ஆன்-லைன் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமன கவுன்சிலிங் நிகழ்ச்சிக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் முன்னிலை வகித்தார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உட்பட, 13 பாடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சிவபதி பேசியதாவது:தமிழக அரசு இதுவரை, ஒளிவு, மறைவில்லாமல் கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல், பணி நியமன ஆணைகளை வழங்குகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், முதல் முறையாக இணையதளம் (ஆன்-லைன்) மூலம் கவுன்சிலிங் நடக்கிறது. மாவட்ட அளவிலான கவுன்சிலிங் நேற்று நடந்தது. சொந்த மாவட்டங்களில் பணியிடம் இல்லாதவர்களுக்கு, இன்று (நேற்று) விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யும் கவுன்சிலிங் நடக்கிறது. பணி ஆணை பெறும் ஆசிரியர்கள், அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். பெற்றோர் போல மாணவர்களிடம் நடக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் துவங்கி, 25 ஆண்டு கால வரலாற்றில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் என மொத்தம், ஒரு லட்சத்து, 3,000 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத, 59 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சொந்த மாவட்டங்களில் வேலை கிடைக்காதோர் கவலைப்பட வேண்டாம். விரைவில், 3,000 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அப்போது, "சீனியாரிட்டி' அடிப்படையில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

புதன், 12 செப்டம்பர், 2012

"காயிதேமில்லத் பல்கலைக் கழகம்" காலத்தின் கட்டாயம் !


இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த அரசியல் நிர்ணய சபையில் எத்தனையோ தமிழ்நாட்டுத் தலைவர்கள் இருந்தும் ,தனியொருவராக நின்று இந்தியாவின் ஆட்சிமொழியாகும் தகுதி தொன்மையான , நான் பேசும் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு ,அந்த தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய பெருந்தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) ஆவார்கள் .

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தவுடன் ,தன கல்லூரி படிப்பை தூக்கி எறிந்துவிட்டு ,ஒத்துழையாமை இயக்க மாநாட்டை தான் பிறந்த நெல்லை சீமையில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் )

பெரியார் ,அண்ணா ,காமராஜர் ,போன்ற தலைவர்களை எல்லா தலைமுறையினரும் அறியும் பொருட்டு அவர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன .அதுபோல் ,நாட்டுப்பற்றாலும் ,மொழிப்பற்றாலும் உயர்ந்து நிற்கும் அந்த பெருமகனார் யார் என்று வாழும் தலைமுறையும் , எதிர்வரும்  தலைமுறையும் அறியும் பொருட்டு ,தமிழகத்தில் காயிதே மில்லத் பல்கலைக் கழகம் தமிழக அரசு உருவாக்க வேண்டும் .இந்தக் கோரிக்கையை வென்றெடுப்பது தமிழக மக்களின் அனைவரின் கடமை .

டிப்ளமோ படித்தவர்களுக்கு டைடல் பார்க்கில் வேலை : 20 ஆயிரம் சம்பளம்


சென்னையில் இயங்கி வரும் TIDEL PARKல் காலியாக உள்ள Technical Assistant, Store Keeper பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணி: Technical Assistant
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணி: Store Keeper
கல்வித்தகுதி: ஏதாவதொரு இன்ஜினியரிங் பிரிவில் டிகிரி அல்லது டிப்பளமோ அல்லது மெட்ரீயல் மேனேஜ்மென்டில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட இரு பணிகளுக்கும் மாதம் ரூ. 20.000

வயதுவரம்பு: 01.09.2012 தேதிப்படி 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை 20.09.2012-க்குள் அனுப்ப வேண்டும்.

தங்களைப்பற்றிய பயோ-டேட்டாவை அனுப்ப வேண்டிய முகவரி
The Managing Director, TIDEL Park Limited, 1st Floor, ''A'' Block, No: 4, Rajiv Gandhi salai, Taramani, Chennai - 600113

மேலும் முழுமையான தகவல்களை அறிய www.tidelpark.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இ-மெயில் முகவரி: tidel@vsnl.com

மனித உருவில் மிருகங்களின் அட்டகாசம் !

ஊத்துக்கோட்டை கூனிபாளையத்தை சேர்ந்தவர் எழிலரசன் (எ) நாகலிங்கம். இவருக்கும், கடம்பத்தூர் அருகே பிஞ்சிவாக்கத்தை சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடந்தது. இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் மண்டபம் களை கட்டியிருந்தது.

திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் கூனிபாளையத்தை சேர்ந்த வினோத், பிரதாப், பாபுராஜ், பிரேம் ஆகியோர், ‘திருமணத்தில் பிரியாணி போடாதது ஏன்' என கேட்டு போதையில் தகராறு செய்தனர். அதோடு, மணமேடைக்கு சென்றனர். அங்கு, மணமக்களுக்காக கேக் வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து, மணமகளுக்கும் மணமகனுக்கும் ஊட்டினர். பின்னர், கேக்கை எடுத்து மணமக்களின் முகத்திலும் பூசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதை பார்த்து ஆத்திரம் அடைந்த மணமகளின் உறவினர், பிளஸ் 2 படிக்கும் கவுதம் தாசா (17) என்ற மாணவன், 4 பேரையும் தட்டி கேட்டான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த 4 பேரும், அங்கு கிடந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து கவுதம் தாசாவை தாக்கினர். அதில், கவுதம் தாசாவின் வயிறு கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் அலறி துடிப்பதை பார்த்து உறவினர்கள் ஒன்று திரண்டனர். அதற்குள் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த கவுதம் தாசாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் நேற்றிரவு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், எஸ்ஐ சக்கரை வழக்கு பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பால் பொருள் பதப்படுத்த ஒரு மாத இலவச பயிற்சி



பால் பொருட்கள் பதப்படுத்துதல், மீன் பொருட்கள் தயாரித்தல் குறித்த, இலவசப் பயிற்சியில் சேர விரும்புவோர், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னையில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில், அக்., 1 முதல், அக்., 31ம் தேதி வரை, ஒரு மாதத்திற்கு, பால் பதப்படுத்துதல் தொடர்பாக இலவசப் பயிற்சி அளிக்க உள்ளது.பால் உற்பத்தியாளர்கள், பால் பதப்படுத்தும் தொழில் ஆர்வமுள்ளோர், வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 25ம் தேதி, விண்ணப்பித்தோரில், 30 பேர் தேர்வு செய்யப்படுவர்.

 விவரம் தேவைப்படுவோர், முதல்வர், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, அலமாதி அஞ்சல், செங்குன்றம், சென்னை - 52 என்ற முகவரியிலும், 2768 0214, 2768 0217 என்ற தொலைபேசியிலும், 94448 10657 என்ற அலைபேசியிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


திங்கள், 10 செப்டம்பர், 2012

சச்சார் கமிசனும் ,ரங்கநாத் மிஸ்ரா கமிசனும் அமைக்க முழுக்காராணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : இ.அஹமது சாஹிப்


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்ப கோணம் அல்-அமீன் பள்ளி மைதானத்தில் அல்ஹாஜ் எம்.ஏ. ஜமால் முகைதீன் பாப்பா நுழைவு வாயிலில் அரசியல்ஞானி வடகரை எம்.எம். பக்கர் நினை வரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் `கல்வி விழிப் புணர்வு மாநாடு'மிகப் பிரம் மாண்டமாக நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் மாநில கல்விப் பணி செயலாள ரும், மாநாட்டு அமைப்பாளரு மான ஆடுதுறை ஏ.எம். ஷாஜ ஹான் வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிப் மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, காயிதெ மில்லத் பேரவை சர்வ தேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தமிழாக்கம் செய்தார்.

மாண்புமிகு இ.அஹமது சாஹிப் இம் மாநாட்டில் பேசிய தாவது-

தஞ்சை தரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னோடிகள் மிகப் பிரம்மாண் டமாக ஏற்பாடு செய்திருக்க கூடிய இம் மாபெரும் மாநாட்டில் நான் பங்கேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் இருந்து இந்த இரவு வரை நடக்கின்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கிடைத்த பெரும் பாக்கியத்தை எண்ணி பூரிப்படைகின்றேன்.

இன்று காலையில் நடை பெற்ற முஸ்லிம்களின் கல்வி நிலையும், இடஒதுக்கீட்டின் பயனும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றியவர் கள் பல அரிய கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். நானும் அதிலே கலந்து கொண்டு பல விளக்கங்களை அளித்தேன். இன்று மாலையில் நடை பெற்ற எழுச்சிமிகு ஊர்வலத்தில் அருமைமிகு இளைஞர்களும், அன்பு மாணவர்களும் உணர்ச்சி முழக்கத்தோடு கம்பீரமாக அணிவகுத்து வந்த காட்சியை காணுகின்ற போது எனக்கே ஒரு உத்வேகம் பிறந்து விட்டது.

இந்த அணிவகுப்பில் யானை ஒன்று கம்பீரமாக பீடு நடை போட்டு வந்ததும், குதிரை களில் இளைஞர்கள் கொடி பிடித்து வந்தது மகிழ்ச்சியை தந்தது. அந்த காட்சியை பார்க்கின்ற போது இந்த நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பலம் பொருந்திய யானையைப் போன்று பலம் பொருந்தி செயல்படுகிறது. தலைமை நிலையம் அமைந்துள்ள தமிழ கத்தில் அதன் தலைவர்கள் பலம் மிக்க இயக்கமாக தாய்ச் சபையை வளர்த்து வருகி றார்கள்.

கண்ணியமிக்க காயிதெ மில்லத் சொன்னார்கள்: `இரண் டரை கோடி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று� அவர்கள் காலத்தில் இரண்டரை கோடி முஸ்லிம்கள் இருந்தார் கள். இன்று நமது நாடடில் 18 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார் கள். அவர்கள் அத்தனை பேருக்கும் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்பதை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இளைய தலை முறையா னாலும், மூத்த தலை முறையா னாலும், அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்,

இன்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது ஏதோ கேரளாவிலும், தமிழ்நாட்டில் மட்டும்தான் செயல்படுகிறது என்று. கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரை அது பல்வேறு மாநிலங்களில் பரவி செயல் பட்டு கொண்டு இருக்கிறது.

அஸ்ஸாம் கலவரத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவ ரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் களை பார்ப்பதற்காக என்னு டைய தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு சென்றது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் வந்து கலந்து கொண்டனர்.
அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளாவில் இருந்து ரயில்வே வேகன்களில் ஆடைகளும், தமிழ்நாட்டில் இருந்து பணமும், உணவுப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு ஏறத் தாழ ஒன்றரை லட்சம் மக்க ளுக்கு அவைகளை விநியோ கித்தோம். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. சாதி, சமய வித்தியாசம் இன்றி ஒட்டு மொத்த பாரத மக்களுக்கா கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இத்தகைய கடமைகளை செய்து வருகிறது. முஸ்லிம் லீக் பழமைவாய்ந்த இயக்கம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில பேர் இது மதவாத இயக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மதச் சார்பற்ற தன்மையை கடைபிடிப்பதில் நாம் உறுதியாக இருப்பவர்கள் மட்டும் அல்ல; மதச்சார்பற்ற அரசில் ஆளும் கட்சியாக திகழும் காட்சியை கண்டு கொண்டு இருக்கிறீர்கள்.

முஸ்லிம் லீக் வரலாற்று பேரியக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா வின் எந்த மூலையில் வேண்டு மானாலும் நின்று கொண்டு முஸ்லிம் லீக் என்று சொல்லிப் பாருங்கள். ஜிந்தாபாத் என்ற பதில் கோஷம் உடனே வரும்.

ஆளும் கட்சியாக இடம் பெற்று பேசாமடந்தைகளாக நாங்கள் சும்மா இருக்கவில்லை. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எண்ணற்ற நன்மைகளை பெற்றுத் தரும் பல்வேறு திட் டங்கள் உருவாவதற்கு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கி றோம்.

