Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 24 செப்டம்பர், 2012

"ஊரைக் காணோம்" ஆட்சித்தலைவரிடம் புகார்


நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள யாக்கோபுபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம்-யாக்கோபுபுரம் ஊராட்சி பகுதியில் யாக்கோபுபுரம் ஊர் பெயர் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள அரசு கட்டிடங்களில் யாக்கோபுபுரம் என்றே பெயர் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய பஞ்சாயத்து தலைவர் யாக்கோபுபுரம் என்ற பெயரை அழித்து சிதம்பராபுரம் என்று எழுதி வருகிறார். இதனால் யாக்கோபுபுரத்திற்கு வருபவர்கள் சிதம்பராபுரம் என்று எழுதியிருப்பதை கண்டு ஏமாற்றமடைகிறார்கள். எனவே பெயர் பலகைகளில் யாக்கோபுபுரம் என்ற பெயரை அழிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக