Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 14 ஜூலை, 2013

இன்று இரவு 12 மணியோடு தந்தி சேவை வரலாறாகிறது

நூற்றி அறுபது ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்த தந்தி சேவை, இன்று இரவு, 12:00 மணியோடு நிறைவு பெறுகிறது.

இந்தியாவில், மிகப் பழமையான சேவைகளில் ஒன்று, தந்தி சேவை. 1850ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான தந்தி சேவை, கிழக்கு இந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும், முதலில் இருந்தது. பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு, 1853ல், தந்தி சேவை அறிமுகமானது. 


1854ல், தந்தி சேவைக்கு தனித் துறை துவங்கப்பட்டது. 1855ல், "இந்திய தந்தி சட்டம்' உருவாக்கப்பட்டது. இணையதளம் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், தந்தியின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்தது. சில அரசுப் பணிகளுக்காக மட்டுமே, தந்தி சேவை புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில், "தந்தி சேவை, ஜூலை, 15ம் தேதியுடன் நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. "மிகப் பழமையான மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற, தந்தி சேவையை நிறுத்தக் கூடாது. மக்களுக்கான சேவையில், லாப நஷ்ட கணக்கு பார்க்காமல், சேவையைத் தொடர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பல தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது. 


தமிழகத்தில், ஐகோர்ட்டிலும் வழக்கு பதியப்பட்டு, அது தள்ளுபடியானது. ஆனால், தந்தி சேவையைத் தொடர, மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டபடி, ஜூலை, 15ம் தேதியுடன், தந்தி சேவை நிறைவு பெறுகிறது. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க, சென்னை மாவட்டச் செயலர், ஸ்ரீதர் சுப்ரமணியன் கூறுகையில், ""இன்று நள்ளிரவு, 12:00 மணியுடன், தந்தி சேவை, முற்றிலும் நிறுத்தப்படும். தந்தி சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், வேறு பணிகளுக்கு மாற்றப்படுகின்றனர்,'' என்றார்.

பின்தங்கிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் விரைவில் சிறப்பு வகுப்பு

தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பலர், படிப்பில் ஆர்வமின்மை, குறிப்பிட்ட பாடத்தில் பின்தங்கி இருத்தல் உள்ளிட்ட காரணங்களால், கல்லூரி படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.

இம்மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்த உள்ளது. முதல் கட்டமாக, 25 கல்லூரிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக, தலா, ஒரு கல்லூரிக்கு, 1.25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளில், எந்தெந்த பாடத்தில் மாணவர் அதிகம் தோல்வியடைகின்றனர்; எந்தெந்த பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுக்கின்றனர் உள்ளிட்ட விவரம் சேகரிக்கப்படும். இம்மாணவருக்கு, தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சிக்கு, கல்லூரி அளவில், மூத்த பேராசிரியர், பொறுப்பாசிரியராக நியமிக்கப்படுவர். வரும் கல்விஆண்டில், இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. கல்லூரி வகுப்பு முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும், சிறப்பு வகுப்பு நடத்தப்படும்.

இதுகுறித்து, உயர்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தில், பல்கலை மானிய குழுவின், நிதி உதவியை பெறாத கல்லூரிகள், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின் தங்கியுள்ள கல்லூரிகள் மட்டுமே நிதி பெற தகுதியானவை.

கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் பலர், பல பாடங்களில்,"அரியர்" வைக்கின்றனர். இதனால், பட்டப் படிப்பை முடித்தும், சான்றிதழ் பெற முடியாமல், வேலைவாய்ப்பிலும் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.