சச்சார், மிஸ்ரா கமிஷன்கள் வர இ.யூ. முஸ்லிம் லீகே காரணம்
முஸ்லிம்களுக்கு நன்மை கள் கிடைப்பதற்காகத்தான் சச்சார் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு இந்த சமுதாயத் துக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்து வருகின்றன. சச்சார் கமிஷன் அமைக்கப்படுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் காரணம் என்று பெருமைப் படுகிறோம்.

இந்த சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் பாரதப் பிரதமரின் 15 அம்ச திட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாக செயல்படுத்தப்படுவது முஸ்லிம்களுக்கான கல்வி உதவித் தொகை. இந்த உதவித் தொகை கடந்த ஆண்டில் மட்டும் 62 கோடியே 71 லட்சம் நம்முடைய சமுதாயத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது மகத்தான சாதனை ஆகும். நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம், இத்தகைய உதவிகள் செய்யப் படுகின்றன. 

சிறுபான்மை முஸ்லிம் களின் கல்வி நலனுக்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது என்பதை இங்கு மிகுந்த மகிழ்ச்சியோடு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த தொகை போதாது. இது உயர்த்தப்பட வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசாங்கத்தின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சிறுபான்மை பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற கார ணத்தால் எங்கெல்லாம் அந்த வசதி தேவைப்படுகிறதோ அந்த பள்ளிகளில் எல்லாம் குறிப்பாக மாணவர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் பொது சுகாதார வசதிகள் எங்கெல்லாம் தேவைப்படு கிறதோ அங்கெல்லாம் ஒவ் வொரு பள்ளிக்கும் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் முஸ்லிம் சமுதாயம் நடத்துகின்ற பள்ளி களுக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 350 முஸ்லிம் பள்ளிகளுக்கு 135 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள் ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த 50 லட்ச ரூபாயில் மத்திய அரசு 90 சதவிகிதமும், மாநில அரசுகள் 10 சதவிகிதமும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நலத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு பயன ளிக்கும் வகையில் உருவாக் கப்பட்டுள்ள இத் திட்டத்தால் பயன்பெறும் பள்ளிகள் மூலம் எல்லா சமுதாய மக்களும் பயனடைந்து வருகிறார்கள் என்பதற்காக அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசு தரும் 90 சதவிகிதத்தைப் பெற்று தங்களின் பங்களிப்பாக 10 சதவீதத்தையும் சேர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றன. மத்திய அரசு நிதியை செயல்படுத்த மறுக்கும்

குஜராத் பி.ஜே.பி. அரசு

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது ஒரே ஒரு மாநிலம் மட்டும் முஸ்லிம்க ளுக்கு நன்மை பயக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அடம் பிடிக்கிறது. அந்த ஒரு மாநிலம் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் ஆகும்.

90 சதவிகிதம் நாங்கள் தரும் தொகையோடு வெறும் 10 சதவிகிதம் மட்டும் நீங்கள் சேர்த்து இத் திட்டத்தை பயன் படுத்தினால் என்ன என்று கேட்டபோது, நரேந்திரமோடி அரசு சொன்ன பதில், `நாங்கள் 10 சதவிகிதம் தந்தால் தானே 90 சதவிகித உங்கள் பணம் சிறுபான்மை சமுதாய நலனுக்கு செல்லும். ஆகவே, இந்த 10 சதவிகிதம் தரவே மாட்டோம் என அடம் பிடிக்கின்றனர். இதனால் முஸ்லிம் சமுதா யத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மை கிடைக்காமல் இருக் கிறது. இப்படி சாதி, மத வெறி பிடித்த அரசு குஜராத்தில் இருக்கிறது என்பது நமக்கு எல்லாம் வருத்தம் அளிக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசில் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முஸ்லிம்களின் நலனுக் காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கி றார். நாங்கள் அவருக்கு உறு துணையாக ஒருங்ணைப்போடு செயல்படுகிறோம். இன்று, சச்சார் கமிஷன், ரங்கநாத் கமிஷன் அறிக்கை கள் எல்லாம் பெறப்பட்டதற்கு பிறகு முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

சிறுபான்மை முஸ்லிம்க ளுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 4.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அதற்கான திட்டம் தீட்டப்பட்டது. இது போதாது குறைந்தபட்சம் ஆறு சதவீத அளவிலாவது இந்த இடஒதுக்கீடு இருக்க வேண் டும் என முஸ்லிம் சமுதாயம் வேண்டுகோள் விடுத்த நிலை யில் நீதிமன்றத்தால் இது முடக் கப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறையில் நான் அமைச்சராக இருக்கிறேன். இந்த இடஒதுக் கீட்டை எப்படி பயன்படுத்த போகிறோம் என யோசித்துக் கொண்டு இருக்கும்போது எங்கள் கனவில் பேரிடியாக இந்த நீதிமன்ற உத்தரவு ஏற் படுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கின்ற நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். டாக்டர் மன்மோகன்சிங் அரசு பொறுப் பேற்றுள்ள நாள் முதல் பி.ஜே.பி., சிவசேனா கட்சிகள் எல்லாம் எதற்கெடுத்தாலும் கண்மூடித் தனமாக எதிர்ப்பதையும், நாடாளுமன்றத்தை முடக்குவ தையும் வழக்கமாக கொண்டுள் ளன. இதற்கு காரணம் சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத் திற்கு இந்த அரசு நன்மைகள செய்து வருகின்றது என்பதால் தான்.

