Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றவேண்டும் : ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறி உள்ளதாவது:–உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி, இசை, வாழ்க்கை கல்வி, தோட்டக்கலை ஆகிய பல துறைகளில் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்ற வேண்டும். மே மாதம் சம்பளம் இல்லாமல் பரிதவிக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதமும் சம்பளம் வழங்க வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கலந்தாய்வு மற்றும் இடம் மாறுதல் போல எங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மற்றும் இடம் மாறுதல் வேண்டும். எங்களுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கடைப்பிடித்து வரும் பணி பதிவேடு முறையை எங்களுக்கும் பயன்படுத்தவேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக