Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றவேண்டும் : ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறி உள்ளதாவது:–உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி, இசை, வாழ்க்கை கல்வி, தோட்டக்கலை ஆகிய பல துறைகளில் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்ற வேண்டும். மே மாதம் சம்பளம் இல்லாமல் பரிதவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதமும் சம்பளம் வழங்க வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கலந்தாய்வு மற்றும் இடம் மாறுதல் போல எங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மற்றும் இடம் மாறுதல் வேண்டும். எங்களுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடைப்பிடித்து வரும் பணி பதிவேடு முறையை எங்களுக்கும் பயன்படுத்தவேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் புதிய டிசைன் கல்வி நிறுவனம்!


புகழ்பெற்ற டிசைன் கல்வி நிறுவனமான, பார்சன்ஸ் த நியூ ஸ்கூல் ஆப் டிசைன், ஒரு வியூக ரீதியிலான ஒத்துழைப்பின் மூலமாக, மும்பையில், ஒரு டிசைன் கல்வி நிறுவனத்தை தொடங்குகிறது. Indian School of Design and Innovation(ISDI) என்று பெயரிடப்பட்ட அந்த கல்வி நிறுவனம், மும்பையில், பரேல் என்னும் பகுதியில், ஜுலை மாதம் திறக்கப்படவுள்ளது.

டிசைன் மற்றும் புத்தாக்க துறைகளில், பல படிப்புகளை அந்தக் கல்வி நிறுவனங்கள் வழங்கும். பார்சன்ஸ் கல்வி நிறுவனத்தின் சிறந்த பாடத்திட்டம், சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் உலகளாவிய தொடர்புகள் ஆகியவற்றின் மூலமாக, ISDI பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visual communication, fashion design, product design, Interaction & user interface design, Motion graphics design, fashion marketing, interior product design, Retail & exhibition and design & management போன்ற துறைகளில், 4 இளநிலை டிப்ளமோ படிப்புகள், 1 வருட பவுண்டேஷன் படிப்பு மற்றும் 3 வருட ஸ்பெஷலைசேஷன் படிப்பு போன்றவை வழங்கப்படும். மேலும், இக்கல்வி நிறுவனத்தில், முதுநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படும். விரிவான விபரங்களுக்கு www.isdi.in.

அலிகார் பல்கலைக்கழகத்தில பிஎச்.டி. படிப்பதற்கு உதவித் தொகை


அறிவியல் பிஎச்.டி.  படிக்கும் மாணவர்களுக்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

வயது: ஜேஆர்எப்: 28 வயது

கல்வித் தகுதி: முதுகலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி. "நெட" தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை எண்ணிக்கை: பொருத்தமான அளவில்

கால அளவு: ஜேஆர்எப் மற்றும் எஸ்ஆர்எப்: 5 ஆண்டுகள்* ஆர்ஏ: 5 ஆண்டுகள்.

விண்ணப்ப நடைமுறைகள்
எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகையில் யுஜிசி-யால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி. முன்னணி நாளிதழ்களிலும் அறிவிப்பு வெளியிடப்படும்.


Course : அறிவியல் (பி.எச்டி.,)
Provider Address : ALIGARH MUSLIM UNIVERSITY, Dean Student Welfare, DSW Office,   Kennedy House, AMU, Aligarh 202 002, Tel: 0571 2700018, Fax: 0571 2700528 885,
E-mail: dsw_amu@rediffmail.com, www.amu.ac.in

தமிழகத்தில் கோடையின் தாக்கத்தால் கொடைக்கானலில் குவியும் மக்கள் கூட்டம்


தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ,தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானல் நகரம் சுற்றுலா பயணிகளின் வருகையால் திணறியது. நகர் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது.

படகு சவாரி
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வதற்காக ஏராளமான பேர் நீண்ட கியூவில் காத்து நின்றனர். படகு சவாரி, சைக்கிள் சவாரி செய்வதில் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால் ஏரிச்சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பிரையண்ட் பூங்காவில் உள்ள வண்ண, வண்ண பூக்களை பார்ப்பதற்காக பெண்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். பூங்காவில் உள்ள பூக்களுடன் நின்று குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

பசுமைப்பள்ளத்தாக்கு
கொடைக்கானலில் பகல் 1 மணி முதல் 2 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சாரல் மழையில் நனைந்தவாறு பசுமைப்பள்ளத்தாக்கு பகுதியை பார்வையிட்டனர். கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சியையும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் தெருவோர கடை வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.