ஊழலில் ஒட்டுமொத்தமாக திகழ்ந்து கர்நாடகத்தை பங்கு போடும் பா.ஜ.க., டாக்டர் மன்மோகன்சிங் அரசை ஊழல் அரசு என குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்பது எங்களின் நிலைப்பாடு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கம் ஜனநாயகத்தின் அத்தனை விஷயங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ள இயக்கமாகும். மதச்சார்பற்ற தன்மையில் ஆழமாகவும், அழுத்தமாகவும் உறுதி கொண்டுள்ள இயக்கம். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் பிரச்சினைகள் வரும் போது விவாதத்திற்கு தயார் ஆகி உண்மைகளை அறிந்து கொள்ள முன்வர வேண்டும். விவாதத்திற்கும் தயாராக இல்லை; நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வரத் தயாராக இல்லை என்றால் இவர்களை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்ச்சபை என்ற வரலாற்று பேரியக்கத்தை தம்முடைய மூத்த தலைவர்கள் தந்துள்ள னர். இந்த பெருமைக்குரிய வரலாற்றை தொடங்கி வைத் தது காயிதெ மில்லத் அவர்கள். அவர்களுக்குப் பின் சையது அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள், சி.ஹெச். முஹம்மது கோயா, ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், சையது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்ட தலைவர்கள் இந்த தாய்ச்சபை யின் பணிகளை நம்முடைய கரங்களில் ஒப்படைத்திருக்கி றார்கள்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற் கும், மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்டவும் மிக உறுதியாக இருந்தார்கள். இந்த அடிப்படை யில்தான் மதச்சார்பற்ற, மத சகிப்புத்தன்மை, மதங்களி டையே வேறுபாடு கிடையாது. எல்லாரும் சகோதர்கள்; நாமெல்லாம் இந்தியர்கள் என்ற உணர்வோடு உறவு முறை களோடு வாழச்செய்வதை எடுத்து இயம்புகின்ற இயக்க மாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயங்குகின்றது.

இந்த இயக்கத்தை அழிப் பதற்கோ, ஒடுக்குவதற்கோ யாராலும் முடியாது. இந்த நாட்டில் கடைசி முஸ்லிம் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை முஸ்லிம் லீக் என்ற இந்த இயக்கம் செயல்படும். முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்!

இவ்வாறு இ. அஹமது சாஹிப் உரையாற்றினார்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்ற அடிப்படையில் மிஸ்ரா குழு பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முஸ்லிம் சமுதாயத்தை சாதி பிரிவினைக்குள் அடக்க முனையாமல் சாதியற்ற சமூக அமைப்பு என்ற அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுத்து செயல்படுத்த வேண்டுமென கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2012 செப்டம்பர் 8 சனிக்கிழமை கும்பகோணத்தில் தேசிய பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடபெற்றது.

தேசிய தலைவரும் மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறைஇணைஅமைச்சருமான இ.அஹமது சாகிப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட இந்த பிரமாண்டமான மாநாட்டில் நிiவேற்றப்பட்ட தீர்மனங்கள் வருமாறு '

1. இடஒதுக்கீடு சமூக நீதியின் சின்னம்!
தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இதில் 3.5 சதவீதம் முஸ்லிம் சமுதாயப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. இச் சதவீதம் போதியதன்று. இதனை குறைந்த பட்சம் ஐந்து சதவீதமாக உயர்த்தித் தர வேண்டுமென்னும் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில், அண்மையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் விசாரணை 10.09.2012 ல் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற விருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருப்பினும், தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமின்றி, தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தும்.

ஒவ்வொரு மாநில அரசும், அந்தந்த மாநில நிலைமைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிப்பதற்குரிய அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்னும் அடிப்படையை இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உறுதி செய்ய வேண்டும்.

மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுப்பதும், மாநில அரசு இடஒதுக்கீட்டு அதிகாரம் பெறச் சட்டத்திருத்தத்துக்குக் கரம் கொடுப்பதும் சமூக நீதியில் நம்பிக்கையுள்ள அனைவரின் கடமையாகும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

அதேபோல, மத்திய அரசின் வேலை மற்றும் உயர்படிப்புகளில் இந்திய முஸ்லிம் சமுதாயத்துக்குக்கென ஒட்டு மொத்தமாக 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

மத்திய அரசு, முஸ்லிம் சமுதாயத்தை அஷ்ரப், அஜ்லப், அர்ஸல் என்று சாதிப்பிரிவினைக்குள் அடக்க முனையாமல், சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்னும் அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைக்குச் சட்ட வடிவு கொடுக்க வேண்டும் என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

2. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம்
தமிழ்நாட்டில் இயங்கிவரும் 54957 துவக்கப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் முஸ்லிம் சிறுபான்மை யினரின் நிர்வாகத்தில் உள்ளவை நானூறுக்கும் குறைவானவை என்னும் அதிர்ச்சித் தகவல் சீரிய சிந்தனைக் குரியதாகும்.

இப்போது நடைபெற்றுவரும் பள்ளிகளில் பல பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றன என்பதும் யதார்த்த நிலையாகும்.

தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் குறைந்த பட்சம் மஸ்ஜிதை மையமாகக் கொண்டுள்ள ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் ஒரு பள்ளிக் கூடமாவது உருவாக்கப்படுதல் அவசியமாகும்.

புதிய பள்ளிகளை அமைக்கவும், நடக்கும் பள்ளிகளின் தரம் உயர்த்தவும், பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கவும், அவசியப்படின் நலிந்த பள்ளிக் கூடங்களை ஏற்று நடத்திடவும் ஆகிய கல்விப் பணிக்களுக்கென, தமிழகம் தழுவிய முஸ்லிம் கல்வி நிபுணர் குழுமம் உருவாக்குவது என இந்த மாநாடு முடிவு செய்கிறது.

சென்னைப் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சாதிக், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பீர் முஸ்தபா ஹுசைன் போன்ற கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து கலந்தாலோசனை செய்து அவர்களின் ஒப்புதலுடன் இந்தக் கல்விக் குழுமத்தின் பட்டியலை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

3. சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்
தமிழ் நாட்டில் இயங்கி வரும் சிறுபான்மை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று கடந்த அரசு 26.02.2011 அன்று வெளியிட்ட அரசாணைகளில் 11307 ஆசிரியர்கள் 648 பணியாளர்கள் ஆக 11955 பணியிடங்களை ஏற்று ஆண்டுக்கு 331 கோடி ரூபாய் அனுமதி வழங்கியிருந்தது. 1991 - 1992 க்குப் பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அரசு மான்ய உதவியுடன் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 31.05.1999 வரை மான்ய நிதி உதவியின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட, நிலை உயர்த்தப்பட்ட, மற்றும் கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட பகுதி மான்ய உதவியின்றியும் முழுமையாக மான்ய உதவியின்றியும் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு தற்போதைய நடைமுறையில் உள்ள ஆணைகளின்படி மான்யத்துடன் பணியிடங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு முடிவு செய்து, �தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1973� ல் திருத்தம் வெளியிட முடிவு செய்து, தோராயமாக 965 தனியார் பள்ளிகளுக்கு சுமார் 4851 ஆசிரியர் பணியிடங்களும் 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என 5499 பணியிடங்கள் 01.06.2011 முதல் அனுமதிக்கப்பட்டு, அரசுக்கு ஆண்டுக்கு 131 கோடியே 13 லட்சம் கூடுதல் செலவும் ஏற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் 1990 - 1991 ம் ஆண்டுவரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் 6456 பணியிடங்கள் ரூ. 200 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் 1999ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டில் பரிசீலித்து முடிவெடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் இந்த அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. இந்த அரசாணைகளை நடைமுறைபடுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

4. இந்தியா - இலங்கை நட்புறவு
இலங்கை, இந்தியாவின் அண்டை நாடு. இந்தியாவும் இலங்கையும் சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நட்பு நாடுகள்.

இந்தஇரு நாடுகளிடையான விளையாட்டு, வர்த்தக, கலாச்சார உறவுகள் காலம் காலமாக இருந்து வருவதாகும்.

சமீப காலமாக இலங்கையிலிருந்து தமிழகம் வரும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளை தாக்குவதும், விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவதும், இலங்கை மக்களுக்கெதிராக வெறுப்புணர்ச்சியை வளர்க்கும் வகையில் நடந்து கொள்வதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதனால் இரு நாட்டு உறவுகள் சீர்கெடும் நிலை ஏற்படச் செய்வது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்காது.

எனவே இலங்கை மக்களுக்கும் இந்தியர்களுக்குமிடையில் பகைமை உணர்வு ஏற்பட இடமளிக்கும் எத்தகைய செயலிலும் ஈடுபடவோ, ஈடுபட அனுமதிக்கவோ செய்யாமல் ராஜதந்திர அணுகுமுறையோடு காரியமாற்ற வேண்டுமென அனைவரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5. திருமணப் பதிவும் மத்திய அரசின் திருத்தச் சட்டமும்
இந்திய உச்ச நீதிமன்றம் சீமா அஸ்வானி குமார் வழக்கில் தீர்ப்புக் கூறிய போது, இந்தியாவில் நடைபெறும் எல்லாத் திருமணங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்னும் வழிகாட்டுதலை 14.02.2006ல் அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் கடந்த அரசு, திருமணப் பதிவு ( கட்டாய) சட்டம் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது; ஆனால், கோர்ட்டு கூறிய எளிய, சுலபமான, எல்லாரும் அணுகக் கூடிய பதிவு முறை தமிழகத்தில் இல்லை என்பதை ஆய்ந்து, தமிழகத் திருமணச் சட்டத்தில் திருத்தம் வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை எழுப்பியது.

திருமணப் பதிவை எளியமுறையில் யாரும் பதிவு செய்யும் வகையில் அமைப்பதற்கு, பிறப்பு இறப்பு பதிவாளர் பொறுப்பில் திருமணப் பதிவுப் பொறுப்பையும் வழங்குமாறு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்னும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.

நமது நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களிடம் நேரில் பேசி இந்தச் சட்டத் திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி வந்தார். 

இதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அரசு, 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில், திருத்தங்கள் கொண்டு வந்து, ��பிறப்புகள், திருமணங்கள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் 2012�� என்னும் பெயரில் மசோதா ராஜ்ய சபையில் தாக்கல் செய்திருக்கிறது. 

சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலைக் கருத்திற் கொண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருமணப் பதிவையும் சேர்த்து சட்டத் திருத்தத்தை முன்மொழிந்துள்ள மத்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு சல்மான் குர்ஷித் அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இந்த மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

ராஜ்ய சபாவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி, லோக் சபாவிலும் விரைவில் நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசின் சட்டத்துறை மேற் கொள்ள வேண்டுமெனவும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.


6. ஆதிக்க சக்திகளின் அட்டூழியங்களுக்கு முடிவு வேண்டும்
இந்திய தேசத்தில் சட்ட ஒழுங்கைக் குலைத்தும், அமைதி கட்டுப்பாட்டைச் சிதைத்தும், மாநில மக்களுக்கிடையில் மோதலையும் புகைச்சலையும் உருவாக்கியும், இந்திய ஜனநாயக மரபுகளைச் சீரழித்தும், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கியும் தேசத்தில் பாஸிச தத்துவத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஆதிக்க சக்திகளின் அரசியல் சூழ்ச்சிகளுக்கும் சூதுகளுக்கும் மக்கள் பலியாகிவிடக் கூடாது என்று இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

பாஸிசத்தின் உச்ச நிலையாக, வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமிலும் அதனைச் சுற்றியுள்ள மணிப்பூர், மிஜோராம், நாகலாந்து, இமாசல பிரதேசம் ஆகியவற்றிலும் பூர்வீகக்காலந்தொட்டு வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சிறுபான்மையினரை அந்நிய தேசத்தவர், வந்தேறிகள், பரதேசிகள், பிறதேசிகள் என்றெல்லாம் அவப்பெயர் சூட்டி, கலவரத்தைத் தூண்டி விட்டு, இலட்சக்கணக்கான மக்களை தமது ஊர் வீடுகளை விட்டுத் துரத்தியும், சுட்டுப் பொசுக்கியும், எரித்து நாசப்படுத்தியும் வரும் போக்கிற்கு உடனடியாக முடிவு கட்டும் வகையில் மாநில மத்திய அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. 

7. சட்டப்படிப்புக்கு உதவி
தமிழக முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் சட்டக் கல்விக்கு ஆர்வம் மிகுந்திட வேண்டும் என்னும் எண்ணத்தில், பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஐவருக்கு அவர்களின் சட்டப்படிப்புக்கான முழுச் செலவையும் ஏற்று ஊக்கப்படுத்துவது என்றும், அதன் பொறுப்பை மாநாட்டு வரவேற்புக்குழு ஏற்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. 

8 காயிதெ மில்லத் பல்கலைக் கழகம்

இந்திய தேசிய விடுதலை வீரரும், அரசியல் சட்ட நிர்மாணியும், சமூக நல்லிணக்க நாயகரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் தலைவருமாகத் திகழ்ந்து அனைவராலும் அனைத்து அரசியல் இயக்கங்களாலும் போற்றப்பட்டு வரும் காயிதெ மில்லத் அல்ஹாஜ் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தின் பிரதானமாகவும் நடு நாயகமாகவும் உள்ள பகுதியில்  காயிதெ மில்லத் பல்கலைக் கழகம் உருவாக்குவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.


9. தென்னக ரயில்வேக்கு வேண்டுகோள்
திருவாரூர் -சென்னை செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சை வழியாகச் செல்வதால் நூறு கிலோ மீட்டர் தூரம் அதிகப்படியாக பயணிக்க வேண்டியுள்ளதால் பயணிகளுக்கு ஏற்படும் அதிகப்படியான சிரமங்களைத் தவிர்த்திட, திருவாரூர்- சென்னை ரயில்களை மயிலாடுதுறை வழியாகச் செல்லும் முறையை நடைமுறைக்குக் கொண்டுமாறு தென்னக ரயில்வே நிர்வாகத்தை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அதே போன்று, தென்காசி- திருநெல்வேலி அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு வெகு நாட்களாகியும் இதில் ரயில்கள் இயக்கப்படாததால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர், எனவே தென்காசி- திருநெல்வேலி அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்க தென்னக ரயில்வேயை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மகாபலிபுரம்-அரக்கோணம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை அகல ரயில் பாதை துரிதமாக அமைத்து வளர்ந்து வரும் இப்பகுதியில் சுற்றுலா, வர்த்தகம் செழிக்க வாய்ப்பு ஏற்படுத்துமாறு தென்னக ரயில்வே இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

காரைக்காளிலிருந்து ஆக்கூர், சீர்காழி வழியாக சென்னைக்கு ரயில் இயக்குமாறு தென்னக ரயில்வேயை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது 10. முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்பட்ட வகுப்புச் சான்று

சாதிச் சான்றிதழ் கேட்டு வருவாய் துறையில் விண்ணப்பிக்கும்போது முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு """" இஸ்லாமாக மதம் மாறியவர்"" என்றே சான்று வழங்கப்படுகிறது.

இதனால் நியாயமாக கிடைக்க வேண்டிய பிற்பட்ட வகுப்பினருக்குரிய எந்த வாய்ப்பையும் பெற முடியாமல் போய்விடுகிறது.

எனவே மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்பட்ட லெப்பை வகுப்பைச் சார்ந்தவர் என வருவாய்த்துறையினர் சான்றளிக்க ஆணை பிறப்பிக்குமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. பிற்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான சலுகைகளை கண்காணிக்க குழு
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கல்வித் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப் படுவதில்லை என்ற புகார்கள் வருகின்றன.

எனவே தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என வட்டாட்சியர் மூலம் கண்காணிக்கப்படுவதுபோல், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகைகள் உள்ளிட்ட சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கண்காணிக்க மாவட்டம்தோறும் கண்காணிப்புக்குழு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

12. சிறுபான்மை தகுதிச் சான்று-முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு 
நடைமுறையில் உள்ள கட்டாய கல்வி சட்டம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சுயாட்சியில் தலையிடுகிறது. 25 சதவீதம் இலவச கல்வியை மற்றவர்களுக்கு வழங்க வழி வகுக்கிறது.

உச்ச நீதி மன்றத்தை அணுகிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை தகுதி சான்று பெற்ற சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச் சட்டம் மற்றும் 25 சதவீத கல்வி செல்லாது என்ற தீர்ப்பை பெற்றுள்ளன எனவே இந்த தீர்ப்பை பயன்படுத்தி சிறுபான்மை கல்வி நிறுவன தகுதி சான்று விரைவாக பெற முஸ்லிம் கல்வி நிறுவனங்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

13. காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரி
புதுச்சேரி மாநிலத்தில் நாற்பது சதவீதத்திற்கு மேல் முஸ்லிம்கள் வாழும் காரைக்கால் மாவட்டத்தில் அம்மக்களுக்கு பயன்படும் வகையில் அரபி பாடதிட்டத்துடன் கூடிய அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டுமென பதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் புதுச்சேரி வக்ஃப் வாரியத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கீழ் கொண்டுவரவும், வக்ஃப் வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அதைச் செயல்படச்செய்யும்படியும் புதுச்சேரி மாநில அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

14. கரும்பு டன்னுக்கு ரூபாய் 3000ஆக உயர்த்தி தர வேண்டுதல்
பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பை ஈடுகட்டும் வகையில் கரும்பு டன்னுக்கு ரூ 3000/- ஆக உயர்த்தி தர வேண்டுமென்ற கரும்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்று செயல்படுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. முப்போகம் விளையும் தஞ்சை தரணியில் தண்ணீர் இல்லாததால் குறுவைப்பயிர் நடமுடியாத நிலையில் தாளடி பயிர் விதைத்து வருகின்றனர். இதனை காப்பாற்றும் வகையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

சனி, 8 செப்டம்பர், 2012

மத நல்லிணக்கம் குறைந்துவருகிறது : பிரதமர் கவலை


டில்லியில் நடைபெற்ற, அனைத்து மாநில, போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:

நம் நாட்டில், பல்வேறு இனங்கள், மொழிகள் மற்றும் கலாசார பழக்க வழக்கங்கள் இருந்தாலும், அதிலும் ஒற்றுமையாக இருப்பதே, நமது பலம். ஆனால், கடந்த சில மாதங்களாக, நாட்டின் வடகிழக்கு பகுதியில், வன்முறை மற்றும் கலவரம் தலைதூக்கியுள்ளது.இது, அனைவருக்குமே கவலை தரக்கூடிய விஷயம். இதன் தொடர்ச்சியாக, தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், சில சம்பவங்களும் நடைபெற்றன.மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில், நல்லதொரு இணக்கம் நிலவி வந்தது. ஆனால், சமீபத்திய சம்பவங்களால், அந்த மத நல்லிணக்கம் தேய்வது போலத் தெரிவது, மிகவும் கவலைக்குரிய விஷயம். இது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.மக்கள் மத்தியில், என்ன மாதிரியான உணர்வுகள் நிலவுகின்றன, அடிமட்டத்தில் என்ன தான் நடக்கிறது என்பதையெல்லாம், போலீசார் முழுமையாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.

பிரச்னையை ஏற்படுத்தும் நபர்களை, முன்கூட்டியே கண்டறிதல், சரியான நேரத்தில் பொருத்தமான சட்டத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற் றோடு சேர்த்து, அமைதி மற்றும் சமூக நல்லிணக்க சூழ்நிலையை, முன்கூட்டியே ஏற்படுத்துதலும் அவசியம்.இணையதளத்தை பயன்படுத்தியும், மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், வன்முறை மற்றும் வதந்தியைப் பரப்புவது, சமீப காலமாக, அரசாங்கத்திற்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தத் தொழில் நுட்பங்களை வன்முறையாளர்கள், எவ்வாறு கையாளுகின்றனர் என்பது பற்றிய முழு விவரங்களையும், போலீசார் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்தத் தொழில்நுட்பங்கள் வாயிலாக நடக்கும் தவறான பிரசாரங்களை, எவ்வாறு அடக்குவது என்பது மிகவும் அவசியம். இனி வரும் காலங்களில், மிகவும் சவாலாக இருக்கப்போகும் இந்த பிரச்னைகளை, திறமையுடன் அணுக, போலீசார் பயிற்சி பெற வேண்டும்.மாநிலங்கள் சிலவற்றிலும், அவற்றின் எல்லைப்புறங்களிலும், நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மாநிலங்களின் எல்லைகளில் உள்ள காடுகளை, நக்சலைட்கள், தங்களின் புகலிடமாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் வைக்கும் கண்ணி வெடிகளால், உயிர் பலிகளும் நிகழ்கின்றன. இதைத் தடுக்க, துணை ராணுவப் படையினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.நக்சலைட்கள் அபாயம் உள்ள மாநிலங்களில், மக்கள் தொகைக்கு ஏற்ப, போலீசாரின் எண்ணிக்கை இருக்க வேண்டும். போலீசாருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் வழங்கப்பட வேண்டும்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பாலுக்கு தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்- பள்ளிக்கு ஏங்கும் சிறுவர்கள்; நெருப்பைத் தேடும் பயங்கரவாத ஜென்மங்கள் ! - அதிர்ச்சி ரிப்போர்ட்


நள்ளிரவு 1.17 மணி (இன்று அதிகாலை) தொலைபேசியில் என்னை அழைத்தது அஸ்ஸாமில் இருந்து போனில் அழைத்தவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணியின் தமிழ்நாடு மாநில இணைச்செயலாளர் ஈரோடு முஹம்மது ஆரிப்! நான் என்ன ஏது என்று கேட்டபோது, இப்போதுதான் துப்ரி அகதி முகாமிலிருந்து நிவாரண உதவிகளை கொடுத்து விட்டு இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

பதற்றம் நிறைந்த பாது காப்பற்ற ஒரு பகுதியில் அதுவும் இந்த நேரத்திலா என ஆச்சரியத்தோடு நான் கேட்டபோது, """"அகதி முகாம்களில் கதறி துடிப்பவர்களை பார்த்த எங்களுக்கு உயிர் மேல் அக்கறையே இல்லாமல் போய்விட்டது"" என்றார்.

அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 4 லட்சம் முஸ்லிம்கள் 270 அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

இந்த உதவிகளை நேரில் செய்வதற்காகத்தான் தமிழ்நாட்டிலிருந்து முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் அய்யம்பேட்டை மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், முஸ்லிம் லீக் இளைஞரணியின் மாநில செயலாளர் பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ், மாநில இணைச்செயலாளர் ஈரோடு முஹம்மது ஆரிப் ஆகியோர் சென்றுள்ளனர்.


நிவாரணப் பணிகள் குறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

நாங்கள் செல்வதற்கு ஒரு நாள் முன்பதாக அகதி முகாமில் நிவாரண உதவி செய்த போது அதைப் பெற வந்த 6 பேர் போடோ தீவிர வாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இதை அறிந்தும் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து நாங்கள் அந்த புனித காரியத்தில் இறங்கினோம். வேறு எந்த அமைப்புக்களாலும் இவ்வளவு இலகுவாகவும் , துணிச்சலாகவும் இறங்கி நிவாரண உதவி செய்ய முடிய வில்லை.

நாங்கள் நாற்பது பேர் கொண்ட குழுவாக செயல்பட்டோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர், தேசிய பொருளாளர் கர்நாடகத்தின் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, உத்திர பிரதேச மாநில பொதுச்செயலாளர் டாக்டர் மத்தீன், கேரள முஸ்லிம் யூத் லீக் தலைவர் சாதிக் அலி, ஜுபைர் குழுவினர் அஸ்ஸாம் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் என தாய்ச்சபையினர் இதில் முழுமையாக ஈடுபாடு கொண்டனர்.

இந்த அகதி முகாம்களில் பெரும்பாலனவை துப்ரி மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. அதில் 35 முகாம்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தத்து எடுத்துக் கொண்டது.

அஸ்ஸாமிலேயே மிகப் பெரிய முகாம் தமாரா ஹத் பகுதியில் உள்ள ஹாத்திதூரா கல்லூரியில் அமைந்ததுதான் துப்ரியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த முகாமில் முப்பதாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் அடங்குவர்.

முகாம்களை எல்லாம் பார்வையிட்டு அங்கு தங்கியுள்ளவர்களிடம் முதலில் தேவைகளை கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டோம். அகதிகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளும், சிறுவர்களுமே அவர்கள் எங்களிடம் கேட்டது சமைப்பதற்கு பாத்திரங்கள் பால் பவுடர் , பிஸ்கட், சோப்பு, துணி, மணிகள், இவைகள் தான்.

அவர்கள் கேட்டதை கவுகாத்தியில் நேரடியாக கொள்முதல் செய்து, நேரடியாகவே, கொண்டு வந்து, நேரடியாகவே விணியோகித்தோம். �நேரடி� என்று நாங்கள் அழுத்தி சொல்வதற்கு காரணம் தாய்ச்சபையின் மீது எந்த நம்பிக்கை வைத்து இந்த நிவராண உதவிக்கு சமுதாயம் வாரி வழங்கியதோ அந்தத் தொகையில் ஒரு பகுதி கூட வீனாகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம் என்ற மன நிறைவு ஒரு புறம் இருந்தாலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளில் இந்த நிவாரண உதவி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து தரப்படிகிறது என சொல்லிக் கொண்டே இருந்தது மன நிறைவை அதிகப் படுத்தியது.

ஆனால் என்னதான் உதவினாலும் அவர்கள் அத்தனை பேருமே கேட்டது, """"எங்களை எப்போது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்புவார்கள்�� என்ற கேள்விதான் அதை விட எங்களுக்கு பரிதாபமாக இருந்தது. சிறுவர்கள் எங்களிடம், """" பள்ளிக்கூடங்கள் திறக்காதா எதிக்கப்பட்ட புத்தகங்களுக்கு பதில் புதிதாக புத்தகங்கள் எல்லாம் தருவார்களா?"" என்ற அப்பாவித்தனமான கேள்விகள்தான். அதைவிட எங்கள் நெஞ்சை உருக வைத்தது, பேசத் தெரியாத பச்சிளம் குழந்தைகள் எங்களை வெறித்துப் பார்த்தது, அவர்கள் ஒட்டிய வயிறு பசியை சுட்டிக்காட்டியது கல்லையும் கரைய வைக்கும் காட்சிகள். பாலுக்கு ஏங்கும் அவர்களுக்கு பால் பவுடரும், அதை காய்ச்சி கொடுப்பதற்கு பாத்திரங்கள் வாங்குவதையுமே முதல கடமையாக கொண்டோம்

அரசாங்கம் எதையுமே செய்ய வில்லையா? எனக் கேட்கலாம் அரசு சார்பில் அரிசி,பருப்பு, எண்ணெய் வழங்கப்படுகிறது ஆனால் சமைத்து சாப்பிட பாத்திரங்களோ அடுப்பெரிக்க விறகோ இல்லை.

இவர்கள் வசித்த வீடுகள் எல்லாம் படு பாவிகளால் தீயில் கொடூரமாக எரிக்கப்பட்டன. ஆனால் சமைப்பதற்கு இவர்கள் நெருப்பைத் தேடி ஆலாய் பறப்பது வேதனையை வரவழைத்தது. 

யார் என்னதான் உதவி செய்தாலும் இந்த மக்கள் சொந்த இருப்பிடங்களுக்கு விரைந்து அனுப்பப்பட வேண்டும் அவர்கள் வாழ்வதற்கு ஆயுதப் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.

அஸ்ஸாம் அகதி முகாம்களில் உள்ளவர்கள் கோரிக்கை எல்லாம் போடோலாந்து தேசிய கவுன்சிலை கலைக்க வேண்டும் போடோ தீவிரவாதிகளிடம் இருக்கும் ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்hதுதான்.

போடோ தீவிரவாதிகள் முஸ்லிம்களை துரத்தி அடித்ததோடு அவர்கள் வாழ்ந்த வீடுகள் அனைத்தையும் எரித்து விட்டனர். அந்த இடங்களையெல்லாம் புல்டோஸர் மூலம் தகர்த்திதுவிட்டனர். இதனால் அவர்கள் குடியுரிமை பெற்றதற்கான ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி என அனைத்து ஆவணங்களும் எரிந்து விட்டன.

இதை அவர்கள் மீண்டும் கேட்டால் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என மறுப்பார்கள் 60 ஆண்டுகாலம் அஸ்ஸாமில் நடப்பது இதுதான். அஸ்ஸாம் முஸ்லிம்களில் பெரும்பாலனவர்கள் மீன்பிடி தொழில் செய்பவர்கள், ஆற்றோரத்திலுள்ள செங்கள் சூழைகளில் கூலிகளாக வேலை செய்பவர்கள்.

பிரமாண்டமான பிர்ம்மபுத்திரா நதியில் அடிக்கடி பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் இவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் ஆவணங்களும் அழிந்து போய்விடுகின்றன. திருப்பிக்கேட்கும்போது வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள் என வழக்கமான குற்றமே இவர்கள் மீது சுமத்தப்படும்.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் அவர்களுக்கு வீடு உள்ளிட்ட வசிப்பிடங்கள் செய்து கொடுக்கப்படவேண்டும். கல்வி, மார்க்க அறிவு, அவர்களுக்கு அத்தியாவசிய தேவை எனவே ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் கருணைப் பார்வை அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீது திரும்ப வேண்டுமென்பதே எங்கள் பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் மத்திய மனித வள மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது சாஹிப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான் , இ.டி.முஹம்மது பஷிர் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்த அகதி முகாம்களில் பார்வையிட்டு பணி தொடங்கி வைத்து முதல்வர் தருன் கோகாயைச் சந்தித்து பேசியதன் பலனாகவே நாங்கள் இந்த அளவிற்கு நிவராண பணி செய்ய முடிந்தது.

மாவட்ட நிர்வாகமும் வருவாய் அதிகாரிகளும் காவல் துறையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர் நாங்கள் ஒரு காரில் மூவர் பயணம் செய்கிறோம் என்றால், எங்கள் காருக்கு முன்பும் பின்பும் ஏ.கே.47 ஏந்திய 12 காவலர்கள் பாதுகாப்புக்கு எப்போதும் உடன் வந்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது அரசும், காவல்துறையும், உளவு அமைப்புக்களும், கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக இத்தனை நாட்களாக நிவாரண பணி செய்ய முடிந்தது.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் சொந்த இருப்பிடம் திரும்பி நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற செய்தி கிடைக்கும் வரை எங்கள் மனதில், அகதி முகாம்களில் அவர்கள் படும் அவலங்களே நிழலாடும்.

நேர்காணல் - காயல் மகபூப்